*❤️ தலைப்பு : இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் ஒரு கதை எங்க முடியுமோ அங்க தான் இன்னொரு கதையோட தொடக்கம் ஆரம்பிக்கும் அப்படி தான் இந்த கதையும், உலகத்துல ஒருத்தருக்கு ஏற்படுற கஷ்டம்,கவலை,ஏமாற்றம்,இழப்பு, பிரிவு - ன்னு எல்லாத்துக்கும் சேர்த்து ஒரு பெயர் வச்சா அது தான் என்னோட பெயர் "கெளதம்", இந்த கெளதம் - ன்ற பெயருக்கு பின்னாடி வாழ்க்கையோட மொத்த நிராகரிப்பும் ஒன்னு சேர்ந்து இருக்கும், அப்படி ஒரு ஜாதகத்தை கொண்டவன் தான் நான், எல்லாரோட வாழ்க்கையிலையும் வர மாதிரி தான் என்னோட வாழ்க்கையிலும் முகத்தின் மேல் தீண்டும் ஒரு பெண்ணின் விரல் போல காதல் என்னை சற்று அவள் மெல்லிய விரல்களால் தீண்டி சென்றது, " தாரா " இந்த பூமியோட மொத்த அன்பும் ஒருத்தங்க கிட்ட தான் இருக்கும் அப்படினா அது தான் என்னோட தாரா, எத்தனை சண்டை வந்தாலும் சச்சரவுகள் வந்தாலும் பிரியுற நிலைக்கு எங்க காதல் போனாலும் ஒவ்வொரு வாட்டியும் இது இன்னும் முடியல கெளதம், இன்னும் நம்ம ரொம்ப தூரம் போகணும் நம்மளோட கால் தடங்கள் இன்னும் இந்த பூமில ரொம்ப வருஷம் நிலைச்சு இருக்கணும், உங்க அப்பா சொன்னா கேப்பேல அப்படி தான் உன்னோட இ
வாசிப்பை நேசிப்போம்