அணைகின்ற விளக்கு சுடர் விட்டு எரிவது போல் இறப்பதற்கு முன் அவர் குரலில் கடைசியாக சொன்ன வார்த்தை எந்தன் பெயர் மட்டுமே, நீங்கள் என்னை விட்டு சென்று சரியாக 18 வருடங்கள் ஆகிவிட்டது, தூங்குவோம் என கண்ணை மூடினால் எந்தன் கனவுகளில் உங்கள் உருவம் என் இரவு முழுவதையும் உங்கள் வசப்படுத்திக்கொண்டது, யாரோ ஒரு அப்பா தன் கால் வலிக்க மிதிவண்டியை மிதித்து தன் மகனை சொகுசாக கூட்டிச்செல்லும் போது இன்னும் கொஞ்ச நாள் நான் மழலை வகுப்பில் படித்திருக்கலாமோ என மனம் நாடுகிறது, வெளியூரில் வேலை பார்த்தாலும் சொந்த ஊருக்கு போய் புரோட்டா சாப்பிடும் போதெல்லாம் ஞாயிற்று கிழமை நீங்கள் வாங்கிக்கொடுக்கும் புரோட்டா மட்டுமே கண்களின் முன் வந்து செல்கிறது, கேட்டவை எல்லாம் கிடைத்தது நடுத்தர குடும்பத்தில் பிறந்தும் கூட நான் மட்டுமே தனிக்காட்டு ராஜா நீங்கள் உடன் இருந்த வரை, அன்று நீங்கள் வாங்கிக்கொடுக்கும் எனக்கு பிடித்த 50-50 பிஸ்கட்டுகளின் சுவை இன்றைய தினத்தில் காலாவதி ஆகிவிட்டது போல் அச்சுவையிலிருந்து, ரஜினி படமென்றால் முதல் காட்சி டிக்கெட்டை எப்படியாவது வாங்கி என்னை கூட்டிச்சென்று அவரின் ஸ்டைலை ரசிக்க வைத்தீர்கள் இன்றோ அந்த வி
வாசிப்பை நேசிப்போம்