என் அளவு இங்க யாருமே
ஆசைப்படமாட்டாங்கன்னு
என்னால உறுதியா சொல்ல முடியும்,
ஏன்னா என்னோட ஆசைகளும்
நான் காணும் கனவுகளும் அப்படி
ஆனா இங்க ஆசைப்படுற எல்லாமே
கிடைச்சுட்டா அவன அதிர்ஷ்டசாலின்னு
சொல்லுவோம்,
அதிர்ஷ்டசாலிகள் ரொம்பவே
கம்மின்னு நினைக்குறேன்
என்ன சுத்தி,அதே நேரத்துல
அதிர்ஷ்டசாலி ஆகணும்னு
நான் ஒரு போதும் ஆசைப்படல,
கோடிக்கணக்குல கனவு
காணும் போது ஒன்னு ரெண்டு
கனவாவது நிறைவேறும் என்ற
சாதாரண மனுஷனுக்கு இருக்கும்
ஒரு நப்பாசை தான் எனக்கும்,
ஆசைப்படுவது எப்போதும்
அதிகமாக இருக்கும் போது
வாய்ப்புகள் குறைவாக இருந்தாலும்
என்றேனும் ஒரு நாள் ஆசைப்பட்டது
நடந்து விடாதா என்ற ஆவலுக்கு
தான் மனசு ஏங்கி தவிக்கிறது,
பெருசா ஆசைப்படுறப்போ
அதை நிறைவேற்ற நான் இன்னும்
சரியான பாதைக்கு இயக்கப்படலன்னு
தான் இப்போ வர எல்லா விஷயத்துலயும்
தோத்துட்டே இருக்கேன்னு நினைக்குறேன்,
என்ன போல நிறைய பேர் இருப்பாங்க
ஆனா,நான் உங்க எல்லாருக்கும் ஸ்பெஷல்,
Comments
Post a Comment