Skip to main content

The One - அந்த ஒருவன் 💚

💚

நிராகரிக்கப்பட்ட ஒருவன்
புறக்கணிக்கப்பட்ட ஒருவன்
ஒதுக்கி வைக்கப்பட்ட ஒருவன்
அவமானப்படுத்தப்பட்ட ஒருவன்,

"வர சொல்லு அந்த ஒருத்தன..?"

பல போர் படை இருக்கலாம்
எதிர்பார்த்தது இவனத்தான்
அந்தொருவன் வந்திருக்கான்டே..!!!

"Temba" என்றால் "Hope" என்று பொருள்,
ஒட்டு மொத்த ஆஃப்ரிக்க மக்களின்
நம்பிக்கை ஒளியாகவும் அவர்களின்
ஏக்கத்திற்கு விடையாகவும்
இந்த "டெம்பா" ஒரு வாழ்வியலை
இங்கே புதுப்பித்து இருக்கிறான்,

எத்தனை அவமானங்கள் தான்
'இந்த ஒருவனுக்கு' நிகழ்ந்திருக்கிறது,
உயரம் ரீதியாகவும்,நிற ரீதியாகவும்
என இவன் கண்ட அவமானங்கள்
அனைத்தையும் தாண்டி இன்று
ஒரு இன மக்களையே இன்று
இவன் தலை நிமிர செய்திருக்கிறான்,

எங்க கேங்க்ல ஒரு ரெண்டு பேர்
மொரட்டு தனமான தென்னாப்பிரிக்கா
ஃபேன்,நானும் என்னோட இன்னொரு
முகநூல் நண்பரும் (Anjali Raga Jammy),

எப்படி "கொம்பன்" யானைய பார்த்து
காடே ஆடி போகுமோ அது மாதிரி
நாங்க ரெண்டு பேரும் எங்க தலைவன் டெம்பா பாவுமா - வ "டெம்பன்" ன்னு
செல்லமா தான் கூப்பிடுவோம்,

இந்த டெம்பனின் கைகள் ஒரு
நாளாவது ஓங்கி விடாதா..?
என்று எத்தனை நாட்கள்
நாங்கள் இருவரும் எண்ணியதுண்டு,

அந்த ஏக்கம் முழுதும் ஆனந்த கண்ணீராய் மாறும் நாள் இந்நாளோ..?

இதற்கு முன்னர் லார்ட்ஸ்
மைதானத்தில் எத்தனையோ
கிரிக்கெட் சாதனைகள்
நிகழ்ந்திருந்தாலும்,அடுத்த ஒரு
தலைமுறையே கொண்டாட போற
ஒரு "யுகத்தின் தலைவன்" உருவான
இடமா இந்த லார்ட்ஸ் மைதானம்
இங்க மாறியிருக்கு இன்னக்கி,

இந்த வெற்றிய அவ்வளவு எளிதா
கடந்து போக முடியாது,அந்த ஆப்ரிக்க
மக்களின் பல வருட தவம்,பல வருட
ஏக்கம்,பல வருட காத்திருப்பு,பல வருட
கூக்குரல்,பல வருட வலி,பல வருட
கண்ணீர்,பல வருட கனவு என
எல்லாவற்றையும் "அந்த ஒருவன்" இன்று அவர்களுக்காக
சம்பாதித்து கொடுத்திருக்கிறான்,

தூதுவான் வருவான் மாரி மழை
பொழியும் - ன்னு இன்னக்கி எங்க
டெம்பன் நிரூப்பிச்சு காட்டிருக்கான்,

இந்த ஒரு நெருப்பு தான் நாளைய
காட்டுத்தீ என்பது போல் டெம்பனின்
இந்த எழுச்சி ராஜன் வகையறா
(Graeme Smith) வில் தொடங்கி
காலம் தாண்டி பேசப்பட போகும்
ஒரு "அன்புவின் எழுச்சியாக"
பார்க்க முடிகிறது,

கண்ணீரின் ஈரம் படிந்த ஆஃப்ரிக்க மக்களின் கன்னங்களில் சிரிப்பை விதைத்த "எம் தலைவன்",

- டெம்பனின் எழுச்சி தொடரும் :')

#WTC2025 | #AusVsSA #Lords 

Comments

Popular posts from this blog

The Journey of Solo - Title Poem

ஓம் நமச்சிவாய என்னும் மூலமந்திரத்தின் கருவாய் நீர்,காற்று,நெருப்பு,நிலம்  என்னும் நாற்பகுதிகளை இறைவன் சிவனை வைத்து மையப்படுத்தி இருக்கும் கதைக்களத்தின் ஒரு கவிதை நடை பயணம் இங்கு, " The Journey of Solo - Title Poem |  Bejoy Nambiar  " 1) நீர் - ( World of Shekhar )  அன்பே ஆயிரம் மழைத்துளிகள் என்னை நனைப்பது போல நீ என்னை நனைத்துக்கொள் நதியின் ஆழங்களில் நான் மூச்சு திணறுவது போல நீ என்னை தழுவிக்கொள் கடலின் பேரலைகள் கரையை தீண்டுவது போல நீ என்னை எடுத்துக்கொள் என்னை உன் கரங்களால் அணைத்துக்கொள்ளாதே உன் மனதால் இறுக அணைத்துக்கொள் அன்பின் தனிமையில் உனக்கு மரணம் இல்லை 2) காற்று - ( World of Trilok ) யுகாந்திரங்களின் கோபம் யுகாந்திரங்களின் இறுக்கம் யுகாந்திரங்களின் பொறுமை யுகாந்திரங்களின் தனிமை வந்துவிட்டது எல்லாவற்றின் மீதும் பெரும் புயல் ஒன்று இந்த காற்றை எதிர்த்து நடப்பவர்கள் யார்..? காலத்தின் புயலில் உதிரும் ஆயிரம் ஆயிரம் மலர்களில் ஒரு மலரல்லவா நீ..? அழிவின் தனிமையில் காத்திருக்க உனக்கு நேரமில்லை 3) நெருப்பு - ( World of Shiva ) வன்மத்தின் வனங்கள் பற்றி எரிகின்றன ...

நிகரில்லாதவள்

அன்று ஊரெங்கும் நல்ல மழை வெளுத்து வாங்கிகொண்டிருந்தது, பெரு மழைக்கு ஒதுங்குவதற்காக அவள் அங்கே சாலையோரம் இருந்த மரத்தின் அடியில் சென்று நின்று கொண்டாள், அவளுக்கு அருகே பள்ளி முடிந்து வீடு திரும்பும் குழந்தைகள் சூழ அவள் ஒரு பள்ளிக்கூடத்து ஆசிரியை போல் அக்குழந்தைகளுக்கு நடுவில் நின்று அவர்கள் மழையில் செய்யும் சேட்டையை பார்த்து ரசித்துக்கொண்டிருந்தாள், இந்த மழை நிற்பதற்குள் இவள் யார்,இவள் பெயர் என்ன, இவள் சார்ந்து இருப்பவைகள் என சின்ன கதையுடன் ஒரு முன்னோட்டம் பார்ப்போம், இவளுக்கான அறிமுகம் இல்லாததால் இவளுக்கு இவளாகவே சூடிக்கொண்ட பெயர் இது, ஆம் இவளுக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து ஆசிரமத்தில் தான் வளர்ந்து வருகிறாள்,அங்கிருப்பவர்கள் "குட்டி" என்று கூப்பிடுவார்கள் அதுவே இவளது பெயராகவும் மாறியது, பின் பள்ளி முடிந்து யாரோ பெயர் தெரியாத ஸ்பான்ஸர்ஷிப் மூலம் கல்லூரி படிப்பை முடித்து நல்ல ஒரு இடத்தில் வேலைக்கு சேர்ந்த பின் தான் இவளுக்கு ஒன்று புரிந்தது, நம்மை அடையாளப்படுத்திக்கொள்ள சரியான பெயர் கூட நமக்கு இல்லை என்று, எதிர்நீச்சல் படத்தில் வருவது போல் தன் அடையாளத்தை இச்சமூகத்தில் பதிக்...