Skip to main content

Posts

பறந்து போ

❤️ பறவை பறப்பது இயல்பு, பல வருடங்களாக கூண்டுக்குள் அடைபட்ட பறவையாக இருந்தாலும் ஒரு கணம் அதன் கூண்டை திறந்து விட்டு பாருங்கள்,அதன் இயல்பு மாறாமல் சுதந்திரமாக அங்கிருந்து பறந்து தன் இடத்திற்கு செல்லும், மனிதனும் அது போல தான்,தன்னை சுற்றி இருக்கும் ஸ்ட்ரெஸ், பிரஷர், மூட் ஸ்விங் என இவைகளையெல்லாம் அவன் வாழ்விலிருந்து எடுத்துவிட்டால் அவன் இயல்பு மாறாமல் கூண்டுக்குள் இருந்து வெளிவந்த பறவை போல சுதந்திரமாக பெரு மூச்சுவிடுவான்,  மனிதனும் பறவையும் இயல்பில் ஒரே ரகம் தான்,சிறகு மட்டுமே வேறுபாடு, மனிதனுக்கும் ஒரு சிறு ஆசை தான், எனக்கும் சிறகு இருந்திருந்தால் எல்லா தேசத்திற்கும் நானும் பறவையை போல் தேசாந்திரியாக பறந்திருப்பேன் என்று, பறந்து போ..? சிறகில்லை என்றாலும்  உன் மனம் போன போக்கில்..!!! ')
Recent posts

எளிமை | Just Simple

❤️ பார்க்கும் எல்லாவற்றையும் எளிமையாக பார்க்க பழகு, நீ எளிமையாக இருக்கும் போது கிடைத்த அனுபவங்களும் அலாதி இன்பமும் நீ கோடி ருபாய்க்கு அதிபதி ஆனாலும் மீண்டும் கிடைக்காது, ஆடம்பரம் தவறு என்று சொல்லவில்லை,ஆனால் எளிமை உனது மேன்மைக்கான அடையாளம், எளிமை பல நேரங்களில் பலம்,பலவீனம் என இரண்டு விதத்திலும் பிரதிபலிக்கும், அது காண்போரின் மனநிலையே, எளிமைக்கான குரல் கூட தென்னகமெங்கும் இன்னும் பறையிசையாக எட்டுத்திக்கும் ஒலித்து கொண்டு தான் இருக்கிறது, எளிமையாக இரு எளிமையாக பழகு எளிமையாக எழுது அவ்வளவு ஏன்..? உனக்கான காதலை கூட எளிமையாக காதலித்து பார், இங்கு படைக்கப்பட்ட எல்லாமும் உனக்கானது!

The One - அந்த ஒருவன் 💚

💚 நிராகரிக்கப்பட்ட ஒருவன் புறக்கணிக்கப்பட்ட ஒருவன் ஒதுக்கி வைக்கப்பட்ட ஒருவன் அவமானப்படுத்தப்பட்ட ஒருவன், "வர சொல்லு அந்த ஒருத்தன..?" பல போர் படை இருக்கலாம் எதிர்பார்த்தது இவனத்தான் அந்தொருவன் வந்திருக்கான்டே..!!! "Temba" என்றால் "Hope" என்று பொருள், ஒட்டு மொத்த ஆஃப்ரிக்க மக்களின் நம்பிக்கை ஒளியாகவும் அவர்களின் ஏக்கத்திற்கு விடையாகவும் இந்த "டெம்பா" ஒரு வாழ்வியலை இங்கே புதுப்பித்து இருக்கிறான், எத்தனை அவமானங்கள் தான் 'இந்த ஒருவனுக்கு' நிகழ்ந்திருக்கிறது, உயரம் ரீதியாகவும்,நிற ரீதியாகவும் என இவன் கண்ட அவமானங்கள் அனைத்தையும் தாண்டி இன்று ஒரு இன மக்களையே இன்று இவன் தலை நிமிர செய்திருக்கிறான், எங்க கேங்க்ல ஒரு ரெண்டு பேர் மொரட்டு தனமான தென்னாப்பிரிக்கா ஃபேன்,நானும் என்னோட இன்னொரு முகநூல் நண்பரும் (Anjali Raga Jammy), எப்படி "கொம்பன்" யானைய பார்த்து காடே ஆடி போகுமோ அது மாதிரி நாங்க ரெண்டு பேரும் எங்க தலைவன் டெம்பா பாவுமா - வ "டெம்பன்" ன்னு செல்லமா தான் கூப்பிடுவோம், இந்த டெம்பனின் கைகள் ஒரு ந...

நெஞ்சில் மாமழை

தேதி : டிசம்பர் 31, 2022 நேரம் : 21:37 (ரயில்வே நேரப்படி) சென்னை எழும்பூரில் இருந்து மதுரை செல்லும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலின் S3 பெட்டியில் 12 - ஆம் எண் ஸ்லீப்பர் மிடில் பெர்த் சீட்டில் எனக்கான டிக்கெட்டை அன்று நான் புக் செய்திருந்தேன், அடுத்த நாள் புது வருடம் பிறக்கிறது என்பதால் ரயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது, பொதுவாகவே ரயில் பயணங்களில் சந்திக்கும் மனிதர்கள் அனைவரும் ஒவ்வொருவர் ஒவ்வொரு விதமான தேடலை நோக்கியே சென்று கொண்டிருப்பர்,  எனக்கான ஸ்லீப்பர் பெர்த்தில் படுக்காமல் காலியாக இருந்த 11 - ஆம் நம்பர் லோ பெர்த் சீட்டின் ஜன்னலை திறந்தவாறு கொஞ்சம் ஆக்சிஜென்னை ஸ்வாசித்துக்கொண்டிருந்தேன் என் விரல்கள் கொண்டு மூடிய முகத்துடன், 21:40 - ற்கு கிளம்பும் பாண்டியன் எக்ஸ்பிரஸிற்கு சரியாக 21:39 மணி அளவில் என் எதிரே வந்து ஒருவர் அமர்ந்தார் மூச்சு வாங்க கையில் இரண்டு அடுக்குடைய பேக் - உடன், அவர் சீட்டில் அமர்ந்தவுடன் தனக்கு தானே பேசிக்கொண்டிருந்தார், நியூ இயர் பிறக்க போறனால எவ்வளோ டிராபிக் இந்த ரயில்வே ஸ்டேஷன் வரதுக்குள்ள, ஒரு வழியா ட்ரெயின்ன பிடிச்சுட்டேன் ஹ்...

குடைக்குள் மழை

✨️💚 ரீனா : ஹே ஆர் யூ தேர்..? விக்ரம் : இருக்கேன் ரீனா, என்ன திடீர்னு மெசேஜ், முக்கியமா எதுவும் சொல்லணுமா..? ரீனா : ஹே, அதெல்லாம் இல்ல, ஏன் ஒர்க்ல இருக்கியா..? விக்ரம் : இல்ல, வீட்டுக்கு வந்துட்டேன், Earlier Appointments So, முடிஞ்சு பா! ரீனா : ஒகே, கொஞ்சம் மனசு சரி இல்ல அதான் உன்கிட்ட பேசலாமேன்னு கால் பண்ணேன்..? விக்ரம் : என்ன ஆச்சு..? ஆர் யூ ஓகே..? சொல்லு ரீனா Any Issue..? ரீனா : ஹே,Just Mood Swing ஒன்லி! நீ ஃபிரீன்னா சொல்லு Let's Walk Together in Beach! உனக்கு தெரியும்ல எனக்கு பீச் வாக்ன்னா ரொம்ப பிடிக்கும், So நீ ஃபிரீன்னா வர முடியுமா விக்ரம்..? விக்ரம் : சரி, ஈவினிங் 6 மணிக்கு பீச்ல நம்ம வழக்கமா மீட் பண்ணுற அந்த பட்டர் பன் கடைக்கு வந்துரு ரீனா, நானும் வந்துடுறேன், ரீனா : தேங்க்ஸ் விக்ரம்! விக்ரம் : தேங்க்ஸா..? No More Formalities! உன்னோட தேங்க்ஸ்ல நான் பூரிச்சு போய்ட்டேன்,சிரிப்பு காட்டாம வா ரீனா! ரீனா : ஹ்ம்ம் டா! * இடம் : கடற்கரை * நேரம் : மாலை 6 மணி விக்ரம் : ஹே! என்ன ஆச்சு ரீனா திடீர்னு..? ரீனா : அதெல்லாம் ஒன்னும் இல்லடா, Please Give Sometime நானே சொல்லுறேன் போ...

நிகரில்லாதவள்

அன்று ஊரெங்கும் நல்ல மழை வெளுத்து வாங்கிகொண்டிருந்தது, பெரு மழைக்கு ஒதுங்குவதற்காக அவள் அங்கே சாலையோரம் இருந்த மரத்தின் அடியில் சென்று நின்று கொண்டாள், அவளுக்கு அருகே பள்ளி முடிந்து வீடு திரும்பும் குழந்தைகள் சூழ அவள் ஒரு பள்ளிக்கூடத்து ஆசிரியை போல் அக்குழந்தைகளுக்கு நடுவில் நின்று அவர்கள் மழையில் செய்யும் சேட்டையை பார்த்து ரசித்துக்கொண்டிருந்தாள், இந்த மழை நிற்பதற்குள் இவள் யார்,இவள் பெயர் என்ன, இவள் சார்ந்து இருப்பவைகள் என சின்ன கதையுடன் ஒரு முன்னோட்டம் பார்ப்போம், இவளுக்கான அறிமுகம் இல்லாததால் இவளுக்கு இவளாகவே சூடிக்கொண்ட பெயர் இது, ஆம் இவளுக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து ஆசிரமத்தில் தான் வளர்ந்து வருகிறாள்,அங்கிருப்பவர்கள் "குட்டி" என்று கூப்பிடுவார்கள் அதுவே இவளது பெயராகவும் மாறியது, பின் பள்ளி முடிந்து யாரோ பெயர் தெரியாத ஸ்பான்ஸர்ஷிப் மூலம் கல்லூரி படிப்பை முடித்து நல்ல ஒரு இடத்தில் வேலைக்கு சேர்ந்த பின் தான் இவளுக்கு ஒன்று புரிந்தது, நம்மை அடையாளப்படுத்திக்கொள்ள சரியான பெயர் கூட நமக்கு இல்லை என்று, எதிர்நீச்சல் படத்தில் வருவது போல் தன் அடையாளத்தை இச்சமூகத்தில் பதிக்...

நளனும் நந்தினியும்

கொட்டும் பனி விழும் இரவு அது ஆனால் இரவிலும் பகல் போல் ஆட்கள் அவ்வப்போது பயணித்து கொண்டிருக்கும் சென்னை மாநகரத்தின் ஐ.டி கம்பெனிகள் நிறைந்த சாலை அது, அங்கிருக்கும் ஒரு ஐ.டி கம்பெனியில் அன்றைய வேலை நேரம் முடிந்து நளனும்  நந்தினியும் வெளியே வருகின்றனர், நேரம் சரியாக இரண்டு மணி ஏழு நிமிடங்கள்,அடுத்த இரண்டு நாட்கள் வீக்கெண்ட் விடுமுறை என்பதால் எப்போதும் வெள்ளிக்கிழமை இரவுகளில் கொஞ்சம் நேரம் இருவரும் பேசிவிட்டு வழக்கமாக போகும் அங்கே பக்கத்தில் இருக்கும் சரவணன் அண்ணன் டீக்கடைக்கு சென்று விட்டு பல கதைகள் பேசிய பின்னர் தான் வீடு திரும்புவார்கள், சின்ன வயசுல அம்மா கிட்ட திட்டு வாங்கிட்டு வீட்டுல உட்கார்ந்திருக்கப்போ ரோஸ் கலர் கைக்கடிகார ரப்பர் மிட்டாயை நம் கையில் ஒட்டி விட்டு மிட்டாய் வியாபாரம் செய்யும் தாத்தாவை பார்த்ததும் வர சந்தோஷம் தான் நளனுக்கு இருக்கும்,ஐந்து நாட்கள் வேலைல இருந்த பிரஷர் எல்லாம் மறந்து அடுத்த ரெண்டு நாளைக்காக வெள்ளிக்கிழமை இரவுகளிலிருந்தே ஆயத்தம் ஆவான், அன்று வெள்ளிக்கிழமை என்பதால் இருவரும் வெளியில் வந்தவுடன் நந்தினி நளனை பார்த்தாள்,வழக்கமாக பெட்டர்மாக்ஸ் லைட் எரியும் ந...