Skip to main content

Posts

நெஞ்சில் மாமழை

தேதி : டிசம்பர் 31, 2022 நேரம் : 21:37 (ரயில்வே நேரப்படி) சென்னை எழும்பூரில் இருந்து மதுரை செல்லும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலின் S3 பெட்டியில் 12 - ஆம் எண் ஸ்லீப்பர் மிடில் பெர்த் சீட்டில் எனக்கான டிக்கெட்டை அன்று நான் புக் செய்திருந்தேன், அடுத்த நாள் புது வருடம் பிறக்கிறது என்பதால் ரயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது, பொதுவாகவே ரயில் பயணங்களில் சந்திக்கும் மனிதர்கள் அனைவரும் ஒவ்வொருவர் ஒவ்வொரு விதமான தேடலை நோக்கியே சென்று கொண்டிருப்பர்,  எனக்கான ஸ்லீப்பர் பெர்த்தில் படுக்காமல் காலியாக இருந்த 11 - ஆம் நம்பர் லோ பெர்த் சீட்டின் ஜன்னலை திறந்தவாறு கொஞ்சம் ஆக்சிஜென்னை ஸ்வாசித்துக்கொண்டிருந்தேன் என் விரல்கள் கொண்டு மூடிய முகத்துடன், 21:40 - ற்கு கிளம்பும் பாண்டியன் எக்ஸ்பிரஸிற்கு சரியாக 21:39 மணி அளவில் என் எதிரே வந்து ஒருவர் அமர்ந்தார் மூச்சு வாங்க கையில் இரண்டு அடுக்குடைய பேக் - உடன், அவர் சீட்டில் அமர்ந்தவுடன் தனக்கு தானே பேசிக்கொண்டிருந்தார், நியூ இயர் பிறக்க போறனால எவ்வளோ டிராபிக் இந்த ரயில்வே ஸ்டேஷன் வரதுக்குள்ள, ஒரு வழியா ட்ரெயின்ன பிடிச்சுட்டேன் ஹ்ம்ம்
Recent posts

குடைக்குள் மழை

✨️💚 ரீனா : ஹே ஆர் யூ தேர்..? விக்ரம் : இருக்கேன் ரீனா, என்ன திடீர்னு மெசேஜ், முக்கியமா எதுவும் சொல்லணுமா..? ரீனா : ஹே, அதெல்லாம் இல்ல, ஏன் ஒர்க்ல இருக்கியா..? விக்ரம் : இல்ல, வீட்டுக்கு வந்துட்டேன், Earlier Appointments So, முடிஞ்சு பா! ரீனா : ஒகே, கொஞ்சம் மனசு சரி இல்ல அதான் உன்கிட்ட பேசலாமேன்னு கால் பண்ணேன்..? விக்ரம் : என்ன ஆச்சு..? ஆர் யூ ஓகே..? சொல்லு ரீனா Any Issue..? ரீனா : ஹே,Just Mood Swing ஒன்லி! நீ ஃபிரீன்னா சொல்லு Let's Walk Together in Beach! உனக்கு தெரியும்ல எனக்கு பீச் வாக்ன்னா ரொம்ப பிடிக்கும், So நீ ஃபிரீன்னா வர முடியுமா விக்ரம்..? விக்ரம் : சரி, ஈவினிங் 6 மணிக்கு பீச்ல நம்ம வழக்கமா மீட் பண்ணுற அந்த பட்டர் பன் கடைக்கு வந்துரு ரீனா, நானும் வந்துடுறேன், ரீனா : தேங்க்ஸ் விக்ரம்! விக்ரம் : தேங்க்ஸா..? No More Formalities! உன்னோட தேங்க்ஸ்ல நான் பூரிச்சு போய்ட்டேன்,சிரிப்பு காட்டாம வா ரீனா! ரீனா : ஹ்ம்ம் டா! * இடம் : கடற்கரை * நேரம் : மாலை 6 மணி விக்ரம் : ஹே! என்ன ஆச்சு ரீனா திடீர்னு..? ரீனா : அதெல்லாம் ஒன்னும் இல்லடா, Please Give Sometime நானே சொல்லுறேன் போ

நிகரில்லாதவள்

அன்று ஊரெங்கும் நல்ல மழை வெளுத்து வாங்கிகொண்டிருந்தது, பெரு மழைக்கு ஒதுங்குவதற்காக அவள் அங்கே சாலையோரம் இருந்த மரத்தின் அடியில் சென்று நின்று கொண்டாள், அவளுக்கு அருகே பள்ளி முடிந்து வீடு திரும்பும் குழந்தைகள் சூழ அவள் ஒரு பள்ளிக்கூடத்து ஆசிரியை போல் அக்குழந்தைகளுக்கு நடுவில் நின்று அவர்கள் மழையில் செய்யும் சேட்டையை பார்த்து ரசித்துக்கொண்டிருந்தாள், இந்த மழை நிற்பதற்குள் இவள் யார்,இவள் பெயர் என்ன, இவள் சார்ந்து இருப்பவைகள் என சின்ன கதையுடன் ஒரு முன்னோட்டம் பார்ப்போம், இவளுக்கான அறிமுகம் இல்லாததால் இவளுக்கு இவளாகவே சூடிக்கொண்ட பெயர் இது, ஆம் இவளுக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து ஆசிரமத்தில் தான் வளர்ந்து வருகிறாள்,அங்கிருப்பவர்கள் "குட்டி" என்று கூப்பிடுவார்கள் அதுவே இவளது பெயராகவும் மாறியது, பின் பள்ளி முடிந்து யாரோ பெயர் தெரியாத ஸ்பான்ஸர்ஷிப் மூலம் கல்லூரி படிப்பை முடித்து நல்ல ஒரு இடத்தில் வேலைக்கு சேர்ந்த பின் தான் இவளுக்கு ஒன்று புரிந்தது, நம்மை அடையாளப்படுத்திக்கொள்ள சரியான பெயர் கூட நமக்கு இல்லை என்று, எதிர்நீச்சல் படத்தில் வருவது போல் தன் அடையாளத்தை இச்சமூகத்தில் பதிக்

நளனும் நந்தினியும்

கொட்டும் பனி விழும் இரவு அது ஆனால் இரவிலும் பகல் போல் ஆட்கள் அவ்வப்போது பயணித்து கொண்டிருக்கும் சென்னை மாநகரத்தின் ஐ.டி கம்பெனிகள் நிறைந்த சாலை அது, அங்கிருக்கும் ஒரு ஐ.டி கம்பெனியில் அன்றைய வேலை நேரம் முடிந்து நளனும்  நந்தினியும் வெளியே வருகின்றனர், நேரம் சரியாக இரண்டு மணி ஏழு நிமிடங்கள்,அடுத்த இரண்டு நாட்கள் வீக்கெண்ட் விடுமுறை என்பதால் எப்போதும் வெள்ளிக்கிழமை இரவுகளில் கொஞ்சம் நேரம் இருவரும் பேசிவிட்டு வழக்கமாக போகும் அங்கே பக்கத்தில் இருக்கும் சரவணன் அண்ணன் டீக்கடைக்கு சென்று விட்டு பல கதைகள் பேசிய பின்னர் தான் வீடு திரும்புவார்கள், சின்ன வயசுல அம்மா கிட்ட திட்டு வாங்கிட்டு வீட்டுல உட்கார்ந்திருக்கப்போ ரோஸ் கலர் கைக்கடிகார ரப்பர் மிட்டாயை நம் கையில் ஒட்டி விட்டு மிட்டாய் வியாபாரம் செய்யும் தாத்தாவை பார்த்ததும் வர சந்தோஷம் தான் நளனுக்கு இருக்கும்,ஐந்து நாட்கள் வேலைல இருந்த பிரஷர் எல்லாம் மறந்து அடுத்த ரெண்டு நாளைக்காக வெள்ளிக்கிழமை இரவுகளிலிருந்தே ஆயத்தம் ஆவான், அன்று வெள்ளிக்கிழமை என்பதால் இருவரும் வெளியில் வந்தவுடன் நந்தினி நளனை பார்த்தாள்,வழக்கமாக பெட்டர்மாக்ஸ் லைட் எரியும் நளனின

கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்

அரவிந்த் பொதுவாகவே நிறைய ஊர் சுற்ற ஆசைப்படுவான், புது இடத்துக்கு போகணும் புது மனிதர்களை சந்திக்கணும், அவங்களோட வாழ்வியலை தெரிஞ்சுக்கிறது மட்டுமில்லாம அந்த வாழ்வியல் சார்ந்து தானும் ஒரு இரண்டு நாள் அவங்க கூட இருந்து அந்த லைஃப்ப எக்ஸ்பிளோர் செய்யணும்ன்னு ஆசைப்படுறவன் அவன், அப்படி இருக்கும் அரவிந்த் கிட்ட கையில வேலையும் பணமும் இல்ல,முயற்சி செய்தும் சரியான வேலை கிடைக்காததால் கையில் பணமும் இல்லாததால் விரக்தியின் உச்சத்தில் இருந்தான்,கூண்டுக்குள் இருக்கும் பறவை சிறை வாசம் இருப்பதை போல் தான் அவிழ்க்க முடியாத முடிச்சில் மாட்டிக்கொண்டு இருக்கிறோம் என்பதை அவனால் ஒவ்வொரு நொடி கடக்கும் தருணமும் ஒரு யுகமாக செல்லும் போது உணர முடிந்தது, இப்படி விரக்தியாக போன நாட்கள் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே போக போக ஒரு கட்டத்தில் அரவிந்த்திற்கு ஒரு சிறிய கம்பெனியில் வீட்டில் இருந்தே செய்யும் படி காலை ஒன்பது மணிக்கு தொடங்கி மாலை ஆறு மணிக்கு முடிவது போலான வேலை கிடைத்தது அதுவும் தான் மிகவும் ரசித்து செய்யும் கன்டென்ட் ரைட்டிங் பணியிடத்திற்கு,கொஞ்சம் கம்மியான சம்பளம் தான் என்றாலும் இப்போதிருக்கும் பசிக்கு பிரியாணி த

முழுமை

இங்க நம்ம முழுமைன்னு நினைச்சுட்டு இருக்குற எதுவுமே முழுமை கிடையாது ஒரு உதாரணத்துக்கு சொல்லணும்னா இந்த படத்துக்கான ஒரு கதையை நான் முழுமையாக எழுதி முடித்து விட்டேன் அப்படின்னு அந்த இயக்குநர் தான் எழுதி முடித்த கதைக்கான டைரியை தன் மேஜையில் வைத்து விட்டு தூங்க சென்றுவிட்டார், அடுத்த நாள் காலை அவருக்கு ஒரு ஃபோன் வருகிறது சில தனிப்பட்ட காரணங்களுக்காக சொந்த ஊருக்கு வர வேண்டி அந்த ஃபோனில் தகவல் வருகிறது,கிளம்பும் அவசரத்தில் இவர் தன்னுடைய கதை எழுதும் டைரியை வீட்டிலேயே வைத்து விட்டு சென்று விட்டார்,பிறகு ஒரு வாரம் கழித்து வந்து ஊருக்கு சென்று போன வேலையை முடித்து விட்டு தன் நண்பர்களுடன் பல வருடங்களுக்கு பிறகு ஒன்றாக கூடி உட்கார்ந்து அரட்டை அடித்து பேசி பொழுதை போக்கிய அந்த ஏழு நாட்கள் தனக்கு கொடுத்த உற்சாகத்துடன் முழு புத்துணர்ச்சியுடன் தன்னுடைய டைரியை எடுத்து தான் முழுமை அடைந்தது என்று முடித்து வைத்த அக்கதையை அடுத்த வாரம் கால்சீட் கிடைத்திருக்கும் அந்த பெரிய ஹீரோவிற்கு சொல்லி ஆக வேண்டும் என்ற முனைப்புடன் ஒரு முறை தான் எழுதிய கதையை வாசிக்கிறார், பல இடங்களில் அவர் திரைக்கதையில் செய்த சின்ன சின்ன தவ

Chai with Halitha Shameem Akka!

* Chai With Halitha Shameem Akka!  எதிர்பாரா வாய்ப்புகள் எப்போதாவது தான் அமையும்,அப்பறம் நம்ம எதிர்பார்த்து காத்திருந்தாலும் பரிபோன வாய்ப்பு போனது தான்,கிடைக்கும் போது வாய்ப்பை சரியான முறையில் தக்க வைத்துக்கொள்ள வேண்டும், அப்படி ஒரு வாய்ப்பு இயக்குநர் ஹலிதா அக்கா - வை சந்திக்க அரங்கேறியது,அவர்களின் சொந்த ஊரான தாராபுறத்தில் மாலை ஐந்து மணிக்கு தாராபுரம் பழனி பிரிவில் உள்ள சூர்யா பேக்கரியில் சந்திக்கலாம் என்று தனது முகப்புத்தகத்தில் பதிவு செய்திருந்தார், கோடை கால விடுமுறையில் மதிய நேரம் வரும் ஐஸ் வண்டிக்காக ஒரு மணி நேரமாக வீட்டு திண்ணையில் ஐஸ் வண்டி சத்தம் கேட்குதா என எதிர்பார்ப்பின் உச்சத்தில் இருக்கும் சிறுவனை போல நானும் மாலை அங்கு சென்று விட வேண்டும் அவர்களை சந்திக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு மட்டுமே மனசுக்குள் ஓடிக்கொண்டிருந்தது,இயக்குநர் அக்காவிற்கு ஒரு மெசேஜ் அனுப்பி வைத்தேன் இன்று மாலை சூர்யா பேக்கரிக்கு உங்களை காண வருகிறேன் என்று, "வாங்க" என்று பதில் ரிப்ளை செய்திருந்தார்கள், கோவையில் இருந்து கிளம்பி போகும் வழியில் காரணம்பேட்டையில் Dhanasekar D  - ஐயும் அழைத்துக்கொண்