❤️ பறவை பறப்பது இயல்பு, பல வருடங்களாக கூண்டுக்குள் அடைபட்ட பறவையாக இருந்தாலும் ஒரு கணம் அதன் கூண்டை திறந்து விட்டு பாருங்கள்,அதன் இயல்பு மாறாமல் சுதந்திரமாக அங்கிருந்து பறந்து தன் இடத்திற்கு செல்லும், மனிதனும் அது போல தான்,தன்னை சுற்றி இருக்கும் ஸ்ட்ரெஸ், பிரஷர், மூட் ஸ்விங் என இவைகளையெல்லாம் அவன் வாழ்விலிருந்து எடுத்துவிட்டால் அவன் இயல்பு மாறாமல் கூண்டுக்குள் இருந்து வெளிவந்த பறவை போல சுதந்திரமாக பெரு மூச்சுவிடுவான், மனிதனும் பறவையும் இயல்பில் ஒரே ரகம் தான்,சிறகு மட்டுமே வேறுபாடு, மனிதனுக்கும் ஒரு சிறு ஆசை தான், எனக்கும் சிறகு இருந்திருந்தால் எல்லா தேசத்திற்கும் நானும் பறவையை போல் தேசாந்திரியாக பறந்திருப்பேன் என்று, பறந்து போ..? சிறகில்லை என்றாலும் உன் மனம் போன போக்கில்..!!! ')
❤️ பார்க்கும் எல்லாவற்றையும் எளிமையாக பார்க்க பழகு, நீ எளிமையாக இருக்கும் போது கிடைத்த அனுபவங்களும் அலாதி இன்பமும் நீ கோடி ருபாய்க்கு அதிபதி ஆனாலும் மீண்டும் கிடைக்காது, ஆடம்பரம் தவறு என்று சொல்லவில்லை,ஆனால் எளிமை உனது மேன்மைக்கான அடையாளம், எளிமை பல நேரங்களில் பலம்,பலவீனம் என இரண்டு விதத்திலும் பிரதிபலிக்கும், அது காண்போரின் மனநிலையே, எளிமைக்கான குரல் கூட தென்னகமெங்கும் இன்னும் பறையிசையாக எட்டுத்திக்கும் ஒலித்து கொண்டு தான் இருக்கிறது, எளிமையாக இரு எளிமையாக பழகு எளிமையாக எழுது அவ்வளவு ஏன்..? உனக்கான காதலை கூட எளிமையாக காதலித்து பார், இங்கு படைக்கப்பட்ட எல்லாமும் உனக்கானது!