' <3 ' Stress - ஆக இருக்கும் நேரத்தில் மனமெங்கும் மார்கழியாய் இலை மேல படர்ந்த பனித்துளியாய் ஒரு இசை எனக்குள் ஒலித்துக்கொண்டே இருக்கிறது தனிமையின் தாகத்தில் எனக்கான கார்த்திகை திருவிழாவும் எனக்கு மட்டுமே சொந்தமான வைபோக உற்சவமும் சங்கமித்துக்கொள்கிறது Mood Swinger (Or) Game Changer எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம் ஒரு சாலையில நடந்து போறப்போ ஒரு சாலையோர டீக்கடையில இந்த ரெண்டு பாட்டு ஓடுனா என்ன அறியாம என் இரு கால்களும் நின்னு சற்று இளைப்பாரிக்கொண்டு அந்த கடையில் இரண்டு நிமிடம் நின்று தவிக்காத தாகத்திற்கு ஒரு டீயை அருந்திவிட்டு மனநிலைக்கு ஒரு Refresh Mode கொடுத்துவிட்டு எனக்குள் ஒரு புத்துணர்ச்சியை என்னால் கொடுக்க முடிகிறது * நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி நம்மை சேர்த்த இரவுக்கொரு நன்றி * கண்ணே கலைமானே கன்னி மயிலென கண்டேன் உனை நானே காலம் மாறட்டும் நேரம் கடக்கட்டும் சில தருணங்கள் மீண்டும் நம் வாழ்க்கையில் கிடைக்கப்பெறாது அது போல இந்த இரண்டு பாடல்களும் எனக்காக ஆசிர்வதிக்கப்பட்ட பாடல்களே..!!
வாசிப்பை நேசிப்போம்