Skip to main content

Posts

Showing posts from March 15, 2026

பறந்து போ

❤️ பறவை பறப்பது இயல்பு, பல வருடங்களாக கூண்டுக்குள் அடைபட்ட பறவையாக இருந்தாலும் ஒரு கணம் அதன் கூண்டை திறந்து விட்டு பாருங்கள்,அதன் இயல்பு மாறாமல் சுதந்திரமாக அங்கிருந்து பறந்து தன் இடத்திற்கு செல்லும், மனிதனும் அது போல தான்,தன்னை சுற்றி இருக்கும் ஸ்ட்ரெஸ், பிரஷர், மூட் ஸ்விங் என இவைகளையெல்லாம் அவன் வாழ்விலிருந்து எடுத்துவிட்டால் அவன் இயல்பு மாறாமல் கூண்டுக்குள் இருந்து வெளிவந்த பறவை போல சுதந்திரமாக பெரு மூச்சுவிடுவான்,  மனிதனும் பறவையும் இயல்பில் ஒரே ரகம் தான்,சிறகு மட்டுமே வேறுபாடு, மனிதனுக்கும் ஒரு சிறு ஆசை தான், எனக்கும் சிறகு இருந்திருந்தால் எல்லா தேசத்திற்கும் நானும் பறவையை போல் தேசாந்திரியாக பறந்திருப்பேன் என்று, பறந்து போ..? சிறகில்லை என்றாலும்  உன் மனம் போன போக்கில்..!!! ')