"அவ தான் இருக்கா இன்னும் என் வாழ்க்கைல" என் ஒவ்வொரு செய்கைகளிளும் ஒவ்வொரு செயலிலும் ஒவ்வொரு நொடி பொழுதிலும்..! நெடுதூர பேருந்து பயணம் செய்து கொண்டிருந்தேன் பாடலின் வரிகளின் வழியே அடி மனதில் ரணமாய் அமர்ந்து கொண்டாள் ஒரு காதல் காட்சி பார்க்கும் போது எண்ணத்தில் கடலாய் பேரலைகளை வீசுகிறாள் காதல் ஜோடிகளை பார்க்கும்போது தனிமையின் வெற்றிடத்தை உணர வைக்கிறாள் மல்லிகை பூ மண்டியை கடக்கும் பொழுது அதன் நறுமணத்தால் அவள் பொன்னிற கூந்தலின் வாசத்தை சுவாசிக்க வைக்கிறாள் ஒரு அம்மா தன் குழந்தையை முத்தமிடும் போது அவள் கொடுத்த நெற்றி முத்தத்தின் தாக்கத்தை என்னுள் விதைக்கிறாள் பத்து பெண்களின் மத்தியில் ஒரு பெண் தன் கூந்தலை முன் எடுத்து காற்றில் அசைய விடுகையில் என்னவளாக அங்கு பிரதிபலித்தாள் பள்ளிக்கு செல்லமாட்டேன் என்று அடம்பிடிக்கும் குழந்தையை பார்க்கும்போது அவளின் குழந்தை தனமான செய்கைகளை கண்முன் காட்சி படுத்தினாள் சத்தியம் செய்து கொள்ளும் மனிதர்களை பார்க்கும்போது "நீ இல்லை என்றால் நான் செத்து விடுவேன்" என்று என் தலை மேல் அவள் செய்த சத்தியத்தை என் நெற்றிக்கண்ணில் நிறுத்தினாள் கடு
வாசிப்பை நேசிப்போம்