Skip to main content

Posts

Showing posts from February 12, 2019

Describe About Her Shiva..?..!!

"அவ தான் இருக்கா இன்னும் என் வாழ்க்கைல" என் ஒவ்வொரு செய்கைகளிளும் ஒவ்வொரு செயலிலும் ஒவ்வொரு நொடி பொழுதிலும்..! நெடுதூர பேருந்து பயணம் செய்து கொண்டிருந்தேன் பாடலின் வரிகளின் வழியே அடி மனதில் ரணமாய் அமர்ந்து கொண்டாள் ஒரு காதல் காட்சி பார்க்கும் போது எண்ணத்தில் கடலாய் பேரலைகளை வீசுகிறாள் காதல் ஜோடிகளை பார்க்கும்போது தனிமையின் வெற்றிடத்தை உணர வைக்கிறாள் மல்லிகை பூ மண்டியை கடக்கும் பொழுது அதன் நறுமணத்தால் அவள் பொன்னிற கூந்தலின் வாசத்தை சுவாசிக்க வைக்கிறாள் ஒரு அம்மா தன் குழந்தையை முத்தமிடும் போது அவள் கொடுத்த நெற்றி முத்தத்தின் தாக்கத்தை என்னுள் விதைக்கிறாள் பத்து பெண்களின் மத்தியில் ஒரு பெண் தன் கூந்தலை முன் எடுத்து காற்றில் அசைய விடுகையில் என்னவளாக அங்கு பிரதிபலித்தாள் பள்ளிக்கு செல்லமாட்டேன் என்று அடம்பிடிக்கும் குழந்தையை பார்க்கும்போது அவளின் குழந்தை தனமான செய்கைகளை கண்முன் காட்சி படுத்தினாள் சத்தியம் செய்து கொள்ளும் மனிதர்களை பார்க்கும்போது "நீ இல்லை என்றால் நான் செத்து விடுவேன்" என்று என் தலை மேல் அவள் செய்த சத்தியத்தை என் நெற்றிக்கண்ணில் நிறுத்தினாள் கடு

எழுத்துக்களின் அவசியம்

~ 💛 ~ சில பேருக்கு இசை மேல பைத்தியம் சில பேருக்கு ஓவியம் மேல பைத்தியம் சில பேருக்கு புத்தகம் மேல பைத்தியம் சில பேருக்கு காதல் மேல பைத்தியம் சில பேருக்கு குழந்தைகள் மேல பைத்தியம் இப்படி நம்மலோட பைத்தியமா ஒரு சில விஷயங்கள் நம்மை சார்ந்து இருக்கும் அது நமக்கு ஒரு வித தனிமையை கொடுக்கும் அந்த தனிமை கொடியதாக இருக்காது மிகவும் ஆழமான மிகவும் அழகான மிகவும் மென்மையான மிகவும் நம்பகத்தன்மையுள்ள ஒரு தனிமையாக அத்தனிமை இருக்கும், அத்தனிமையை நீங்கள் உணரும்போது லேசான ஈரப்பதத்துடன் கூடிய கடற்கரை மணல் போல் நம் மனசு சாந்தமான நிலையில் இயந்திரம் போல் சுழலாமல் ஒரு நிலையில் பக்குவமாய் இருக்கும், குல்முகர் மலர் பூத்துக்குலுங்கும் பூக்களில் வண்டுகள் மகரந்தம் தேடும் குயில்கள் ரீங்கார இசையினை மீட்டும் அந்தி நேர தென்றல் காற்று வீசும் இலையுதிர் காலம் நாழிகையை அழகாக்கும் இவ்வுலகம் பரந்து விரிந்து கிடக்கிறது இது நமக்கான தன்னை அறிதல் இது உங்களை உங்களுக்குள் தேடும் முயற்சி உங்களின் நாட்டத்தை வெளிக்கொண்டுவாருங்கள் முடிந்தவரை உங்கள் வாழ்வில் நடந்த நிகழ்வுகளை எழுத்துக்களாக ம