Skip to main content

Describe About Her Shiva..?..!!

"அவ தான் இருக்கா இன்னும் என் வாழ்க்கைல"

என் ஒவ்வொரு செய்கைகளிளும் ஒவ்வொரு செயலிலும் ஒவ்வொரு நொடி பொழுதிலும்..!

நெடுதூர பேருந்து பயணம் செய்து கொண்டிருந்தேன் பாடலின் வரிகளின் வழியே அடி மனதில் ரணமாய் அமர்ந்து கொண்டாள்

ஒரு காதல் காட்சி பார்க்கும் போது எண்ணத்தில் கடலாய் பேரலைகளை வீசுகிறாள்

காதல் ஜோடிகளை பார்க்கும்போது தனிமையின் வெற்றிடத்தை உணர வைக்கிறாள்

மல்லிகை பூ மண்டியை கடக்கும் பொழுது அதன் நறுமணத்தால் அவள் பொன்னிற கூந்தலின் வாசத்தை சுவாசிக்க வைக்கிறாள்

ஒரு அம்மா தன் குழந்தையை முத்தமிடும் போது அவள் கொடுத்த நெற்றி முத்தத்தின் தாக்கத்தை என்னுள் விதைக்கிறாள்

பத்து பெண்களின் மத்தியில் ஒரு பெண் தன் கூந்தலை முன் எடுத்து காற்றில் அசைய விடுகையில் என்னவளாக அங்கு பிரதிபலித்தாள்

பள்ளிக்கு செல்லமாட்டேன் என்று அடம்பிடிக்கும் குழந்தையை பார்க்கும்போது அவளின் குழந்தை தனமான செய்கைகளை கண்முன் காட்சி படுத்தினாள்

சத்தியம் செய்து கொள்ளும் மனிதர்களை பார்க்கும்போது "நீ இல்லை என்றால் நான் செத்து விடுவேன்" என்று என் தலை மேல் அவள் செய்த சத்தியத்தை என் நெற்றிக்கண்ணில் நிறுத்தினாள்

கடுமையான பேச்சு வாதத்தில் ஈடுபடும் பொழுது அவளிடம் வார்த்தை ஜாலத்தில் தோற்று போன அந்த தருணத்தால் என்னுள் கலந்தாள்

இப்படி எல்லாவற்றிலும் அவளின் தாக்கத்தோடு என்னை அவள் நினைவுகளுடன் ஈடுபடுத்திக்கொண்டு என்னுடைய நாட்களை எண்ணி கொண்டு நகர்கிறேன்.

அன்று காதலர் தினம் – உலகமே காதலர் தினம் கொண்டாடிய தருவாயில் என் நண்பனும் அவனின் மணவாட்டியுடன் காதலர் தினத்தை கொண்டாடிவிட்டு வந்தான்.

விண்ணைதாண்டிவருவாயா படத்தின் சென்ட்ரல் பார்க் காட்சியை REWIND செய்து பார்த்து கொண்டிருந்தேன். என்ன ஆச்சு டா ? இன்னும் நீ அவள மறக்கலயா என்று கேட்டான். சிறிய புன்னகையுடன் “அவள் இறந்தால் தானே மறப்பதற்கு என்றேன்”
நானும் இதுவரை கேட்டதில்லை – நீயும் சொல்லியதில்லை

“Describe Her Shiva” என்றான்.

“Normal Height
Curly இல்லாம நல்ல நீளமான Hair கீழ வர
ஒரு மாதிரி சிரிப்பா இருக்கும் அவ நடக்கும் போது Tortoise தோத்து போயிடும் Funny Walk

நல்ல வாய்ஸ் அவளுக்கு
கெட்ட வார்த்தை பேசினா அவளுக்கு புடிக்காது

Grand இல்லாம Simple சுடிதார் தான் Use பண்ணுவா – அதுவே ஒரு வித்தியாசம் தான்
Bubbly,Simple,Makeup எல்லாம் போடமாட்டா – Very Beautiful – பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கும்
என்ன அவளுக்கு ரொம்ப புடிக்கும், Bike-ல என் கூட நிறைய சுத்திருக்கா.

என்கூட இருக்கப்ப படம் பாக்க அவளுக்கு புடிக்காது
நான் Kiss பண்ணிருக்கேன் அவள – நிறைய பேசுவா – ஒரு மதுரை வாசம் அப்படியே வீசும் பேச்சுல – அதுக்கே காலி நான்
வெறுமனே கட்டிபுடிச்சு மூணு மணி நேரம் உட்கார்ந்திருக்கேன் – அவ கால தொட்ருக்கேன்"

"அவ பேரு (____________) "

"அவ தான் இருக்கா இன்னும் என் வாழ்கையில - First Love மச்சான் அவ்வளவு ஈஸியா போகாது
ஆனா அவளுக்கு நான் இல்ல

ரொம்ப Childish ஆன Character நம்மளும் அதே மாதிரி பைத்தியமா காதலிக்கணும்-னு ஆசைபடுவா

எனக்கு புடிக்கும்னே அவ கூட நான் இருக்கும் போது Free Hair-ல இருப்பா

பைக்-ல உக்காரும் போது One Side தான் Mostly Prefer பண்ணுவா. என்னுடைய அடம்பிடித்தலின் காரணமாக Double Side-க்கு சம்மதிப்பாள்

DairyMilk கேட்கும் பெண்களின் நடுவே தேன் மிட்டாய்க்கு ஆசைப்படும் மழலை குழந்தை அவள்"

மச்சான் செம்மடா எனக்கே பொறாமையா இருக்குடா – “லவ்-வ லவ் பண்ணி பண்ணி இருக்கியே மச்சான் ! மறுபடியும் உன் வாழ்க்கையில் இந்த காதலர் தினத்தில் அவள் வந்தால் அவள நீ ஏத்துப்பியா ? மாட்டியா மச்சான் என்று கடைசியாக நண்பன் கேட்டான் !

" பிரிந்த காதலியை நினைத்து Feel பண்ணி அவள பத்தி இவளோ Describe பண்ணிருக்கேன் உன்கிட்ட. அவ என்கூட இருந்தப்ப நான் இப்படி எல்லாம் Describe பண்ணது இல்ல. So, “ I Love My Love “
அவளா ? காதலா? என்று ஒரு Option வந்தால் நான் பண்ணின என்னுடைய காதல் தான் மச்சான் எனக்கு பெருசு அவளை ஒப்பிடும் பொழுது. என் காதலுக்கு என்னுடைய சார்பில் இனிய காதலர் தின வாழ்த்துக்கள்-னு சொல்லிட்டு போய்டே இருப்பேன்டா"

Comments

Popular posts from this blog

The Journey of Solo - Title Poem

ஓம் நமச்சிவாய என்னும் மூலமந்திரத்தின் கருவாய் நீர்,காற்று,நெருப்பு,நிலம்  என்னும் நாற்பகுதிகளை இறைவன் சிவனை வைத்து மையப்படுத்தி இருக்கும் கதைக்களத்தின் ஒரு கவிதை நடை பயணம் இங்கு, " The Journey of Solo - Title Poem |  Bejoy Nambiar  " 1) நீர் - ( World of Shekhar )  அன்பே ஆயிரம் மழைத்துளிகள் என்னை நனைப்பது போல நீ என்னை நனைத்துக்கொள் நதியின் ஆழங்களில் நான் மூச்சு திணறுவது போல நீ என்னை தழுவிக்கொள் கடலின் பேரலைகள் கரையை தீண்டுவது போல நீ என்னை எடுத்துக்கொள் என்னை உன் கரங்களால் அணைத்துக்கொள்ளாதே உன் மனதால் இறுக அணைத்துக்கொள் அன்பின் தனிமையில் உனக்கு மரணம் இல்லை 2) காற்று - ( World of Trilok ) யுகாந்திரங்களின் கோபம் யுகாந்திரங்களின் இறுக்கம் யுகாந்திரங்களின் பொறுமை யுகாந்திரங்களின் தனிமை வந்துவிட்டது எல்லாவற்றின் மீதும் பெரும் புயல் ஒன்று இந்த காற்றை எதிர்த்து நடப்பவர்கள் யார்..? காலத்தின் புயலில் உதிரும் ஆயிரம் ஆயிரம் மலர்களில் ஒரு மலரல்லவா நீ..? அழிவின் தனிமையில் காத்திருக்க உனக்கு நேரமில்லை 3) நெருப்பு - ( World of Shiva ) வன்மத்தின் வனங்கள் பற்றி எரிகின்றன குருதியின

கிறுக்கல்களின் தொகுப்புகள்

வெள்ளிக்காப்பை சுழற்றினேன் சூடான காஃபியை அருந்தினேன் தலை முடியினை கோதி விட்டேன் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தேன் ஆழ்மனதும் அனாதையாக இருந்தது எண்ணங்களின் ஓட்டமும் சீராக இல்லை யூடியுப் பக்கம் சென்றேன் அன்றைய தினத்தின் Trending காணொளிகள் ட்விட்டர் பக்கம் சென்றேன் நடிகர்களின் ரசிகர்களுக்கிடையே தள்ளு முள்ளு இன்ஸ்டாகிராம் பக்கம் சென்றேன் Bae Calls Me Chocobar என்றாள் கிளியோபாட்ரா ஹைக் பக்கம் சென்றேன் நட்டாஸா உரையாடலுக்கு எதிர்வாதம் செய்தாள் சரி, இது தான் இன்றைய தலைவிதி என்று முகப்புத்தகம் வந்து இதை பதிவு செய்தேன்..? - A Poem Without a Topic ❤ ---------------------------------------------------------- வாழ்க்கை இப்படியே போயிடுமா சார் என்பதில் தொடங்கி வாழ்க்கை ஒரு வட்டம் என்பதில் பயணித்து இவ்வளோ தான் சார் வாழ்க்கை என்பதில் முடிகிறது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த நம்பகத்தன்மை நிறைந்த வாழ்க்கை..? -------------------------------------------------------- இந்த காஃபி ஷாப் சுவர்களின் இடையூறுகள் நம் நாவிதழ்கள் இடைபாடுகளிலும்..?..!! - வா ரயில் விட போலாம் வா  🖤 --

குடைக்குள் மழை

✨️💚 ரீனா : ஹே ஆர் யூ தேர்..? விக்ரம் : இருக்கேன் ரீனா, என்ன திடீர்னு மெசேஜ், முக்கியமா எதுவும் சொல்லணுமா..? ரீனா : ஹே, அதெல்லாம் இல்ல, ஏன் ஒர்க்ல இருக்கியா..? விக்ரம் : இல்ல, வீட்டுக்கு வந்துட்டேன், Earlier Appointments So, முடிஞ்சு பா! ரீனா : ஒகே, கொஞ்சம் மனசு சரி இல்ல அதான் உன்கிட்ட பேசலாமேன்னு கால் பண்ணேன்..? விக்ரம் : என்ன ஆச்சு..? ஆர் யூ ஓகே..? சொல்லு ரீனா Any Issue..? ரீனா : ஹே,Just Mood Swing ஒன்லி! நீ ஃபிரீன்னா சொல்லு Let's Walk Together in Beach! உனக்கு தெரியும்ல எனக்கு பீச் வாக்ன்னா ரொம்ப பிடிக்கும், So நீ ஃபிரீன்னா வர முடியுமா விக்ரம்..? விக்ரம் : சரி, ஈவினிங் 6 மணிக்கு பீச்ல நம்ம வழக்கமா மீட் பண்ணுற அந்த பட்டர் பன் கடைக்கு வந்துரு ரீனா, நானும் வந்துடுறேன், ரீனா : தேங்க்ஸ் விக்ரம்! விக்ரம் : தேங்க்ஸா..? No More Formalities! உன்னோட தேங்க்ஸ்ல நான் பூரிச்சு போய்ட்டேன்,சிரிப்பு காட்டாம வா ரீனா! ரீனா : ஹ்ம்ம் டா! * இடம் : கடற்கரை * நேரம் : மாலை 6 மணி விக்ரம் : ஹே! என்ன ஆச்சு ரீனா திடீர்னு..? ரீனா : அதெல்லாம் ஒன்னும் இல்லடா, Please Give Sometime நானே சொல்லுறேன் போ