Skip to main content

Posts

Showing posts from May 3, 2020

தனிமை காதலன்

கடைசி வரைக்கும் உங்கள புரிஞ்சுக்காம போனவங்க வரவே இல்லேன்னா என்ன செய்விங்க..? ஹ்ம்ம்,நல்ல கேள்வி தான் பட் எல்லாரையும் மாதிரி நான் அவங்கள மட்டுமே நினைச்சுட்டு இருப்பேன் அப்படிலாம் சொல்லமாட்டேன் "நினைப்பேன்" அவ்வளோதான் இப்போ எப்படி சொல்றதுன்னா,அது என்னோட வாழ்க்கையில ஒரு பார்ட் தான், மூன்று அல்லது நான்கு வருஷம் கல்லூரி போறோம் படிக்குறோம் ஒரு நல்ல அனுபவத்தோட வெளிய வரோம் கரெக்ட்டா அது போலத்தான் அவங்களும், என்னோட வாழ்க்கைக்குள்ள ஒரு பார்ட் - டா வந்தாங்க, என்னோட வாழ்க்கைய நான் திரும்பி பார்த்தா அது ஒரு அழகான சாப்டரா இருக்கும் அதுல சந்தேகமே இல்ல Actually, என்னோட காதலும் அங்க இருக்குல, கடவுள் அழக ரசிக்க தான் கண்கள கொடுத்துருக்கான் நமக்கு, ஹ்ம்ம் அதே மாதிரிதான் நானும் அவங்களோட அழகுல மிதந்து தவழ்ந்து அவங்களுக்காக நிறைய எழுதி எழுதி எனக்குள்ளேயே வச்சுப்பேன்,அது என்னோட எழுத்து என்னோட ஆழ்மனசுல இருந்து வந்த வார்த்தைகள் அதுக்கு இப்போன்னு இல்ல இன்னும் ஆயிரம் ஜென்மங்கள் கடந்து யாராவது ஒருத்தங்ககிட்ட அது கிடைச்சு அவங்க அதை படிச்சாலும் அதோட உணர்வும் அது சொல்லுற வலியும் ஒன்னு தான், அதனால அவங்க என்ன