Skip to main content

தனிமை காதலன்

கடைசி வரைக்கும் உங்கள புரிஞ்சுக்காம
போனவங்க வரவே இல்லேன்னா என்ன
செய்விங்க..?

ஹ்ம்ம்,நல்ல கேள்வி தான்
பட் எல்லாரையும் மாதிரி நான்
அவங்கள மட்டுமே நினைச்சுட்டு
இருப்பேன் அப்படிலாம் சொல்லமாட்டேன்
"நினைப்பேன்" அவ்வளோதான்
இப்போ எப்படி சொல்றதுன்னா,அது
என்னோட வாழ்க்கையில ஒரு பார்ட்
தான், மூன்று அல்லது நான்கு வருஷம்
கல்லூரி போறோம் படிக்குறோம் ஒரு
நல்ல அனுபவத்தோட வெளிய வரோம்
கரெக்ட்டா அது போலத்தான் அவங்களும், என்னோட
வாழ்க்கைக்குள்ள ஒரு பார்ட் - டா
வந்தாங்க, என்னோட வாழ்க்கைய
நான் திரும்பி பார்த்தா அது ஒரு
அழகான சாப்டரா இருக்கும் அதுல
சந்தேகமே இல்ல Actually, என்னோட
காதலும் அங்க இருக்குல, கடவுள் அழக
ரசிக்க தான் கண்கள கொடுத்துருக்கான்
நமக்கு, ஹ்ம்ம் அதே மாதிரிதான் நானும்
அவங்களோட அழகுல மிதந்து தவழ்ந்து
அவங்களுக்காக நிறைய எழுதி எழுதி
எனக்குள்ளேயே வச்சுப்பேன்,அது
என்னோட எழுத்து என்னோட
ஆழ்மனசுல இருந்து வந்த வார்த்தைகள்
அதுக்கு இப்போன்னு இல்ல இன்னும்
ஆயிரம் ஜென்மங்கள் கடந்து யாராவது
ஒருத்தங்ககிட்ட அது கிடைச்சு அவங்க
அதை படிச்சாலும் அதோட உணர்வும்
அது சொல்லுற வலியும் ஒன்னு தான்,
அதனால அவங்க என்னோட
வாழ்க்கையில நிகழ்ந்த ஒரு
பேரன்பின் ஆதி ஊற்றுன்னு
சொல்லலாம், இப்போது ஊற்று
நீர் வளம் குறைஞ்சு போச்சு,
அதனால காலம் மாறிடுச்சு
அவங்க கூட இல்ல,இதுக்கு அப்பறம்
நான் கடவுள் கிட்ட வேண்டுறது
ஒன்னு தான் எந்த சூழ்நிலையிலும்
நான் அவங்கள பார்க்கக்கூடாதுன்னு
மட்டும் தான், அவங்களோட கண்கள்ல
நான் அகப்படாம கண்ணாம்பூச்சி
ஆட்டம் ஆடணும்ன்னு தான் ஆசை,
அதனாலேயே என்ன நானே தனிமை
படுத்திக்கிட்டேன் அவங்ககிட்ட இருந்தும்
சரி அவங்கள சுற்றி இருக்கும் நண்பர்கள்
கிட்ட இருந்தும் சரி, தனிமையோட சுகம்
எனக்கு பிடிச்சுருக்கு அதுல Phd ரீசர்ச்
பண்ண சொன்னா கூட பண்ணுவேன்,
அந்த அளவு தனிமையோட தாக்கத்தை
பார்த்துட்டு இருக்கேன் தினமும்,
ஃபைனலா சொல்லனும்னா
என்ன விட்டு போனவங்க போனதாவே
இருக்கட்டும் எனக்கு நான் தேடும் நான்
தேடிய நான் தேடிக்கொண்டிருக்கும்
"நான்" என்ற என்னை சார்ந்த
நினைவுகள் மட்டுமே போதும்,

*
நினைவுகள் நெஞ்சில் பேசினால்
தனிமை அதை கண்டு ரசிக்கும்,

ஒருவனின் பிரிவு சார்ந்த தனிமையை
பேசும் உணர்வை விளக்குவதற்காக
கற்பனை ரீதியில் எழுதப்பட்டது..!! ❤️

Comments

Popular posts from this blog

The Journey of Solo - Title Poem

ஓம் நமச்சிவாய என்னும் மூலமந்திரத்தின் கருவாய் நீர்,காற்று,நெருப்பு,நிலம்  என்னும் நாற்பகுதிகளை இறைவன் சிவனை வைத்து மையப்படுத்தி இருக்கும் கதைக்களத்தின் ஒரு கவிதை நடை பயணம் இங்கு, " The Journey of Solo - Title Poem |  Bejoy Nambiar  " 1) நீர் - ( World of Shekhar )  அன்பே ஆயிரம் மழைத்துளிகள் என்னை நனைப்பது போல நீ என்னை நனைத்துக்கொள் நதியின் ஆழங்களில் நான் மூச்சு திணறுவது போல நீ என்னை தழுவிக்கொள் கடலின் பேரலைகள் கரையை தீண்டுவது போல நீ என்னை எடுத்துக்கொள் என்னை உன் கரங்களால் அணைத்துக்கொள்ளாதே உன் மனதால் இறுக அணைத்துக்கொள் அன்பின் தனிமையில் உனக்கு மரணம் இல்லை 2) காற்று - ( World of Trilok ) யுகாந்திரங்களின் கோபம் யுகாந்திரங்களின் இறுக்கம் யுகாந்திரங்களின் பொறுமை யுகாந்திரங்களின் தனிமை வந்துவிட்டது எல்லாவற்றின் மீதும் பெரும் புயல் ஒன்று இந்த காற்றை எதிர்த்து நடப்பவர்கள் யார்..? காலத்தின் புயலில் உதிரும் ஆயிரம் ஆயிரம் மலர்களில் ஒரு மலரல்லவா நீ..? அழிவின் தனிமையில் காத்திருக்க உனக்கு நேரமில்லை 3) நெருப்பு - ( World of Shiva ) வன்மத்தின் வனங்கள் பற்றி எரிகின்றன ...

The One - அந்த ஒருவன் 💚

💚 நிராகரிக்கப்பட்ட ஒருவன் புறக்கணிக்கப்பட்ட ஒருவன் ஒதுக்கி வைக்கப்பட்ட ஒருவன் அவமானப்படுத்தப்பட்ட ஒருவன், "வர சொல்லு அந்த ஒருத்தன..?" பல போர் படை இருக்கலாம் எதிர்பார்த்தது இவனத்தான் அந்தொருவன் வந்திருக்கான்டே..!!! "Temba" என்றால் "Hope" என்று பொருள், ஒட்டு மொத்த ஆஃப்ரிக்க மக்களின் நம்பிக்கை ஒளியாகவும் அவர்களின் ஏக்கத்திற்கு விடையாகவும் இந்த "டெம்பா" ஒரு வாழ்வியலை இங்கே புதுப்பித்து இருக்கிறான், எத்தனை அவமானங்கள் தான் 'இந்த ஒருவனுக்கு' நிகழ்ந்திருக்கிறது, உயரம் ரீதியாகவும்,நிற ரீதியாகவும் என இவன் கண்ட அவமானங்கள் அனைத்தையும் தாண்டி இன்று ஒரு இன மக்களையே இன்று இவன் தலை நிமிர செய்திருக்கிறான், எங்க கேங்க்ல ஒரு ரெண்டு பேர் மொரட்டு தனமான தென்னாப்பிரிக்கா ஃபேன்,நானும் என்னோட இன்னொரு முகநூல் நண்பரும் (Anjali Raga Jammy), எப்படி "கொம்பன்" யானைய பார்த்து காடே ஆடி போகுமோ அது மாதிரி நாங்க ரெண்டு பேரும் எங்க தலைவன் டெம்பா பாவுமா - வ "டெம்பன்" ன்னு செல்லமா தான் கூப்பிடுவோம், இந்த டெம்பனின் கைகள் ஒரு ந...

நிகரில்லாதவள்

அன்று ஊரெங்கும் நல்ல மழை வெளுத்து வாங்கிகொண்டிருந்தது, பெரு மழைக்கு ஒதுங்குவதற்காக அவள் அங்கே சாலையோரம் இருந்த மரத்தின் அடியில் சென்று நின்று கொண்டாள், அவளுக்கு அருகே பள்ளி முடிந்து வீடு திரும்பும் குழந்தைகள் சூழ அவள் ஒரு பள்ளிக்கூடத்து ஆசிரியை போல் அக்குழந்தைகளுக்கு நடுவில் நின்று அவர்கள் மழையில் செய்யும் சேட்டையை பார்த்து ரசித்துக்கொண்டிருந்தாள், இந்த மழை நிற்பதற்குள் இவள் யார்,இவள் பெயர் என்ன, இவள் சார்ந்து இருப்பவைகள் என சின்ன கதையுடன் ஒரு முன்னோட்டம் பார்ப்போம், இவளுக்கான அறிமுகம் இல்லாததால் இவளுக்கு இவளாகவே சூடிக்கொண்ட பெயர் இது, ஆம் இவளுக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து ஆசிரமத்தில் தான் வளர்ந்து வருகிறாள்,அங்கிருப்பவர்கள் "குட்டி" என்று கூப்பிடுவார்கள் அதுவே இவளது பெயராகவும் மாறியது, பின் பள்ளி முடிந்து யாரோ பெயர் தெரியாத ஸ்பான்ஸர்ஷிப் மூலம் கல்லூரி படிப்பை முடித்து நல்ல ஒரு இடத்தில் வேலைக்கு சேர்ந்த பின் தான் இவளுக்கு ஒன்று புரிந்தது, நம்மை அடையாளப்படுத்திக்கொள்ள சரியான பெயர் கூட நமக்கு இல்லை என்று, எதிர்நீச்சல் படத்தில் வருவது போல் தன் அடையாளத்தை இச்சமூகத்தில் பதிக்...