தினமும் காலை 6 மணிக்கு எந்திரிந்து
7:45க்கு வீட்டில் இருந்து புறப்பட்டால்
பேருந்து நிலையத்திற்கு நடந்து செல்ல
அரை மணி நேரம் ஆகும்,சரியாக 8:15 - க்கு
பேருந்து நிலையத்திற்கு சென்றவனுடன்
அங்கே இருக்கும் ஒரு இனிப்பு பலகார
கடை வாசலில் கால் வலிக்க அவளின்
வருகைக்காக அவன் தவமிருக்கிறான்,
8:45 - க்கு வரும் அவளுக்காக 8:15 - இல்
இருந்து அவளை ஏற்றி செல்லும்
பேருந்து பக்கத்திலேயே அவன் தன்
காலை காட்சியை தொடங்குகின்றான்,
8:45 - க்கு அவள் வருகிறாள்
அவளுடன் அவள் கல்லூரி சீனியரும்
வருகிறாள்,இவர்கள் இருவரின் காதல்
அந்த சீனியர் பெண்ணுக்கு தெரியாது,
அருகே நடந்து வரும் அந்த சீனியர்
பெண்ணை தாண்டி அவள் பார்வை
இவன் மீது ஒரு நொடி கடந்து செல்கிறது,
பேருந்து கிளம்ப ஐந்து நிமிட
இடைவெளியில் அவ்வப்போது
மூன்று அல்லது நான்கு முறை
அவளின் காந்தவிசை பார்வை
அவனை சாதுர்யமாக ஈர்த்து செல்கிறது,
அவள் பேருந்து சென்றவுடன் தன்
கல்லூரிக்கு செல்லும் பேருந்தின்
ஜன்னலோர சீட்டில் ஏறி அமர்ந்து
யுவன் சங்கர் ராஜா பாடல்களை ஒலிக்க
விட்டு ஹெட்செட்டை காதில் மாட்டுகிறான்,
சாரதி அவர்களின் வரியில் யுவன் பாடிய
பாடல் இவனுக்காக எழுதியது போலவே
தன்னை தானே ஜீவித்துக்கொள்வான்,
பேருந்தின் புழுதியும்
பூக்களாய் மாறுதே
உற்சாகம் மேலும் மேலும் ஏற
மண் ரோடும் மேகமாக மாற,
பாடல்களின் வரியை ரசிக்கும்
தருவாயில் அவ்வப்போது நடத்துநர்,
சிம்மக்கல் இறங்குறவங்க இறங்குங்க,
எப்பா ஏய் படில நிக்காம மேல ஏறுங்கப்பா
ஒரு தடவ சொன்னா இந்த காலேஜ் பசங்க
கேக்கவே மாட்டிராங்க ச்சை,
நடத்துநரின் வசை பாடல் கேட்காதவனாய்
அவளை பார்த்த அந்த ஐந்து நிமிடத்தில்
அவள் காதோரம் ஆடிய லோலாக்கு தோடில்
இருந்து காதோரம் அவள் விரல் ஒதுக்கும்
கூந்தல் அடர்த்தி வரை தான் கவனித்த
அனைத்தையும் எண்ணி பெருங்களிப்பில்
அவன் தன்னை ஒரு கவிஞன் போல்
நினைத்துக்க்கண்டு மனதுக்குள்
நா.முத்துக்குமாராக உருவெடுத்து
அவளை பற்றி தன் மனதில்
எழுத்துக்களிலேயே காதல் செய்வான்,
காதோர லோலாக்கு அழகு
கதைக்காத மொழி அழகு
கண்ணில் தினமும் பேசுவது அழகு
கால் கொலுசின் முத்துக்கள் அழகு
காலை வேளையின் சூரியன் அழகு
காத்திருந்து கிளம்பும் பேருந்து அழகு
காந்தக்குரலில் பூ விற்கும் பெண் அழகு
கள்ள விழிகளில் நீ என்னை பார்க்கும்
காட்சி யாவும் என் கண்ணுக்கு பேரழகு,
எம்பது பேர் வரையில் நெருக்கி கொண்டு
செல்லும் அரசு பேருந்தில் எனக்கு மட்டும்
கவிதை தோன்றுவது சிறப்பிக்கத்தக்க
விஷயம் தானே,
காதலில் விழுந்து விட்டால்
அவள் பற்றிய குறிப்பேடுகளையும்
ஆடை ஆவணங்களையும் வைத்தே
கிறுக்கி கிறுக்கி கண்டதை எழுதியாவது
அவன் ஒரு கவிஞன் என தன்னைத்தானே
மெருகேற்றிக்கொள்வான் தானே,
குட்டி பயணத்திற்கு பிறகு
கல்லூரி வந்தடைந்தான்,
காலச்சக்கரம் சுற்றியதில்
மூன்று வருடங்களும் பிரதி ஞாயிரு
மற்றும் விடுமுறை தினங்களை தவிர்த்து
மற்ற அனைத்து காலைப்பொழுதும்
இவ்வாறாகவே அவனுக்கு அமைந்தது
அவள் காதலுடன்,
அவன் பார்வையில்
Comments
Post a Comment