Skip to main content

Let's Go !!

யாருக்கும் சிறு தீங்கும்
நினைக்காதவன் அவன்

மனதளவிலும் காயப்படுத்தக்கூடாது
என நித்தமும்  நினைப்பவன் அவன்

பணம் பெயர் புகழ் எதற்கும்
ஆசைப்படாத நிராயுதபாணி அவன்

அன்பையும் கருணையையும் மட்டுமே
பிறருக்கு தானம் செய்பவன் அவன்

புள்ளின் நுனியில் இருக்கும் நீர்த்துளிக்கு
கூட துரோகம் விளைவிக்காதவன் அவன்

இசையில் மூழ்கி பாடல்களின் வரிகளுக்கு
தன்னை பொருத்திப்பார்க்கும் ரசிகன் அவன்

தேன் மிட்டாய்கள் வாங்கி கொடுத்து
குழந்தைகளின் சிரிப்பை கவரும் கள்வன் அவன்

ஜோடியாய் சுற்றி திரியும் காதலர்களை
பார்த்து கள்ளங்கபடமில்லா சிரிப்பவன் அவன்

காண்கின்ற யாவையும் எழுத்துக்களாக
உருவம் கொடுக்கும் திறன் உள்ளவன் அவன்

ரோஜாவின் மொட்டுக்களை விட அதன்
முட்களின் மேல் காதல் கொள்பவன் அவன்

அப்பாவின் மிதிவண்டி பெடலை சுற்றி
பார்த்து காலத்தை கடந்து வந்தவன் அவன்

அம்மா குளிப்பாட்டும் சீகைக்காய்
குளியலை நினைத்து பார்ப்பவன் அவன்

உடன் இருந்து குழி பரித்த தோழனையும்
பெரிதாக கண்டுகொள்ளாமல் விட்டவன் அவன்

வறுமையான காலத்தில் உணவளித்த
கல்லூரி நண்பனை போற்றுபவன் அவன்

புத்தக வாசிப்பை நேசிக்கும்
அருமையான தமிழ் வாசிப்பாளன் அவன்

பிறரை எழுதுங்கள் என சொல்லி
வலிக்கு வழி தேடி கொடுக்கும் பயணி அவன்

தனிமையை ரசிக்கும் இரவுகளின்
அழகை சொல்லும் தேவதூதன் அவன்

இவ்வளவு இருந்தும் செய்யாத பாவம்
அவனை ஏன் கழுகு போல் வட்டமிட்டு
சுற்ற வேண்டும்..?

அடுத்த நொடி நிச்சயம் இல்லாத
வாழ்க்கையில் அவன் அடுத்த உயரத்திற்கு
முன்னேற முடியாமல் தடையாய் இருப்பது
செய்யாத பாவங்களும் மனதில் இருக்கும்
ஆறாத காயங்களுமே,

இன்று பிணம் போல் நடமாடுதல்
என்பது  அவன் வாழ்க்கை படலத்தின்
வெறுமைக்கான கோரத்தாண்டவங்கள்,

ஓட்டம் தொடர்ந்துகொண்டு இருக்கிறது
அவனின் இந்த நிலை மாறு(ம்)(மா)(மோ),

காத்திருக்கிறான் காலத்தின் பிடியில்
தன் வலிகளை மறைத்து உங்களில் ஒருவனாக,

: ' ) ❤️

Comments

Popular posts from this blog

The One - அந்த ஒருவன் 💚

💚 நிராகரிக்கப்பட்ட ஒருவன் புறக்கணிக்கப்பட்ட ஒருவன் ஒதுக்கி வைக்கப்பட்ட ஒருவன் அவமானப்படுத்தப்பட்ட ஒருவன், "வர சொல்லு அந்த ஒருத்தன..?" பல போர் படை இருக்கலாம் எதிர்பார்த்தது இவனத்தான் அந்தொருவன் வந்திருக்கான்டே..!!! "Temba" என்றால் "Hope" என்று பொருள், ஒட்டு மொத்த ஆஃப்ரிக்க மக்களின் நம்பிக்கை ஒளியாகவும் அவர்களின் ஏக்கத்திற்கு விடையாகவும் இந்த "டெம்பா" ஒரு வாழ்வியலை இங்கே புதுப்பித்து இருக்கிறான், எத்தனை அவமானங்கள் தான் 'இந்த ஒருவனுக்கு' நிகழ்ந்திருக்கிறது, உயரம் ரீதியாகவும்,நிற ரீதியாகவும் என இவன் கண்ட அவமானங்கள் அனைத்தையும் தாண்டி இன்று ஒரு இன மக்களையே இன்று இவன் தலை நிமிர செய்திருக்கிறான், எங்க கேங்க்ல ஒரு ரெண்டு பேர் மொரட்டு தனமான தென்னாப்பிரிக்கா ஃபேன்,நானும் என்னோட இன்னொரு முகநூல் நண்பரும் (Anjali Raga Jammy), எப்படி "கொம்பன்" யானைய பார்த்து காடே ஆடி போகுமோ அது மாதிரி நாங்க ரெண்டு பேரும் எங்க தலைவன் டெம்பா பாவுமா - வ "டெம்பன்" ன்னு செல்லமா தான் கூப்பிடுவோம், இந்த டெம்பனின் கைகள் ஒரு ந...

The Journey of Solo - Title Poem

ஓம் நமச்சிவாய என்னும் மூலமந்திரத்தின் கருவாய் நீர்,காற்று,நெருப்பு,நிலம்  என்னும் நாற்பகுதிகளை இறைவன் சிவனை வைத்து மையப்படுத்தி இருக்கும் கதைக்களத்தின் ஒரு கவிதை நடை பயணம் இங்கு, " The Journey of Solo - Title Poem |  Bejoy Nambiar  " 1) நீர் - ( World of Shekhar )  அன்பே ஆயிரம் மழைத்துளிகள் என்னை நனைப்பது போல நீ என்னை நனைத்துக்கொள் நதியின் ஆழங்களில் நான் மூச்சு திணறுவது போல நீ என்னை தழுவிக்கொள் கடலின் பேரலைகள் கரையை தீண்டுவது போல நீ என்னை எடுத்துக்கொள் என்னை உன் கரங்களால் அணைத்துக்கொள்ளாதே உன் மனதால் இறுக அணைத்துக்கொள் அன்பின் தனிமையில் உனக்கு மரணம் இல்லை 2) காற்று - ( World of Trilok ) யுகாந்திரங்களின் கோபம் யுகாந்திரங்களின் இறுக்கம் யுகாந்திரங்களின் பொறுமை யுகாந்திரங்களின் தனிமை வந்துவிட்டது எல்லாவற்றின் மீதும் பெரும் புயல் ஒன்று இந்த காற்றை எதிர்த்து நடப்பவர்கள் யார்..? காலத்தின் புயலில் உதிரும் ஆயிரம் ஆயிரம் மலர்களில் ஒரு மலரல்லவா நீ..? அழிவின் தனிமையில் காத்திருக்க உனக்கு நேரமில்லை 3) நெருப்பு - ( World of Shiva ) வன்மத்தின் வனங்கள் பற்றி எரிகின்றன ...

நிகரில்லாதவள்

அன்று ஊரெங்கும் நல்ல மழை வெளுத்து வாங்கிகொண்டிருந்தது, பெரு மழைக்கு ஒதுங்குவதற்காக அவள் அங்கே சாலையோரம் இருந்த மரத்தின் அடியில் சென்று நின்று கொண்டாள், அவளுக்கு அருகே பள்ளி முடிந்து வீடு திரும்பும் குழந்தைகள் சூழ அவள் ஒரு பள்ளிக்கூடத்து ஆசிரியை போல் அக்குழந்தைகளுக்கு நடுவில் நின்று அவர்கள் மழையில் செய்யும் சேட்டையை பார்த்து ரசித்துக்கொண்டிருந்தாள், இந்த மழை நிற்பதற்குள் இவள் யார்,இவள் பெயர் என்ன, இவள் சார்ந்து இருப்பவைகள் என சின்ன கதையுடன் ஒரு முன்னோட்டம் பார்ப்போம், இவளுக்கான அறிமுகம் இல்லாததால் இவளுக்கு இவளாகவே சூடிக்கொண்ட பெயர் இது, ஆம் இவளுக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து ஆசிரமத்தில் தான் வளர்ந்து வருகிறாள்,அங்கிருப்பவர்கள் "குட்டி" என்று கூப்பிடுவார்கள் அதுவே இவளது பெயராகவும் மாறியது, பின் பள்ளி முடிந்து யாரோ பெயர் தெரியாத ஸ்பான்ஸர்ஷிப் மூலம் கல்லூரி படிப்பை முடித்து நல்ல ஒரு இடத்தில் வேலைக்கு சேர்ந்த பின் தான் இவளுக்கு ஒன்று புரிந்தது, நம்மை அடையாளப்படுத்திக்கொள்ள சரியான பெயர் கூட நமக்கு இல்லை என்று, எதிர்நீச்சல் படத்தில் வருவது போல் தன் அடையாளத்தை இச்சமூகத்தில் பதிக்...