Skip to main content

லவ் யூ டாடி !!

அணைகின்ற விளக்கு
சுடர் விட்டு எரிவது போல்
இறப்பதற்கு முன் அவர் குரலில்
கடைசியாக சொன்ன வார்த்தை
எந்தன் பெயர் மட்டுமே,

நீங்கள் என்னை விட்டு சென்று
சரியாக 18 வருடங்கள் ஆகிவிட்டது,

தூங்குவோம் என கண்ணை மூடினால்
எந்தன் கனவுகளில் உங்கள் உருவம்
என் இரவு முழுவதையும்
உங்கள் வசப்படுத்திக்கொண்டது,

யாரோ ஒரு அப்பா தன் கால் வலிக்க
மிதிவண்டியை மிதித்து தன் மகனை
சொகுசாக கூட்டிச்செல்லும் போது இன்னும்
கொஞ்ச நாள் நான் மழலை வகுப்பில்
படித்திருக்கலாமோ என மனம் நாடுகிறது,

வெளியூரில் வேலை பார்த்தாலும்
சொந்த ஊருக்கு போய் புரோட்டா
சாப்பிடும் போதெல்லாம் ஞாயிற்று
கிழமை நீங்கள் வாங்கிக்கொடுக்கும்
புரோட்டா மட்டுமே கண்களின் முன்
வந்து செல்கிறது,

கேட்டவை எல்லாம் கிடைத்தது நடுத்தர
குடும்பத்தில் பிறந்தும் கூட நான் மட்டுமே
தனிக்காட்டு ராஜா நீங்கள் உடன் இருந்த
வரை,

அன்று நீங்கள் வாங்கிக்கொடுக்கும்
எனக்கு பிடித்த 50-50 பிஸ்கட்டுகளின்
சுவை இன்றைய தினத்தில் காலாவதி
ஆகிவிட்டது போல் அச்சுவையிலிருந்து,

ரஜினி படமென்றால் முதல் காட்சி
டிக்கெட்டை எப்படியாவது வாங்கி என்னை
கூட்டிச்சென்று அவரின் ஸ்டைலை ரசிக்க
வைத்தீர்கள் இன்றோ அந்த விண்டேஜ்
ரஜினியை கூட திரையில் பார்க்க
முடியவில்லை,

யாரோ முகம் தெரியாத உறவினர்கள்
கூட சொல்கிறார்கள் உங்கள் பெருமையை
ஹ்ம்ம் அவர்கள் வாயில் இருந்து நல்ல
விஷயம் வருவதே அரிது எப்படி இப்படி
ஒரு நற்பெயரை சம்பாதித்தீர்கள் என்ற
ஆச்சரியம் இன்று வரை எனக்கு இருந்து
கொண்டு தான் இருக்கிறது,

அது என்னமோ சரி தான்
நல்ல மனசு உள்ளவங்க
சீக்கிரமா தனக்கான இடத்த
தேர்ந்து எடுத்துப்பாங்கல ஹ்ம்ம்,

எந்த சூழ்நிலையிலும் கலங்காம
சிரிச்சிட்டே கடந்து போற மனநிலை
கூட உங்ககிட்ட கத்துக்கிட்டது தான்,

என்ன இப்போ நீங்க கூட இருந்திருந்தா
இந்த கொரோனா போன்ற கட்டுப்பாடு
விதித்த நாள்ல வீட்டுக்குள்ளேயே இருந்து
உங்க மடில படுத்து மனசு விட்டு பேச
கொஞ்சம் நேரம் கிடைச்சுருக்கும்,

சரி,எனக்கு கொடுத்து
வைக்கலன்னு நினைச்சுக்குறேன்,

கனவுல டெய்லி கால் பண்ணி
நீங்களும் அம்மாவும் பேசுவீங்களே
பத்து நிமிஷம் அது தொடரும்ன்னு
நினைக்குறேன்,

ஷேர் பண்ண நிறைய ஆசைகளும்
பிரியமும் இருக்கு மம்மியையும்
நல்லா பாத்துக்கோங்க,

ஹ்ம்ம், போங்க டாடி
அம்மா கூட ரொமான்ஸ் பண்ணுங்க
நீங்க வசிக்கின்ற அந்த மேல் உலகத்துல
சந்தோஷமா இருங்க,

என்ன பத்தி கவல படாதீங்க
கடைசி வர எந்த கெட்ட பழக்கத்துலையும்
என்ன நுழைச்சுக்கமாட்டேன் உங்களுக்கு
செஞ்சு கொடுத்த அந்த ப்ராமிஸ காப்பத்தி
இன்னார் பையன் - ன்னு உங்க பேர்
சொல்லும் பிள்ளையா தான் இருப்பேன்,

நீங்க சொல்லுவது போல
உலகம் ரொம்ப பெருசு தான் டாடி
ஆனா நிறைய வருஷம் போராடி
என்ன நான் இணைச்சுக்கிட்டேன்
ஊரோடு ஊராய் மனிதனோடு மனிதனாய்,

என்னால முடிஞ்ச வர
சின்னச்சின்ன அன்ப விதைச்சுட்டு
இருக்கேன் சில பேர சந்தோஷமாவும்
வச்சுக்குறேன் என்னோட எழுத்து மூலமா,

என்ன சுத்தியே உங்க தேடல் இருக்கும்
என்னோட தேடலும் நீங்களும் மம்மியும்
மட்டும் தான்,

நீங்க தான் எல்லாமே
நீங்க தான் எல்லாமுமே,

நைட் கால் பண்ணுங்க
கதைக்க ஓராயிரம் கதைகள் இருக்கு,

~ லவ் யூ டாடி ( சின்ன சிரிப்புடன் ) ❤️

Comments

Popular posts from this blog

The One - அந்த ஒருவன் 💚

💚 நிராகரிக்கப்பட்ட ஒருவன் புறக்கணிக்கப்பட்ட ஒருவன் ஒதுக்கி வைக்கப்பட்ட ஒருவன் அவமானப்படுத்தப்பட்ட ஒருவன், "வர சொல்லு அந்த ஒருத்தன..?" பல போர் படை இருக்கலாம் எதிர்பார்த்தது இவனத்தான் அந்தொருவன் வந்திருக்கான்டே..!!! "Temba" என்றால் "Hope" என்று பொருள், ஒட்டு மொத்த ஆஃப்ரிக்க மக்களின் நம்பிக்கை ஒளியாகவும் அவர்களின் ஏக்கத்திற்கு விடையாகவும் இந்த "டெம்பா" ஒரு வாழ்வியலை இங்கே புதுப்பித்து இருக்கிறான், எத்தனை அவமானங்கள் தான் 'இந்த ஒருவனுக்கு' நிகழ்ந்திருக்கிறது, உயரம் ரீதியாகவும்,நிற ரீதியாகவும் என இவன் கண்ட அவமானங்கள் அனைத்தையும் தாண்டி இன்று ஒரு இன மக்களையே இன்று இவன் தலை நிமிர செய்திருக்கிறான், எங்க கேங்க்ல ஒரு ரெண்டு பேர் மொரட்டு தனமான தென்னாப்பிரிக்கா ஃபேன்,நானும் என்னோட இன்னொரு முகநூல் நண்பரும் (Anjali Raga Jammy), எப்படி "கொம்பன்" யானைய பார்த்து காடே ஆடி போகுமோ அது மாதிரி நாங்க ரெண்டு பேரும் எங்க தலைவன் டெம்பா பாவுமா - வ "டெம்பன்" ன்னு செல்லமா தான் கூப்பிடுவோம், இந்த டெம்பனின் கைகள் ஒரு ந...

The Journey of Solo - Title Poem

ஓம் நமச்சிவாய என்னும் மூலமந்திரத்தின் கருவாய் நீர்,காற்று,நெருப்பு,நிலம்  என்னும் நாற்பகுதிகளை இறைவன் சிவனை வைத்து மையப்படுத்தி இருக்கும் கதைக்களத்தின் ஒரு கவிதை நடை பயணம் இங்கு, " The Journey of Solo - Title Poem |  Bejoy Nambiar  " 1) நீர் - ( World of Shekhar )  அன்பே ஆயிரம் மழைத்துளிகள் என்னை நனைப்பது போல நீ என்னை நனைத்துக்கொள் நதியின் ஆழங்களில் நான் மூச்சு திணறுவது போல நீ என்னை தழுவிக்கொள் கடலின் பேரலைகள் கரையை தீண்டுவது போல நீ என்னை எடுத்துக்கொள் என்னை உன் கரங்களால் அணைத்துக்கொள்ளாதே உன் மனதால் இறுக அணைத்துக்கொள் அன்பின் தனிமையில் உனக்கு மரணம் இல்லை 2) காற்று - ( World of Trilok ) யுகாந்திரங்களின் கோபம் யுகாந்திரங்களின் இறுக்கம் யுகாந்திரங்களின் பொறுமை யுகாந்திரங்களின் தனிமை வந்துவிட்டது எல்லாவற்றின் மீதும் பெரும் புயல் ஒன்று இந்த காற்றை எதிர்த்து நடப்பவர்கள் யார்..? காலத்தின் புயலில் உதிரும் ஆயிரம் ஆயிரம் மலர்களில் ஒரு மலரல்லவா நீ..? அழிவின் தனிமையில் காத்திருக்க உனக்கு நேரமில்லை 3) நெருப்பு - ( World of Shiva ) வன்மத்தின் வனங்கள் பற்றி எரிகின்றன ...

நிகரில்லாதவள்

அன்று ஊரெங்கும் நல்ல மழை வெளுத்து வாங்கிகொண்டிருந்தது, பெரு மழைக்கு ஒதுங்குவதற்காக அவள் அங்கே சாலையோரம் இருந்த மரத்தின் அடியில் சென்று நின்று கொண்டாள், அவளுக்கு அருகே பள்ளி முடிந்து வீடு திரும்பும் குழந்தைகள் சூழ அவள் ஒரு பள்ளிக்கூடத்து ஆசிரியை போல் அக்குழந்தைகளுக்கு நடுவில் நின்று அவர்கள் மழையில் செய்யும் சேட்டையை பார்த்து ரசித்துக்கொண்டிருந்தாள், இந்த மழை நிற்பதற்குள் இவள் யார்,இவள் பெயர் என்ன, இவள் சார்ந்து இருப்பவைகள் என சின்ன கதையுடன் ஒரு முன்னோட்டம் பார்ப்போம், இவளுக்கான அறிமுகம் இல்லாததால் இவளுக்கு இவளாகவே சூடிக்கொண்ட பெயர் இது, ஆம் இவளுக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து ஆசிரமத்தில் தான் வளர்ந்து வருகிறாள்,அங்கிருப்பவர்கள் "குட்டி" என்று கூப்பிடுவார்கள் அதுவே இவளது பெயராகவும் மாறியது, பின் பள்ளி முடிந்து யாரோ பெயர் தெரியாத ஸ்பான்ஸர்ஷிப் மூலம் கல்லூரி படிப்பை முடித்து நல்ல ஒரு இடத்தில் வேலைக்கு சேர்ந்த பின் தான் இவளுக்கு ஒன்று புரிந்தது, நம்மை அடையாளப்படுத்திக்கொள்ள சரியான பெயர் கூட நமக்கு இல்லை என்று, எதிர்நீச்சல் படத்தில் வருவது போல் தன் அடையாளத்தை இச்சமூகத்தில் பதிக்...