ஒரு பாடல் எப்போ கேட்டாலும்
இமையோரம் கண்ணீர் - ன்ற
சூழ்நிலைக்கு கூட்டிட்டு போகும்ல
அப்படி ஒரு பாட்டு தான் இது,
அதுக்கு காரணம் என்னோட
ஆசான் நா. முத்துக்குமார் - ன்னு
எங்கனாலும் எப்போனாலும்
என்னால சொல்ல முடியும்,
உடம்பெல்லாம் சிலிர்க்கும்
இன்னும் எத்தனை வருஷம் கழிச்சு
கேட்டாலும்,ரொம்பவே சாஃப்ட் ஆன
ஒரு ட்யூன் கொடுத்த ஹாரிஸ் க்கு
என் முதல் நன்றி,
முத்துக்குமாரின் வரிகளுக்கு ஹாரிஸ்
எப்போதும் தன் பாடல்களில் ராகத்திற்கு
மெனக்கெடுவார் என்பது தெரிந்தது தான்
என்றாலும் இயக்குநர் பிரபு தேவா இந்த
படம் கமிட் ஆகும் போதே ஹாரிஸ் தான்
என் படத்திற்கு இசை அமைக்க வேண்டும்
என வேண்டி கேட்டுக்கொண்டார்,படத்தின்
அத்தனை பாடல்களுக்கும் பிளாக்பஸ்டர்
என்றாலும் இந்த பாடல் எப்போதும் தனி
ஈர்ப்பை எனக்கு கொடுத்துக்கொண்டே
இருக்கும்,
இரவுகள் என்பது பிரிந்து போன
காதலனுக்கு துயர் நிறைந்த இருளாக
இருக்கின்றது அதே நேரத்தில் பிரிந்து
போன காதலியை நினைத்து பக்கம்
பக்கமாக "இவன் இரவுகளில் அவள்"
என்று கவிதையும் இரவில் தீட்டும்
படலமும் ஒரு காதலனின் வாழ்வில்
இருக்கின்றது,
இந்த இரண்டு சூழ்நிலைகளிலும்
இசை ஒரு அங்கமாக அக்காதலனுக்கு
இருக்கும்,அவன் அழுகை,பிரிவு,
தனிமை, இரவு, இருள்,மீள், நினைவு
என எல்லாவற்றிற்கும் சேர்த்து
அவன் மெய் மறந்து தன்னை
அர்ப்பணிப்பது இசையில் மட்டுமே,
அப்படி ஒரு இசையை அவனுக்கு
கொடுப்பவன் தேவதூதன்,
ஆம் கடவுளிடம் இருந்து இசையை
தூதாக எடுத்து வந்து எனக்கு பரிசாக
அளிப்பவன், அப்படி பல இரவுகளில்
எனக்கு பரிசளித்த தேவதூதன்
ஹாரிஸ் என்ற பெயர் கொண்டவன்,
இசையை அவன் பரிசளித்து விட்டான்
அவ்விசைக்கு ஜீவன் கொடுப்பது யார்..? அதற்கு தான் முத்து போல் என் வாழ்வில்
பிரகாசமாய் அவன் மின்னினான்,அவனே
என் ஆசான், அவனே எம்மொழி, அவனே
என் தமிழ், அவனே எம் உயிர்,
அவனே என் எல்லாமும்,இங்கு அவ(ன்)
என்பதும் மரியாதை குறைவு அல்ல
தூதுவ(ன்)என்பன போல தான்,
நா.முத்துக்குமார் என்னும் குளிர்
வெண்பனி அவன்,
மூன்றாவதாக என் இரவை அழகாக்க
வந்தவன் அவன்,அவன் குரல் தான்
என்னை பூமியில் நடமாட வைக்கிறது,
அவன் தான் எனக்கு தாலாட்டு பாடி நித்தம்
இரவுகளில் தூங்க வைக்கிறான், அவன்
தான் என் அழகான காதல் நாட்களில்
வசந்தமான வரிகளை தன் குரலில்
பாடினான்,என் தனிமையை அவனுக்குள்
உணர்ந்து இதுவும் கடந்து போகும் நான்
உடன் இருக்கிறேன் என்ற உணர்வை
எப்போதும் எனக்கு கொடுத்து கொண்டே
இருக்கிறான்,கார்த்திக் என்னும் என்
இரவுகளின் நிலவை கட்டி இழுக்கும்
காந்த விசை அவன்,
இம்மூவரும் என் இரவுகளில் என்
அறைக்குள் வலம் வருவதால் நான்
ஆசிர்வதிக்கப்பட்ட இரவை தினமும்
பெற்றுக்கொண்டே இருக்கிறேன்,
*****
காயத்தை நேசித்தேனே
என்ன சொல்ல நானும் இனி
நான் கனவிலும் வசித்தேனே
என்னுடைய உலகம் தனி
ஜாமத்தில் விழிக்கிறேன்
ஜன்னல் வழி தூங்கும் நிலா
ஒ... காய்ச்சலில் கொதிக்கிறேன்
கண்ணுக்குள்ளே காதல் விழா விழா,
*****
இது போதும் என் இரவுகளை கடக்க
இது போதும் என் இரவுகளை அழகாக்க
இது போதும் என் இரவுகளை மெய் மறக்க,
|| திம்மு திம்மு | எங்கேயும் காதல் ||
Comments
Post a Comment