Skip to main content

திம்மு திம்மு | பாடல்

ஒரு பாடல் எப்போ கேட்டாலும்
இமையோரம் கண்ணீர் - ன்ற
சூழ்நிலைக்கு கூட்டிட்டு போகும்ல
அப்படி ஒரு பாட்டு தான் இது,

அதுக்கு காரணம் என்னோட
ஆசான் நா. முத்துக்குமார் - ன்னு
எங்கனாலும் எப்போனாலும்
என்னால சொல்ல முடியும்,

உடம்பெல்லாம் சிலிர்க்கும்
இன்னும் எத்தனை வருஷம் கழிச்சு
கேட்டாலும்,ரொம்பவே சாஃப்ட் ஆன
ஒரு ட்யூன் கொடுத்த ஹாரிஸ் க்கு
என் முதல் நன்றி,

முத்துக்குமாரின் வரிகளுக்கு ஹாரிஸ்
எப்போதும் தன் பாடல்களில் ராகத்திற்கு
மெனக்கெடுவார் என்பது தெரிந்தது தான்
என்றாலும் இயக்குநர் பிரபு தேவா இந்த
படம் கமிட் ஆகும் போதே ஹாரிஸ் தான்
என் படத்திற்கு இசை அமைக்க வேண்டும்
என வேண்டி கேட்டுக்கொண்டார்,படத்தின்
அத்தனை பாடல்களுக்கும் பிளாக்பஸ்டர்
என்றாலும் இந்த பாடல் எப்போதும் தனி
ஈர்ப்பை எனக்கு கொடுத்துக்கொண்டே
இருக்கும்,

இரவுகள் என்பது பிரிந்து போன
காதலனுக்கு துயர் நிறைந்த இருளாக
இருக்கின்றது அதே நேரத்தில் பிரிந்து
போன காதலியை நினைத்து பக்கம்
பக்கமாக "இவன் இரவுகளில் அவள்"
என்று கவிதையும் இரவில் தீட்டும்
படலமும் ஒரு காதலனின் வாழ்வில்
இருக்கின்றது,

இந்த இரண்டு சூழ்நிலைகளிலும்
இசை ஒரு அங்கமாக அக்காதலனுக்கு
இருக்கும்,அவன் அழுகை,பிரிவு,
தனிமை, இரவு, இருள்,மீள், நினைவு
என எல்லாவற்றிற்கும் சேர்த்து
அவன் மெய் மறந்து தன்னை
அர்ப்பணிப்பது இசையில் மட்டுமே,

அப்படி ஒரு இசையை அவனுக்கு
கொடுப்பவன் தேவதூதன்,
ஆம் கடவுளிடம் இருந்து இசையை
தூதாக எடுத்து வந்து எனக்கு பரிசாக
அளிப்பவன், அப்படி பல இரவுகளில்
எனக்கு பரிசளித்த தேவதூதன்
ஹாரிஸ் என்ற பெயர் கொண்டவன்,

இசையை அவன் பரிசளித்து விட்டான்
அவ்விசைக்கு ஜீவன் கொடுப்பது யார்..? அதற்கு தான் முத்து போல் என் வாழ்வில்
பிரகாசமாய் அவன் மின்னினான்,அவனே
என் ஆசான், அவனே எம்மொழி, அவனே
என் தமிழ், அவனே எம் உயிர்,
அவனே என் எல்லாமும்,இங்கு அவ(ன்)
என்பதும் மரியாதை குறைவு அல்ல
தூதுவ(ன்)என்பன போல தான்,
நா.முத்துக்குமார் என்னும் குளிர்
வெண்பனி அவன்,

மூன்றாவதாக என் இரவை அழகாக்க
வந்தவன் அவன்,அவன் குரல் தான்
என்னை பூமியில் நடமாட வைக்கிறது,
அவன் தான் எனக்கு தாலாட்டு பாடி நித்தம்
இரவுகளில் தூங்க வைக்கிறான், அவன்
தான் என் அழகான காதல் நாட்களில்
வசந்தமான வரிகளை தன் குரலில்
பாடினான்,என் தனிமையை அவனுக்குள்
உணர்ந்து இதுவும் கடந்து போகும் நான்
உடன் இருக்கிறேன் என்ற உணர்வை
எப்போதும் எனக்கு கொடுத்து கொண்டே
இருக்கிறான்,கார்த்திக் என்னும் என்
இரவுகளின் நிலவை கட்டி இழுக்கும்
காந்த விசை அவன்,

இம்மூவரும் என் இரவுகளில் என்
அறைக்குள் வலம் வருவதால் நான்
ஆசிர்வதிக்கப்பட்ட இரவை தினமும்
பெற்றுக்கொண்டே இருக்கிறேன்,

*****

காயத்தை நேசித்தேனே
என்ன சொல்ல நானும் இனி
நான் கனவிலும் வசித்தேனே
என்னுடைய உலகம் தனி

ஜாமத்தில் விழிக்கிறேன்
ஜன்னல் வழி தூங்கும் நிலா
ஒ... காய்ச்சலில் கொதிக்கிறேன்
கண்ணுக்குள்ளே காதல் விழா விழா,

*****

இது போதும் என் இரவுகளை கடக்க
இது போதும் என் இரவுகளை அழகாக்க
இது போதும் என் இரவுகளை மெய் மறக்க,

|| திம்மு திம்மு | எங்கேயும் காதல் ||

... : ) ❤️

Comments

Popular posts from this blog

The One - அந்த ஒருவன் 💚

💚 நிராகரிக்கப்பட்ட ஒருவன் புறக்கணிக்கப்பட்ட ஒருவன் ஒதுக்கி வைக்கப்பட்ட ஒருவன் அவமானப்படுத்தப்பட்ட ஒருவன், "வர சொல்லு அந்த ஒருத்தன..?" பல போர் படை இருக்கலாம் எதிர்பார்த்தது இவனத்தான் அந்தொருவன் வந்திருக்கான்டே..!!! "Temba" என்றால் "Hope" என்று பொருள், ஒட்டு மொத்த ஆஃப்ரிக்க மக்களின் நம்பிக்கை ஒளியாகவும் அவர்களின் ஏக்கத்திற்கு விடையாகவும் இந்த "டெம்பா" ஒரு வாழ்வியலை இங்கே புதுப்பித்து இருக்கிறான், எத்தனை அவமானங்கள் தான் 'இந்த ஒருவனுக்கு' நிகழ்ந்திருக்கிறது, உயரம் ரீதியாகவும்,நிற ரீதியாகவும் என இவன் கண்ட அவமானங்கள் அனைத்தையும் தாண்டி இன்று ஒரு இன மக்களையே இன்று இவன் தலை நிமிர செய்திருக்கிறான், எங்க கேங்க்ல ஒரு ரெண்டு பேர் மொரட்டு தனமான தென்னாப்பிரிக்கா ஃபேன்,நானும் என்னோட இன்னொரு முகநூல் நண்பரும் (Anjali Raga Jammy), எப்படி "கொம்பன்" யானைய பார்த்து காடே ஆடி போகுமோ அது மாதிரி நாங்க ரெண்டு பேரும் எங்க தலைவன் டெம்பா பாவுமா - வ "டெம்பன்" ன்னு செல்லமா தான் கூப்பிடுவோம், இந்த டெம்பனின் கைகள் ஒரு ந...

The Journey of Solo - Title Poem

ஓம் நமச்சிவாய என்னும் மூலமந்திரத்தின் கருவாய் நீர்,காற்று,நெருப்பு,நிலம்  என்னும் நாற்பகுதிகளை இறைவன் சிவனை வைத்து மையப்படுத்தி இருக்கும் கதைக்களத்தின் ஒரு கவிதை நடை பயணம் இங்கு, " The Journey of Solo - Title Poem |  Bejoy Nambiar  " 1) நீர் - ( World of Shekhar )  அன்பே ஆயிரம் மழைத்துளிகள் என்னை நனைப்பது போல நீ என்னை நனைத்துக்கொள் நதியின் ஆழங்களில் நான் மூச்சு திணறுவது போல நீ என்னை தழுவிக்கொள் கடலின் பேரலைகள் கரையை தீண்டுவது போல நீ என்னை எடுத்துக்கொள் என்னை உன் கரங்களால் அணைத்துக்கொள்ளாதே உன் மனதால் இறுக அணைத்துக்கொள் அன்பின் தனிமையில் உனக்கு மரணம் இல்லை 2) காற்று - ( World of Trilok ) யுகாந்திரங்களின் கோபம் யுகாந்திரங்களின் இறுக்கம் யுகாந்திரங்களின் பொறுமை யுகாந்திரங்களின் தனிமை வந்துவிட்டது எல்லாவற்றின் மீதும் பெரும் புயல் ஒன்று இந்த காற்றை எதிர்த்து நடப்பவர்கள் யார்..? காலத்தின் புயலில் உதிரும் ஆயிரம் ஆயிரம் மலர்களில் ஒரு மலரல்லவா நீ..? அழிவின் தனிமையில் காத்திருக்க உனக்கு நேரமில்லை 3) நெருப்பு - ( World of Shiva ) வன்மத்தின் வனங்கள் பற்றி எரிகின்றன ...

நிகரில்லாதவள்

அன்று ஊரெங்கும் நல்ல மழை வெளுத்து வாங்கிகொண்டிருந்தது, பெரு மழைக்கு ஒதுங்குவதற்காக அவள் அங்கே சாலையோரம் இருந்த மரத்தின் அடியில் சென்று நின்று கொண்டாள், அவளுக்கு அருகே பள்ளி முடிந்து வீடு திரும்பும் குழந்தைகள் சூழ அவள் ஒரு பள்ளிக்கூடத்து ஆசிரியை போல் அக்குழந்தைகளுக்கு நடுவில் நின்று அவர்கள் மழையில் செய்யும் சேட்டையை பார்த்து ரசித்துக்கொண்டிருந்தாள், இந்த மழை நிற்பதற்குள் இவள் யார்,இவள் பெயர் என்ன, இவள் சார்ந்து இருப்பவைகள் என சின்ன கதையுடன் ஒரு முன்னோட்டம் பார்ப்போம், இவளுக்கான அறிமுகம் இல்லாததால் இவளுக்கு இவளாகவே சூடிக்கொண்ட பெயர் இது, ஆம் இவளுக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து ஆசிரமத்தில் தான் வளர்ந்து வருகிறாள்,அங்கிருப்பவர்கள் "குட்டி" என்று கூப்பிடுவார்கள் அதுவே இவளது பெயராகவும் மாறியது, பின் பள்ளி முடிந்து யாரோ பெயர் தெரியாத ஸ்பான்ஸர்ஷிப் மூலம் கல்லூரி படிப்பை முடித்து நல்ல ஒரு இடத்தில் வேலைக்கு சேர்ந்த பின் தான் இவளுக்கு ஒன்று புரிந்தது, நம்மை அடையாளப்படுத்திக்கொள்ள சரியான பெயர் கூட நமக்கு இல்லை என்று, எதிர்நீச்சல் படத்தில் வருவது போல் தன் அடையாளத்தை இச்சமூகத்தில் பதிக்...