Skip to main content

கடவுள் பற்றிய புரிதல்

கடவுள பத்தி எல்லாருக்கும்
ஒவ்வொரு புரிதல் இருக்கும்
என்னோட புரிதல்ல இருந்து
ஒன்னு சொல்றேன்,

எய்ன்ஸ்டன்க்கு கடவுள் நம்பிக்கை
இருக்கா இல்லையான்னு கேட்டப்போ
அவர் ஒரு கேள்வி கேட்டாரு..?

ஒரு பொருள உருவாக்குனவர
நாம என்னனு சொல்றோம்..?

" CREATOR "

அதே மாதிரி Creation - ன்னு
ஒன்னு இருந்தா Creator - ன்னு
ஒருத்தர் இருப்பார்ல அதான்
என்ன பொறுத்தவரைக்கும்
கடவுள்ன்னு சொன்னாராம்,

அதே நேரத்துல இந்த Galaxy - ன்றது
ஒரு Created அதை Create செஞ்சது
கடவுள்,எனக்கு கடவுள் நம்பிக்கை
இருக்குன்னு சொல்லிருப்பாரு,

அவர் சொன்ன மாதிரி நாமலும்
இந்த மாதிரி வழில தான்
ஆன்மீகத்த கொண்டு போகனுமே
தவிர மூட நம்பிக்கை மூலமா அல்ல,

சில பேரு சிவனை சிந்தையில் வைனு
சொல்றாங்க அவர் நெற்றிக்கண் போல,

அதே நேரத்துல யோகால
சொல்லுவாங்க ஒரு விஷயத்தை
நீங்க உன்னிப்பா யோசிக்கும் போது
உங்கள் கருத்தை இரு கண்கள் நடுவில்
வைக்கும் போது ஒரு அமைதி தோன்றும்
மனம் தெளிவடையும் இதைத்தான்
Deep Breathe in Breathe Out Meditation - ன்னு
சொல்லுறாங்க,

அப்போ இவங்க சொல்ற மாதிரி
இந்த அமைதிக்கும் கடவுளுக்கும்
ஒரு பந்தம் இருக்கு சரி தானே..?

அறிவியில் ரீதியா Einstein சொன்ன
பதிலுக்கும் சிந்தையில் சிவனை
வையுங்கள் என்ற கருத்திற்கும்
இங்க யோகால சொல்லுறது போல
ஆழமாக சிந்திக்கும் போது உங்கள்
இரு கண்களுக்கு நடுவே ஒரு
கருத்தை வைத்து  யோசிக்கும் போது
அமைதி பிறக்கும் என்ற கருத்திற்கும்
ஆக இந்த மூன்று கருத்துக்களுக்கும்
ஒரு ஒற்றுமை இங்க இருக்கு,

ஒரு பொருளோ படைப்போ
உருவாக்கும்போது அதை
உருவாக்கும் நபரையோ
அந்த நபரின் உருவாக்கும் திறனை
யோசிக்க செய்த சிந்தனையையோ
அவர் சிந்தனை செய்யும் போது
அவரின் இரு கண்கள் நடுவே
உணரும் அமைதியையோ
அவர் தொடர்ந்து வழிபடும் கடவுளை
அவர் எண்ணத்தில் வைத்து
தொடங்குவதோ இப்படி Einstein
சொன்ன விஷயம் யோகாவில்
சொன்ன விஷயம் சிவனின் வழி
பின்பற்றுவோர் சொன்ன விஷயம்
எல்லாம் ஓரிடத்தில் இங்கே
ஒத்துப்போகிறதுன்னு சொல்லலாம்,

இங்க தனிமையில இருக்கும்போதும்
மனம் தடம் மாறும் போதும் தன்னிலை
உணரும்போதும் உங்களுக்குள் தோன்றும்
அமைதியும் கடவுள் தான், உங்களை ஒரு
நிலை படுத்தி கட்டுக்குள் வைப்பது இந்த
தனிமையும் அமைதியும் தானே,

Einstein Creator - ஆக கடவுள பார்த்தார்
நான் அமைதியும் தனிமையும் சார்ந்த
ஒரு ஞான நிலை உணர்வுல பார்க்குறேன்
இன்னொருத்தங்க அதுக்கு ஒரு உருவம்
கொடுத்து தனித்தனியாக பெயர் வைத்து
இது தான் கடவுள்ன்னு வழிபடுவாங்க,

இப்பக்கூட நான் தனிமைய ரசிக்குறேன்
இந்த உணர்வு எனக்கு அமைதிய தருது
ஆனா இது என்னோட புரிதல் மட்டும் தான்
உங்களுக்கு மேல சொன்ன மாதிரி
மாறுபடலாம்,

இதுவே கடவுள் பற்றிய சரியான
புரிதல்ன்னு நான் நினைக்குறேன்,

Thank You Prakash Veera For this Topic & Hint..!!

#OurAspects | #God | #Loneliness | #Peace ; ) 🙏❤️

Comments

Popular posts from this blog

The One - அந்த ஒருவன் 💚

💚 நிராகரிக்கப்பட்ட ஒருவன் புறக்கணிக்கப்பட்ட ஒருவன் ஒதுக்கி வைக்கப்பட்ட ஒருவன் அவமானப்படுத்தப்பட்ட ஒருவன், "வர சொல்லு அந்த ஒருத்தன..?" பல போர் படை இருக்கலாம் எதிர்பார்த்தது இவனத்தான் அந்தொருவன் வந்திருக்கான்டே..!!! "Temba" என்றால் "Hope" என்று பொருள், ஒட்டு மொத்த ஆஃப்ரிக்க மக்களின் நம்பிக்கை ஒளியாகவும் அவர்களின் ஏக்கத்திற்கு விடையாகவும் இந்த "டெம்பா" ஒரு வாழ்வியலை இங்கே புதுப்பித்து இருக்கிறான், எத்தனை அவமானங்கள் தான் 'இந்த ஒருவனுக்கு' நிகழ்ந்திருக்கிறது, உயரம் ரீதியாகவும்,நிற ரீதியாகவும் என இவன் கண்ட அவமானங்கள் அனைத்தையும் தாண்டி இன்று ஒரு இன மக்களையே இன்று இவன் தலை நிமிர செய்திருக்கிறான், எங்க கேங்க்ல ஒரு ரெண்டு பேர் மொரட்டு தனமான தென்னாப்பிரிக்கா ஃபேன்,நானும் என்னோட இன்னொரு முகநூல் நண்பரும் (Anjali Raga Jammy), எப்படி "கொம்பன்" யானைய பார்த்து காடே ஆடி போகுமோ அது மாதிரி நாங்க ரெண்டு பேரும் எங்க தலைவன் டெம்பா பாவுமா - வ "டெம்பன்" ன்னு செல்லமா தான் கூப்பிடுவோம், இந்த டெம்பனின் கைகள் ஒரு ந...

The Journey of Solo - Title Poem

ஓம் நமச்சிவாய என்னும் மூலமந்திரத்தின் கருவாய் நீர்,காற்று,நெருப்பு,நிலம்  என்னும் நாற்பகுதிகளை இறைவன் சிவனை வைத்து மையப்படுத்தி இருக்கும் கதைக்களத்தின் ஒரு கவிதை நடை பயணம் இங்கு, " The Journey of Solo - Title Poem |  Bejoy Nambiar  " 1) நீர் - ( World of Shekhar )  அன்பே ஆயிரம் மழைத்துளிகள் என்னை நனைப்பது போல நீ என்னை நனைத்துக்கொள் நதியின் ஆழங்களில் நான் மூச்சு திணறுவது போல நீ என்னை தழுவிக்கொள் கடலின் பேரலைகள் கரையை தீண்டுவது போல நீ என்னை எடுத்துக்கொள் என்னை உன் கரங்களால் அணைத்துக்கொள்ளாதே உன் மனதால் இறுக அணைத்துக்கொள் அன்பின் தனிமையில் உனக்கு மரணம் இல்லை 2) காற்று - ( World of Trilok ) யுகாந்திரங்களின் கோபம் யுகாந்திரங்களின் இறுக்கம் யுகாந்திரங்களின் பொறுமை யுகாந்திரங்களின் தனிமை வந்துவிட்டது எல்லாவற்றின் மீதும் பெரும் புயல் ஒன்று இந்த காற்றை எதிர்த்து நடப்பவர்கள் யார்..? காலத்தின் புயலில் உதிரும் ஆயிரம் ஆயிரம் மலர்களில் ஒரு மலரல்லவா நீ..? அழிவின் தனிமையில் காத்திருக்க உனக்கு நேரமில்லை 3) நெருப்பு - ( World of Shiva ) வன்மத்தின் வனங்கள் பற்றி எரிகின்றன ...

நிகரில்லாதவள்

அன்று ஊரெங்கும் நல்ல மழை வெளுத்து வாங்கிகொண்டிருந்தது, பெரு மழைக்கு ஒதுங்குவதற்காக அவள் அங்கே சாலையோரம் இருந்த மரத்தின் அடியில் சென்று நின்று கொண்டாள், அவளுக்கு அருகே பள்ளி முடிந்து வீடு திரும்பும் குழந்தைகள் சூழ அவள் ஒரு பள்ளிக்கூடத்து ஆசிரியை போல் அக்குழந்தைகளுக்கு நடுவில் நின்று அவர்கள் மழையில் செய்யும் சேட்டையை பார்த்து ரசித்துக்கொண்டிருந்தாள், இந்த மழை நிற்பதற்குள் இவள் யார்,இவள் பெயர் என்ன, இவள் சார்ந்து இருப்பவைகள் என சின்ன கதையுடன் ஒரு முன்னோட்டம் பார்ப்போம், இவளுக்கான அறிமுகம் இல்லாததால் இவளுக்கு இவளாகவே சூடிக்கொண்ட பெயர் இது, ஆம் இவளுக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து ஆசிரமத்தில் தான் வளர்ந்து வருகிறாள்,அங்கிருப்பவர்கள் "குட்டி" என்று கூப்பிடுவார்கள் அதுவே இவளது பெயராகவும் மாறியது, பின் பள்ளி முடிந்து யாரோ பெயர் தெரியாத ஸ்பான்ஸர்ஷிப் மூலம் கல்லூரி படிப்பை முடித்து நல்ல ஒரு இடத்தில் வேலைக்கு சேர்ந்த பின் தான் இவளுக்கு ஒன்று புரிந்தது, நம்மை அடையாளப்படுத்திக்கொள்ள சரியான பெயர் கூட நமக்கு இல்லை என்று, எதிர்நீச்சல் படத்தில் வருவது போல் தன் அடையாளத்தை இச்சமூகத்தில் பதிக்...