கடவுள பத்தி எல்லாருக்கும்
ஒவ்வொரு புரிதல் இருக்கும்
என்னோட புரிதல்ல இருந்து
ஒன்னு சொல்றேன்,
எய்ன்ஸ்டன்க்கு கடவுள் நம்பிக்கை
இருக்கா இல்லையான்னு கேட்டப்போ
அவர் ஒரு கேள்வி கேட்டாரு..?
ஒரு பொருள உருவாக்குனவர
நாம என்னனு சொல்றோம்..?
" CREATOR "
அதே மாதிரி Creation - ன்னு
ஒன்னு இருந்தா Creator - ன்னு
ஒருத்தர் இருப்பார்ல அதான்
என்ன பொறுத்தவரைக்கும்
கடவுள்ன்னு சொன்னாராம்,
அதே நேரத்துல இந்த Galaxy - ன்றது
ஒரு Created அதை Create செஞ்சது
கடவுள்,எனக்கு கடவுள் நம்பிக்கை
இருக்குன்னு சொல்லிருப்பாரு,
அவர் சொன்ன மாதிரி நாமலும்
இந்த மாதிரி வழில தான்
ஆன்மீகத்த கொண்டு போகனுமே
தவிர மூட நம்பிக்கை மூலமா அல்ல,
சில பேரு சிவனை சிந்தையில் வைனு
சொல்றாங்க அவர் நெற்றிக்கண் போல,
அதே நேரத்துல யோகால
சொல்லுவாங்க ஒரு விஷயத்தை
நீங்க உன்னிப்பா யோசிக்கும் போது
உங்கள் கருத்தை இரு கண்கள் நடுவில்
வைக்கும் போது ஒரு அமைதி தோன்றும்
மனம் தெளிவடையும் இதைத்தான்
Deep Breathe in Breathe Out Meditation - ன்னு
சொல்லுறாங்க,
அப்போ இவங்க சொல்ற மாதிரி
இந்த அமைதிக்கும் கடவுளுக்கும்
ஒரு பந்தம் இருக்கு சரி தானே..?
அறிவியில் ரீதியா Einstein சொன்ன
பதிலுக்கும் சிந்தையில் சிவனை
வையுங்கள் என்ற கருத்திற்கும்
இங்க யோகால சொல்லுறது போல
ஆழமாக சிந்திக்கும் போது உங்கள்
இரு கண்களுக்கு நடுவே ஒரு
கருத்தை வைத்து யோசிக்கும் போது
அமைதி பிறக்கும் என்ற கருத்திற்கும்
ஆக இந்த மூன்று கருத்துக்களுக்கும்
ஒரு ஒற்றுமை இங்க இருக்கு,
ஒரு பொருளோ படைப்போ
உருவாக்கும்போது அதை
உருவாக்கும் நபரையோ
அந்த நபரின் உருவாக்கும் திறனை
யோசிக்க செய்த சிந்தனையையோ
அவர் சிந்தனை செய்யும் போது
அவரின் இரு கண்கள் நடுவே
உணரும் அமைதியையோ
அவர் தொடர்ந்து வழிபடும் கடவுளை
அவர் எண்ணத்தில் வைத்து
தொடங்குவதோ இப்படி Einstein
சொன்ன விஷயம் யோகாவில்
சொன்ன விஷயம் சிவனின் வழி
பின்பற்றுவோர் சொன்ன விஷயம்
எல்லாம் ஓரிடத்தில் இங்கே
ஒத்துப்போகிறதுன்னு சொல்லலாம்,
இங்க தனிமையில இருக்கும்போதும்
மனம் தடம் மாறும் போதும் தன்னிலை
உணரும்போதும் உங்களுக்குள் தோன்றும்
அமைதியும் கடவுள் தான், உங்களை ஒரு
நிலை படுத்தி கட்டுக்குள் வைப்பது இந்த
தனிமையும் அமைதியும் தானே,
Einstein Creator - ஆக கடவுள பார்த்தார்
நான் அமைதியும் தனிமையும் சார்ந்த
ஒரு ஞான நிலை உணர்வுல பார்க்குறேன்
இன்னொருத்தங்க அதுக்கு ஒரு உருவம்
கொடுத்து தனித்தனியாக பெயர் வைத்து
இது தான் கடவுள்ன்னு வழிபடுவாங்க,
இப்பக்கூட நான் தனிமைய ரசிக்குறேன்
இந்த உணர்வு எனக்கு அமைதிய தருது
ஆனா இது என்னோட புரிதல் மட்டும் தான்
உங்களுக்கு மேல சொன்ன மாதிரி
மாறுபடலாம்,
இதுவே கடவுள் பற்றிய சரியான
புரிதல்ன்னு நான் நினைக்குறேன்,
Thank You Prakash Veera For this Topic & Hint..!!
Comments
Post a Comment