Skip to main content

Love You Dada !!

எப்பவுமே தாதாவ பொறுத்தவர
எனக்கு எமோஷனல் கனெக்ட் தான்,

So, இதுவரைக்கும் யார்கிட்டயும்
சொல்லாத ஒரு விஷயத்த இங்க
எழுதுறேன்,

இது முழுக்க முழுக்க என்னுடைய
தனிப்பட்ட என் வாழ்க்கையில்
நடந்த ஒரு பேரிடர் சம்பவம்,

அன்று " ஜூலை 8, 2004 "

நான் ஏழாம் வகுப்பு படித்து வந்தேன்
அது ஒரு வியாழக்கிழமை தினம்,

சச்சின் அவுட் ஆனா டிவிய
ஆஃப் செய்யுற காலம் அது,
ஆனா அப்போவே தாதா
அவுட் ஆனா தான் அந்த இடத்தைவிட்டு
அழுதுட்டே எந்திருச்சு போவேன் நான்,

ஒரு வேள அன்னக்கி தாதா
பட்டைய கெளப்புனா அன்னக்கி
எங்க ஏரியால என்னோட சவுண்ட்
தான் அதிகமா இருக்கும்,

ஒரு கர்வம் இருக்கும்
எல்லாரும் சச்சின் சச்சின் ன்னு
ஒரு பாதையில போனப்போ
நான் மட்டும் தாதா தாதா - ன்னு
சுத்திட்டு இருப்பேன் அப்போ,

அன்னைக்கும் அப்படி தான்,

வழக்கம் போல தாதா பிறந்தநாள்ன்னு
ஸ்கூல்ல பசங்க கிட்ட அவர பத்தி பேசிட்டு
லஞ்ச் பிரேக்ல ஸ்கூல் பக்கத்துல இருக்க
நண்பன் வீட்டுல கிரிக்கெட்
விளையாண்டுட்டு ஸ்கூல் கிட்ட இருக்க
கடையில சாயங்காலம் போடுற சூடான
புரோட்டா எல்லாம் தாதா பிறந்தநாள் காக
பசங்களுக்கு எல்லாம் டிரீட் வச்சுட்டு
ஆடி பாடி கொண்டாடிட்டு இருந்தோம்,

அவர் அடிச்ச 183 - ஸ்கோர்,
நாட்வெஸ்ட் தொடர்ல சட்டைய கழட்டிட்டு
சுத்துனது,நான் தேம்பி தேம்பி அழுத மறக்க
முடியாத 2003 பைனல் மொமெண்ட்ஸ்ன்னு
நிறைய பேசிட்டு இருந்தோம்
மாலை சூரியன் மறைந்து போவது
கூட தெரியாமல்,

2002 ல தான் எங்க அப்பா இறந்தாரு
நான் அஞ்சாவது படிக்குறப்போ,தாதா
மேட்ச்ல அடி வெளுத்து வாங்குறப்போலாம்
அவர்கிட்ட சொல்லி தான்
சந்தோஷப்படுவேன், தாதா அவுட்
ஆகும் போதெல்லாம் அவர் மேல சாஞ்சு
தான் அழுவேன் டாடி டாடி ன்னு, எல்லா
பசங்களுக்கும் அம்மா தான் செல்லம்
ஆனா எனக்கு மம்மிய விட டாடி தான்
பிரியம் ரொம்ப,

இப்படி பசங்க கூட புரோட்டா எல்லாம்
சாப்பிட்டுட்டு ஸ்கூல் விட்டு வீட்டுக்கு
போறப்போ தாதா மாதிரியே லெஃப்ட்
ஹாண்ட்ல ரோட்ல ஷாட் அடிச்சு பாத்துட்டே
போய்கிட்டு இருந்தேன்,

வீட்டுக்கு போனப்போ நிறைய
சொந்தக்காரங்க வீட்டுல கூடி நின்னாங்க,

நம்ம வீட்டுக்கு ஏன் இவளோ
சொந்தக்காரங்க வந்துருக்காங்க
திடீர்னுனு தோணுச்சு,ஏன்னா அப்பா
இறந்ததுக்கு அப்பறம் நானும் அம்மாவும்
மாமா வீட்ல தான் இருந்தோம்,

வீட்டு வாசலுக்கு போனப்போ எல்லா
சொந்தக்காரங்களும் என்னையவே
பாத்தாங்க எனக்கு ஒரு மாதிரி கூச்சமா
இருந்துச்சு,

பால்கனில ஸ்கூல் பேக் கழட்டி வச்சுட்டு
வீட்டுக்குள்ள போனேன்,எங்க சித்தி பாட்டி
எல்லாம் ஏதோ ஒரு சின்ன கிளாஸ்ல பால்
ஊத்தி எங்க அம்மாக்கு ஒரு ஸ்பூன்ல
எடுத்து கொடுக்க சொன்னாங்க,

அப்பா இறந்ததுக்கு அப்பறம் அம்மா
ரெண்டு வருஷம் படுத்த படுக்கை தான்,

அம்மாவால பேச முடியல
என் தலை முடி மட்டும் தான் கோத்திட்டே
இருந்தாங்க அம்மாக்கு ஒரு விரல் கூட
கையில் வெட்டப்பட்டு இருக்கும்,

அதோட என் தல முடிய
கோதி விட்டுட்டு பேச முடியாத
குரல்ல நல்லா படி சிவா
கெட்ட பழக்கத்துக்கு போயிடாதன்னு
மட்டும் சொல்ல முடியாம சொன்னாங்க,
நான் கிளாஸ்ல இருந்த பால ஒரு ஸ்பூன்ல
எடுத்து அவங்களுக்கு கொடுக்க அவங்க
அதை குடிக்கும் போது அவங்க தொண்ட
குழில இறங்குன அந்த பால் இன்னும்
என் கண்ணுக்குள்ளயே நிக்குது,

அடுத்த சில நேரத்துல அம்மா
இறந்துட்டாங்க, அப்பா இறந்தப்போ
விவரம் தெரியாம இருந்த எனக்கு
அம்மாவோட இறப்பு கொஞ்சம் விவரம்
தெரிஞ்ச வயசுன்றனால நிறையவே
பாதிப்பு தந்துச்சு,

தாதா பிறந்தநாள் - ன்னு ஆட்டம்
பாட்டமா ஆரம்பிச்ச அந்த தினம் மலம்
கழிக்கும் கழிப்பறையில் ஒரு தனிமையின்
தாக்கத்திற்குள் பேரிடர் நிறைந்த ஆழ்ந்த
கண்ணீருடன் முடிந்தது,

இப்பவும் தாதா பிறந்தநாள் அப்போ
இப்படியொரு நிகழ்வு என் வாழ்க்கையில
நடந்ததற்கு நான் யாரை பழிக்க..?

ஒரு இழக்க கூடாத இறப்பை
அந்த தினத்தில் பதிவு செய்த அந்த
ஆண்டவனை நான் பழிக்கலாமா என்ற
கேள்வியுடன் ஒவ்வொரு தாதாவின்
பிறந்தநாளும் எனக்கு மட்டும்
மௌனமான நாளாக முடிகிறது,

சரி இதெல்லாம் விடுங்க,

என் தாதா சார்
என்னோட மகாராஜா அவரு
என்னோட எல்லாமும் அவரு,

பண்டிகைய கொண்டாடுங்கலே,

#HappyBirthdayMySoulDada ❤️

Comments

Popular posts from this blog

The One - அந்த ஒருவன் 💚

💚 நிராகரிக்கப்பட்ட ஒருவன் புறக்கணிக்கப்பட்ட ஒருவன் ஒதுக்கி வைக்கப்பட்ட ஒருவன் அவமானப்படுத்தப்பட்ட ஒருவன், "வர சொல்லு அந்த ஒருத்தன..?" பல போர் படை இருக்கலாம் எதிர்பார்த்தது இவனத்தான் அந்தொருவன் வந்திருக்கான்டே..!!! "Temba" என்றால் "Hope" என்று பொருள், ஒட்டு மொத்த ஆஃப்ரிக்க மக்களின் நம்பிக்கை ஒளியாகவும் அவர்களின் ஏக்கத்திற்கு விடையாகவும் இந்த "டெம்பா" ஒரு வாழ்வியலை இங்கே புதுப்பித்து இருக்கிறான், எத்தனை அவமானங்கள் தான் 'இந்த ஒருவனுக்கு' நிகழ்ந்திருக்கிறது, உயரம் ரீதியாகவும்,நிற ரீதியாகவும் என இவன் கண்ட அவமானங்கள் அனைத்தையும் தாண்டி இன்று ஒரு இன மக்களையே இன்று இவன் தலை நிமிர செய்திருக்கிறான், எங்க கேங்க்ல ஒரு ரெண்டு பேர் மொரட்டு தனமான தென்னாப்பிரிக்கா ஃபேன்,நானும் என்னோட இன்னொரு முகநூல் நண்பரும் (Anjali Raga Jammy), எப்படி "கொம்பன்" யானைய பார்த்து காடே ஆடி போகுமோ அது மாதிரி நாங்க ரெண்டு பேரும் எங்க தலைவன் டெம்பா பாவுமா - வ "டெம்பன்" ன்னு செல்லமா தான் கூப்பிடுவோம், இந்த டெம்பனின் கைகள் ஒரு ந...

The Journey of Solo - Title Poem

ஓம் நமச்சிவாய என்னும் மூலமந்திரத்தின் கருவாய் நீர்,காற்று,நெருப்பு,நிலம்  என்னும் நாற்பகுதிகளை இறைவன் சிவனை வைத்து மையப்படுத்தி இருக்கும் கதைக்களத்தின் ஒரு கவிதை நடை பயணம் இங்கு, " The Journey of Solo - Title Poem |  Bejoy Nambiar  " 1) நீர் - ( World of Shekhar )  அன்பே ஆயிரம் மழைத்துளிகள் என்னை நனைப்பது போல நீ என்னை நனைத்துக்கொள் நதியின் ஆழங்களில் நான் மூச்சு திணறுவது போல நீ என்னை தழுவிக்கொள் கடலின் பேரலைகள் கரையை தீண்டுவது போல நீ என்னை எடுத்துக்கொள் என்னை உன் கரங்களால் அணைத்துக்கொள்ளாதே உன் மனதால் இறுக அணைத்துக்கொள் அன்பின் தனிமையில் உனக்கு மரணம் இல்லை 2) காற்று - ( World of Trilok ) யுகாந்திரங்களின் கோபம் யுகாந்திரங்களின் இறுக்கம் யுகாந்திரங்களின் பொறுமை யுகாந்திரங்களின் தனிமை வந்துவிட்டது எல்லாவற்றின் மீதும் பெரும் புயல் ஒன்று இந்த காற்றை எதிர்த்து நடப்பவர்கள் யார்..? காலத்தின் புயலில் உதிரும் ஆயிரம் ஆயிரம் மலர்களில் ஒரு மலரல்லவா நீ..? அழிவின் தனிமையில் காத்திருக்க உனக்கு நேரமில்லை 3) நெருப்பு - ( World of Shiva ) வன்மத்தின் வனங்கள் பற்றி எரிகின்றன ...

நிகரில்லாதவள்

அன்று ஊரெங்கும் நல்ல மழை வெளுத்து வாங்கிகொண்டிருந்தது, பெரு மழைக்கு ஒதுங்குவதற்காக அவள் அங்கே சாலையோரம் இருந்த மரத்தின் அடியில் சென்று நின்று கொண்டாள், அவளுக்கு அருகே பள்ளி முடிந்து வீடு திரும்பும் குழந்தைகள் சூழ அவள் ஒரு பள்ளிக்கூடத்து ஆசிரியை போல் அக்குழந்தைகளுக்கு நடுவில் நின்று அவர்கள் மழையில் செய்யும் சேட்டையை பார்த்து ரசித்துக்கொண்டிருந்தாள், இந்த மழை நிற்பதற்குள் இவள் யார்,இவள் பெயர் என்ன, இவள் சார்ந்து இருப்பவைகள் என சின்ன கதையுடன் ஒரு முன்னோட்டம் பார்ப்போம், இவளுக்கான அறிமுகம் இல்லாததால் இவளுக்கு இவளாகவே சூடிக்கொண்ட பெயர் இது, ஆம் இவளுக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து ஆசிரமத்தில் தான் வளர்ந்து வருகிறாள்,அங்கிருப்பவர்கள் "குட்டி" என்று கூப்பிடுவார்கள் அதுவே இவளது பெயராகவும் மாறியது, பின் பள்ளி முடிந்து யாரோ பெயர் தெரியாத ஸ்பான்ஸர்ஷிப் மூலம் கல்லூரி படிப்பை முடித்து நல்ல ஒரு இடத்தில் வேலைக்கு சேர்ந்த பின் தான் இவளுக்கு ஒன்று புரிந்தது, நம்மை அடையாளப்படுத்திக்கொள்ள சரியான பெயர் கூட நமக்கு இல்லை என்று, எதிர்நீச்சல் படத்தில் வருவது போல் தன் அடையாளத்தை இச்சமூகத்தில் பதிக்...