Skip to main content

ஒளி வழி ஓவியரின் கனா !!

இரண்டு வருடங்கள் பின் சென்றால் அன்று ஒரு நாள் வேலை விஷயமாக ஊட்டி வரை செல்ல வேண்டி இருந்தது, அன்றைய காலக்கட்டத்தில் மாதத்தில் ஒரு முறை ஊட்டி சென்று வருவேன், பெரும்பாலும் என்னுடைய பல்சர் 150 பைக் தான் என்னுடைய எல்லா பயணங்களிலும் உறுதுணையாய் உடன் வரும் ஒரு தோழன்,

வளைந்து நெளிந்து போகும்பாதை மங்கை மோக கூந்தலோ..? என்று கண்ணதாசனின் வரிகளுக்கேற்ப ஊட்டியின் மலைப்பாதைகள் முழுதும் Zig Zag வளைவுகளாக மொத்தம் 14 ஹேர்பின் பெண்டுகளுடன் இறைவனால் Gift Pack செய்யப்பட்ட ஒரு Natural Way of Greenish Road என்று சொல்லலாம், Headset மாட்டிக்கொண்டு பாடல் கேட்டுக்கொண்டே பயணம் செய்வது மலைப்பாதைகளில் சுகமானது என்றாலும் ஆபத்தை விலைக்கு வாங்கும் முயற்சி என்ற காரணத்தினால் அந்த பழக்கவழக்கத்தை தவிர்ப்பவன் நான்,அதற்கு பதிலாக எனக்கு பிடித்த பாடலை வாயில் முணங்கிக்கொண்டே பயணிப்பவன் நான், குழந்தை தனமாக இருந்தாலும் அதில் இருக்கும் சுகம் அறியாதோர் பலர்,

அன்றும் வீட்டிலிருந்து பைக்கை ஸ்டார்ட் செய்தேன், ஊட்டியில் நேற்று பெய்த கனமழை காரணமாக மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி செல்லும் வழித்தடங்களில் மண் சரிவு ஆங்காகே ஏற்பட்டும் யானைகளின் நடமாட்டம் அதிகம் இருப்பதாலும் மேட்டுப்பாளையம் டூ கோத்தகிரி வழி மலைப்பாதையில் ஊட்டி செல்லும் பேருந்துகள் மாற்றி அனுப்பப்படுகிறது என்று தொலைக்காட்சியின் வாயிலாக வந்தது அன்றைய காலை நேர சூடான செய்தி,

கொஞ்சம் யோசித்து பார்த்தால் மேட்டுப்பாளையம் டூ கோத்தகிரி சாலையும் மலைப்பாதை தானே அங்கும் மலை பெய்திருக்கும் ஆனால் அங்கும் மண் சரிவுகள் ஏற்பட்டிருக்க வாய்ப்புகள் அதிகமாக இருக்குமே..? என்று மனதுக்குள் ஒரு சிந்தனை, பிறகு புரிந்தது நானே சிரித்துக்கொண்டேன்,ஆம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி செல்லும் வழித்தடங்கள் வெள்ளைக்காரன் காலத்து சாலை,அன்று அவன் போட்ட சாலையை மறு சீரமைத்து மராமத்து பணி பார்த்து ஆங்காங்கே சாலைகள் முழுவதும் Batch Batch ஆக காணப்படும்,சிறு மழை வந்தாலே சாலைகள் மோசமாக மாறிவிடும் இத்தனைக்கும் அதிகமாக சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் ஒரு மலைகளின் அரசி இந்த ஊரு, இதற்கு Right Opposite ஆக செல்லும் வழித்தடம் தான் மேட்டுப்பாளையம் டூ கோத்தகிரி சாலை வழியே ஊட்டிக்கு செல்வது, என்ன ஒரு 15 கிலோமீட்டர்கள் சுற்றி செல்லவேண்டி இருக்கும்,ஆனால் அந்த மலைப்பாதை மட்டும் எப்படி நன்றாக இருக்கிறது..? அங்குதான் ஒரு ட்விஸ்ட்டு, நம்ம "அம்மா" வந்து கொடநாடு அங்குதானே இருக்கின்றது, நீங்கள் கேட்கலாம் அவங்க Helicopter-ல தானே வந்து போறாங்கன்னு,ஆனா நம்ம ஊரு மந்திரிகள் அவங்கள அங்க போய் சந்திக்கிறதுக்கு சாலை வழியே தானே செல்ல வேண்டும்,அதற்காக எப்போதுமே தயார் நிலையில் இருக்கும் ஒரு ரோடு தான் இந்த சாலை, வடிவேலு சொல்லுவதை போல் ஒரு பான சோற அங்கனயே கொட்டி கொழம்புகள ஊத்தி கொழச்சு அடிக்கலாம்டா ரகம் தான், ஆமா எதுக்கு இப்போ அரசியல் பேசுறோம்..? சாரி பேசுறேன்..? நம்ம கதைக்கு வருவோம்,

ஆனால் அன்று ஊட்டி சென்றே ஆகவேண்டும், சரி என்று பைக்கை ஸ்டார்ட் செய்து பேருந்து நிலையத்தில் நிறுத்திவிட்டு நடத்துநரிடம் டிக்கெட் வாங்கிக்கொண்டு ஜன்னல் சீட்டை பிடித்தேன்,சாரல் மழை ஜன்னல் வழியே சிதறிட அதை தட்டி தட்டி விளையாடிக்கொண்டிருந்தேன் மூன்று வயது மழலை குழந்தை போல், மேட்டுப்பாளையம் தாண்டி கோத்தகிரி சாலை வந்தது,அங்கிருந்து மலைப்பாதை ஆரம்பம், Headset எடுத்து காதில் மாற்றினேன்,

ஜன்னல் சீட்டு
பேருந்து பயணம்
சில்லென்ற சாரல் மழை
அடுத்தது என்ன..?
எப்படியும் நீங்களே யூகித்து இருப்பீர்கள்,

"இசைஞானி இளையராஜா"

ஸ்ரேயா கோஷல் என்னும் ஒரு குரல் வழி இறைவி அப்பொழுது தமிழ் சினிமாவிற்கு வந்த ஒரு பொற்காலம் அது,

பாலு மகேந்திரா என்னும் ஒளி வழி கலைஞனின் பார்வையில் வந்த படத்தில் அந்த பாடல் இடம் பெற்றது,அந்த பாடலின் காணொளியிலும் பாலு மகேந்திரா என்னும் ராட்சசன் Frame by Frame அந்த பாடலின் வரிகளுக்கேற்ப தன்னுடைய Vision-இல் கேமராவில் கவிதையாக செதுக்கி இருப்பார் சிற்பி சிலையை செதுக்குவது போல,

சிற்பி சிலையை செதுக்கியது என்று சொன்னப்பின் எதற்கு யோசனை..? அந்த பாடலை செதுக்கிய சிற்பி என்னுடைய ஆசான் "நா.முத்துக்குமார்" என்னும் பேரன்பின் ஆதி ஊற்றான அவர்தான்,

அன்று முழுவதும் ஊட்டி சென்று மறுபடியும் வீடு திரும்பும் வரையிலும் கிட்டத்தட்ட ஒரு நூறு முறை Repeat Mode - இல் கேட்ட பாடல் அது. இன்னும் எதற்கு யோசனை..? முதலில் Youtube செல்லுங்கள், இந்த பாடலை காணொளியுடன் காணுங்கள்,

Feel the Moment
Feel the Pure Music
Feel the Poetic Lyric
Feel the Cinematography

படம் : ஜூலி கணபதி
பாடல் : எனக்கு பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே

- A Music Without a Software ❤



Comments

Popular posts from this blog

The One - அந்த ஒருவன் 💚

💚 நிராகரிக்கப்பட்ட ஒருவன் புறக்கணிக்கப்பட்ட ஒருவன் ஒதுக்கி வைக்கப்பட்ட ஒருவன் அவமானப்படுத்தப்பட்ட ஒருவன், "வர சொல்லு அந்த ஒருத்தன..?" பல போர் படை இருக்கலாம் எதிர்பார்த்தது இவனத்தான் அந்தொருவன் வந்திருக்கான்டே..!!! "Temba" என்றால் "Hope" என்று பொருள், ஒட்டு மொத்த ஆஃப்ரிக்க மக்களின் நம்பிக்கை ஒளியாகவும் அவர்களின் ஏக்கத்திற்கு விடையாகவும் இந்த "டெம்பா" ஒரு வாழ்வியலை இங்கே புதுப்பித்து இருக்கிறான், எத்தனை அவமானங்கள் தான் 'இந்த ஒருவனுக்கு' நிகழ்ந்திருக்கிறது, உயரம் ரீதியாகவும்,நிற ரீதியாகவும் என இவன் கண்ட அவமானங்கள் அனைத்தையும் தாண்டி இன்று ஒரு இன மக்களையே இன்று இவன் தலை நிமிர செய்திருக்கிறான், எங்க கேங்க்ல ஒரு ரெண்டு பேர் மொரட்டு தனமான தென்னாப்பிரிக்கா ஃபேன்,நானும் என்னோட இன்னொரு முகநூல் நண்பரும் (Anjali Raga Jammy), எப்படி "கொம்பன்" யானைய பார்த்து காடே ஆடி போகுமோ அது மாதிரி நாங்க ரெண்டு பேரும் எங்க தலைவன் டெம்பா பாவுமா - வ "டெம்பன்" ன்னு செல்லமா தான் கூப்பிடுவோம், இந்த டெம்பனின் கைகள் ஒரு ந...

The Journey of Solo - Title Poem

ஓம் நமச்சிவாய என்னும் மூலமந்திரத்தின் கருவாய் நீர்,காற்று,நெருப்பு,நிலம்  என்னும் நாற்பகுதிகளை இறைவன் சிவனை வைத்து மையப்படுத்தி இருக்கும் கதைக்களத்தின் ஒரு கவிதை நடை பயணம் இங்கு, " The Journey of Solo - Title Poem |  Bejoy Nambiar  " 1) நீர் - ( World of Shekhar )  அன்பே ஆயிரம் மழைத்துளிகள் என்னை நனைப்பது போல நீ என்னை நனைத்துக்கொள் நதியின் ஆழங்களில் நான் மூச்சு திணறுவது போல நீ என்னை தழுவிக்கொள் கடலின் பேரலைகள் கரையை தீண்டுவது போல நீ என்னை எடுத்துக்கொள் என்னை உன் கரங்களால் அணைத்துக்கொள்ளாதே உன் மனதால் இறுக அணைத்துக்கொள் அன்பின் தனிமையில் உனக்கு மரணம் இல்லை 2) காற்று - ( World of Trilok ) யுகாந்திரங்களின் கோபம் யுகாந்திரங்களின் இறுக்கம் யுகாந்திரங்களின் பொறுமை யுகாந்திரங்களின் தனிமை வந்துவிட்டது எல்லாவற்றின் மீதும் பெரும் புயல் ஒன்று இந்த காற்றை எதிர்த்து நடப்பவர்கள் யார்..? காலத்தின் புயலில் உதிரும் ஆயிரம் ஆயிரம் மலர்களில் ஒரு மலரல்லவா நீ..? அழிவின் தனிமையில் காத்திருக்க உனக்கு நேரமில்லை 3) நெருப்பு - ( World of Shiva ) வன்மத்தின் வனங்கள் பற்றி எரிகின்றன ...

நிகரில்லாதவள்

அன்று ஊரெங்கும் நல்ல மழை வெளுத்து வாங்கிகொண்டிருந்தது, பெரு மழைக்கு ஒதுங்குவதற்காக அவள் அங்கே சாலையோரம் இருந்த மரத்தின் அடியில் சென்று நின்று கொண்டாள், அவளுக்கு அருகே பள்ளி முடிந்து வீடு திரும்பும் குழந்தைகள் சூழ அவள் ஒரு பள்ளிக்கூடத்து ஆசிரியை போல் அக்குழந்தைகளுக்கு நடுவில் நின்று அவர்கள் மழையில் செய்யும் சேட்டையை பார்த்து ரசித்துக்கொண்டிருந்தாள், இந்த மழை நிற்பதற்குள் இவள் யார்,இவள் பெயர் என்ன, இவள் சார்ந்து இருப்பவைகள் என சின்ன கதையுடன் ஒரு முன்னோட்டம் பார்ப்போம், இவளுக்கான அறிமுகம் இல்லாததால் இவளுக்கு இவளாகவே சூடிக்கொண்ட பெயர் இது, ஆம் இவளுக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து ஆசிரமத்தில் தான் வளர்ந்து வருகிறாள்,அங்கிருப்பவர்கள் "குட்டி" என்று கூப்பிடுவார்கள் அதுவே இவளது பெயராகவும் மாறியது, பின் பள்ளி முடிந்து யாரோ பெயர் தெரியாத ஸ்பான்ஸர்ஷிப் மூலம் கல்லூரி படிப்பை முடித்து நல்ல ஒரு இடத்தில் வேலைக்கு சேர்ந்த பின் தான் இவளுக்கு ஒன்று புரிந்தது, நம்மை அடையாளப்படுத்திக்கொள்ள சரியான பெயர் கூட நமக்கு இல்லை என்று, எதிர்நீச்சல் படத்தில் வருவது போல் தன் அடையாளத்தை இச்சமூகத்தில் பதிக்...