Skip to main content

மண்ணும் மனிதமும்

தேகம் சிலிர்க்கும் இளமஞ்சள் வெயிலில்
கதிரவன் பொழுது சாயும் நேரம் அது
இளங்கதிர் வெளிச்சத்தில் ஊர் முழுக்க
மஞ்சள் வண்ண மலர்களை
கொட்டி நிரப்பியது போல்
அந்த மாலை பொழுது மிக ரம்மியமாக அமைந்தது,

காலை வயலுக்கு சென்ற விவசாயிகள்
மாலை வேலை முடித்து வீட்டிற்கு திரும்பினர்
தங்கள் கை கால்களை
சொம்பு தண்ணியில் கழுவியபடி,

பள்ளிக்கூடம் முடிந்து ஊரில் இருக்கும்
மழலைகள் யாவும் வேற்று உடை மாற்றி
அவர் அவர்களுக்கு பிடித்த கபடி,
கண்ணாம்பூச்சி போன்ற விளையாட்டுக்களை
விளையாடிக்கொண்டிருந்தனர் கூட்டு சேர்த்து,

ஊரில் உள்ள பெண்கள் யாவரும்
தங்கள் வீட்டில் கடவுளை வழிபட்டு
அந்த அட்சய பொன்பாத்திரத்தில்
நீர் நிரப்பிக்கொண்டு தங்கள் வீட்டின்
விளக்கை ஏற்றிய வண்ணம்
வீட்டின் தொலைகாட்சி பெட்டியில்
தங்கள் இஷ்ட தெய்வத்தின் பாடல்களை
ஒலித்த வண்ணம் அன்றைய இரவு உணவுக்கு
வேண்டிய உணவுகளை தயார் செய்ய
அதன் வேலைகளை செய்து கொண்டிருந்தனர்

அந்த டீ கடையில் சூடான டீயுடன் ஆண்கள்
அன்று விவசாயத்தின் விளைச்சல்கள்
மற்றும் ஒன்றத்துக்கும் உதவாத இத்துப்போன
நம்ம ஊரு அரசியல் கதைகளை பேசிக்கொண்டிருந்தனர்
கூட்டு சேர்ந்த வண்ணம்

தெருவுக்கு தெரு இருக்கும் கோவில்களில்
சாயங்காலம் ஆறு மணி பூஜை தொடங்கி
அம்மனுக்கு அபிஷேகம் செய்த பாலை
அனைவருக்கும் கொடுத்தனர்,
அந்த பக்கம் ஆஞ்சநேயர் கோவிலில்
உழுந்த வடையும் வெண்ணையும் கொடுத்தனர்,
அதனுடன் இயற்கை மருந்தான
தூய்மையான துளசி நீரை
சிறிதளவு உள்ளங்கையில் ஊற்றிவிட்டு
நெற்றியில் செந்தூரத்தை வைத்து விடுவார்கள்,

அந்த பொன் பாத்திரத்தில் இருக்கும்
துளசி நீரை அப்படியே எடுத்து குடிக்க ஆசை தான்
எல்லோருக்கும் ஆனால் ஆஞ்சநேயர் கோவில் பூசாரி
கொடுக்கமாட்டிராரே என்ன செய்ய..?

பொழுது சாய்ந்தது
ஊரில் இருக்கும் அனைவரும்
சாப்பிட்டு உறங்கும் நேரம் வந்துவிட்டது,
தெரு விளக்கு மட்டுமே அந்த ஊரின் சாலைகளில்
தங்கள் மஞ்சள் வண்ண கதிர்களை
மண்ணில் படர்ந்து சூழ்ந்து கொண்டிருந்தது
ஆங்காங்கே தவளைகளின் சத்தம்
அந்த இரவின் அமைதியில்,

நூறில் இரண்டு வீட்டில் மட்டும்
இளையராஜா பாடல்கள் ஒலித்துக்கொண்டிருக்கிறது
அந்த ராக்கோழி தூங்கும் வேளையிலும்

ஊர் சாமக்கோடாங்கிகள் ஆங்காங்கே
ஒவ்வொரு வீட்டின் முன் நின்று
குறி சொல்லிக்கொண்டு வலம் வந்தனர்

வெண்ணிலாவின் வெளிச்சத்தில்
ஊர் முழுக்க இருள் சூழ்ந்து
அந்த இரவை கட்டிபோட்டது சிறுஆர்ப்பாட்டமின்றி

இந்த இரவும் நிலவும்
இந்த மக்களும் மண்ணும்
இந்த பெண்களும் இறைவியும்
இந்த ஆண்களும் உழைப்பும்
இந்த மழலையும் விளையாட்டும்
இந்த ஆஞ்சநேயரும் வடமாலையும்
இந்த அம்மனும் அபிஷேக பாலும்
இந்த சாலையும் மஞ்சள் வண்ண தெருவிளக்கும்

இதில் என்ன இருக்கு..?
மனிதமும் மண்ணும் மட்டுமே

மண்ணும் மக்களும் சேர்ந்ததே அழகு
அதை ரசித்தலில் ஒரு சுகம் உண்டு
அந்த சுகத்தை நீங்கள் உணர்ந்ததால்
தனிமையை கூட காதலிக்கலாம்
எந்த இரவையும் அழகியலுடன் கடக்கலாம்
இந்த மண்ணுடனும்
நம்மை சுற்றியுள்ள மனிதர்களிடமும்

எல்லாவற்றையும் காதலுடன் பாருங்கள்
உங்களை சுற்றி அழகியல் சார்ந்த
விஷயங்கள் நிறைய கொட்டிக்கிடக்கிறது
வந்து உங்கள் இரு கைகளில் அள்ளிக்கொள்ளுங்கள்
ஏனென்றால் இது யாருக்கும் கிடைக்காத
அறிய வகை பொக்கிஷங்களுள் ஒன்று,

 மண்ணும் மனிதமும் வளர்கவே 💛






Comments

Popular posts from this blog

The Journey of Solo - Title Poem

ஓம் நமச்சிவாய என்னும் மூலமந்திரத்தின் கருவாய் நீர்,காற்று,நெருப்பு,நிலம்  என்னும் நாற்பகுதிகளை இறைவன் சிவனை வைத்து மையப்படுத்தி இருக்கும் கதைக்களத்தின் ஒரு கவிதை நடை பயணம் இங்கு, " The Journey of Solo - Title Poem |  Bejoy Nambiar  " 1) நீர் - ( World of Shekhar )  அன்பே ஆயிரம் மழைத்துளிகள் என்னை நனைப்பது போல நீ என்னை நனைத்துக்கொள் நதியின் ஆழங்களில் நான் மூச்சு திணறுவது போல நீ என்னை தழுவிக்கொள் கடலின் பேரலைகள் கரையை தீண்டுவது போல நீ என்னை எடுத்துக்கொள் என்னை உன் கரங்களால் அணைத்துக்கொள்ளாதே உன் மனதால் இறுக அணைத்துக்கொள் அன்பின் தனிமையில் உனக்கு மரணம் இல்லை 2) காற்று - ( World of Trilok ) யுகாந்திரங்களின் கோபம் யுகாந்திரங்களின் இறுக்கம் யுகாந்திரங்களின் பொறுமை யுகாந்திரங்களின் தனிமை வந்துவிட்டது எல்லாவற்றின் மீதும் பெரும் புயல் ஒன்று இந்த காற்றை எதிர்த்து நடப்பவர்கள் யார்..? காலத்தின் புயலில் உதிரும் ஆயிரம் ஆயிரம் மலர்களில் ஒரு மலரல்லவா நீ..? அழிவின் தனிமையில் காத்திருக்க உனக்கு நேரமில்லை 3) நெருப்பு - ( World of Shiva ) வன்மத்தின் வனங்கள் பற்றி எரிகின்றன குருதியின

கிறுக்கல்களின் தொகுப்புகள்

வெள்ளிக்காப்பை சுழற்றினேன் சூடான காஃபியை அருந்தினேன் தலை முடியினை கோதி விட்டேன் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தேன் ஆழ்மனதும் அனாதையாக இருந்தது எண்ணங்களின் ஓட்டமும் சீராக இல்லை யூடியுப் பக்கம் சென்றேன் அன்றைய தினத்தின் Trending காணொளிகள் ட்விட்டர் பக்கம் சென்றேன் நடிகர்களின் ரசிகர்களுக்கிடையே தள்ளு முள்ளு இன்ஸ்டாகிராம் பக்கம் சென்றேன் Bae Calls Me Chocobar என்றாள் கிளியோபாட்ரா ஹைக் பக்கம் சென்றேன் நட்டாஸா உரையாடலுக்கு எதிர்வாதம் செய்தாள் சரி, இது தான் இன்றைய தலைவிதி என்று முகப்புத்தகம் வந்து இதை பதிவு செய்தேன்..? - A Poem Without a Topic ❤ ---------------------------------------------------------- வாழ்க்கை இப்படியே போயிடுமா சார் என்பதில் தொடங்கி வாழ்க்கை ஒரு வட்டம் என்பதில் பயணித்து இவ்வளோ தான் சார் வாழ்க்கை என்பதில் முடிகிறது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த நம்பகத்தன்மை நிறைந்த வாழ்க்கை..? -------------------------------------------------------- இந்த காஃபி ஷாப் சுவர்களின் இடையூறுகள் நம் நாவிதழ்கள் இடைபாடுகளிலும்..?..!! - வா ரயில் விட போலாம் வா  🖤 --

குடைக்குள் மழை

✨️💚 ரீனா : ஹே ஆர் யூ தேர்..? விக்ரம் : இருக்கேன் ரீனா, என்ன திடீர்னு மெசேஜ், முக்கியமா எதுவும் சொல்லணுமா..? ரீனா : ஹே, அதெல்லாம் இல்ல, ஏன் ஒர்க்ல இருக்கியா..? விக்ரம் : இல்ல, வீட்டுக்கு வந்துட்டேன், Earlier Appointments So, முடிஞ்சு பா! ரீனா : ஒகே, கொஞ்சம் மனசு சரி இல்ல அதான் உன்கிட்ட பேசலாமேன்னு கால் பண்ணேன்..? விக்ரம் : என்ன ஆச்சு..? ஆர் யூ ஓகே..? சொல்லு ரீனா Any Issue..? ரீனா : ஹே,Just Mood Swing ஒன்லி! நீ ஃபிரீன்னா சொல்லு Let's Walk Together in Beach! உனக்கு தெரியும்ல எனக்கு பீச் வாக்ன்னா ரொம்ப பிடிக்கும், So நீ ஃபிரீன்னா வர முடியுமா விக்ரம்..? விக்ரம் : சரி, ஈவினிங் 6 மணிக்கு பீச்ல நம்ம வழக்கமா மீட் பண்ணுற அந்த பட்டர் பன் கடைக்கு வந்துரு ரீனா, நானும் வந்துடுறேன், ரீனா : தேங்க்ஸ் விக்ரம்! விக்ரம் : தேங்க்ஸா..? No More Formalities! உன்னோட தேங்க்ஸ்ல நான் பூரிச்சு போய்ட்டேன்,சிரிப்பு காட்டாம வா ரீனா! ரீனா : ஹ்ம்ம் டா! * இடம் : கடற்கரை * நேரம் : மாலை 6 மணி விக்ரம் : ஹே! என்ன ஆச்சு ரீனா திடீர்னு..? ரீனா : அதெல்லாம் ஒன்னும் இல்லடா, Please Give Sometime நானே சொல்லுறேன் போ