மிக நீண்ட அடர்த்தியான கூந்தல் நீளம் கொண்ட அந்த பெண்ணுக்கு உடம்பில் இருந்த ஏதோ ஒரு பெயர் தெரியாத நோயினால் வலது கையின் கட்டை விரலுக்கு அருகே உள்ள விரலானது பாதி அளவு வெட்டப்பட்டு இருந்தது,இதுவும் ஒரு வகை "ஊனம்" என்றே சொல்லலாம்..? உடுக்கை இழந்தவன் கை போல என்ற பழங்கால வாக்கியம் ஒன்றை நாம் பாடம் வழியாகவும் செவி வாயிலாகவும் கேட்டும் படித்தும் அறிந்துள்ளோம், ஆனால் அந்த பெண் அதை "ஊனம்" என கருதவில்லை, அவள் கணவனும் இறந்து ஒன்றரை வருடங்கள் தான் ஆகியிருந்தது, அவளுக்கு அப்போது பதினோறு வயதில் ஒரு மகன் இருந்தான், பதினோறு வயதாகும் அவள் மகனுக்கு தட்டில் இருக்கும் சாப்பாடை கையில் எடுத்து சாப்பிட தெரியாது, இலையுதிர் காலங்களில் சாலைகளின் வழித்தடங்கள் மீது படர்ந்து கிடக்கும் இலை போல அவள் மகன் அந்த ஒரு தட்டு சாதத்தை சாப்பிட்டு முடிப்பதற்கு முன் தன் உடம்பெல்லாம் அந்த சாதத்தை சிந்தி அவன் குறும்புத்தனத்துக்கேற்ற ஒப்பற்ற அழகு சேர்ப்பான், அதனாலோ என்னவோ வெட்டப்பட்ட தன் விரல்களின் வலியையும் பொருட்படுத்தாமல் தன் மகனுக்கு அந்த சாப்பாடு முழுவதையும் காலை மதியம் இரவு என மூன்று வேளையும் தன் கையால...
வாசிப்பை நேசிப்போம்