Skip to main content

ஆறாவது விரலில் நட்சத்திரம்

மிக நீண்ட அடர்த்தியான கூந்தல் நீளம் கொண்ட அந்த பெண்ணுக்கு உடம்பில் இருந்த ஏதோ ஒரு பெயர் தெரியாத நோயினால் வலது கையின் கட்டை விரலுக்கு அருகே உள்ள விரலானது பாதி அளவு வெட்டப்பட்டு இருந்தது,இதுவும் ஒரு வகை "ஊனம்" என்றே சொல்லலாம்..?

உடுக்கை இழந்தவன் கை போல என்ற பழங்கால வாக்கியம் ஒன்றை நாம் பாடம் வழியாகவும் செவி வாயிலாகவும் கேட்டும் படித்தும் அறிந்துள்ளோம்,

ஆனால் அந்த பெண் அதை "ஊனம்" என கருதவில்லை, அவள் கணவனும் இறந்து ஒன்றரை வருடங்கள் தான் ஆகியிருந்தது, அவளுக்கு அப்போது பதினோறு வயதில் ஒரு மகன் இருந்தான், பதினோறு வயதாகும் அவள் மகனுக்கு தட்டில் இருக்கும் சாப்பாடை கையில் எடுத்து சாப்பிட தெரியாது, இலையுதிர் காலங்களில் சாலைகளின் வழித்தடங்கள் மீது படர்ந்து கிடக்கும் இலை போல அவள் மகன் அந்த ஒரு தட்டு சாதத்தை சாப்பிட்டு முடிப்பதற்கு முன் தன் உடம்பெல்லாம் அந்த சாதத்தை சிந்தி அவன் குறும்புத்தனத்துக்கேற்ற ஒப்பற்ற அழகு சேர்ப்பான், அதனாலோ என்னவோ வெட்டப்பட்ட தன் விரல்களின் வலியையும் பொருட்படுத்தாமல் தன் மகனுக்கு அந்த சாப்பாடு முழுவதையும் காலை மதியம் இரவு என மூன்று வேளையும் தன் கையால் ஊட்டிவிட்டு அவனுக்கு வயிராற உணவளித்து அதில் பேரின்பம் அடைவாள்..?

ஏறத்தாழ பதினைந்து வருடங்கள் கழிந்தன, அந்த பெண் அவள் மகனின் பண்ணிரெண்டாவது வயதில் இந்த உலக ஜீவ ராசிகளிடம் இருந்து விடை பெற்றாள், இன்று அவள் தூக்கி வளர்த்த மகனுக்கு இருபத்தி ஆறு வயது முடியப்போகிறது இன்று வரை அவன் கையில் எடுத்து சாப்பிடும் போது அவன் அம்மாவிற்கு வெட்டப்பட்ட வலது கை அந்த கட்டை விரலின் பக்கத்து விரல் இன்று வரை இவன் சாப்பிடும் போதும் செயலற்று இருக்கிறது, ஆம் ஐந்து விரல்களையும் ஒன்றாக சேர்த்து வச்சு சாப்பிடு என்று இவனுக்கு அறிவுரை வழங்காத பெரியோர்களும் இல்லை, நான்கு விரல்களில் சாப்பாடை எடுத்து சாப்பிடுகிறான் என்று இவனை கேளி செய்யாத நட்பு வட்டாரங்களும் இல்லை, ஆம் இன்று வரை அவன் சாப்பிடும் போது அந்த வலது கையின் கட்டை விரலுக்கு பக்கத்து விரலை விட்டுவிட்டு மீதமிருக்கும் நான்கு விரலில் மட்டுமே அவன் தனக்கான சாப்பாடை சாப்பிடுகிறான், இந்த பழக்கத்தை அவன் மாற்றிக்கொள்ள விரும்பவில்லை..?

இதற்கு பெயர் "ஊனம்" என்று இந்த ஊர் அவனை கேளி செய்தாலும் அவன் இந்த ஊனத்தை மிகவும் அழகான அவன் வாழ்வின் ஒரு நட்சத்திரமாக பார்க்கிறான்..!!

ஊனம் என்ற சொல்லின் பொருள்
ஊக்கத்தின் அடையாளம் என்பதே..?

- A Writeup With Soulful Content ❤

Comments

Popular posts from this blog

The One - அந்த ஒருவன் 💚

💚 நிராகரிக்கப்பட்ட ஒருவன் புறக்கணிக்கப்பட்ட ஒருவன் ஒதுக்கி வைக்கப்பட்ட ஒருவன் அவமானப்படுத்தப்பட்ட ஒருவன், "வர சொல்லு அந்த ஒருத்தன..?" பல போர் படை இருக்கலாம் எதிர்பார்த்தது இவனத்தான் அந்தொருவன் வந்திருக்கான்டே..!!! "Temba" என்றால் "Hope" என்று பொருள், ஒட்டு மொத்த ஆஃப்ரிக்க மக்களின் நம்பிக்கை ஒளியாகவும் அவர்களின் ஏக்கத்திற்கு விடையாகவும் இந்த "டெம்பா" ஒரு வாழ்வியலை இங்கே புதுப்பித்து இருக்கிறான், எத்தனை அவமானங்கள் தான் 'இந்த ஒருவனுக்கு' நிகழ்ந்திருக்கிறது, உயரம் ரீதியாகவும்,நிற ரீதியாகவும் என இவன் கண்ட அவமானங்கள் அனைத்தையும் தாண்டி இன்று ஒரு இன மக்களையே இன்று இவன் தலை நிமிர செய்திருக்கிறான், எங்க கேங்க்ல ஒரு ரெண்டு பேர் மொரட்டு தனமான தென்னாப்பிரிக்கா ஃபேன்,நானும் என்னோட இன்னொரு முகநூல் நண்பரும் (Anjali Raga Jammy), எப்படி "கொம்பன்" யானைய பார்த்து காடே ஆடி போகுமோ அது மாதிரி நாங்க ரெண்டு பேரும் எங்க தலைவன் டெம்பா பாவுமா - வ "டெம்பன்" ன்னு செல்லமா தான் கூப்பிடுவோம், இந்த டெம்பனின் கைகள் ஒரு ந...

நிகரில்லாதவள்

அன்று ஊரெங்கும் நல்ல மழை வெளுத்து வாங்கிகொண்டிருந்தது, பெரு மழைக்கு ஒதுங்குவதற்காக அவள் அங்கே சாலையோரம் இருந்த மரத்தின் அடியில் சென்று நின்று கொண்டாள், அவளுக்கு அருகே பள்ளி முடிந்து வீடு திரும்பும் குழந்தைகள் சூழ அவள் ஒரு பள்ளிக்கூடத்து ஆசிரியை போல் அக்குழந்தைகளுக்கு நடுவில் நின்று அவர்கள் மழையில் செய்யும் சேட்டையை பார்த்து ரசித்துக்கொண்டிருந்தாள், இந்த மழை நிற்பதற்குள் இவள் யார்,இவள் பெயர் என்ன, இவள் சார்ந்து இருப்பவைகள் என சின்ன கதையுடன் ஒரு முன்னோட்டம் பார்ப்போம், இவளுக்கான அறிமுகம் இல்லாததால் இவளுக்கு இவளாகவே சூடிக்கொண்ட பெயர் இது, ஆம் இவளுக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து ஆசிரமத்தில் தான் வளர்ந்து வருகிறாள்,அங்கிருப்பவர்கள் "குட்டி" என்று கூப்பிடுவார்கள் அதுவே இவளது பெயராகவும் மாறியது, பின் பள்ளி முடிந்து யாரோ பெயர் தெரியாத ஸ்பான்ஸர்ஷிப் மூலம் கல்லூரி படிப்பை முடித்து நல்ல ஒரு இடத்தில் வேலைக்கு சேர்ந்த பின் தான் இவளுக்கு ஒன்று புரிந்தது, நம்மை அடையாளப்படுத்திக்கொள்ள சரியான பெயர் கூட நமக்கு இல்லை என்று, எதிர்நீச்சல் படத்தில் வருவது போல் தன் அடையாளத்தை இச்சமூகத்தில் பதிக்...

குடைக்குள் மழை

✨️💚 ரீனா : ஹே ஆர் யூ தேர்..? விக்ரம் : இருக்கேன் ரீனா, என்ன திடீர்னு மெசேஜ், முக்கியமா எதுவும் சொல்லணுமா..? ரீனா : ஹே, அதெல்லாம் இல்ல, ஏன் ஒர்க்ல இருக்கியா..? விக்ரம் : இல்ல, வீட்டுக்கு வந்துட்டேன், Earlier Appointments So, முடிஞ்சு பா! ரீனா : ஒகே, கொஞ்சம் மனசு சரி இல்ல அதான் உன்கிட்ட பேசலாமேன்னு கால் பண்ணேன்..? விக்ரம் : என்ன ஆச்சு..? ஆர் யூ ஓகே..? சொல்லு ரீனா Any Issue..? ரீனா : ஹே,Just Mood Swing ஒன்லி! நீ ஃபிரீன்னா சொல்லு Let's Walk Together in Beach! உனக்கு தெரியும்ல எனக்கு பீச் வாக்ன்னா ரொம்ப பிடிக்கும், So நீ ஃபிரீன்னா வர முடியுமா விக்ரம்..? விக்ரம் : சரி, ஈவினிங் 6 மணிக்கு பீச்ல நம்ம வழக்கமா மீட் பண்ணுற அந்த பட்டர் பன் கடைக்கு வந்துரு ரீனா, நானும் வந்துடுறேன், ரீனா : தேங்க்ஸ் விக்ரம்! விக்ரம் : தேங்க்ஸா..? No More Formalities! உன்னோட தேங்க்ஸ்ல நான் பூரிச்சு போய்ட்டேன்,சிரிப்பு காட்டாம வா ரீனா! ரீனா : ஹ்ம்ம் டா! * இடம் : கடற்கரை * நேரம் : மாலை 6 மணி விக்ரம் : ஹே! என்ன ஆச்சு ரீனா திடீர்னு..? ரீனா : அதெல்லாம் ஒன்னும் இல்லடா, Please Give Sometime நானே சொல்லுறேன் போ...