Skip to main content

பரிணாம வளர்ச்சி மனிதனிடத்தில்..?

பரிணாம வளர்ச்சி என்பது
அன்றாடம் சாப்பிடும் உணவு முறையில் இருந்து
நாம் சந்திக்கும் மனிதர்களின் குணம் வரையில்
ஒவ்வொன்றிலும் தன் பங்கினை
பிரதிபலித்துக்கொண்டுதான் இருக்கிறது,

நன்மை தீமை என்று பரிணாம வளர்ச்சியை
நாம் சமக்கோட்டில் பிரிக்கலாம்,
ஆனால் அதை அணுகும் முறையையும்
அதை ரசிக்கும் முறையையும் நாம் செய்வதில்லை,
நன்மை தீமை என்று பாராமல்
அதை கொஞ்சம் ரசித்து பார்த்தால்
சில அழகான அனுபவங்கள் நமக்கு கிடைக்கும்
அத்தகைய சிறு முயற்சி இது,

ஏர் உழுதல் என்பது மிகவும் நேர்த்தியான
கலைக்கு சமமான ஒரு தொழில்,
நம் நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தில்
ஏர் உழுதல் என்பது தொன்று தொட்டு
வந்த ஒரு தொழில்,
இரு காளை மாடுகளின் பிடரியில்
ஏர் கருவியை சுமந்து
விவசாயம் செய்த காலம் அன்று,

இன்றோ டிராக்டரில் இணைக்கப்பட்ட
மின் கருவி மூலம் உழுதல் என்பது
விவசாயத்தில் காலத்தின் தன்மைக்கேற்ப
அதன் பரிணாம வளர்ச்சியை
கால் ஊன்றி இருக்கிறது,

அன்றைய காலக்கட்டத்தில்
காலை எட்டு மணிக்கு வேலைக்கு வரும்
விவசாயிகள் ஒரு தூக்குச்சட்டியில்
நேற்று மீதமிருந்த மீன் குழம்பையோ
அல்லது தண்ணீர் ஊற்றி வைத்த
வடிச்ச சாதத்தையோ கூடவே
ஒரு நான்கு பச்சை மிளகாய் துண்டு
அல்லது வத்தல் துண்டுகளை எடுத்துக்கொண்டு
அதை ஒரு நிழல் தரும் மரத்தின்
சமநிலை பரப்புகளில் வைத்துவிட்டு
அன்றைய தினத்தை தங்கள் இஷ்ட தெய்வத்தை
வணங்கிக்கொண்டு விவசாயத்தை தொடங்குவர்,

காலை எட்டு மணிக்கு வேலை தொடங்கும்
ஒரு விவசாயிக்கு மதியம் பன்னிரெண்டு
மணி அளவில் ஊரின் பண்ணையாரின்
வீட்டு தொலைபேசி மணி வாயில்
ஒரு கூக்குரல் ஒலிக்கும்,

பட்டணத்துல கம்ப்யூட்டர் கம்பெனில
வேலை பாக்குற உங்க பையன் கிட்ட
இருந்து அழைப்பு வந்துருக்கு என்று,

பின்னங்கால் பிடரியை தொடும் அளவிற்கு
அந்த விவசாயி செய்த வேலையை
பாதியில் போட்ட படி தன் உழைத்து சிந்தும்
வியர்வை மணித்துளிகள் நிலத்தில் சங்கமிக்க
ஓடி போய் சுழற்சி முறையில் எண்கள் இருக்கும்.
அந்த தொலைபேசி பெட்டியின்
அருகில் அமர்ந்து இருப்பார்,

ஆம் ஒரு ஐந்து நிமிடம் கழித்து கூப்பிடுங்க
உங்க அப்பா வந்துவிடுவார் என்று
பண்ணையார் அந்த விவசாயியின் மகனிடம்
தெரிவித்து இருப்பார்,

பண்ணையாரின் வீட்டில்
ஒரு சோம்பு தண்ணீர் வாங்கி குடித்த வண்ணம்
அந்த விவசாயி தன் மகனின்
தொலைபேசி அழைப்புக்காக காத்திருப்பார்
அந்த தவிப்பிலும் ஒரு சுகம் கிடைக்கும்,

மகன் அழைத்தவுடன் அந்த விவசாயி,
" எய்யா நல்லாருக்கியா யா" என்று கேட்கும்
ஒரே வாக்கியத்தில் அவன் மகனின்
ஒட்டு மொத்த கண்ணீரும் பாற்கடலாய்
அவன் கண்களில் தெப்பமாய் நிற்கும்,
இது அன்றைய கால பருவ நிலை
என்று சொல்லலாம்,

அங்கு இருந்த தொலைபேசி
இன்று கைபேசியாக மாறியிருக்கிறது,
தூரம் என்பது அதே தான்
ஆனால் பரிணாம வளர்ச்சி என்பது இதுவே,
என்ன தான் பரிணாம வளர்ச்சி அடைந்தாலும்
இன்றும் அந்த விவசாயியின் மகன்
தன் தந்தைக்கு கைபேசியில் பேசும்போது
அவன் தந்தை பேசும் முதல் வாக்கியம்
" எய்யா நல்லாருக்கியா யா" என்பதே,
என்ன அந்த பண்ணையார் வீடும்,
பின்னங்கால் பிடரி தொட ஓடும் முனைப்பும்
இங்கு காணாமல் போய் இருக்கிறது,

பரிணாம வளர்ச்சி என்பது
நவீனத்திற்கும் நவ நாகரியத்திற்க்கும் மட்டுமே,
மண்ணுக்கும் மனிதனுக்கும்
பரிணாம வளர்ச்சி என்பது
அக்கினி வெயிலில் உண்டாகும்
கானல் நீர் போன்றது,
அதன் வாழும் காலம் மிகவும் குறைவு.

Picture Credits : Endhan Kangalai | Kanne Kalaimaane
Big Applause to Director Seenu Ramasamy Sir too!


Comments

Popular posts from this blog

The Journey of Solo - Title Poem

ஓம் நமச்சிவாய என்னும் மூலமந்திரத்தின் கருவாய் நீர்,காற்று,நெருப்பு,நிலம்  என்னும் நாற்பகுதிகளை இறைவன் சிவனை வைத்து மையப்படுத்தி இருக்கும் கதைக்களத்தின் ஒரு கவிதை நடை பயணம் இங்கு, " The Journey of Solo - Title Poem |  Bejoy Nambiar  " 1) நீர் - ( World of Shekhar )  அன்பே ஆயிரம் மழைத்துளிகள் என்னை நனைப்பது போல நீ என்னை நனைத்துக்கொள் நதியின் ஆழங்களில் நான் மூச்சு திணறுவது போல நீ என்னை தழுவிக்கொள் கடலின் பேரலைகள் கரையை தீண்டுவது போல நீ என்னை எடுத்துக்கொள் என்னை உன் கரங்களால் அணைத்துக்கொள்ளாதே உன் மனதால் இறுக அணைத்துக்கொள் அன்பின் தனிமையில் உனக்கு மரணம் இல்லை 2) காற்று - ( World of Trilok ) யுகாந்திரங்களின் கோபம் யுகாந்திரங்களின் இறுக்கம் யுகாந்திரங்களின் பொறுமை யுகாந்திரங்களின் தனிமை வந்துவிட்டது எல்லாவற்றின் மீதும் பெரும் புயல் ஒன்று இந்த காற்றை எதிர்த்து நடப்பவர்கள் யார்..? காலத்தின் புயலில் உதிரும் ஆயிரம் ஆயிரம் மலர்களில் ஒரு மலரல்லவா நீ..? அழிவின் தனிமையில் காத்திருக்க உனக்கு நேரமில்லை 3) நெருப்பு - ( World of Shiva ) வன்மத்தின் வனங்கள் பற்றி எரிகின்றன குருதியின

கிறுக்கல்களின் தொகுப்புகள்

வெள்ளிக்காப்பை சுழற்றினேன் சூடான காஃபியை அருந்தினேன் தலை முடியினை கோதி விட்டேன் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தேன் ஆழ்மனதும் அனாதையாக இருந்தது எண்ணங்களின் ஓட்டமும் சீராக இல்லை யூடியுப் பக்கம் சென்றேன் அன்றைய தினத்தின் Trending காணொளிகள் ட்விட்டர் பக்கம் சென்றேன் நடிகர்களின் ரசிகர்களுக்கிடையே தள்ளு முள்ளு இன்ஸ்டாகிராம் பக்கம் சென்றேன் Bae Calls Me Chocobar என்றாள் கிளியோபாட்ரா ஹைக் பக்கம் சென்றேன் நட்டாஸா உரையாடலுக்கு எதிர்வாதம் செய்தாள் சரி, இது தான் இன்றைய தலைவிதி என்று முகப்புத்தகம் வந்து இதை பதிவு செய்தேன்..? - A Poem Without a Topic ❤ ---------------------------------------------------------- வாழ்க்கை இப்படியே போயிடுமா சார் என்பதில் தொடங்கி வாழ்க்கை ஒரு வட்டம் என்பதில் பயணித்து இவ்வளோ தான் சார் வாழ்க்கை என்பதில் முடிகிறது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த நம்பகத்தன்மை நிறைந்த வாழ்க்கை..? -------------------------------------------------------- இந்த காஃபி ஷாப் சுவர்களின் இடையூறுகள் நம் நாவிதழ்கள் இடைபாடுகளிலும்..?..!! - வா ரயில் விட போலாம் வா  🖤 --

குடைக்குள் மழை

✨️💚 ரீனா : ஹே ஆர் யூ தேர்..? விக்ரம் : இருக்கேன் ரீனா, என்ன திடீர்னு மெசேஜ், முக்கியமா எதுவும் சொல்லணுமா..? ரீனா : ஹே, அதெல்லாம் இல்ல, ஏன் ஒர்க்ல இருக்கியா..? விக்ரம் : இல்ல, வீட்டுக்கு வந்துட்டேன், Earlier Appointments So, முடிஞ்சு பா! ரீனா : ஒகே, கொஞ்சம் மனசு சரி இல்ல அதான் உன்கிட்ட பேசலாமேன்னு கால் பண்ணேன்..? விக்ரம் : என்ன ஆச்சு..? ஆர் யூ ஓகே..? சொல்லு ரீனா Any Issue..? ரீனா : ஹே,Just Mood Swing ஒன்லி! நீ ஃபிரீன்னா சொல்லு Let's Walk Together in Beach! உனக்கு தெரியும்ல எனக்கு பீச் வாக்ன்னா ரொம்ப பிடிக்கும், So நீ ஃபிரீன்னா வர முடியுமா விக்ரம்..? விக்ரம் : சரி, ஈவினிங் 6 மணிக்கு பீச்ல நம்ம வழக்கமா மீட் பண்ணுற அந்த பட்டர் பன் கடைக்கு வந்துரு ரீனா, நானும் வந்துடுறேன், ரீனா : தேங்க்ஸ் விக்ரம்! விக்ரம் : தேங்க்ஸா..? No More Formalities! உன்னோட தேங்க்ஸ்ல நான் பூரிச்சு போய்ட்டேன்,சிரிப்பு காட்டாம வா ரீனா! ரீனா : ஹ்ம்ம் டா! * இடம் : கடற்கரை * நேரம் : மாலை 6 மணி விக்ரம் : ஹே! என்ன ஆச்சு ரீனா திடீர்னு..? ரீனா : அதெல்லாம் ஒன்னும் இல்லடா, Please Give Sometime நானே சொல்லுறேன் போ