Skip to main content

பரிணாம வளர்ச்சி மனிதனிடத்தில்..?

பரிணாம வளர்ச்சி என்பது
அன்றாடம் சாப்பிடும் உணவு முறையில் இருந்து
நாம் சந்திக்கும் மனிதர்களின் குணம் வரையில்
ஒவ்வொன்றிலும் தன் பங்கினை
பிரதிபலித்துக்கொண்டுதான் இருக்கிறது,

நன்மை தீமை என்று பரிணாம வளர்ச்சியை
நாம் சமக்கோட்டில் பிரிக்கலாம்,
ஆனால் அதை அணுகும் முறையையும்
அதை ரசிக்கும் முறையையும் நாம் செய்வதில்லை,
நன்மை தீமை என்று பாராமல்
அதை கொஞ்சம் ரசித்து பார்த்தால்
சில அழகான அனுபவங்கள் நமக்கு கிடைக்கும்
அத்தகைய சிறு முயற்சி இது,

ஏர் உழுதல் என்பது மிகவும் நேர்த்தியான
கலைக்கு சமமான ஒரு தொழில்,
நம் நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தில்
ஏர் உழுதல் என்பது தொன்று தொட்டு
வந்த ஒரு தொழில்,
இரு காளை மாடுகளின் பிடரியில்
ஏர் கருவியை சுமந்து
விவசாயம் செய்த காலம் அன்று,

இன்றோ டிராக்டரில் இணைக்கப்பட்ட
மின் கருவி மூலம் உழுதல் என்பது
விவசாயத்தில் காலத்தின் தன்மைக்கேற்ப
அதன் பரிணாம வளர்ச்சியை
கால் ஊன்றி இருக்கிறது,

அன்றைய காலக்கட்டத்தில்
காலை எட்டு மணிக்கு வேலைக்கு வரும்
விவசாயிகள் ஒரு தூக்குச்சட்டியில்
நேற்று மீதமிருந்த மீன் குழம்பையோ
அல்லது தண்ணீர் ஊற்றி வைத்த
வடிச்ச சாதத்தையோ கூடவே
ஒரு நான்கு பச்சை மிளகாய் துண்டு
அல்லது வத்தல் துண்டுகளை எடுத்துக்கொண்டு
அதை ஒரு நிழல் தரும் மரத்தின்
சமநிலை பரப்புகளில் வைத்துவிட்டு
அன்றைய தினத்தை தங்கள் இஷ்ட தெய்வத்தை
வணங்கிக்கொண்டு விவசாயத்தை தொடங்குவர்,

காலை எட்டு மணிக்கு வேலை தொடங்கும்
ஒரு விவசாயிக்கு மதியம் பன்னிரெண்டு
மணி அளவில் ஊரின் பண்ணையாரின்
வீட்டு தொலைபேசி மணி வாயில்
ஒரு கூக்குரல் ஒலிக்கும்,

பட்டணத்துல கம்ப்யூட்டர் கம்பெனில
வேலை பாக்குற உங்க பையன் கிட்ட
இருந்து அழைப்பு வந்துருக்கு என்று,

பின்னங்கால் பிடரியை தொடும் அளவிற்கு
அந்த விவசாயி செய்த வேலையை
பாதியில் போட்ட படி தன் உழைத்து சிந்தும்
வியர்வை மணித்துளிகள் நிலத்தில் சங்கமிக்க
ஓடி போய் சுழற்சி முறையில் எண்கள் இருக்கும்.
அந்த தொலைபேசி பெட்டியின்
அருகில் அமர்ந்து இருப்பார்,

ஆம் ஒரு ஐந்து நிமிடம் கழித்து கூப்பிடுங்க
உங்க அப்பா வந்துவிடுவார் என்று
பண்ணையார் அந்த விவசாயியின் மகனிடம்
தெரிவித்து இருப்பார்,

பண்ணையாரின் வீட்டில்
ஒரு சோம்பு தண்ணீர் வாங்கி குடித்த வண்ணம்
அந்த விவசாயி தன் மகனின்
தொலைபேசி அழைப்புக்காக காத்திருப்பார்
அந்த தவிப்பிலும் ஒரு சுகம் கிடைக்கும்,

மகன் அழைத்தவுடன் அந்த விவசாயி,
" எய்யா நல்லாருக்கியா யா" என்று கேட்கும்
ஒரே வாக்கியத்தில் அவன் மகனின்
ஒட்டு மொத்த கண்ணீரும் பாற்கடலாய்
அவன் கண்களில் தெப்பமாய் நிற்கும்,
இது அன்றைய கால பருவ நிலை
என்று சொல்லலாம்,

அங்கு இருந்த தொலைபேசி
இன்று கைபேசியாக மாறியிருக்கிறது,
தூரம் என்பது அதே தான்
ஆனால் பரிணாம வளர்ச்சி என்பது இதுவே,
என்ன தான் பரிணாம வளர்ச்சி அடைந்தாலும்
இன்றும் அந்த விவசாயியின் மகன்
தன் தந்தைக்கு கைபேசியில் பேசும்போது
அவன் தந்தை பேசும் முதல் வாக்கியம்
" எய்யா நல்லாருக்கியா யா" என்பதே,
என்ன அந்த பண்ணையார் வீடும்,
பின்னங்கால் பிடரி தொட ஓடும் முனைப்பும்
இங்கு காணாமல் போய் இருக்கிறது,

பரிணாம வளர்ச்சி என்பது
நவீனத்திற்கும் நவ நாகரியத்திற்க்கும் மட்டுமே,
மண்ணுக்கும் மனிதனுக்கும்
பரிணாம வளர்ச்சி என்பது
அக்கினி வெயிலில் உண்டாகும்
கானல் நீர் போன்றது,
அதன் வாழும் காலம் மிகவும் குறைவு.

Picture Credits : Endhan Kangalai | Kanne Kalaimaane
Big Applause to Director Seenu Ramasamy Sir too!


Comments

Popular posts from this blog

The One - அந்த ஒருவன் 💚

💚 நிராகரிக்கப்பட்ட ஒருவன் புறக்கணிக்கப்பட்ட ஒருவன் ஒதுக்கி வைக்கப்பட்ட ஒருவன் அவமானப்படுத்தப்பட்ட ஒருவன், "வர சொல்லு அந்த ஒருத்தன..?" பல போர் படை இருக்கலாம் எதிர்பார்த்தது இவனத்தான் அந்தொருவன் வந்திருக்கான்டே..!!! "Temba" என்றால் "Hope" என்று பொருள், ஒட்டு மொத்த ஆஃப்ரிக்க மக்களின் நம்பிக்கை ஒளியாகவும் அவர்களின் ஏக்கத்திற்கு விடையாகவும் இந்த "டெம்பா" ஒரு வாழ்வியலை இங்கே புதுப்பித்து இருக்கிறான், எத்தனை அவமானங்கள் தான் 'இந்த ஒருவனுக்கு' நிகழ்ந்திருக்கிறது, உயரம் ரீதியாகவும்,நிற ரீதியாகவும் என இவன் கண்ட அவமானங்கள் அனைத்தையும் தாண்டி இன்று ஒரு இன மக்களையே இன்று இவன் தலை நிமிர செய்திருக்கிறான், எங்க கேங்க்ல ஒரு ரெண்டு பேர் மொரட்டு தனமான தென்னாப்பிரிக்கா ஃபேன்,நானும் என்னோட இன்னொரு முகநூல் நண்பரும் (Anjali Raga Jammy), எப்படி "கொம்பன்" யானைய பார்த்து காடே ஆடி போகுமோ அது மாதிரி நாங்க ரெண்டு பேரும் எங்க தலைவன் டெம்பா பாவுமா - வ "டெம்பன்" ன்னு செல்லமா தான் கூப்பிடுவோம், இந்த டெம்பனின் கைகள் ஒரு ந...

The Journey of Solo - Title Poem

ஓம் நமச்சிவாய என்னும் மூலமந்திரத்தின் கருவாய் நீர்,காற்று,நெருப்பு,நிலம்  என்னும் நாற்பகுதிகளை இறைவன் சிவனை வைத்து மையப்படுத்தி இருக்கும் கதைக்களத்தின் ஒரு கவிதை நடை பயணம் இங்கு, " The Journey of Solo - Title Poem |  Bejoy Nambiar  " 1) நீர் - ( World of Shekhar )  அன்பே ஆயிரம் மழைத்துளிகள் என்னை நனைப்பது போல நீ என்னை நனைத்துக்கொள் நதியின் ஆழங்களில் நான் மூச்சு திணறுவது போல நீ என்னை தழுவிக்கொள் கடலின் பேரலைகள் கரையை தீண்டுவது போல நீ என்னை எடுத்துக்கொள் என்னை உன் கரங்களால் அணைத்துக்கொள்ளாதே உன் மனதால் இறுக அணைத்துக்கொள் அன்பின் தனிமையில் உனக்கு மரணம் இல்லை 2) காற்று - ( World of Trilok ) யுகாந்திரங்களின் கோபம் யுகாந்திரங்களின் இறுக்கம் யுகாந்திரங்களின் பொறுமை யுகாந்திரங்களின் தனிமை வந்துவிட்டது எல்லாவற்றின் மீதும் பெரும் புயல் ஒன்று இந்த காற்றை எதிர்த்து நடப்பவர்கள் யார்..? காலத்தின் புயலில் உதிரும் ஆயிரம் ஆயிரம் மலர்களில் ஒரு மலரல்லவா நீ..? அழிவின் தனிமையில் காத்திருக்க உனக்கு நேரமில்லை 3) நெருப்பு - ( World of Shiva ) வன்மத்தின் வனங்கள் பற்றி எரிகின்றன ...

நிகரில்லாதவள்

அன்று ஊரெங்கும் நல்ல மழை வெளுத்து வாங்கிகொண்டிருந்தது, பெரு மழைக்கு ஒதுங்குவதற்காக அவள் அங்கே சாலையோரம் இருந்த மரத்தின் அடியில் சென்று நின்று கொண்டாள், அவளுக்கு அருகே பள்ளி முடிந்து வீடு திரும்பும் குழந்தைகள் சூழ அவள் ஒரு பள்ளிக்கூடத்து ஆசிரியை போல் அக்குழந்தைகளுக்கு நடுவில் நின்று அவர்கள் மழையில் செய்யும் சேட்டையை பார்த்து ரசித்துக்கொண்டிருந்தாள், இந்த மழை நிற்பதற்குள் இவள் யார்,இவள் பெயர் என்ன, இவள் சார்ந்து இருப்பவைகள் என சின்ன கதையுடன் ஒரு முன்னோட்டம் பார்ப்போம், இவளுக்கான அறிமுகம் இல்லாததால் இவளுக்கு இவளாகவே சூடிக்கொண்ட பெயர் இது, ஆம் இவளுக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து ஆசிரமத்தில் தான் வளர்ந்து வருகிறாள்,அங்கிருப்பவர்கள் "குட்டி" என்று கூப்பிடுவார்கள் அதுவே இவளது பெயராகவும் மாறியது, பின் பள்ளி முடிந்து யாரோ பெயர் தெரியாத ஸ்பான்ஸர்ஷிப் மூலம் கல்லூரி படிப்பை முடித்து நல்ல ஒரு இடத்தில் வேலைக்கு சேர்ந்த பின் தான் இவளுக்கு ஒன்று புரிந்தது, நம்மை அடையாளப்படுத்திக்கொள்ள சரியான பெயர் கூட நமக்கு இல்லை என்று, எதிர்நீச்சல் படத்தில் வருவது போல் தன் அடையாளத்தை இச்சமூகத்தில் பதிக்...