Skip to main content

Happy Valentines Day !!

~ 💛

இன்று காதலர் தினம்
உன்னுடைய விருப்பமான இடத்தில்
எனக்கு ஒரு முத்தம் கொடு என்றாள்

அவன் சிரித்தான்
எதுக்குடா சிரிக்கிற என்றாள்..?

சொல்றேன்,
புது கொழுசு போட்டுருக்க போல..?

ஆமா டா நேத்து வாங்குனேன்
அப்பா வாங்கிக்கொடுத்தாரு

ஓ..? அப்பா வா..?
நெனச்சேன் அங்க இருந்து வரப்போ
என்னைக்கும் இல்லாம மேடம் கொஞ்சம்
ஸ்ப்பீடா ஜலக் ஜலக்னு நடந்து வரப்போயே,

ஹலோ அது என்ன ஓ அப்பாவா..?

சரி அவர் கடமை மகளுக்கு வாங்காம
வேற யாருக்கு வாங்கிக்கொடுக்க போறாரு,
இது என்னமோ நீ பெருமையா பேசுற..?

சரி டா இவ்வளோ பேசுறியே
இது மாதிரி கொழுசு நீ வாங்கித்தா அப்போ..?

இது என்ன ஜஸ்ட் சிம்ப்ள் 
நான் வாங்கிகொடுக்குற கொழுசு
காலத்துக்கும் என்னோட காதல் மொழியை
உனக்கு உணர்த்திகிட்டே இருக்கும்,

அடேங்கப்பா பில்டப் போதும்
இப்போ முத்தம் கொடுக்குறையா..?
கொழுசு வாங்கித்தரியா..?

ஒரு கைல கற்கண்டு நிறைய எடுத்து
ஊசி மணி பாசி எல்லாம் வச்சு
அந்த கற்கண்டுடன் வைத்து கோர்த்தால்
கொழுசு போன்று ஒரு சரம் உண்டாகும்,
அதில் தாளம் அரங்கேற
சிறு குழந்தைகளுக்கு கால்களில்
சவுண்ட் கேக்கும் Shoe மாட்டிவிட்டால்
எப்படி இருக்குமோ அப்படி குட்டி குட்டியாக
விற்கும் இசை ஒலிக்கும் முத்துமணி மாலையை
அச்சரத்துடன் கோர்த்து அக்கொழுசை
அவன் செய்து எடுத்து வந்திருந்தான்
முன்னதாகவே,

பிறந்த குழந்தையின் பிஞ்சு பாதம் போன்று
மிகவும் மென்மையான பாதம் அவளுக்கு,
சாலையோரத்தின் சிறு கல்
தன் பாதத்தில் குத்தினாலும்
அவள் கண்களில் இருந்து தெப்பக்குளம்
தாரை தாரையாய் பொங்கி வழிந்து
வைகை கரையோரம் படிந்து செல்லும்
அவள் கன்னக்குழியில்,

அவள் பாதத்தை தன் இரு கைகளில்
அள்ளி எடுத்து தன் மடி மேல் வைத்து
அவளுக்காக ஒரு வார காலம் இரவு முழுக்க
தூக்கம் கெடுத்து பார்த்து பார்த்து
சிற்பி சிலையை செதுக்குவது போல்
செதுக்க செய்த அக்கொழுசை
அவள் இரு கால்களிலும் மாட்டிவிட்டான்,

அவள் இரு பாதங்களையும்
ஒன்றாக சேர்த்து வைத்து
இரு அடி பாதங்களின் நடுவில்
தன் இதழ் கோர்த்து ஒரு முத்தம் வைத்தான்,
இது தான் - நீ கேட்ட - நான் விரும்பிய -
எனக்கான - உனக்கு கொடுக்க ஆசை பட்ட -
முத்தம் என்றான்,

அவள் இரு பாதங்களையும் சேர்த்து வைத்து
தாளம் தட்டினான் அக்கொழுசில்
அவன் காதல் ராகம் இசையாக ஒலித்தது,
அவள் கண்களில் ததும்ப ததும்ப
வைகை நதி ஆர்ப்பரித்தது சந்தோஷத்தில்..?

- Happy Valentines Day to All 😊





Comments

Popular posts from this blog

The One - அந்த ஒருவன் 💚

💚 நிராகரிக்கப்பட்ட ஒருவன் புறக்கணிக்கப்பட்ட ஒருவன் ஒதுக்கி வைக்கப்பட்ட ஒருவன் அவமானப்படுத்தப்பட்ட ஒருவன், "வர சொல்லு அந்த ஒருத்தன..?" பல போர் படை இருக்கலாம் எதிர்பார்த்தது இவனத்தான் அந்தொருவன் வந்திருக்கான்டே..!!! "Temba" என்றால் "Hope" என்று பொருள், ஒட்டு மொத்த ஆஃப்ரிக்க மக்களின் நம்பிக்கை ஒளியாகவும் அவர்களின் ஏக்கத்திற்கு விடையாகவும் இந்த "டெம்பா" ஒரு வாழ்வியலை இங்கே புதுப்பித்து இருக்கிறான், எத்தனை அவமானங்கள் தான் 'இந்த ஒருவனுக்கு' நிகழ்ந்திருக்கிறது, உயரம் ரீதியாகவும்,நிற ரீதியாகவும் என இவன் கண்ட அவமானங்கள் அனைத்தையும் தாண்டி இன்று ஒரு இன மக்களையே இன்று இவன் தலை நிமிர செய்திருக்கிறான், எங்க கேங்க்ல ஒரு ரெண்டு பேர் மொரட்டு தனமான தென்னாப்பிரிக்கா ஃபேன்,நானும் என்னோட இன்னொரு முகநூல் நண்பரும் (Anjali Raga Jammy), எப்படி "கொம்பன்" யானைய பார்த்து காடே ஆடி போகுமோ அது மாதிரி நாங்க ரெண்டு பேரும் எங்க தலைவன் டெம்பா பாவுமா - வ "டெம்பன்" ன்னு செல்லமா தான் கூப்பிடுவோம், இந்த டெம்பனின் கைகள் ஒரு ந...

நிகரில்லாதவள்

அன்று ஊரெங்கும் நல்ல மழை வெளுத்து வாங்கிகொண்டிருந்தது, பெரு மழைக்கு ஒதுங்குவதற்காக அவள் அங்கே சாலையோரம் இருந்த மரத்தின் அடியில் சென்று நின்று கொண்டாள், அவளுக்கு அருகே பள்ளி முடிந்து வீடு திரும்பும் குழந்தைகள் சூழ அவள் ஒரு பள்ளிக்கூடத்து ஆசிரியை போல் அக்குழந்தைகளுக்கு நடுவில் நின்று அவர்கள் மழையில் செய்யும் சேட்டையை பார்த்து ரசித்துக்கொண்டிருந்தாள், இந்த மழை நிற்பதற்குள் இவள் யார்,இவள் பெயர் என்ன, இவள் சார்ந்து இருப்பவைகள் என சின்ன கதையுடன் ஒரு முன்னோட்டம் பார்ப்போம், இவளுக்கான அறிமுகம் இல்லாததால் இவளுக்கு இவளாகவே சூடிக்கொண்ட பெயர் இது, ஆம் இவளுக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து ஆசிரமத்தில் தான் வளர்ந்து வருகிறாள்,அங்கிருப்பவர்கள் "குட்டி" என்று கூப்பிடுவார்கள் அதுவே இவளது பெயராகவும் மாறியது, பின் பள்ளி முடிந்து யாரோ பெயர் தெரியாத ஸ்பான்ஸர்ஷிப் மூலம் கல்லூரி படிப்பை முடித்து நல்ல ஒரு இடத்தில் வேலைக்கு சேர்ந்த பின் தான் இவளுக்கு ஒன்று புரிந்தது, நம்மை அடையாளப்படுத்திக்கொள்ள சரியான பெயர் கூட நமக்கு இல்லை என்று, எதிர்நீச்சல் படத்தில் வருவது போல் தன் அடையாளத்தை இச்சமூகத்தில் பதிக்...

குடைக்குள் மழை

✨️💚 ரீனா : ஹே ஆர் யூ தேர்..? விக்ரம் : இருக்கேன் ரீனா, என்ன திடீர்னு மெசேஜ், முக்கியமா எதுவும் சொல்லணுமா..? ரீனா : ஹே, அதெல்லாம் இல்ல, ஏன் ஒர்க்ல இருக்கியா..? விக்ரம் : இல்ல, வீட்டுக்கு வந்துட்டேன், Earlier Appointments So, முடிஞ்சு பா! ரீனா : ஒகே, கொஞ்சம் மனசு சரி இல்ல அதான் உன்கிட்ட பேசலாமேன்னு கால் பண்ணேன்..? விக்ரம் : என்ன ஆச்சு..? ஆர் யூ ஓகே..? சொல்லு ரீனா Any Issue..? ரீனா : ஹே,Just Mood Swing ஒன்லி! நீ ஃபிரீன்னா சொல்லு Let's Walk Together in Beach! உனக்கு தெரியும்ல எனக்கு பீச் வாக்ன்னா ரொம்ப பிடிக்கும், So நீ ஃபிரீன்னா வர முடியுமா விக்ரம்..? விக்ரம் : சரி, ஈவினிங் 6 மணிக்கு பீச்ல நம்ம வழக்கமா மீட் பண்ணுற அந்த பட்டர் பன் கடைக்கு வந்துரு ரீனா, நானும் வந்துடுறேன், ரீனா : தேங்க்ஸ் விக்ரம்! விக்ரம் : தேங்க்ஸா..? No More Formalities! உன்னோட தேங்க்ஸ்ல நான் பூரிச்சு போய்ட்டேன்,சிரிப்பு காட்டாம வா ரீனா! ரீனா : ஹ்ம்ம் டா! * இடம் : கடற்கரை * நேரம் : மாலை 6 மணி விக்ரம் : ஹே! என்ன ஆச்சு ரீனா திடீர்னு..? ரீனா : அதெல்லாம் ஒன்னும் இல்லடா, Please Give Sometime நானே சொல்லுறேன் போ...