Skip to main content

Happy Valentines Day !!

~ 💛

இன்று காதலர் தினம்
உன்னுடைய விருப்பமான இடத்தில்
எனக்கு ஒரு முத்தம் கொடு என்றாள்

அவன் சிரித்தான்
எதுக்குடா சிரிக்கிற என்றாள்..?

சொல்றேன்,
புது கொழுசு போட்டுருக்க போல..?

ஆமா டா நேத்து வாங்குனேன்
அப்பா வாங்கிக்கொடுத்தாரு

ஓ..? அப்பா வா..?
நெனச்சேன் அங்க இருந்து வரப்போ
என்னைக்கும் இல்லாம மேடம் கொஞ்சம்
ஸ்ப்பீடா ஜலக் ஜலக்னு நடந்து வரப்போயே,

ஹலோ அது என்ன ஓ அப்பாவா..?

சரி அவர் கடமை மகளுக்கு வாங்காம
வேற யாருக்கு வாங்கிக்கொடுக்க போறாரு,
இது என்னமோ நீ பெருமையா பேசுற..?

சரி டா இவ்வளோ பேசுறியே
இது மாதிரி கொழுசு நீ வாங்கித்தா அப்போ..?

இது என்ன பிஸ்கோத்து
நான் வாங்கிகொடுக்குற கொழுசு
காலத்துக்கும் என்னோட காதல் மொழியை
உனக்கு உணர்த்திகிட்டே இருக்கும்,

அடேங்கப்பா பில்டப் போதும்
இப்போ முத்தம் கொடுக்குறையா..?
கொழுசு வாங்கித்தரியா..?

ஒரு கைல கற்கண்டு நிறைய எடுத்து
ஊசி மணி பாசி எல்லாம் வச்சு
அந்த கற்கண்டுடன் வைத்து கோர்த்தால்
கொழுசு போன்று ஒரு சரம் உண்டாகும்,
அதில் தாளம் அரங்கேற
சிறு குழந்தைகளுக்கு கால்களில்
சவுண்ட் கேக்கும் Shoe மாட்டிவிட்டால்
எப்படி இருக்குமோ அப்படி குட்டி குட்டியாக
விற்கும் இசை ஒலிக்கும் முத்துமணி மாலையை
அச்சரத்துடன் கோர்த்து அக்கொழுசை
அவன் செய்து எடுத்து வந்திருந்தான்
முன்னதாகவே,

பிறந்த குழந்தையின் பிஞ்சு பாதம் போன்று
மிகவும் மென்மையான பாதம் அவளுக்கு,
சாலையோரத்தின் சிறு கல்
தன் பாதத்தில் குத்தினாலும்
அவள் கண்களில் இருந்து தெப்பக்குளம்
தாரை தாரையாய் பொங்கி வழிந்து
வைகை கரையோரம் படிந்து செல்லும்
அவள் கன்னக்குழியில்,

அவள் பாதத்தை தன் இரு கைகளில்
அள்ளி எடுத்து தன் மடி மேல் வைத்து
அவளுக்காக ஒரு வார காலம் இரவு முழுக்க
தூக்கம் கெடுத்து பார்த்து பார்த்து
சிற்பி சிலையை செதுக்குவது போல்
செதுக்க செய்த அக்கொழுசை
அவள் இரு கால்களிலும் மாட்டிவிட்டான்,

அவள் இரு பாதங்களையும்
ஒன்றாக சேர்த்து வைத்து
இரு அடி பாதங்களின் நடுவில்
தன் இதழ் கோர்த்து ஒரு முத்தம் வைத்தான்,
இது தான் - நீ கேட்ட - நான் விரும்பிய -
எனக்கான - உனக்கு கொடுக்க ஆசை பட்ட -
முத்தம் என்றான்,

அவள் இரு பாதங்களையும் சேர்த்து வைத்து
தாளம் தட்டினான் அக்கொழுசில்
அவன் காதல் ராகம் இசையாக ஒலித்தது,
அவள் கண்களில் ததும்ப ததும்ப
வைகை நதி ஆர்ப்பரித்தது சந்தோஷத்தில்..?

- Happy Valentines Day to All 😊





Comments

Popular posts from this blog

The Journey of Solo - Title Poem

ஓம் நமச்சிவாய என்னும் மூலமந்திரத்தின் கருவாய் நீர்,காற்று,நெருப்பு,நிலம்  என்னும் நாற்பகுதிகளை இறைவன் சிவனை வைத்து மையப்படுத்தி இருக்கும் கதைக்களத்தின் ஒரு கவிதை நடை பயணம் இங்கு, " The Journey of Solo - Title Poem |  Bejoy Nambiar  " 1) நீர் - ( World of Shekhar )  அன்பே ஆயிரம் மழைத்துளிகள் என்னை நனைப்பது போல நீ என்னை நனைத்துக்கொள் நதியின் ஆழங்களில் நான் மூச்சு திணறுவது போல நீ என்னை தழுவிக்கொள் கடலின் பேரலைகள் கரையை தீண்டுவது போல நீ என்னை எடுத்துக்கொள் என்னை உன் கரங்களால் அணைத்துக்கொள்ளாதே உன் மனதால் இறுக அணைத்துக்கொள் அன்பின் தனிமையில் உனக்கு மரணம் இல்லை 2) காற்று - ( World of Trilok ) யுகாந்திரங்களின் கோபம் யுகாந்திரங்களின் இறுக்கம் யுகாந்திரங்களின் பொறுமை யுகாந்திரங்களின் தனிமை வந்துவிட்டது எல்லாவற்றின் மீதும் பெரும் புயல் ஒன்று இந்த காற்றை எதிர்த்து நடப்பவர்கள் யார்..? காலத்தின் புயலில் உதிரும் ஆயிரம் ஆயிரம் மலர்களில் ஒரு மலரல்லவா நீ..? அழிவின் தனிமையில் காத்திருக்க உனக்கு நேரமில்லை 3) நெருப்பு - ( World of Shiva ) வன்மத்தின் வனங்கள் பற்றி எரிகின்றன குருதியின

கிறுக்கல்களின் தொகுப்புகள்

வெள்ளிக்காப்பை சுழற்றினேன் சூடான காஃபியை அருந்தினேன் தலை முடியினை கோதி விட்டேன் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தேன் ஆழ்மனதும் அனாதையாக இருந்தது எண்ணங்களின் ஓட்டமும் சீராக இல்லை யூடியுப் பக்கம் சென்றேன் அன்றைய தினத்தின் Trending காணொளிகள் ட்விட்டர் பக்கம் சென்றேன் நடிகர்களின் ரசிகர்களுக்கிடையே தள்ளு முள்ளு இன்ஸ்டாகிராம் பக்கம் சென்றேன் Bae Calls Me Chocobar என்றாள் கிளியோபாட்ரா ஹைக் பக்கம் சென்றேன் நட்டாஸா உரையாடலுக்கு எதிர்வாதம் செய்தாள் சரி, இது தான் இன்றைய தலைவிதி என்று முகப்புத்தகம் வந்து இதை பதிவு செய்தேன்..? - A Poem Without a Topic ❤ ---------------------------------------------------------- வாழ்க்கை இப்படியே போயிடுமா சார் என்பதில் தொடங்கி வாழ்க்கை ஒரு வட்டம் என்பதில் பயணித்து இவ்வளோ தான் சார் வாழ்க்கை என்பதில் முடிகிறது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த நம்பகத்தன்மை நிறைந்த வாழ்க்கை..? -------------------------------------------------------- இந்த காஃபி ஷாப் சுவர்களின் இடையூறுகள் நம் நாவிதழ்கள் இடைபாடுகளிலும்..?..!! - வா ரயில் விட போலாம் வா  🖤 --

குடைக்குள் மழை

✨️💚 ரீனா : ஹே ஆர் யூ தேர்..? விக்ரம் : இருக்கேன் ரீனா, என்ன திடீர்னு மெசேஜ், முக்கியமா எதுவும் சொல்லணுமா..? ரீனா : ஹே, அதெல்லாம் இல்ல, ஏன் ஒர்க்ல இருக்கியா..? விக்ரம் : இல்ல, வீட்டுக்கு வந்துட்டேன், Earlier Appointments So, முடிஞ்சு பா! ரீனா : ஒகே, கொஞ்சம் மனசு சரி இல்ல அதான் உன்கிட்ட பேசலாமேன்னு கால் பண்ணேன்..? விக்ரம் : என்ன ஆச்சு..? ஆர் யூ ஓகே..? சொல்லு ரீனா Any Issue..? ரீனா : ஹே,Just Mood Swing ஒன்லி! நீ ஃபிரீன்னா சொல்லு Let's Walk Together in Beach! உனக்கு தெரியும்ல எனக்கு பீச் வாக்ன்னா ரொம்ப பிடிக்கும், So நீ ஃபிரீன்னா வர முடியுமா விக்ரம்..? விக்ரம் : சரி, ஈவினிங் 6 மணிக்கு பீச்ல நம்ம வழக்கமா மீட் பண்ணுற அந்த பட்டர் பன் கடைக்கு வந்துரு ரீனா, நானும் வந்துடுறேன், ரீனா : தேங்க்ஸ் விக்ரம்! விக்ரம் : தேங்க்ஸா..? No More Formalities! உன்னோட தேங்க்ஸ்ல நான் பூரிச்சு போய்ட்டேன்,சிரிப்பு காட்டாம வா ரீனா! ரீனா : ஹ்ம்ம் டா! * இடம் : கடற்கரை * நேரம் : மாலை 6 மணி விக்ரம் : ஹே! என்ன ஆச்சு ரீனா திடீர்னு..? ரீனா : அதெல்லாம் ஒன்னும் இல்லடா, Please Give Sometime நானே சொல்லுறேன் போ