Skip to main content

Posts

காதல் | ஊடல்

Yes, நான் உன்ன காதலிக்குறேன் காதல் மட்டுமா..?  ஹ்ம்ம், காதல் மட்டும்ன்னு சொல்லமுடியாது கொஞ்சம் ஊடலுடன்னு சேர்த்து சொல்லலாம், ஊடல் இல்லா காதல் இருக்கா என்ன..? காதல் செஞ்சா நம்ம உடம்புல ஊடுருவும் செல்கள் எல்லாமே நம்மல அறியாமையே ஒரு வித ஹீமோகுளோபின் சேன்ஜஸ நமக்கு பல நேரங்கள்ல கொடுக்கும், லாங் டிஸ்டன்ஸ் ரிலேஷன்ஷிப்ல சில நேரம் இருவருக்கும் உண்டான தேடல் அதிகமா இருக்கும், நீ ஒரு எல்லையின் விளிம்பிலும் நான் ஒரு முற்றத்தின் தொலைவிலும் எதிர் எதிர் திசையில் மாட்டிக்கொண்டோம், நானோ ஒவ்வொரு மணித்துளியும் என் காதல் வழியே உனக்கான சர்ப்ரைஸை கொடுக்க எண்ணினேன், உன் பாதங்கள் சென்ற திசை நோக்கி நான் வந்தேன் உனை தேடி உனை நாடி, உன் இடத்திற்கு வந்த பிறகு நானோ உனக்கு குறுஞ்செய்தி அனுப்பினேன், வா, உனக்கான ஒன்று இங்கே காத்துக்கொண்டிருக்கிறது, வானத்தை இதய வடிவில் மடித்து அதன் மீது செக்க சிவந்த சாயமூற்றி அதன் நீல நிறத்தில் கிஃப்ட் பாக் செய்து உன் கையில் கொடுக்க நான் ஆவலுடன் உனக்காக இங்கே வந்துள்ளேன், தேடலை நிறுத்திக்கொண்டு ஊடலின் வழி திளைப்போம் காற்றில் காதல் இதழ்களை வருடட்டு...

அம்மா

அறம் சொல்லித்தந்து அழகாக எனை படைத்து அன்பில் அரவணைத்து அன்னை - யாகிய அன்பின் தமிழே ஆக்கம் கொடுத்து ஆருயிர் பல தந்து ஆலமர விழுதாய் நின்று ஆலயமாக விளங்கும் கடவுளே இறைவியாய் இருந்து இடம் பொருள் ஏவல் அறிந்து இளங்காற்று என்னுள் வீச இமைக்கா நொடியாய் இருந்தவளே ஈசனின் பார்வதியாக ஈன்றவளாகிய ஸ்தானத்தில் ஈழம் பல உன் வாழ்வில் கண்டு ஈன்றெடுத்த பொற்கொடியாளே உணவும் மருந்தும் தந்து உதிரம் சிந்தி உயிர் கொடுத்து உலக மேடையில் உயர்வு செய்து உண்மையான அன்பை காட்டியவளே ஊக்கங்கள் பல தந்து ஊழல் இல்லா தூய்மையான ஊஞ்சலில் எனை சமநிலையில் சீராட்டி ஊதையை ரசிக்க செய்தவளே எழில் கொஞ்சும் இரவு நேரத்தில் எடை கனமுடைய எனை சுமந்து எக்களிக்க எனக்கு உணவளித்து எதிர்நீச்சல் பல வாழ்வில் அடித்தவளே ஏலேலோ ராகம் பாடி ஏகப்பட்ட இன்னல்களுடன் ஏற்றங்கள் பல இடருடன் கண்டு ஏழு நாட்களும் வாரத்தில் உழைப்பவளே ஐந்தெழுத்து மந்திரமாக ஐம்பூதங்களின் பரப்பில் ஐப்பசி மாத மேன்மை தந்து ஐம்புலன் அடக்கி அகிலம் வென்றவளே ஒற்றை காலில் நின்று ஒரு கை வசம் பார்த்து ஒழுக்கத்தை கற்பித்து ஒளிர்வாக என் வாழ்வில் வந்தவளே ஓசை எ...

இரவுகள் நமக்கானவை

வாசிப்பதற்காகவும் எழுதுவதற்காகவும் உருவாக்கப்பட்டது தான் இரவு, தனிமைக்காகவும் கனவுகளுக்காகவும் படைக்கப்பட்டவர்கள் தான் நாம், தனிமையை ரசித்து கனவுகளில் கரைந்து பிடித்த தலைப்பில் எழுதியோ பிடித்த தலைப்பில் வாசித்தோ இந்த இரவுகளை கொண்டாடலாம்..!! || இரவுகள் நமக்கானவை || : ) ❤️

இந்த பிரபஞ்சத்தின் பேரன்பே

இந்த பிரபஞ்சத்தின் பேரன்பே ஆயிரம் ஆயிரம் மழைத்துளிகள் உன்னை நனைத்தாலும் அந்த வானுக்கு எப்போதும் நீ சொந்தம் என்பது இல்லை, இந்த நிலத்தின் மீது தான் நான் உன்னை முதன் முதலில் கண்டு களித்தேன், கண்டு களித்த நாளிலிருந்து இன்று வரை நான் உன்னை பேணிக்காத்து கொண்டிருக்கையில் அந்த வானம் இன்று ஆயிரம் ஆயிரம் மழைத்துளிகளால் நனைத்து உனை தன் வசப்படுத்திக்கொள்ள பார்க்கிறது, நான் இந்த நிலம் போன்றவன் உன் பாதத்தில் இருந்து உச்சி வரை நான் உன்னை தினமும் தாங்குகிறேன், அவ்வளவு எளிதாக எனக்கு சொந்தமான ஆதிப்பேரன்பை இன்னொருவருக்கு வாரி வழங்க எனக்கு இன்னும் பெரிய மனசு வாய்க்கவில்லை, இந்த அரை வட்ட குடைக்குள் மழையாக நான் உனை அடைகாத்துக்கொண்டேன் மனதிலும் சரி இம்மண்ணிலும் சரி நீ எனக்கு சொந்தமான தூய ஒளி வா இந்த உலகத்திற்கு ஒளி வீசுவோம், - சொல்லப்படாத பேரன்பின் மொழி ❤️

தனிமை காதலன்

கடைசி வரைக்கும் உங்கள புரிஞ்சுக்காம போனவங்க வரவே இல்லேன்னா என்ன செய்விங்க..? ஹ்ம்ம்,நல்ல கேள்வி தான் பட் எல்லாரையும் மாதிரி நான் அவங்கள மட்டுமே நினைச்சுட்டு இருப்பேன் அப்படிலாம் சொல்லமாட்டேன் "நினைப்பேன்" அவ்வளோதான் இப்போ எப்படி சொல்றதுன்னா,அது என்னோட வாழ்க்கையில ஒரு பார்ட் தான், மூன்று அல்லது நான்கு வருஷம் கல்லூரி போறோம் படிக்குறோம் ஒரு நல்ல அனுபவத்தோட வெளிய வரோம் கரெக்ட்டா அது போலத்தான் அவங்களும், என்னோட வாழ்க்கைக்குள்ள ஒரு பார்ட் - டா வந்தாங்க, என்னோட வாழ்க்கைய நான் திரும்பி பார்த்தா அது ஒரு அழகான சாப்டரா இருக்கும் அதுல சந்தேகமே இல்ல Actually, என்னோட காதலும் அங்க இருக்குல, கடவுள் அழக ரசிக்க தான் கண்கள கொடுத்துருக்கான் நமக்கு, ஹ்ம்ம் அதே மாதிரிதான் நானும் அவங்களோட அழகுல மிதந்து தவழ்ந்து அவங்களுக்காக நிறைய எழுதி எழுதி எனக்குள்ளேயே வச்சுப்பேன்,அது என்னோட எழுத்து என்னோட ஆழ்மனசுல இருந்து வந்த வார்த்தைகள் அதுக்கு இப்போன்னு இல்ல இன்னும் ஆயிரம் ஜென்மங்கள் கடந்து யாராவது ஒருத்தங்ககிட்ட அது கிடைச்சு அவங்க அதை படிச்சாலும் அதோட உணர்வும் அது சொல்லுற வலியும் ஒன்னு தான், அதனால அவங்க என்ன...

இறைபாலன் அவன்

ஒரு ஊர்ல ஒரு மன்னன் இருந்தாராம் அந்த மன்னன் போருக்கு போறதுக்கு முன்னாடி தன் படைத்தளபதிகள கூப்பிட்டு போர்க்களத்தின் யுக்திகளை தெரிவிப்பார், அடுத்த நாள் போரின் போது எதிரி நாட்டு மன்னன் இந்த மன்னன் தலைக்கு பந்தயம் வைக்குறத விட முக்கியமா இந்த மன்னனோட படைத்தளபதிகள் மேல தான் தன்னோட முதல் குறிய வச்சு ஆட்டத்த ஆரம்பிப்பானாம்,  அப்படி படைத்தளபதிக்கு குறி வைக்கும்போது அந்த படைத்தளபதிகளுள் முதன்மை தளபதிக்கு தான் தன்னுடைய முதல் குறியை வைப்பான், ஏனென்றால் அவன் தான் தனக்கு கீழிருக்கும் படைத்தளபதிகளுக்கு முன்னோட்டமாய் அமைவான் அதற்காக, எதிரி நாட்டு மன்னன் போரில் முதன்மை படைத்தளபதியை வீழ்ச்சி செய்ய நிறைய யுக்திகளை கையாண்டு கொண்டே இருப்பான், ஆனால் அந்த முதன்மை படைத்தளபதி தன் சாதுர்யத்தால் எதிரி நாட்டு மன்னனின் படையை ஓட வைப்பான், அந்த மன்னனுக்கும் அடுத்து இந்த நாட்டினர் மீது படையெடுத்து போவதற்கே அச்சம் ஏற்படும் வகையில் ஒரு கில்லாடி வித்தையை அந்த மன்னனின் கண்ணுக்குள் விட்டு ஆட்டியிருப்பான், தன் மன்னனுக்கு ஒரு பிரச்சனை என்றால் முதன்மை படைத்தளபதியாய் சட்டென்று தன் கீழிருக்கும் படைகளை கூட்டிக்கொண்டு போருக...

முகமூடி

" முகமூடி " நண்பர்களிடம் பேச்சுக்களை குறைத்துவிட்டு அதற்கு பதிலாக எழுதுவதை அதிகப்படுத்திவிட்டேன், நிறைய வலிகளும் நாம் சொல்ல நினைக்கும் சொல்லாமல் தவிக்கும் விஷயங்கள் அனைத்தும் எழுத்துக்களாக மாறும் போது அது தரும் சுகம் என்பது ஈடு இணையில்லாத ஒன்றாகிறது, இது எனக்கு பிடித்திருக்கிறது முயற்சி செய்பவர்கள் செய்யலாம் மனிதர்களை விட இங்கே எழுத்துக்களுக்கு சக்தி அதிகம், என்னை நான் தனிமை படுத்திக்கொள்கிறேன் என்னை நினைத்து நானே சிரித்துக்கொள்கிறேன் என்னை நினைத்து நானே அழுது கொள்கிறேன் எனக்கு ஜோக்கர் வடிவமிட்டு எனக்கு நானே முகமூடி அணிந்து கொள்கிறேன், என்னை சுற்றி பல சாக்கடைகள் இருக்கிறது என் குடலை பிடுங்கி வெளியே எறியும் அளவிற்கு நாற்றம் வீசுகிறது ஆனால் இந்த பாதையில் தானே நான் சென்றாக வேண்டும் எனக்கான வழித்தடங்களை நோக்கி சாக்கடையை சில சமயம் கவனமாக தாண்டி போகிறேன் சில சமயம் கையை வைத்து மூக்கை பொத்திக்கொண்டு போகிறேன் ஒரு சில சமயம் அந்த நாற்றத்தை என்னால் முடிந்தால் சுத்தம் கூட செய்கிறேன், என்னை நானே பேணிகாத்துக்கொண்டால் தானே நான் உயிர் வாழ முடியும், மனிதனுக்கு மனிதன் உதவியையும் அன்பையும் மட்டு...