Skip to main content

அம்மா

அறம் சொல்லித்தந்து
அழகாக எனை படைத்து
அன்பில் அரவணைத்து
அன்னை - யாகிய அன்பின் தமிழே

ஆக்கம் கொடுத்து
ஆருயிர் பல தந்து
ஆலமர விழுதாய் நின்று
ஆலயமாக விளங்கும் கடவுளே

இறைவியாய் இருந்து
இடம் பொருள் ஏவல் அறிந்து
இளங்காற்று என்னுள் வீச
இமைக்கா நொடியாய் இருந்தவளே

ஈசனின் பார்வதியாக
ஈன்றவளாகிய ஸ்தானத்தில்
ஈழம் பல உன் வாழ்வில் கண்டு
ஈன்றெடுத்த பொற்கொடியாளே

உணவும் மருந்தும் தந்து
உதிரம் சிந்தி உயிர் கொடுத்து
உலக மேடையில் உயர்வு செய்து
உண்மையான அன்பை காட்டியவளே

ஊக்கங்கள் பல தந்து
ஊழல் இல்லா தூய்மையான
ஊஞ்சலில் எனை சமநிலையில் சீராட்டி
ஊதையை ரசிக்க செய்தவளே

எழில் கொஞ்சும் இரவு நேரத்தில்
எடை கனமுடைய எனை சுமந்து
எக்களிக்க எனக்கு உணவளித்து
எதிர்நீச்சல் பல வாழ்வில் அடித்தவளே

ஏலேலோ ராகம் பாடி
ஏகப்பட்ட இன்னல்களுடன்
ஏற்றங்கள் பல இடருடன் கண்டு
ஏழு நாட்களும் வாரத்தில் உழைப்பவளே

ஐந்தெழுத்து மந்திரமாக
ஐம்பூதங்களின் பரப்பில்
ஐப்பசி மாத மேன்மை தந்து
ஐம்புலன் அடக்கி அகிலம் வென்றவளே

ஒற்றை காலில் நின்று
ஒரு கை வசம் பார்த்து
ஒழுக்கத்தை கற்பித்து
ஒளிர்வாக என் வாழ்வில் வந்தவளே

ஓசை எழும்பும் ஒலியாக
ஓம் எனும் மூலமந்திரத்துடன்
ஓசைப்பூ மாலை கோர்த்து
ஒவ்வொரு நாளும் பூஜை செய்பவளே

ஒளடதம் பல நீ உண்டு
ஒளவியம் ஏதும் இன்றி
ஒளடனம் மட்டும் எனக்கு அளித்து
ஒளவை போன்ற தவப்பெண்ணானவளே

ஃ - ஆயுத எழுத்தாய் தனித்திருப்பவளே

*
தமிழே அமுதே
ஊனே உயிரே

இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்,

| எழுத்து : Shiva Chelliah | ❤️


Comments

Popular posts from this blog

The Journey of Solo - Title Poem

ஓம் நமச்சிவாய என்னும் மூலமந்திரத்தின் கருவாய் நீர்,காற்று,நெருப்பு,நிலம்  என்னும் நாற்பகுதிகளை இறைவன் சிவனை வைத்து மையப்படுத்தி இருக்கும் கதைக்களத்தின் ஒரு கவிதை நடை பயணம் இங்கு, " The Journey of Solo - Title Poem |  Bejoy Nambiar  " 1) நீர் - ( World of Shekhar )  அன்பே ஆயிரம் மழைத்துளிகள் என்னை நனைப்பது போல நீ என்னை நனைத்துக்கொள் நதியின் ஆழங்களில் நான் மூச்சு திணறுவது போல நீ என்னை தழுவிக்கொள் கடலின் பேரலைகள் கரையை தீண்டுவது போல நீ என்னை எடுத்துக்கொள் என்னை உன் கரங்களால் அணைத்துக்கொள்ளாதே உன் மனதால் இறுக அணைத்துக்கொள் அன்பின் தனிமையில் உனக்கு மரணம் இல்லை 2) காற்று - ( World of Trilok ) யுகாந்திரங்களின் கோபம் யுகாந்திரங்களின் இறுக்கம் யுகாந்திரங்களின் பொறுமை யுகாந்திரங்களின் தனிமை வந்துவிட்டது எல்லாவற்றின் மீதும் பெரும் புயல் ஒன்று இந்த காற்றை எதிர்த்து நடப்பவர்கள் யார்..? காலத்தின் புயலில் உதிரும் ஆயிரம் ஆயிரம் மலர்களில் ஒரு மலரல்லவா நீ..? அழிவின் தனிமையில் காத்திருக்க உனக்கு நேரமில்லை 3) நெருப்பு - ( World of Shiva ) வன்மத்தின் வனங்கள் பற்றி எரிகின்றன குருதியின

கிறுக்கல்களின் தொகுப்புகள்

வெள்ளிக்காப்பை சுழற்றினேன் சூடான காஃபியை அருந்தினேன் தலை முடியினை கோதி விட்டேன் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தேன் ஆழ்மனதும் அனாதையாக இருந்தது எண்ணங்களின் ஓட்டமும் சீராக இல்லை யூடியுப் பக்கம் சென்றேன் அன்றைய தினத்தின் Trending காணொளிகள் ட்விட்டர் பக்கம் சென்றேன் நடிகர்களின் ரசிகர்களுக்கிடையே தள்ளு முள்ளு இன்ஸ்டாகிராம் பக்கம் சென்றேன் Bae Calls Me Chocobar என்றாள் கிளியோபாட்ரா ஹைக் பக்கம் சென்றேன் நட்டாஸா உரையாடலுக்கு எதிர்வாதம் செய்தாள் சரி, இது தான் இன்றைய தலைவிதி என்று முகப்புத்தகம் வந்து இதை பதிவு செய்தேன்..? - A Poem Without a Topic ❤ ---------------------------------------------------------- வாழ்க்கை இப்படியே போயிடுமா சார் என்பதில் தொடங்கி வாழ்க்கை ஒரு வட்டம் என்பதில் பயணித்து இவ்வளோ தான் சார் வாழ்க்கை என்பதில் முடிகிறது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த நம்பகத்தன்மை நிறைந்த வாழ்க்கை..? -------------------------------------------------------- இந்த காஃபி ஷாப் சுவர்களின் இடையூறுகள் நம் நாவிதழ்கள் இடைபாடுகளிலும்..?..!! - வா ரயில் விட போலாம் வா  🖤 --

குடைக்குள் மழை

✨️💚 ரீனா : ஹே ஆர் யூ தேர்..? விக்ரம் : இருக்கேன் ரீனா, என்ன திடீர்னு மெசேஜ், முக்கியமா எதுவும் சொல்லணுமா..? ரீனா : ஹே, அதெல்லாம் இல்ல, ஏன் ஒர்க்ல இருக்கியா..? விக்ரம் : இல்ல, வீட்டுக்கு வந்துட்டேன், Earlier Appointments So, முடிஞ்சு பா! ரீனா : ஒகே, கொஞ்சம் மனசு சரி இல்ல அதான் உன்கிட்ட பேசலாமேன்னு கால் பண்ணேன்..? விக்ரம் : என்ன ஆச்சு..? ஆர் யூ ஓகே..? சொல்லு ரீனா Any Issue..? ரீனா : ஹே,Just Mood Swing ஒன்லி! நீ ஃபிரீன்னா சொல்லு Let's Walk Together in Beach! உனக்கு தெரியும்ல எனக்கு பீச் வாக்ன்னா ரொம்ப பிடிக்கும், So நீ ஃபிரீன்னா வர முடியுமா விக்ரம்..? விக்ரம் : சரி, ஈவினிங் 6 மணிக்கு பீச்ல நம்ம வழக்கமா மீட் பண்ணுற அந்த பட்டர் பன் கடைக்கு வந்துரு ரீனா, நானும் வந்துடுறேன், ரீனா : தேங்க்ஸ் விக்ரம்! விக்ரம் : தேங்க்ஸா..? No More Formalities! உன்னோட தேங்க்ஸ்ல நான் பூரிச்சு போய்ட்டேன்,சிரிப்பு காட்டாம வா ரீனா! ரீனா : ஹ்ம்ம் டா! * இடம் : கடற்கரை * நேரம் : மாலை 6 மணி விக்ரம் : ஹே! என்ன ஆச்சு ரீனா திடீர்னு..? ரீனா : அதெல்லாம் ஒன்னும் இல்லடா, Please Give Sometime நானே சொல்லுறேன் போ