இந்த பிரபஞ்சத்தின் பேரன்பே
ஆயிரம் ஆயிரம் மழைத்துளிகள்
உன்னை நனைத்தாலும் அந்த வானுக்கு
எப்போதும் நீ சொந்தம் என்பது இல்லை,
இந்த நிலத்தின் மீது தான் நான்
உன்னை முதன் முதலில் கண்டு களித்தேன்,
கண்டு களித்த நாளிலிருந்து
இன்று வரை நான் உன்னை
பேணிக்காத்து கொண்டிருக்கையில்
அந்த வானம் இன்று ஆயிரம் ஆயிரம்
மழைத்துளிகளால் நனைத்து உனை
தன் வசப்படுத்திக்கொள்ள பார்க்கிறது,
நான் இந்த நிலம் போன்றவன்
உன் பாதத்தில் இருந்து உச்சி வரை
நான் உன்னை தினமும் தாங்குகிறேன்,
அவ்வளவு எளிதாக எனக்கு
சொந்தமான ஆதிப்பேரன்பை
இன்னொருவருக்கு வாரி வழங்க
எனக்கு இன்னும் பெரிய மனசு வாய்க்கவில்லை,
இந்த அரை வட்ட குடைக்குள் மழையாக
நான் உனை அடைகாத்துக்கொண்டேன்
மனதிலும் சரி இம்மண்ணிலும் சரி
நீ எனக்கு சொந்தமான தூய ஒளி
வா இந்த உலகத்திற்கு ஒளி வீசுவோம்,
- சொல்லப்படாத பேரன்பின் மொழி ❤️
Comments
Post a Comment