Skip to main content

இறைபாலன் அவன்

ஒரு ஊர்ல ஒரு மன்னன் இருந்தாராம்
அந்த மன்னன் போருக்கு போறதுக்கு
முன்னாடி தன் படைத்தளபதிகள
கூப்பிட்டு போர்க்களத்தின் யுக்திகளை
தெரிவிப்பார், அடுத்த நாள் போரின்
போது எதிரி நாட்டு மன்னன் இந்த
மன்னன் தலைக்கு பந்தயம் வைக்குறத
விட முக்கியமா இந்த மன்னனோட
படைத்தளபதிகள் மேல தான்
தன்னோட முதல் குறிய வச்சு
ஆட்டத்த ஆரம்பிப்பானாம், 

அப்படி படைத்தளபதிக்கு
குறி வைக்கும்போது அந்த
படைத்தளபதிகளுள் முதன்மை
தளபதிக்கு தான் தன்னுடைய முதல்
குறியை வைப்பான், ஏனென்றால்
அவன் தான் தனக்கு கீழிருக்கும்
படைத்தளபதிகளுக்கு முன்னோட்டமாய்
அமைவான் அதற்காக,

எதிரி நாட்டு மன்னன் போரில்
முதன்மை படைத்தளபதியை வீழ்ச்சி
செய்ய நிறைய யுக்திகளை கையாண்டு
கொண்டே இருப்பான், ஆனால் அந்த
முதன்மை படைத்தளபதி தன்
சாதுர்யத்தால் எதிரி நாட்டு
மன்னனின் படையை ஓட வைப்பான்,
அந்த மன்னனுக்கும் அடுத்து இந்த
நாட்டினர் மீது படையெடுத்து போவதற்கே
அச்சம் ஏற்படும் வகையில் ஒரு
கில்லாடி வித்தையை அந்த மன்னனின்
கண்ணுக்குள் விட்டு ஆட்டியிருப்பான்,

தன் மன்னனுக்கு ஒரு பிரச்சனை
என்றால் முதன்மை படைத்தளபதியாய்
சட்டென்று தன் கீழிருக்கும் படைகளை
கூட்டிக்கொண்டு போருக்கு செல்வான்,

ஒரு நிலையில் தலைவனே வீழ்ந்தாலும்
ஒரு முதன்மை படைத்தளபதியாய்
தனி ஒருவனாய் நின்று தன் மன்னனுக்கு
வெற்றி தேடி தருவான் தன் ரத்தம் சிந்தி,

அப்படி ரத்தம் சிந்தி போரில் வெற்றி
பெற்று வரும்போது அவன் அந்த நாட்டு
மக்களுக்கு ஒரு கடவுள் போல் காட்சி
தருவான்,

வரத்தை கொடுப்பவன்
மட்டும் கடவுள் அல்ல, தன் நாட்டு
மக்களின் வரத்தை தெரிந்துகொண்டு
தன் மன்னனுக்கு துணையாக நின்று
மக்களின் வரத்தை தன் செயல் மூலம்
கொண்டு சேர்க்கும் முதன்மை
படைத்தளபதியான இவனும் கடவுள்
தான்,

நாட்டிற்கு மன்னன் மாறினாலும்
எந்த மன்னன் வந்தாலும் அந்த
மன்னனின் ஆணைக்கிணங்க
தன் முதன்மை படைத்தளபதி எனும்
வேலையை சரி வர செய்யும்
நாட்டு மக்களின் செல்ல பிள்ளை இவன்,

வயது காரணமாக பணியை விட்டு
விலகினாலும் இன்றும் மக்கள்
மத்தியில் இவன் ஒரு இறை பாலனே..!!

#HappyBirthdaySachinTendulkar

எழுத்து : Shiva Chelliah ❤️

Comments

Popular posts from this blog

The One - அந்த ஒருவன் 💚

💚 நிராகரிக்கப்பட்ட ஒருவன் புறக்கணிக்கப்பட்ட ஒருவன் ஒதுக்கி வைக்கப்பட்ட ஒருவன் அவமானப்படுத்தப்பட்ட ஒருவன், "வர சொல்லு அந்த ஒருத்தன..?" பல போர் படை இருக்கலாம் எதிர்பார்த்தது இவனத்தான் அந்தொருவன் வந்திருக்கான்டே..!!! "Temba" என்றால் "Hope" என்று பொருள், ஒட்டு மொத்த ஆஃப்ரிக்க மக்களின் நம்பிக்கை ஒளியாகவும் அவர்களின் ஏக்கத்திற்கு விடையாகவும் இந்த "டெம்பா" ஒரு வாழ்வியலை இங்கே புதுப்பித்து இருக்கிறான், எத்தனை அவமானங்கள் தான் 'இந்த ஒருவனுக்கு' நிகழ்ந்திருக்கிறது, உயரம் ரீதியாகவும்,நிற ரீதியாகவும் என இவன் கண்ட அவமானங்கள் அனைத்தையும் தாண்டி இன்று ஒரு இன மக்களையே இன்று இவன் தலை நிமிர செய்திருக்கிறான், எங்க கேங்க்ல ஒரு ரெண்டு பேர் மொரட்டு தனமான தென்னாப்பிரிக்கா ஃபேன்,நானும் என்னோட இன்னொரு முகநூல் நண்பரும் (Anjali Raga Jammy), எப்படி "கொம்பன்" யானைய பார்த்து காடே ஆடி போகுமோ அது மாதிரி நாங்க ரெண்டு பேரும் எங்க தலைவன் டெம்பா பாவுமா - வ "டெம்பன்" ன்னு செல்லமா தான் கூப்பிடுவோம், இந்த டெம்பனின் கைகள் ஒரு ந...

நிகரில்லாதவள்

அன்று ஊரெங்கும் நல்ல மழை வெளுத்து வாங்கிகொண்டிருந்தது, பெரு மழைக்கு ஒதுங்குவதற்காக அவள் அங்கே சாலையோரம் இருந்த மரத்தின் அடியில் சென்று நின்று கொண்டாள், அவளுக்கு அருகே பள்ளி முடிந்து வீடு திரும்பும் குழந்தைகள் சூழ அவள் ஒரு பள்ளிக்கூடத்து ஆசிரியை போல் அக்குழந்தைகளுக்கு நடுவில் நின்று அவர்கள் மழையில் செய்யும் சேட்டையை பார்த்து ரசித்துக்கொண்டிருந்தாள், இந்த மழை நிற்பதற்குள் இவள் யார்,இவள் பெயர் என்ன, இவள் சார்ந்து இருப்பவைகள் என சின்ன கதையுடன் ஒரு முன்னோட்டம் பார்ப்போம், இவளுக்கான அறிமுகம் இல்லாததால் இவளுக்கு இவளாகவே சூடிக்கொண்ட பெயர் இது, ஆம் இவளுக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து ஆசிரமத்தில் தான் வளர்ந்து வருகிறாள்,அங்கிருப்பவர்கள் "குட்டி" என்று கூப்பிடுவார்கள் அதுவே இவளது பெயராகவும் மாறியது, பின் பள்ளி முடிந்து யாரோ பெயர் தெரியாத ஸ்பான்ஸர்ஷிப் மூலம் கல்லூரி படிப்பை முடித்து நல்ல ஒரு இடத்தில் வேலைக்கு சேர்ந்த பின் தான் இவளுக்கு ஒன்று புரிந்தது, நம்மை அடையாளப்படுத்திக்கொள்ள சரியான பெயர் கூட நமக்கு இல்லை என்று, எதிர்நீச்சல் படத்தில் வருவது போல் தன் அடையாளத்தை இச்சமூகத்தில் பதிக்...

குடைக்குள் மழை

✨️💚 ரீனா : ஹே ஆர் யூ தேர்..? விக்ரம் : இருக்கேன் ரீனா, என்ன திடீர்னு மெசேஜ், முக்கியமா எதுவும் சொல்லணுமா..? ரீனா : ஹே, அதெல்லாம் இல்ல, ஏன் ஒர்க்ல இருக்கியா..? விக்ரம் : இல்ல, வீட்டுக்கு வந்துட்டேன், Earlier Appointments So, முடிஞ்சு பா! ரீனா : ஒகே, கொஞ்சம் மனசு சரி இல்ல அதான் உன்கிட்ட பேசலாமேன்னு கால் பண்ணேன்..? விக்ரம் : என்ன ஆச்சு..? ஆர் யூ ஓகே..? சொல்லு ரீனா Any Issue..? ரீனா : ஹே,Just Mood Swing ஒன்லி! நீ ஃபிரீன்னா சொல்லு Let's Walk Together in Beach! உனக்கு தெரியும்ல எனக்கு பீச் வாக்ன்னா ரொம்ப பிடிக்கும், So நீ ஃபிரீன்னா வர முடியுமா விக்ரம்..? விக்ரம் : சரி, ஈவினிங் 6 மணிக்கு பீச்ல நம்ம வழக்கமா மீட் பண்ணுற அந்த பட்டர் பன் கடைக்கு வந்துரு ரீனா, நானும் வந்துடுறேன், ரீனா : தேங்க்ஸ் விக்ரம்! விக்ரம் : தேங்க்ஸா..? No More Formalities! உன்னோட தேங்க்ஸ்ல நான் பூரிச்சு போய்ட்டேன்,சிரிப்பு காட்டாம வா ரீனா! ரீனா : ஹ்ம்ம் டா! * இடம் : கடற்கரை * நேரம் : மாலை 6 மணி விக்ரம் : ஹே! என்ன ஆச்சு ரீனா திடீர்னு..? ரீனா : அதெல்லாம் ஒன்னும் இல்லடா, Please Give Sometime நானே சொல்லுறேன் போ...