Skip to main content

இறைபாலன் அவன்

ஒரு ஊர்ல ஒரு மன்னன் இருந்தாராம்
அந்த மன்னன் போருக்கு போறதுக்கு
முன்னாடி தன் படைத்தளபதிகள
கூப்பிட்டு போர்க்களத்தின் யுக்திகளை
தெரிவிப்பார், அடுத்த நாள் போரின்
போது எதிரி நாட்டு மன்னன் இந்த
மன்னன் தலைக்கு பந்தயம் வைக்குறத
விட முக்கியமா இந்த மன்னனோட
படைத்தளபதிகள் மேல தான்
தன்னோட முதல் குறிய வச்சு
ஆட்டத்த ஆரம்பிப்பானாம், 

அப்படி படைத்தளபதிக்கு
குறி வைக்கும்போது அந்த
படைத்தளபதிகளுள் முதன்மை
தளபதிக்கு தான் தன்னுடைய முதல்
குறியை வைப்பான், ஏனென்றால்
அவன் தான் தனக்கு கீழிருக்கும்
படைத்தளபதிகளுக்கு முன்னோட்டமாய்
அமைவான் அதற்காக,

எதிரி நாட்டு மன்னன் போரில்
முதன்மை படைத்தளபதியை வீழ்ச்சி
செய்ய நிறைய யுக்திகளை கையாண்டு
கொண்டே இருப்பான், ஆனால் அந்த
முதன்மை படைத்தளபதி தன்
சாதுர்யத்தால் எதிரி நாட்டு
மன்னனின் படையை ஓட வைப்பான்,
அந்த மன்னனுக்கும் அடுத்து இந்த
நாட்டினர் மீது படையெடுத்து போவதற்கே
அச்சம் ஏற்படும் வகையில் ஒரு
கில்லாடி வித்தையை அந்த மன்னனின்
கண்ணுக்குள் விட்டு ஆட்டியிருப்பான்,

தன் மன்னனுக்கு ஒரு பிரச்சனை
என்றால் முதன்மை படைத்தளபதியாய்
சட்டென்று தன் கீழிருக்கும் படைகளை
கூட்டிக்கொண்டு போருக்கு செல்வான்,

ஒரு நிலையில் தலைவனே வீழ்ந்தாலும்
ஒரு முதன்மை படைத்தளபதியாய்
தனி ஒருவனாய் நின்று தன் மன்னனுக்கு
வெற்றி தேடி தருவான் தன் ரத்தம் சிந்தி,

அப்படி ரத்தம் சிந்தி போரில் வெற்றி
பெற்று வரும்போது அவன் அந்த நாட்டு
மக்களுக்கு ஒரு கடவுள் போல் காட்சி
தருவான்,

வரத்தை கொடுப்பவன்
மட்டும் கடவுள் அல்ல, தன் நாட்டு
மக்களின் வரத்தை தெரிந்துகொண்டு
தன் மன்னனுக்கு துணையாக நின்று
மக்களின் வரத்தை தன் செயல் மூலம்
கொண்டு சேர்க்கும் முதன்மை
படைத்தளபதியான இவனும் கடவுள்
தான்,

நாட்டிற்கு மன்னன் மாறினாலும்
எந்த மன்னன் வந்தாலும் அந்த
மன்னனின் ஆணைக்கிணங்க
தன் முதன்மை படைத்தளபதி எனும்
வேலையை சரி வர செய்யும்
நாட்டு மக்களின் செல்ல பிள்ளை இவன்,

வயது காரணமாக பணியை விட்டு
விலகினாலும் இன்றும் மக்கள்
மத்தியில் இவன் ஒரு இறை பாலனே..!!

#HappyBirthdaySachinTendulkar

எழுத்து : Shiva Chelliah ❤️

Comments

Popular posts from this blog

The Journey of Solo - Title Poem

ஓம் நமச்சிவாய என்னும் மூலமந்திரத்தின் கருவாய் நீர்,காற்று,நெருப்பு,நிலம்  என்னும் நாற்பகுதிகளை இறைவன் சிவனை வைத்து மையப்படுத்தி இருக்கும் கதைக்களத்தின் ஒரு கவிதை நடை பயணம் இங்கு, " The Journey of Solo - Title Poem |  Bejoy Nambiar  " 1) நீர் - ( World of Shekhar )  அன்பே ஆயிரம் மழைத்துளிகள் என்னை நனைப்பது போல நீ என்னை நனைத்துக்கொள் நதியின் ஆழங்களில் நான் மூச்சு திணறுவது போல நீ என்னை தழுவிக்கொள் கடலின் பேரலைகள் கரையை தீண்டுவது போல நீ என்னை எடுத்துக்கொள் என்னை உன் கரங்களால் அணைத்துக்கொள்ளாதே உன் மனதால் இறுக அணைத்துக்கொள் அன்பின் தனிமையில் உனக்கு மரணம் இல்லை 2) காற்று - ( World of Trilok ) யுகாந்திரங்களின் கோபம் யுகாந்திரங்களின் இறுக்கம் யுகாந்திரங்களின் பொறுமை யுகாந்திரங்களின் தனிமை வந்துவிட்டது எல்லாவற்றின் மீதும் பெரும் புயல் ஒன்று இந்த காற்றை எதிர்த்து நடப்பவர்கள் யார்..? காலத்தின் புயலில் உதிரும் ஆயிரம் ஆயிரம் மலர்களில் ஒரு மலரல்லவா நீ..? அழிவின் தனிமையில் காத்திருக்க உனக்கு நேரமில்லை 3) நெருப்பு - ( World of Shiva ) வன்மத்தின் வனங்கள் பற்றி எரிகின்றன குருதியின

கிறுக்கல்களின் தொகுப்புகள்

வெள்ளிக்காப்பை சுழற்றினேன் சூடான காஃபியை அருந்தினேன் தலை முடியினை கோதி விட்டேன் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தேன் ஆழ்மனதும் அனாதையாக இருந்தது எண்ணங்களின் ஓட்டமும் சீராக இல்லை யூடியுப் பக்கம் சென்றேன் அன்றைய தினத்தின் Trending காணொளிகள் ட்விட்டர் பக்கம் சென்றேன் நடிகர்களின் ரசிகர்களுக்கிடையே தள்ளு முள்ளு இன்ஸ்டாகிராம் பக்கம் சென்றேன் Bae Calls Me Chocobar என்றாள் கிளியோபாட்ரா ஹைக் பக்கம் சென்றேன் நட்டாஸா உரையாடலுக்கு எதிர்வாதம் செய்தாள் சரி, இது தான் இன்றைய தலைவிதி என்று முகப்புத்தகம் வந்து இதை பதிவு செய்தேன்..? - A Poem Without a Topic ❤ ---------------------------------------------------------- வாழ்க்கை இப்படியே போயிடுமா சார் என்பதில் தொடங்கி வாழ்க்கை ஒரு வட்டம் என்பதில் பயணித்து இவ்வளோ தான் சார் வாழ்க்கை என்பதில் முடிகிறது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த நம்பகத்தன்மை நிறைந்த வாழ்க்கை..? -------------------------------------------------------- இந்த காஃபி ஷாப் சுவர்களின் இடையூறுகள் நம் நாவிதழ்கள் இடைபாடுகளிலும்..?..!! - வா ரயில் விட போலாம் வா  🖤 --

குடைக்குள் மழை

✨️💚 ரீனா : ஹே ஆர் யூ தேர்..? விக்ரம் : இருக்கேன் ரீனா, என்ன திடீர்னு மெசேஜ், முக்கியமா எதுவும் சொல்லணுமா..? ரீனா : ஹே, அதெல்லாம் இல்ல, ஏன் ஒர்க்ல இருக்கியா..? விக்ரம் : இல்ல, வீட்டுக்கு வந்துட்டேன், Earlier Appointments So, முடிஞ்சு பா! ரீனா : ஒகே, கொஞ்சம் மனசு சரி இல்ல அதான் உன்கிட்ட பேசலாமேன்னு கால் பண்ணேன்..? விக்ரம் : என்ன ஆச்சு..? ஆர் யூ ஓகே..? சொல்லு ரீனா Any Issue..? ரீனா : ஹே,Just Mood Swing ஒன்லி! நீ ஃபிரீன்னா சொல்லு Let's Walk Together in Beach! உனக்கு தெரியும்ல எனக்கு பீச் வாக்ன்னா ரொம்ப பிடிக்கும், So நீ ஃபிரீன்னா வர முடியுமா விக்ரம்..? விக்ரம் : சரி, ஈவினிங் 6 மணிக்கு பீச்ல நம்ம வழக்கமா மீட் பண்ணுற அந்த பட்டர் பன் கடைக்கு வந்துரு ரீனா, நானும் வந்துடுறேன், ரீனா : தேங்க்ஸ் விக்ரம்! விக்ரம் : தேங்க்ஸா..? No More Formalities! உன்னோட தேங்க்ஸ்ல நான் பூரிச்சு போய்ட்டேன்,சிரிப்பு காட்டாம வா ரீனா! ரீனா : ஹ்ம்ம் டா! * இடம் : கடற்கரை * நேரம் : மாலை 6 மணி விக்ரம் : ஹே! என்ன ஆச்சு ரீனா திடீர்னு..? ரீனா : அதெல்லாம் ஒன்னும் இல்லடா, Please Give Sometime நானே சொல்லுறேன் போ