" முகமூடி "
நண்பர்களிடம் பேச்சுக்களை
குறைத்துவிட்டு அதற்கு பதிலாக
எழுதுவதை அதிகப்படுத்திவிட்டேன்,
நிறைய வலிகளும்
நாம் சொல்ல நினைக்கும்
சொல்லாமல் தவிக்கும்
விஷயங்கள் அனைத்தும்
எழுத்துக்களாக மாறும் போது
அது தரும் சுகம் என்பது
ஈடு இணையில்லாத ஒன்றாகிறது,
இது எனக்கு பிடித்திருக்கிறது
முயற்சி செய்பவர்கள் செய்யலாம்
மனிதர்களை விட இங்கே
எழுத்துக்களுக்கு சக்தி அதிகம்,
என்னை நான் தனிமை
படுத்திக்கொள்கிறேன்
என்னை நினைத்து
நானே சிரித்துக்கொள்கிறேன்
என்னை நினைத்து
நானே அழுது கொள்கிறேன்
எனக்கு ஜோக்கர் வடிவமிட்டு
எனக்கு நானே முகமூடி
அணிந்து கொள்கிறேன்,
என்னை சுற்றி பல
சாக்கடைகள் இருக்கிறது
என் குடலை பிடுங்கி வெளியே
எறியும் அளவிற்கு நாற்றம் வீசுகிறது
ஆனால் இந்த பாதையில் தானே
நான் சென்றாக வேண்டும்
எனக்கான வழித்தடங்களை நோக்கி
சாக்கடையை சில சமயம்
கவனமாக தாண்டி போகிறேன்
சில சமயம் கையை வைத்து
மூக்கை பொத்திக்கொண்டு போகிறேன்
ஒரு சில சமயம் அந்த நாற்றத்தை
என்னால் முடிந்தால் சுத்தம் கூட
செய்கிறேன்,
என்னை நானே
பேணிகாத்துக்கொண்டால்
தானே நான் உயிர் வாழ முடியும்,
மனிதனுக்கு மனிதன்
உதவியையும் அன்பையும் மட்டும்
முடிந்தால் பரிமாறிக்கொள்வோம்
பிறருக்கு துயரம் ஏதும் இன்றி,
வலிகளை கடக்க
நிறைய வழிகள் உண்டு
அந்த வழியை தேடி
ஒரு தேடல் செல்வோம்
நம்முடைய தேடலுக்கு
அந்த வானமே எல்லை
நீங்கள் வாருங்கள் என்னுடன் தேட
கிடைத்தால் புதையல்
கிடைக்காவிட்டால் புன்னகை
அடுத்த தேடலை தொடர்வோம்..!!
புகைப்படம் உதவி : Karthi PS அண்ணே
Comments
Post a Comment