Skip to main content

முகமூடி

" முகமூடி "

நண்பர்களிடம் பேச்சுக்களை
குறைத்துவிட்டு அதற்கு பதிலாக
எழுதுவதை அதிகப்படுத்திவிட்டேன்,

நிறைய வலிகளும்
நாம் சொல்ல நினைக்கும்
சொல்லாமல் தவிக்கும்
விஷயங்கள் அனைத்தும்
எழுத்துக்களாக மாறும் போது
அது தரும் சுகம் என்பது
ஈடு இணையில்லாத ஒன்றாகிறது,

இது எனக்கு பிடித்திருக்கிறது
முயற்சி செய்பவர்கள் செய்யலாம்
மனிதர்களை விட இங்கே
எழுத்துக்களுக்கு சக்தி அதிகம்,

என்னை நான் தனிமை
படுத்திக்கொள்கிறேன்
என்னை நினைத்து
நானே சிரித்துக்கொள்கிறேன்
என்னை நினைத்து
நானே அழுது கொள்கிறேன்
எனக்கு ஜோக்கர் வடிவமிட்டு
எனக்கு நானே முகமூடி
அணிந்து கொள்கிறேன்,

என்னை சுற்றி பல
சாக்கடைகள் இருக்கிறது
என் குடலை பிடுங்கி வெளியே
எறியும் அளவிற்கு நாற்றம் வீசுகிறது
ஆனால் இந்த பாதையில் தானே
நான் சென்றாக வேண்டும்
எனக்கான வழித்தடங்களை நோக்கி
சாக்கடையை சில சமயம்
கவனமாக தாண்டி போகிறேன்
சில சமயம் கையை வைத்து
மூக்கை பொத்திக்கொண்டு போகிறேன்
ஒரு சில சமயம் அந்த நாற்றத்தை
என்னால் முடிந்தால் சுத்தம் கூட
செய்கிறேன்,

என்னை நானே
பேணிகாத்துக்கொண்டால்
தானே நான் உயிர் வாழ முடியும்,

மனிதனுக்கு மனிதன்
உதவியையும் அன்பையும் மட்டும்
முடிந்தால் பரிமாறிக்கொள்வோம்
பிறருக்கு துயரம் ஏதும் இன்றி,

வலிகளை கடக்க
நிறைய வழிகள் உண்டு
அந்த வழியை தேடி
ஒரு தேடல் செல்வோம்
நம்முடைய தேடலுக்கு
அந்த வானமே எல்லை
நீங்கள் வாருங்கள் என்னுடன் தேட
கிடைத்தால் புதையல்
கிடைக்காவிட்டால் புன்னகை
அடுத்த தேடலை தொடர்வோம்..!!

புகைப்படம் உதவி : Karthi PS அண்ணே

எழுத்தும் சிந்தனையும் : Shiva Chelliah ❤️

Comments

Popular posts from this blog

குடைக்குள் மழை

✨️💚 ரீனா : ஹே ஆர் யூ தேர்..? விக்ரம் : இருக்கேன் ரீனா, என்ன திடீர்னு மெசேஜ், முக்கியமா எதுவும் சொல்லணுமா..? ரீனா : ஹே, அதெல்லாம் இல்ல, ஏன் ஒர்க்ல இருக்கியா..? விக்ரம் : இல்ல, வீட்டுக்கு வந்துட்டேன், Earlier Appointments So, முடிஞ்சு பா! ரீனா : ஒகே, கொஞ்சம் மனசு சரி இல்ல அதான் உன்கிட்ட பேசலாமேன்னு கால் பண்ணேன்..? விக்ரம் : என்ன ஆச்சு..? ஆர் யூ ஓகே..? சொல்லு ரீனா Any Issue..? ரீனா : ஹே,Just Mood Swing ஒன்லி! நீ ஃபிரீன்னா சொல்லு Let's Walk Together in Beach! உனக்கு தெரியும்ல எனக்கு பீச் வாக்ன்னா ரொம்ப பிடிக்கும், So நீ ஃபிரீன்னா வர முடியுமா விக்ரம்..? விக்ரம் : சரி, ஈவினிங் 6 மணிக்கு பீச்ல நம்ம வழக்கமா மீட் பண்ணுற அந்த பட்டர் பன் கடைக்கு வந்துரு ரீனா, நானும் வந்துடுறேன், ரீனா : தேங்க்ஸ் விக்ரம்! விக்ரம் : தேங்க்ஸா..? No More Formalities! உன்னோட தேங்க்ஸ்ல நான் பூரிச்சு போய்ட்டேன்,சிரிப்பு காட்டாம வா ரீனா! ரீனா : ஹ்ம்ம் டா! * இடம் : கடற்கரை * நேரம் : மாலை 6 மணி விக்ரம் : ஹே! என்ன ஆச்சு ரீனா திடீர்னு..? ரீனா : அதெல்லாம் ஒன்னும் இல்லடா, Please Give Sometime நானே சொல்லுறேன் போ...

The One - அந்த ஒருவன் 💚

💚 நிராகரிக்கப்பட்ட ஒருவன் புறக்கணிக்கப்பட்ட ஒருவன் ஒதுக்கி வைக்கப்பட்ட ஒருவன் அவமானப்படுத்தப்பட்ட ஒருவன், "வர சொல்லு அந்த ஒருத்தன..?" பல போர் படை இருக்கலாம் எதிர்பார்த்தது இவனத்தான் அந்தொருவன் வந்திருக்கான்டே..!!! "Temba" என்றால் "Hope" என்று பொருள், ஒட்டு மொத்த ஆஃப்ரிக்க மக்களின் நம்பிக்கை ஒளியாகவும் அவர்களின் ஏக்கத்திற்கு விடையாகவும் இந்த "டெம்பா" ஒரு வாழ்வியலை இங்கே புதுப்பித்து இருக்கிறான், எத்தனை அவமானங்கள் தான் 'இந்த ஒருவனுக்கு' நிகழ்ந்திருக்கிறது, உயரம் ரீதியாகவும்,நிற ரீதியாகவும் என இவன் கண்ட அவமானங்கள் அனைத்தையும் தாண்டி இன்று ஒரு இன மக்களையே இன்று இவன் தலை நிமிர செய்திருக்கிறான், எங்க கேங்க்ல ஒரு ரெண்டு பேர் மொரட்டு தனமான தென்னாப்பிரிக்கா ஃபேன்,நானும் என்னோட இன்னொரு முகநூல் நண்பரும் (Anjali Raga Jammy), எப்படி "கொம்பன்" யானைய பார்த்து காடே ஆடி போகுமோ அது மாதிரி நாங்க ரெண்டு பேரும் எங்க தலைவன் டெம்பா பாவுமா - வ "டெம்பன்" ன்னு செல்லமா தான் கூப்பிடுவோம், இந்த டெம்பனின் கைகள் ஒரு ந...

நிகரில்லாதவள்

அன்று ஊரெங்கும் நல்ல மழை வெளுத்து வாங்கிகொண்டிருந்தது, பெரு மழைக்கு ஒதுங்குவதற்காக அவள் அங்கே சாலையோரம் இருந்த மரத்தின் அடியில் சென்று நின்று கொண்டாள், அவளுக்கு அருகே பள்ளி முடிந்து வீடு திரும்பும் குழந்தைகள் சூழ அவள் ஒரு பள்ளிக்கூடத்து ஆசிரியை போல் அக்குழந்தைகளுக்கு நடுவில் நின்று அவர்கள் மழையில் செய்யும் சேட்டையை பார்த்து ரசித்துக்கொண்டிருந்தாள், இந்த மழை நிற்பதற்குள் இவள் யார்,இவள் பெயர் என்ன, இவள் சார்ந்து இருப்பவைகள் என சின்ன கதையுடன் ஒரு முன்னோட்டம் பார்ப்போம், இவளுக்கான அறிமுகம் இல்லாததால் இவளுக்கு இவளாகவே சூடிக்கொண்ட பெயர் இது, ஆம் இவளுக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து ஆசிரமத்தில் தான் வளர்ந்து வருகிறாள்,அங்கிருப்பவர்கள் "குட்டி" என்று கூப்பிடுவார்கள் அதுவே இவளது பெயராகவும் மாறியது, பின் பள்ளி முடிந்து யாரோ பெயர் தெரியாத ஸ்பான்ஸர்ஷிப் மூலம் கல்லூரி படிப்பை முடித்து நல்ல ஒரு இடத்தில் வேலைக்கு சேர்ந்த பின் தான் இவளுக்கு ஒன்று புரிந்தது, நம்மை அடையாளப்படுத்திக்கொள்ள சரியான பெயர் கூட நமக்கு இல்லை என்று, எதிர்நீச்சல் படத்தில் வருவது போல் தன் அடையாளத்தை இச்சமூகத்தில் பதிக்...