*💚
" குடை ராட்டினக்காரன் "
பண்டிகை காலமோ
கோவில் திருவிழாவோ
நிகழ்ந்தால் மட்டுமே
இவர் வேலை முடிந்து செல்லும் போது
தன் பிள்ளைகளுக்கு அரிசி முறுக்கோ
இல்லை தேன் மிட்டாய்களோ
வாங்கி செல்ல முடியும்,
அதுவும் நகரத்தில்
இவரது பொழப்பு என்பது
மிகவும் ஏக்கமான மனநிலை தான்,
90 - களில் குடை ராட்டினத்துக்கு
இருந்த மவுசு இப்போது
அவர் அவர் தங்கள் பிள்ளைகளை
மொபைல் விளையாட்டிற்குள்
புகுத்தி விட்டதால் இந்த குடை
ராட்டினக்காரன் நகரப்புறத்தையே
தன் தொழிலுக்காக இழந்து நிற்கிறான்,
கால்களில் செருப்பின்றி
கதிரவனின் தாக்கத்திலும்
நிலவின் தன்மையிலும்
எத்தனை நாள் தன் பிழைப்புக்கான
வண்டியுடன் இவன் எத்தனை
கிராமங்கள் சென்று இருப்பான்
எத்தனை விதமான மனிதர்களை
சந்தித்து இருப்பான் தன் அனுபவத்தில்,
கிராமங்களில் கோவில் திருவிழாக்கள்,
பொங்கல் போன்ற பண்டிகை காலத்தில்
மட்டுமே இவன் குழந்தைக்கும்
துணைவிக்கும் ஒரு இரண்டு வேளை
சோறுடன் திண்பண்டங்கள் கிடைக்கிறது
அதுவும் இவன் ஒரு வேளை
உணவை மட்டுமே சாப்பிட்டு
தெருக்களில் உறங்குவதால் மட்டுமே,
இந்த பண்டிகையும்
கோவில் திருவிழாக்களும்
இல்லாத நாட்களில்
நாடோடியாக திரியும்
இந்த குடை ராட்டினக்காரனின்
ஒரு வேளை சோறுக்கான பிழைப்பு
என்பது என்னவாக இருக்கும்..?
அவன் மக்களின் வாழ்வாதாரம்
எந்த ஒரு சூழலில் அமையப்பட்டிருக்கும்,
கலாச்சார மாறுதலினால் இது போன்ற
ஒரு நாடோடி தொழிற்கலைஞனின்
அன்றாட பிழைப்புக்கே இங்கு
பதில் இல்லை இதில் எங்கே
நம் நாடு 2020 - ல் வல்லரசு ஆவது..?
புகைப்படம் உதவி :
Franklin Kumar அண்ணே
எழுத்தும் சிந்தனையும் : Shiva Chelliah
Comments
Post a Comment