Skip to main content

குடை ராட்டினக்காரன்

*💚

" குடை ராட்டினக்காரன் "

பண்டிகை காலமோ
கோவில் திருவிழாவோ
நிகழ்ந்தால் மட்டுமே
இவர் வேலை முடிந்து செல்லும் போது
தன் பிள்ளைகளுக்கு அரிசி முறுக்கோ
இல்லை தேன் மிட்டாய்களோ
வாங்கி செல்ல முடியும்,

அதுவும் நகரத்தில்
இவரது பொழப்பு என்பது
மிகவும் ஏக்கமான மனநிலை தான்,

90 - களில் குடை ராட்டினத்துக்கு
இருந்த மவுசு இப்போது
அவர் அவர் தங்கள் பிள்ளைகளை
மொபைல் விளையாட்டிற்குள்
புகுத்தி விட்டதால் இந்த குடை
ராட்டினக்காரன் நகரப்புறத்தையே
தன் தொழிலுக்காக இழந்து நிற்கிறான்,

கால்களில் செருப்பின்றி
கதிரவனின் தாக்கத்திலும்
நிலவின் தன்மையிலும்
எத்தனை நாள் தன் பிழைப்புக்கான
வண்டியுடன் இவன் எத்தனை
கிராமங்கள் சென்று இருப்பான்
எத்தனை விதமான மனிதர்களை
சந்தித்து இருப்பான் தன் அனுபவத்தில்,

கிராமங்களில் கோவில் திருவிழாக்கள்,
பொங்கல் போன்ற பண்டிகை காலத்தில்
மட்டுமே இவன் குழந்தைக்கும்
துணைவிக்கும் ஒரு இரண்டு வேளை
சோறுடன் திண்பண்டங்கள் கிடைக்கிறது
அதுவும் இவன் ஒரு வேளை
உணவை மட்டுமே சாப்பிட்டு
தெருக்களில் உறங்குவதால் மட்டுமே,

இந்த பண்டிகையும்
கோவில் திருவிழாக்களும்
இல்லாத நாட்களில்
நாடோடியாக திரியும்
இந்த குடை ராட்டினக்காரனின்
ஒரு வேளை சோறுக்கான பிழைப்பு
என்பது என்னவாக இருக்கும்..?

அவன் மக்களின் வாழ்வாதாரம்
எந்த ஒரு சூழலில் அமையப்பட்டிருக்கும்,

கலாச்சார மாறுதலினால் இது போன்ற
ஒரு நாடோடி தொழிற்கலைஞனின்
அன்றாட பிழைப்புக்கே இங்கு
பதில் இல்லை இதில் எங்கே
நம் நாடு 2020 - ல் வல்லரசு ஆவது..?

புகைப்படம் உதவி :
Franklin Kumar அண்ணே 

எழுத்தும் சிந்தனையும் : Shiva Chelliah

: ) "

Comments

Popular posts from this blog

The Journey of Solo - Title Poem

ஓம் நமச்சிவாய என்னும் மூலமந்திரத்தின் கருவாய் நீர்,காற்று,நெருப்பு,நிலம்  என்னும் நாற்பகுதிகளை இறைவன் சிவனை வைத்து மையப்படுத்தி இருக்கும் கதைக்களத்தின் ஒரு கவிதை நடை பயணம் இங்கு, " The Journey of Solo - Title Poem |  Bejoy Nambiar  " 1) நீர் - ( World of Shekhar )  அன்பே ஆயிரம் மழைத்துளிகள் என்னை நனைப்பது போல நீ என்னை நனைத்துக்கொள் நதியின் ஆழங்களில் நான் மூச்சு திணறுவது போல நீ என்னை தழுவிக்கொள் கடலின் பேரலைகள் கரையை தீண்டுவது போல நீ என்னை எடுத்துக்கொள் என்னை உன் கரங்களால் அணைத்துக்கொள்ளாதே உன் மனதால் இறுக அணைத்துக்கொள் அன்பின் தனிமையில் உனக்கு மரணம் இல்லை 2) காற்று - ( World of Trilok ) யுகாந்திரங்களின் கோபம் யுகாந்திரங்களின் இறுக்கம் யுகாந்திரங்களின் பொறுமை யுகாந்திரங்களின் தனிமை வந்துவிட்டது எல்லாவற்றின் மீதும் பெரும் புயல் ஒன்று இந்த காற்றை எதிர்த்து நடப்பவர்கள் யார்..? காலத்தின் புயலில் உதிரும் ஆயிரம் ஆயிரம் மலர்களில் ஒரு மலரல்லவா நீ..? அழிவின் தனிமையில் காத்திருக்க உனக்கு நேரமில்லை 3) நெருப்பு - ( World of Shiva ) வன்மத்தின் வனங்கள் பற்றி எரிகின்றன குருதியின

கிறுக்கல்களின் தொகுப்புகள்

வெள்ளிக்காப்பை சுழற்றினேன் சூடான காஃபியை அருந்தினேன் தலை முடியினை கோதி விட்டேன் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தேன் ஆழ்மனதும் அனாதையாக இருந்தது எண்ணங்களின் ஓட்டமும் சீராக இல்லை யூடியுப் பக்கம் சென்றேன் அன்றைய தினத்தின் Trending காணொளிகள் ட்விட்டர் பக்கம் சென்றேன் நடிகர்களின் ரசிகர்களுக்கிடையே தள்ளு முள்ளு இன்ஸ்டாகிராம் பக்கம் சென்றேன் Bae Calls Me Chocobar என்றாள் கிளியோபாட்ரா ஹைக் பக்கம் சென்றேன் நட்டாஸா உரையாடலுக்கு எதிர்வாதம் செய்தாள் சரி, இது தான் இன்றைய தலைவிதி என்று முகப்புத்தகம் வந்து இதை பதிவு செய்தேன்..? - A Poem Without a Topic ❤ ---------------------------------------------------------- வாழ்க்கை இப்படியே போயிடுமா சார் என்பதில் தொடங்கி வாழ்க்கை ஒரு வட்டம் என்பதில் பயணித்து இவ்வளோ தான் சார் வாழ்க்கை என்பதில் முடிகிறது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த நம்பகத்தன்மை நிறைந்த வாழ்க்கை..? -------------------------------------------------------- இந்த காஃபி ஷாப் சுவர்களின் இடையூறுகள் நம் நாவிதழ்கள் இடைபாடுகளிலும்..?..!! - வா ரயில் விட போலாம் வா  🖤 --

குடைக்குள் மழை

✨️💚 ரீனா : ஹே ஆர் யூ தேர்..? விக்ரம் : இருக்கேன் ரீனா, என்ன திடீர்னு மெசேஜ், முக்கியமா எதுவும் சொல்லணுமா..? ரீனா : ஹே, அதெல்லாம் இல்ல, ஏன் ஒர்க்ல இருக்கியா..? விக்ரம் : இல்ல, வீட்டுக்கு வந்துட்டேன், Earlier Appointments So, முடிஞ்சு பா! ரீனா : ஒகே, கொஞ்சம் மனசு சரி இல்ல அதான் உன்கிட்ட பேசலாமேன்னு கால் பண்ணேன்..? விக்ரம் : என்ன ஆச்சு..? ஆர் யூ ஓகே..? சொல்லு ரீனா Any Issue..? ரீனா : ஹே,Just Mood Swing ஒன்லி! நீ ஃபிரீன்னா சொல்லு Let's Walk Together in Beach! உனக்கு தெரியும்ல எனக்கு பீச் வாக்ன்னா ரொம்ப பிடிக்கும், So நீ ஃபிரீன்னா வர முடியுமா விக்ரம்..? விக்ரம் : சரி, ஈவினிங் 6 மணிக்கு பீச்ல நம்ம வழக்கமா மீட் பண்ணுற அந்த பட்டர் பன் கடைக்கு வந்துரு ரீனா, நானும் வந்துடுறேன், ரீனா : தேங்க்ஸ் விக்ரம்! விக்ரம் : தேங்க்ஸா..? No More Formalities! உன்னோட தேங்க்ஸ்ல நான் பூரிச்சு போய்ட்டேன்,சிரிப்பு காட்டாம வா ரீனா! ரீனா : ஹ்ம்ம் டா! * இடம் : கடற்கரை * நேரம் : மாலை 6 மணி விக்ரம் : ஹே! என்ன ஆச்சு ரீனா திடீர்னு..? ரீனா : அதெல்லாம் ஒன்னும் இல்லடா, Please Give Sometime நானே சொல்லுறேன் போ