Skip to main content

Based on a True Story

பெண் வேண்டாம்
பொருள் வேண்டாம்
மது வேண்டாம்
மந்திரமும் வேண்டாம்

புகையிலை வேண்டாம்
புண்படுத்தும் எதிரியும் வேண்டாம்
புண் பட்ட மனமும் வேண்டாம்
ஓர வஞ்சனை பார்க்கும் வஞ்சகனும் வேண்டாம்

பொழிவில்லா வைரமும் வேண்டாம்
மழையாய் பேச்சில் பொழிபவனும் வேண்டாம்
கல் நெஞ்சம் உடையவனும் வேண்டாம்
கலங்கரை விளக்கமாய் இருப்பவனும் வேண்டாம்

ஏற்றத்தாழ்வு பார்க்கும் அவலநிலை வேண்டாம்
"நீ கீழ்" என்று மட்டம் தட்டும் மனிதரும் வேண்டாம்
முத்துப்பல் காட்டி சிரிப்பவனும் வேண்டாம்
முற்றும் துறந்த ஞானியும் வேண்டாம்

பொய்யில் வாழும் பிறவியும் வேண்டாம்
தாகத்திற்கு குடிநீர் கொடுக்காதவனும் வேண்டாம்
முழுமை பெற்றவனும் வேண்டாம்
முதுகில் குத்தும் நண்பனும் வேண்டாம்

உலக நியதியும் வேண்டாம்
உலக சீர்திருத்தமும் வேண்டாம்
உள்ளம் கனிய பேசுபவனும் வேண்டாம்
உன்னை போற்றி புகழ்பவனும் வேண்டாம்,

இவை எதுவும் வேண்டாம் என்றால்
எது தான் வேண்டும் இவ்வுலகில்..?

எதுவும் வேண்டாம்
எதுவும் வேண்டாம்
எதுவும் வேண்டாம்
ஆனால் வேண்டும்,..?

என்ன வேண்டுமா..?

ஆம்,
வேண்டும்
சில நிலை சார்ந்தவைகள் வேண்டும்
நான் வாழும் இவ்வுலகின் பார்வைக்காக..?

பொய்யில்லா மழலையின் சிரிப்பு வேண்டும்
பணம் இல்லாவிடில் பழகும் நண்பன் வேண்டும்
ஜாதி வாசம் இல்லாத சமூகம் வேண்டும்
நம்முடன் உடன் கட்டை ஏறும் நண்பன் வேண்டும்
உணர்ச்சிகளை வெளிப்படுத்த சகோதரி வேண்டும்
நெஞ்சில் சுமக்கும் தாய்மை வேண்டும்
வலியை இன்பமாய் மாற்றும் தந்தை வேண்டும்

வேண்டும் என்ற பெட்டகம்
மிகவும் சிறியது போல் தோன்றுகிறதே..?

ஆம்,

நான் வாழ ஆசைப்பட்டது
இங்கு நிகழவில்லை
நான் ஏற்றுக்கொண்ட வாழ்வில்
இவை தான் இவை மட்டும் தான்
வேண்டும் வேண்டும் வேண்டும்,

நான் ஒரு ஆண்,
இதை தாண்டிய ஒன்று வேண்டும்
இவற்றை விட முக்கியமானதும் கூட
எட்டாத கனி போன்றது அது..?

ஆம்,

"காதல்"

காதல் என்பது ஒரு உணர்ச்சி,
இது தான் முக்கியம் என்று கூறுவது
வேடிக்கையாக இருக்கும் பலருக்கு,

நான் மேலே கூறியது அனைத்தும்
ஆண் பெண் என்ற இருவர் சார்ந்த
இரண்டு வகையறாக்களுக்கும்
பொருந்தும் குணம் கொண்டது

காதலில் வெற்றி கண்டவன்
காதலில் தோல்வி கண்டவன்
காதலை சொல்லாமல் இருப்பவன்
காதலை நெஞ்சோடு சுமப்பவன்
காதலை இழந்து தேடலை தேடுபவன்

என்று ஆண் சார்ந்த காதலுக்கு
இங்கு வலி என்பது அதிகத்தின் அதிகம்

பெண் என்பவளுக்கு வலி இல்லையா
என்று கேட்டால் இருக்கிறது
அவர்களும் வலியை சுமக்கிறார்கள்
அழுகையை ஆழ்மனதில் வைத்திருக்கிறார்கள்
நூற்றில் பத்து சதவிகித பெண்கள் மட்டுமே
நான் பார்த்து வளர்ந்த இச்சமூகத்தில்..?

ஆண்களின் காதல்
தூய்மையின் நிறமோ..?

தூய்மையின் நிறம் அளவு
ஆண்களின் காதல் தூய்மையா
என்பது எனக்கு தெரியாது
ஆனால் "சிறந்தது"..?

காதலிக்கும் பெண் அவன் போதும் என்கிறாள்
அவள் வீட்டில் உள்ளோர் அதை ஏற்கவில்லை
அவள் "Ultra High Class" என்னும் வகையறா
அவன் "Lower Middle Class" என்னும் வகையறா
ஏணி வைத்தாலும் எட்டாத உயரத்தில்
அவளும் அவள் சார்ந்த சூழ்நிலைகளும்
அவனோ தாய் தந்தையை இழந்தவன்
தாய் அன்பை அவளிடம் உணர்ந்தவன்
அவள் காதலில் தாய்மை பாசத்தை நுகர்ந்தவன்
அவள் காதல் புனிதமானது
அவன் காதல் தாய்மை கொண்டு தூய்மையானது
வாழவா விட்டார்கள் இச்சமூகத்தில்..?

இங்கு ஆண் தோற்கடிக்கப்பட்டான்
அவன் காதலும் முறிவுற்றது
அவனுக்கான ஒரு வாழ்க்கையில்
இலை மேல் படர்ந்த நீர்த்துளி போல்
நினைவுகளை நெஞ்சில் சுமந்த படி
கரடு முரடான இவ்வுலகின் தடங்களில்
தன தேடல்களுடன் வலம் வந்தான்..?

அவளிடம் ஒப்பிடும் போது
அவனுக்கு மனதின் வலி அதிகம்
இன்னல்கள் அதிகம்
அவப்பெயர்கள் அதிகம்
அவமானங்கள் அதிகம்
இவை எல்லாம் அவன் காதலினால் அல்ல,
இச்சமூகத்தின் பணம் ஜாதி என்று
பரவிக்கிடக்கும் அவல நிலையினால்..?

இதை போல்
பெண்கள் உணராத நிறைய வலிகளை
ஒரு ஆண் இங்கு சுமந்து கொண்டு வாழ்கிறான்

அனைத்து ஆண்களுக்கும்
இது பொருந்துமா என்று கேட்டால்
இல்லை என்று சொல்லலாம்
நூற்றில் எழுபது சதவிகித
ஆண்களுக்கு இது பொருந்தும்,

அதிலும் Lower Middle Class என்னும்
Section கீழ் வாழும் ஒவ்வொரு ஆண் மகனும்
இந்த அவலநிலையை தன் வாழ்நாள் முழுவதும் அனுபவித்துக்கொண்டு தான் இருக்கிறான்
இந்த நிலை இல்லாத மண்ணில்..?

இந்த உண்மை கதையை
உங்களிடம் பகிர்ந்த பின்
அவன் தேடல்களை மீண்டும் தொடர்ந்தான்..?

"
Based on a True Story"
Penned By Shiva Chelliah

Comments

Popular posts from this blog

The Journey of Solo - Title Poem

ஓம் நமச்சிவாய என்னும் மூலமந்திரத்தின் கருவாய் நீர்,காற்று,நெருப்பு,நிலம்  என்னும் நாற்பகுதிகளை இறைவன் சிவனை வைத்து மையப்படுத்தி இருக்கும் கதைக்களத்தின் ஒரு கவிதை நடை பயணம் இங்கு, " The Journey of Solo - Title Poem |  Bejoy Nambiar  " 1) நீர் - ( World of Shekhar )  அன்பே ஆயிரம் மழைத்துளிகள் என்னை நனைப்பது போல நீ என்னை நனைத்துக்கொள் நதியின் ஆழங்களில் நான் மூச்சு திணறுவது போல நீ என்னை தழுவிக்கொள் கடலின் பேரலைகள் கரையை தீண்டுவது போல நீ என்னை எடுத்துக்கொள் என்னை உன் கரங்களால் அணைத்துக்கொள்ளாதே உன் மனதால் இறுக அணைத்துக்கொள் அன்பின் தனிமையில் உனக்கு மரணம் இல்லை 2) காற்று - ( World of Trilok ) யுகாந்திரங்களின் கோபம் யுகாந்திரங்களின் இறுக்கம் யுகாந்திரங்களின் பொறுமை யுகாந்திரங்களின் தனிமை வந்துவிட்டது எல்லாவற்றின் மீதும் பெரும் புயல் ஒன்று இந்த காற்றை எதிர்த்து நடப்பவர்கள் யார்..? காலத்தின் புயலில் உதிரும் ஆயிரம் ஆயிரம் மலர்களில் ஒரு மலரல்லவா நீ..? அழிவின் தனிமையில் காத்திருக்க உனக்கு நேரமில்லை 3) நெருப்பு - ( World of Shiva ) வன்மத்தின் வனங்கள் பற்றி எரிகின்றன குருதியின

கிறுக்கல்களின் தொகுப்புகள்

வெள்ளிக்காப்பை சுழற்றினேன் சூடான காஃபியை அருந்தினேன் தலை முடியினை கோதி விட்டேன் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தேன் ஆழ்மனதும் அனாதையாக இருந்தது எண்ணங்களின் ஓட்டமும் சீராக இல்லை யூடியுப் பக்கம் சென்றேன் அன்றைய தினத்தின் Trending காணொளிகள் ட்விட்டர் பக்கம் சென்றேன் நடிகர்களின் ரசிகர்களுக்கிடையே தள்ளு முள்ளு இன்ஸ்டாகிராம் பக்கம் சென்றேன் Bae Calls Me Chocobar என்றாள் கிளியோபாட்ரா ஹைக் பக்கம் சென்றேன் நட்டாஸா உரையாடலுக்கு எதிர்வாதம் செய்தாள் சரி, இது தான் இன்றைய தலைவிதி என்று முகப்புத்தகம் வந்து இதை பதிவு செய்தேன்..? - A Poem Without a Topic ❤ ---------------------------------------------------------- வாழ்க்கை இப்படியே போயிடுமா சார் என்பதில் தொடங்கி வாழ்க்கை ஒரு வட்டம் என்பதில் பயணித்து இவ்வளோ தான் சார் வாழ்க்கை என்பதில் முடிகிறது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த நம்பகத்தன்மை நிறைந்த வாழ்க்கை..? -------------------------------------------------------- இந்த காஃபி ஷாப் சுவர்களின் இடையூறுகள் நம் நாவிதழ்கள் இடைபாடுகளிலும்..?..!! - வா ரயில் விட போலாம் வா  🖤 --

குடைக்குள் மழை

✨️💚 ரீனா : ஹே ஆர் யூ தேர்..? விக்ரம் : இருக்கேன் ரீனா, என்ன திடீர்னு மெசேஜ், முக்கியமா எதுவும் சொல்லணுமா..? ரீனா : ஹே, அதெல்லாம் இல்ல, ஏன் ஒர்க்ல இருக்கியா..? விக்ரம் : இல்ல, வீட்டுக்கு வந்துட்டேன், Earlier Appointments So, முடிஞ்சு பா! ரீனா : ஒகே, கொஞ்சம் மனசு சரி இல்ல அதான் உன்கிட்ட பேசலாமேன்னு கால் பண்ணேன்..? விக்ரம் : என்ன ஆச்சு..? ஆர் யூ ஓகே..? சொல்லு ரீனா Any Issue..? ரீனா : ஹே,Just Mood Swing ஒன்லி! நீ ஃபிரீன்னா சொல்லு Let's Walk Together in Beach! உனக்கு தெரியும்ல எனக்கு பீச் வாக்ன்னா ரொம்ப பிடிக்கும், So நீ ஃபிரீன்னா வர முடியுமா விக்ரம்..? விக்ரம் : சரி, ஈவினிங் 6 மணிக்கு பீச்ல நம்ம வழக்கமா மீட் பண்ணுற அந்த பட்டர் பன் கடைக்கு வந்துரு ரீனா, நானும் வந்துடுறேன், ரீனா : தேங்க்ஸ் விக்ரம்! விக்ரம் : தேங்க்ஸா..? No More Formalities! உன்னோட தேங்க்ஸ்ல நான் பூரிச்சு போய்ட்டேன்,சிரிப்பு காட்டாம வா ரீனா! ரீனா : ஹ்ம்ம் டா! * இடம் : கடற்கரை * நேரம் : மாலை 6 மணி விக்ரம் : ஹே! என்ன ஆச்சு ரீனா திடீர்னு..? ரீனா : அதெல்லாம் ஒன்னும் இல்லடா, Please Give Sometime நானே சொல்லுறேன் போ