காதலும் கற்று மற
தேவனையும் கைக்கூப்பி மற
இதோ உனக்கான வழித்தடம்
வா வாழ்ந்து தான் பார்த்து விடுவோமே..!! <3
-------------------------
இது தான் நான் என்று
என்னை மீட்க செல்லும்
இந்த பயணத்தில் கூட
இடையூறுகள் என்னை வந்து
முத்தமிட்டு செல்கின்றன..!!
#MyAspects <3
-------------
தினமும் எழுதிடும்
கவிதை கிறுக்கலில்
பிழையில்லா தமிழ் நீ
இந்த இருள் படர்ந்த இரவுகளை
ஏன் உன் வசம் ஆட்கொள்கிறாய்..?..!! 💛
--------------------------
~ காதல் அளவற்றது
காதல் தித்திப்பானது
காதல் இன்பம் பயப்பது
காதல் வலி தந்து சுகம் காண்பது
இருந்தாலும் என் பெருங்காதலை
அடை காத்து பொத்தி வைப்பேன்
உன் பாதங்களின் விரல் இடுக்கில்
மலர் போன்ற என் பெருங்காதலை
சுமந்து செல் நீ செல்லும் சாலைகளில்
இது ஒரு பாரமில்லாத இன்பமான சுமை..!!
---------------------
இந்த நீள் இரவு
இன்னும் கொஞ்சம் நீளாதோ
நாம் என்ற இரண்டெழுத்தில்
நமக்கான உடல் அணுக்கள்
எல்லை கொஞ்சம் மீறாதோ..?..!! 💛
-------------------
சில சந்தேக பார்வையில்
இடம் பொருள் ஏவல் அறியாமல்
ஒரு நிமிடம் வெக்கையடைந்தேன்
எதிரில் அவள் குறுஞ்சிரிப்புகளுடன்
என்னை பார்த்து நகைத்துக்கொண்டிருந்தாள்..!!
#DQ | #KaliForLife | #MyAspects 💛
*
----------------------
அழகான தோட்டத்துல பூத்த
குட்டி ரோஜாப்பூ நீ,
எப்பவும் பன்னீர் துகள்கள் பட்டு
காலை வனப்புடன் மெருகேறி
மொட்டுக்களாய் பிறந்து வா..!! 💛
--------------------------
...
...
அவன் காதல் கை கூடல
ஆனா அவன் வாழ்க்கையிலும்
அவன் ஒரு போதும் தோற்கவில்லை
அவன் அவனை உணர்ந்து வாழ்ந்தான்
அவன் கால்கள் அவனை
கால் போன போக்கிலும்
மனம் போன போக்கிலும்
அழைத்து சென்றது அவனுக்கான தடத்தில்
சில கை கூடாத காதல் உணர்த்தும்
தனிமை தான் எவ்வளவு அழகானது..?..!! ❤️
---------------------
*❤️
என் மௌனத்தை மட்டும் தான்
நீ ரசிக்கிறாய் என தெரிந்திருந்தால்
என் காதலை சொல்லாமலேயே
என் நாட்களை கடத்தி இருப்பேன்
சொல்லி இழந்து போவதற்கு பதில் ..!! : ) "
----------------
*❤️
ரயில் பயணத்தில் புத்தகம் படிக்கும்
ஒருவரின் கையில் ஆசான் சுஜாதா
எழுதிய "ஸ்ரீரங்கத்து தேவதைகள்"
நேர்மாறாய் என் எதிரிலும் கூட..!! : )
--------
*❤️
கண்ணே கலைமானே என்று
உன்னை மடியில் வைத்து
தாங்குவதற்குள் பிறை நிலவாக
கரைந்து போனாயே..!! : ) "
----------
*❤️
இந்த பெருமழை தான்
எத்தனை பேரின் இழந்த காதலுக்காக மனமுருகி கண்ணீர் வடிக்கின்றது..!! : ) "
----------------
*❤️
வெள்ளிக்கிழமை கோவில்களுக்கு
மட்டும் சிறந்த நாளில்லை
மஞ்சள் பூசும் உன் முகத்திற்கும் கூட..!! : ) "
----------------
*❤️
காற்றுள்ள போதே தூற்றி இருந்தால்
என் காடெங்கிலும் அடை மழை
பெய்திருக்கும்..!! : ) "
------------
*❤️
பிறரால் ஒதுக்கப்பட்டு
தனிமை படுத்திய ஒருவனின்
துறவு வாழ்க்கை என்பது
மிகக்கொடிய ஓர் மனித வன்முறை..!! : ) "
---------------
*❤️
நான் எழுதிய கவிதையின்
கடைசி முற்றுப்புள்ளியை
காற்புள்ளியாய் மாற்றியது
அன்று நீ கொடுத்த எதிர்பாரா முத்தமே..!! : ) "
--------------------
*❤️
நான் படித்த காதல் புத்தகம் நீ
ஏனோ தெரியவில்லை
ஆரம்பம் முதலே
தலைகீழாக படித்துவிட்டேன்
புத்தகத்துடன் சேர்த்து உன்னையும்
உன் மீதான காதலையும்..!! : ) "
--------------
*❤️
பிள்ளை நிலா
இரண்டும் வெள்ளை நிலா - என்று
S.ஜானகி அம்மா குரலில் அப்பாடலை
தெருவில் உள்ள கடையின் ரேடியோ
பெட்டியிலோ அல்லது நம் வீட்டின்
தொலைக்காட்சியிலோ கேட்கும்
போதெல்லாம் எனை ஈன்றவள்
இன்னும் கொஞ்ச நாள் இந்த பூமியில்
வாழ்ந்துவிட்டு தன் துணை (அப்பா)- யை
தேடி போயிருக்கலாமோ என்றே
தோன்றுகிறது..!! : ) "
-----------------------
*❤️
ஊரடங்கு பிறப்பித்திருந்தாலும்
மழலைகள் வீட்டு வாசலில்
விடுமுறையென கருதி விளையாடும்
போது நாமும் அப்பருவத்திற்கு செல்ல
ஒரு டைம் ட்ராவெல் இயந்திரம்
இல்லையே என்ற வருத்தம் தான்
அதை வேடிக்கை பார்க்கும்
நமக்கு மேலோங்கி நிற்கிறது..!! : ) "
------------------------
*❤️
மொட்டை மாடி காற்று கூட
உன்னை ஞாபகப்படுத்தினால்
நான் செய்வதறியாது தவிப்பேனோ..? : ) "
------------------
*❤️
வாசல் கதவின் பிடியில்
உன் கை ரேகையின் அச்சு
அங்கு தொங்கிய தோரணத்தில்
தென்பட்டது,
உன் பாதச்சுவடுகளின் தடம்
என் வீடெங்கும் உனது வருகையை
பதிவு செய்தது,
என் வீட்டு கேஸ் ஸ்டவ்வில்
அந்த காய்ச்சிய பால் மேல்
நீ தூவிய காஃபி பொடியின்
கமகமக்கும் மணத்தை நுகர்ந்தவாரு
ஒரு கப் காஃபியுடன் அதன் சுவையை
அந்த நெஸ்கஃபே சன்ரைஸ் பொடி
என் நுனி நாக்கில் ஒட்டிக்கொண்டது,
என் வீட்டு துளசி மடத்தை
நீ சுற்றி வந்ததாலோ என்னவோ
நித்தம் உன் வாசனையில்
தன் தெய்வீக வாசனை நிலையை
மறந்து அதுவும் கனா காண்கிறது,
நாளை எதிர்பார்த்து
இன்று நீ விஜயம் செய்த
என் அறையின் திறக்கப்படாத
ஜன்னலின் அருகாமையிலிருந்து
நீ வரும் திசை நோக்கி
வழி மேல் விழி வைக்காமல்
உனை தேடும் என் விழித்தடங்களையே
வழித்தடங்களாய் மாற்றி
காத்துக்கொண்டிருக்கிறேன்,
விழியும் விழியும் சேரும் போது
விண்ணை தாண்டி வருவாயா அன்பே
அந்த மூக்குத்தி ஜொலிக்கும் வனப்புடன்..!! : ) "
=-------------------------
*❤️
மழையில் நனைந்தேன்
நான் மட்டும் தனியே
பனியில் உறைந்தேன்
நீ இன்றி இணையே
வானம் இடியுடன் முழக்கமிட்டது
அதன் பெருஞ்சோகத்தை என் வசம்..!! : ) "
--------------------
*❤️
பொன் ஊஞ்சல் ஆடிடும் தாரகை அவள்
அர்ச்சனை பூக்களை தன் பாதங்களில்
நித்தம் சூழ தரிசனம் கண்டாள்..!! : ) "
-------------------
*❤️
கணிதத்தின் சூத்திரம்
எனக்கு பிடித்தாலும்
Trignometry - யாக நீ இருந்தால்
அன்று நான் தான் வகுப்பறையில்
பாடமெடுக்கும் Volunteer ஸ்டூடெண்ட்..!! : ) "
-------------------
*❤️
புத்தகத்தின் பக்கங்களில்
உன் முகம் தென்பட்டால்
வாசிப்பின் துல்லியத்தில்
என் கவனம் நிச்சயம் சிதறும்..!! : ) "
--------------------
*❤️
முத்தத்தை ரசிப்பவன் காதலன்
அதன் சுவையால் அல்ல
மோகத்திரையின் ஈர்ப்பினால்..!! : ) "
*-------------------
*❤️
ஊரே மார்கழி மாதத்தை
கோலாகலமாக கொண்டாடினாலும்
அவனுக்கு மட்டும் ஆடி மாதமே..!! : ) "
---------------------
*❤️
காலத்தின் பிடியில்
அடுத்தது என்னவென்று
நான் யோசித்து முடிப்பதற்குள்
அவள் இலையுதிர் காலத்தின்
மரமாக என் முன் காட்சியளித்தாள்..!! : ) "
-----------------
*❤️
என் வீட்டு தோட்டத்தில்
அன்று நீ விதைத்த செடியில்
இன்று பூத்த வெள்ளைப்பூவின்
மஞ்சள் நிற மகரந்த துகள்களுக்குள்
நீயின்றி உன் வாசம் வீச கண்டேன்..!! : ) "
------------------
*❤️
மரத்தின் கிளையில்
கட்டப்பட்ட குருவிக்கூடு நான்
குருவி இனம் அழிந்த பின்
சேதமடைந்த கூடாக இன்று தனியே
உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறேன்.. !! : ) "
------------------------
*❤️
நிலவின் தூய ஒளி
பூமிக்கு தினமும் வந்து செல்வதால்
அதன் மீது மனிதர்களிடத்தில் பரவும்
வைரஸ் போன்ற கொடிய நஞ்சு
நிலவொளியுடன் கலந்து விடக்கூடாது
என்பதே இருள் வானின் இப்போதைய
அவசிய தேவையாக இருக்கும்..!! : ) "
-------------------
*❤️
ஒரு செயலை வெற்றிகரமாக
முடித்தவுடன் "இவ்வளோதானா"
என்று கூறுவதில் அடங்குகிறது
அடுத்த செயலுக்கான தயார் நிலை..!! : ) "
-------------------
*❤️
நெருப்பை மூட்டி குளிர் காய்கையில்
என் உடல் மேலே தழுவி செல்லும்
பனி உணர்த்துகிறது என்னுடைய
நிகழ்காலத்தின் இத்தனிமையை..!! : ) "
------------------
*❤️
உரையாடலின் முடிவில்
"இன்னும் ஒரு அஞ்சு நிமிஷம் பேசலாமே"
என்ற மெஸேஜிற்குள் ஒழிந்திருக்கிறது
ஆயிரக்கணக்கான " மிஸ் யூ" - க்கள்..!! : ) "
----------
*❤️
எட்டாத கனி இருக்கும் உயரத்தை
எட்டி பிடிப்பதே ஒரு நடுத்தர
சாமானியனின் டுடே டாஸ்க் என
உலகம் தினம் தினம் பின்னங்கால்
பிடரி தெறிக்க அவனை ஒரே
வட்டத்திற்குள் ஓட வைக்கிறது..!! : ) "
-----------
*❤️
கண்களில் கண்ணீருடன்
உறக்கமின்றி தவித்தவனுக்கு
இந்த இரவின் ஒரே ஆறுதல்
நான்கு மூலைக்கும் சமமாக
வெளிச்சம் கொடுக்கும் அந்த
மஞ்சள் நிற குட்டி பல்பு மட்டுமே..!! : ) "
---------------
*❤️
கண்ணீரில் முடிந்த காதல்கள்
சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படாதவை..!! : ) "
-------------------
*❤️
ஒவ்வொரு பேனா முனையும்
சுமக்கும் வலிகளை எழுதுவதற்கு
உலகில் பாஷை இல்லை என்பதால்
வழக்கு முடிந்த பிறகு அந்த பேனாவின்
ஆயுட்காலம் முறிவடைந்து விடுகிறது..!!
-----------------------
*❤️
இந்த இரவை கடந்து செல்ல
எத்தனை விதமான முத்தங்கள்
வேண்டுமென கனவுகளில்
கதைத்துக்கொண்டிருக்கிறாள்..!! : ) "
---------------
*❤️
ஒரு ரசனை வாசிப்பாளன்
ஆயிரம் புத்தகங்கள் வாசித்தாலும்
பக்கங்கள் மீதான வாசனைக்கு
என்றுமே அவனிடத்தில் தனி மவுசு தான்,
அந்த வாசனை அவனை
மேலும் மேலும் பல புத்தகங்களை
வாங்க உத்வேகம் செய்யும்
வாசித்தல் எனும் பழக்கத்திலும் கூட,
வாசித்தல் அதிகமாக அதிகமாக
நாளடைவில் அவன் கிறுக்கல்களும்
அதிகமாகும் அழகிய நடையுடன்,
காலத்தின் போக்கில்
அவன் பார்க்கும் விஷயங்கள்
அவன் சந்தித்த மனிதர்கள்
அவன் வாழ்க்கை முறை
அவன் சந்தித்த வலி
அவனுடைய முதல் காதல் என
எல்லாவற்றையும் எழுத்தில் கொண்டு
வந்து ஒரு புள்ளியில் நிலை நாட்டுவான்,
எழுத்துக்கள் செழுமையடையும்
தமிழ் உயிர்களிடத்தில் பெருகும்
அவன் நிலையும் சற்று உயரும்,
எழுதுவோம் நம் தாய்மொழியில்
ஒன்றிணைவோம் எழுத்துகளினால்..!! : ) "
=------------------
*❤️
இரவு நேரங்களில் தெருக்களில்
குறைக்கும் நாய்களின் சத்தம்
ஒருவருக்கு மட்டும்
அதீத பேரன்பை காட்டுகிறது,
பத்து ரூபாய் பிஸ்கட் பாக்கெட்
இரண்டினை பிரித்து அவற்றிற்கு
உணவளித்து விட்டு தன் கடமையை
மீண்டும் தொடங்கினார் அந்த கூர்க்கா..!!
: ) "
--------------------
*❤️
காதல் :
வரையறுக்க முடியாத
ஹார்மோன்களின்
உணர்ச்சி வெளிப்பாடு
காமம் :
வரையறுக்க முடிந்த
பருவ உணர்ச்சி மாற்றங்களின்
உடல் ரீதியான கூட்டு வெளிப்பாடு,
: ) "
---------------------
*❤️
டேபிள் ரோஸ் செடியை விரும்பும்
பெண்கள் மத்தியில்
துளசி மாடத்தை ரசிக்கும்
பூந்தோட்ட காவல்காரி அவள்..!!
: ) "
------------------------
*❤️
நீண்ட நாள் மௌனம்
ஒருவரின் வைராக்கியத்தை குறிக்கும்
திமிரு என மற்றவர் நினைத்தால்
அது நினைப்பவரின் ஆகச்சிறந்த தவறு..!!
: ) "
------------------------------
*❤️
ஊரடங்கு நாட்டிற்கு மட்டுமே
முத்தத்திற்கு இல்லை என்றவள்
உதடுகளை பற்றிக்கொண்டாள்..!!
: ) "
-----------------
*❤️
நூறு பேருடைய சோகங்களை
மறக்கச்செய்து அவர்கள் நெஞ்சில்
சிரிப்பை விதைப்பவன் கடவுள் என்றால்
நானும் ஒரு உருவ வகையில்
தீபாராதனை காட்டாத மனித கடவுளே..!
: ) "
--------------------
: - )
தேடினாலும் கிடைக்காதென தெரிந்தும்
தன் தேடலை தொடர்ந்து கொண்டே
இருப்பவன் பைத்தியக்காரன் அல்ல
தனக்கான தேடலின் சாலையில்
தினமும் பத்து புதிய நபர்களோடு
தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு
தன் நட்பு வட்டாரத்தை மேலும் மேலும்
பெரிது படுத்திக்கொள்பவன் அவன்..!!
" ❤️ "
----------------------
" ❤️
மழிக்க மறந்தேன்
என் சிகை அலங்காரத்தை
சரி உருப்படியாக புகைப்படமாவது
எடுப்போமே என கேமரா முன் நின்றால்
அதுவும் வேடிக்கையாய் அமைகிறது
அது சரி வாய்த்தது தானே விதிவிலக்கு..!!
: ) "
.-----------------------
*❤️
கற்கண்டு துகள்களாய்
பெய்யும் இப்பெருமழை
என் தீராக்காதலுக்காக
இருந்துவிட்டு போகட்டுமே,
நாளை பிரிவின் போது
மழையில் நின்று நான் அழுதாலும்
கண்ணீருக்கும் மழைத்துளிக்கும்
உள்ள வித்தியாசமென்பது
யாருக்கு தெரிந்துவிட போகிறது..!!
: ) "
-----------------
மாதுளை பழத்தை உரித்து
தயிர் சாதம் மேல் தூவினால்
ஒரு வெள்ளை சிகப்பு காம்பினேஷனில்
பார்ப்பதற்கே கண்களுக்கு
ஒரு விருந்தாக அமையும்
அது போலத்தான் நாம்
ஒரு சிறுகதையோ அல்லது
புனைக்கதையோ அழகான தமிழில்
எழுதும் போது இடையில் வாசிப்போரின்
புரிதலுக்காக ஆங்காங்கே கொஞ்சம்
ஆங்கிலம் பயன்படுத்திக்கொள்ளலாம்,
ஒரு எடுத்துக்காட்டுக்கு சொல்லணும்னா,
"
ஹே, அங்க பாரு
உன்னோட பைக் அங்க நிக்குது
போய் சீக்கிரமா ஸ்டார்ட் பண்ணு,
"
வாசிப்போரின் புரிதலுக்காகவும்
உரையாடல்களை எளிமையாக பேச்சு
வழக்கில் எழுதவும் இது பயனளிக்கும்,
*
எழுதுவோரின் கவனத்திற்கு..!! ❤️
------------------
ஏமாற்றம் என்னும் பெருங்குழியில்
ஒருவன் தள்ளப்படும் போது
அவன் அதிலிருந்து மீண்டு வர
எத்தனை துயரங்களை கடந்து
மேலே ஏறி வரப்போகிறான்
என்பதை கொண்டு தான் அவனுடைய எதிர்காலம் முடிவு செய்யப்படுகிறது..!!
---------------------
ஒருவனின் கோபத்தை
எண்ணெய் ஊற்றி திரி வைத்து
அகல் விளக்காய் ஏற்றுவதிலிருந்து
தண்ணீர் ஊற்றி கடும் நெருப்பின்
உஷ்ணத்தை கட்டுப்படுத்தும் வரையில்
அவனை சார்ந்த சுற்றுச்சூழல்
இங்கு பெரும் பங்கு வகிக்கிறது..!!
---------------------
இரவுகள் தீர்ந்துவிட்டால்
கண்ணீருக்கு வேலையில்லை
இதை புரிந்துகொண்டவன்
காதலிக்க தெரிந்த கற்பனையாளன்..!!
------------------
நம்மை வேண்டாம் என்று
சொல்லி விலகியவர்களிடம்
தேடி தேடி சென்று பேச முயற்சி செய்தால்
அவமானத்தையும் சுயமரியாதையையும்
நம்மிடமிருந்து இழக்க நேரிடும்,
உங்கள் பெற்றோரை தவிர
உங்கள் சுயமரியாதையை
யாரிடமும் எப்போதும்
இழக்காமல் இருத்தலே நன்று,
சாக்கடை - னா நாறத்தான் செய்யும்
அதுக்காக அது மேலயே நடந்தா எப்படி
கொஞ்சம் இடைவெளி விட்டு செல்வோம்..!!
--------------------
ஆங்காங்கே சிலர் மட்டுமே
அமர்ந்திருந்த ஒரு காஸ்ட்லி - யான
நைஸ் செட் அப் ரெஸ்டாரண்ட் அது,
இருவரும் தாங்கள் ஆர்டர் செய்த
Foods - ஐ சாப்பிட்டுக்கொண்டிருந்தோம்,
சில நேரங்களில் அவள்
எனக்கு ஸ்பூனில் ஊட்டி விட்டு
என் மம்மியாக மாறிய
படலம் கூட அமைந்தது,
நாழிகை பொழுதை மறந்து
கடிகாரத்தின் முட்களை மறந்து
உலகின் வெப்பநிலையை மறந்து
இருவரின் காதல் உரையாடலும்
தமிழ் வழி கலந்த ஆங்கிலத்தில்
இலக்கணமும் கிராமரும் கைகோர்த்து
உரையாடலை மேலும் அழகூட்டியது,
சில மீம்ஸ்களை பார்த்து
சின்னஞ்சிறு நகைச்சுவையிலும்
ரசனையான பெருங்களிப்பிலும்
அவள் விரல்கள் என்னை சில
நேரங்களில் அடிக்கும்
வண்ணம் தீண்டிச்சென்றது,
பத்து விரல்களும் பின்னலுடன்
நாங்கள் கை கோர்த்த வேளையில்
அவள் குடித்த Aquafina தண்ணீர்
ஒரு சொட்டு கீழே விழுந்து
அவள் விரல்களில் அணிந்திருந்த
மோதிரம் மேலே விழுந்து ஜொலிக்கும்
முத்து போல் ரம்மியமாக காட்சியளித்தது,
நானும் அவ்வப்போது ஆண்களுக்கே
உரித்தான தலையை கோதிக்கொண்டு
அவளிடம் பேசிக்கொண்டிருந்தேன்,
திடீரென ஒரு சத்தம்
நேரம் இரவு இரண்டு மணி
PM - ற்கு பதில் AM - என
வைத்துவிட்டேன் போல
மொபைலின் அலாரம் வழியே
இளையராஜா "Gumm Summ Gumm"
பாடலின் கரோக்கியை இசை மீட்டினார்,
தூக்கம் ஒரு பக்கம் கலைந்தது
அவள் இல்லாத இந்த இரவும்
இந்த இரவில் அவளுடன் இருந்த
அழகான நினைவுகளும்
காலப்போக்கில் கனவாக
என் முகத்தின் மேலே மயில் தோகை
கொண்டு தீண்டி என் தனிமையின்
நிலையை உணர்த்தியது,
*
தனிமை ஒரு போதை
இரவிலும் கனவிலும்..!! ❤️
----------------------
இரவு நேர மொட்டை மாடி
காற்று தரும் சுகம் என்பது
இயற்கையின் வர்ணிக்க
முடியாத ஓர் வரப்பிரசாதம்
அதை உணர்ந்தவன் சொல்வான்..!!
----------------
மனம் தவிக்கும் தவிப்பிற்கு
இறப்பு தான் முடிவு என்றால்
நாம் அனைவரும் என்றோ இறந்து
எத்தனையோ மறு பிறவிகளெடுத்து
தான் மீண்டு வந்திருக்கிறோம் இங்கு..!!
=--------=------------
இசை தான் வலிக்கு
சிறந்த மருந்து எனில்
இசையமைப்பாளன் தீரா நோய்
வந்து ஏன் சாகப்போகிறான்..?..!!
----------------------
மூன்று மனைவிகளுடன்
நித்தம் ஒற்றுமையாய்
உலகை வேகமாக சுற்றி வரும்
கில்லாடி வித்தை தெரிந்தவன்
காற்றாடி எனும் கள்வன்..!!
----------------------
✨️❤️
சாலையோர மரங்கள் அனைத்தும்
போதி மரங்களாக இருந்தால்
இளைப்பாறல் வேண்டி எத்தனை
புத்தர்கள் நமக்கு கிடைத்திருப்பார்கள்..?
-------------------------
முட்கள் என்றால் குத்தும்
குத்தினால் ரத்தமும் வரும்
பிறகு ஏன் முட்கள் நிறைந்த
சாலையில் பயணம் செய்து
வீணாக காயப்பட்டு கொள்கிறீர்கள்,
இங்கு முட்கள் என்பது நிராகரித்தோர்
அவர்களிடம் வழிய சென்று பேச
நினைத்தால் புறக்கணிப்பு நிச்சயம்
புறக்கணிப்பு நிச்சயம் என தெரிந்த பின்
வீணாக அவர்களிடம் சென்று பேசி
ஏன் நீங்கள் ஏமாற்றம் அடைகிறீர்கள்..?..!!
------------------------
அன்புக்காக ஏங்கித்தவிக்கும்
மனசு இரவு நேரத்தில் மட்டும்
ஆக்ட்டிவ் செய்யப்படுவது ஏன்..? ❤️
--------------
காற்றில் காதல் பரவினால்
உலகம் முழுக்க கோடிக்கணக்கான
ரோமியோ ஜூலியட் - கள்
மண்ணில் அவதரிக்கப்பட்டிருப்பார்கள்..!! ❤️
-------------------
ஒருவரை பார்த்து
அவர் மேல் காதல் வயப்பட்டு
அவரின் குறும்புத்தனங்களை ரசித்து
அவர் மீது இறுதியாக வைக்கப்படும்
அதீத அன்பின் வெளிப்பாடினால்
அன்பு வைத்தவரே கடைசியில் ஏங்கித்தவிக்கும் தவிப்பின் பெயர் தான்
இரண்டு மனசு சம்பந்தப்பட்ட
"காதல்" எனும் ஓர் மாய உலகம்,
*
ஆதலால் காதல் செய்வீராக..?..!! ❤️
-------------------
அவ்வளோ சீக்கிரம் நம்ம கூட கிளோஸ
இருந்தவங்கள மறந்திட முடியுமா சார்..?
அது கஷ்டம் தான் கார்த்திக் சில பேரு
அவங்கள மறக்கணும்ன்னு மதுவுக்கு
தன்னை அடிமைப்படுத்திக்கொண்டு
தன் உடலையும் சேர்த்து
கெடுத்துக்கொண்டு அவங்கள
மறக்கவும் முடியாம ஒரு மீள் நிலையில
மதுவுடனேயே தொடர்ந்து பயணம்
செய்வாங்க என்ன மாறின்னு
கூட வச்சுக்கோயேன்,
நான் பார்த்த ஒருத்தர் இருக்காரு
மதுவும் இல்ல மாதுவும் இல்ல,
ஆனா, அவர் சொல்லுவார் அவங்கள
மறக்கமுடியாது தான் ஆனா என்ன நான்
ஒருநிலையா வச்சுக்க என் கூட இருக்க
எல்லோரையும் சந்தோஷமாக
வச்சுப்பேன் நிறைய மோட்டிவேஷன்
செஞ்சுன்னு,
இப்போ உன்னயே எடுத்துக்கோயேன்
நீ என்ன செய்வ கார்த்திக் அவங்கள
மறக்கணும் னா..?
ஹா ஹா அப்படி ஒருத்தங்க
இருந்தா தானே மறப்பதற்கு,
இதான் கார்த்திக் நீ,
அந்த வலி - ய உனக்குள்ள வச்சுக்குற
அவங்களோட உருவம் உன் மனசுக்குள்ள
இருந்தும் வெளியுலகத்துக்கு அப்படி ஒரு
நபர் உன் வாழ்க்கையில இல்லன்னு
சொல்லி அந்த வலிய பிறர் கிட்ட
பகிர்ந்துக்காம உனக்குள்ள வச்சுக்கிட்டு
வெளிய சிரிச்சு சிரிச்சு பேசிகிட்டு
இருக்க,
இப்படித்தான் ரொம்ப
அன்பு வச்சுருவோம்
கடைசியில மறக்க முடியாதுன்னு
தெரிஞ்சப்பறம் இவ்வளவும் செய்வோம்
அப்போ மறந்துட்டோமான்னு கேட்டா
அதுக்கான விடை கடைசி வர நமக்கு
கிடைக்காது,
இப்படி இந்த உலகம் நிறைய
மனுஷங்கள பார்த்துட்டு தான் இருக்கு
தினமும், அதுல நம்மளும் ஒன்னு,
ஒருத்தங்க நம்மளவிட்டு போனதுக்காக
நாம நம்மல சுத்தி இருக்க மத்தவங்கள
இழக்காம ஒவ்வொரு நாளைக்கும்
புதுசு புதுசா மனுஷங்க கூட நம்மல
ஈடுபடுத்திக்கொண்டு அடுத்த
நாளுக்கான தேடல் என்னன்னு
புரிஞ்சுகிட்டு அதை நோக்கி பயணம்
செஞ்சுட்டு போவோம்,
என்னடா கார்த்திக் சிரிக்குற..?
அனுபவம் நிறைய இருக்கு போல
உங்களுக்கு அதான் நினைச்சேன்,
சிரிக்க சொல்லல சிந்திச்சு பாரு
உனக்கு இன்னும் வயசு இருக்கு
இன்னும் பத்து வருஷம் கழிச்சு
நீ திரும்பி பார்குறப்போ
நான் சொன்ன இந்த வார்த்தைகள்
தான் கார்த்திக் கல்வெட்டுல பதிச்ச
பொன்மொழியா வந்தா கூட
ஆச்சரியப்படுவதற்கு இல்ல,
*
வாழ்க்கை என்பது வாழ்த்தான
வாழ்ந்துட்டு போவோம் கார்த்திக்..!! ❤️
--------------------
தனிமை ஒரு போதை
அந்த போதைக்குள் நம்மை நாம்
இணைத்துக்கொண்டால் அது தரும்
சுகம் என்பது மதுவில் கூட இன்று வரை
கிடைத்து விடாது என்றே நினைக்கிறன்,
ஒரு பத்து நிமிஷம்
தனியா உட்கார்ந்து பாருங்க
ஒரு தனி அறையில அது சொல்லி
கொடுக்கும் பள்ளிக்கூடத்துல
ஆசிரியர் கூட சொல்லிக்கொடுக்காத
பாடத்தை எல்லாம்,
தனிமையை தேடுங்கள்
அது உங்களை சுற்றியே இருக்கிறது
தனிமையை உணருங்கள்
அது உங்களுக்கு சொந்தமான ஒன்று
தனிமையை ரசியுங்கள்
அது உங்கள் சிந்தனையை வளர்க்கும்
தனிமையை கொண்டாடுங்கள்
அது உங்கள் இரவுகளில் ஆயிரம் கதை சொல்லும்,
---------------------------
பிரிஞ்சு போன ஒருத்தங்க
நம்ம கூடயே நம்மல சுத்தியே
இருக்காங்கன்ற ஒரு மெண்டல் ஸ்டேட்
உணர்வ நமக்கு நாமே கொடுக்குறதுக்கு
இன்னொரு உயிர் மேல அவங்க மேல
இருக்க அன்ப அரவணைப்பா காமிங்க,
*
ஒருத்தனோட அரவணைப்பு சொல்லும்
அன்பின் ஆழத்தையும் அழகையும்..!! ❤️
-----------------------
கனவுகளை விற்பனை செய்ய
வாய்ப்பிருந்தால் அரசாங்கத்தின்
கடனையே தீர்க்கும் வல்லமையுடைய
கோடீஸ்வர முதலாளியாவேன் நான்..!!
#DreamsForLife | #DreamsForNight ❤️
-----------------------------
பருவங்கள் மாறினாலும்
இளநரை தோன்றினாலும்
நான் என்பது நான் தானே
நீ எனை ரசிக்கும் போதினிலே,
காலங்கள் கடந்தாலும்
காட்சிகள் மாறினாலும்
நான் என்பது நான் தானே
நீ எனை ஆட்கொள்ளும் வேளையிலே..!!
----------------
தனியே நடந்து வந்தேன்
மின்னல் வெட்டியது வானில்
கருமேகம் விண்ணை சூழ்ந்தது
மண் வாசனை வீச தொடங்கியது,
காற்றின் வேகம் சற்று அதிகமானது
விண் மீது தலை உயர்த்தினேன்
முதல் மழைத்துளி என் மேல் விழுந்தது
இலையுதிர் மாலை சற்று அழகானது,
மழையில் முழுதும் நனைந்தேன்
ஆளற்ற சாலையில் தனியே நடக்கிறேன்
மேகம் தன் கண்ணீரை என்னிடம் பகிர்ந்தது
நான் மழைக்கு ஆறுதலாக அமைந்தேன்,
மழையை ரசிப்பவன் நான்
மழையை வேண்டுபவன் நான்
மழையில் துள்ளி விளையாடும் நான்
இன்று ஏனோ மழலை பருவம் செல்லவில்லை,
எனக்கு பிடித்தமான தனிமை
எனக்கு பிடித்தமான மாலை
எனக்கு பிடித்தமான மழை
எனக்கு பிடித்தமான மண் வாசனை
எல்லாமே பிடித்ததாய் அமைந்தது
பிடித்தவை மட்டுமா அமைந்தது,
பெருமழை நின்றது
மாலை இரவானது
தவளைகள் சத்தமிட்டது
நான் கனவுகளில் மிதந்தேன்,
#BoredomScribbles ❤️
-----------
கவிதை எழுத முயற்சிக்கிறேன்
காதல் செய்ய கற்றுக்கொள்கிறேன்
கண்களில் மட்டுமே நாம் பேசலாம்,
சிற்சில சண்டைகளிடலாம்
சிநேகிதம் பல நாம் காணலாம்
உரையாடியே பொழுதையும் தீர்க்கலாம்,
#BoredomScribbles 💚
-------
காதலிக்க வக்கில்லாதவன் தான்
கவிதை எழுதுவான்,
கவிதை எழுத வக்கில்லாதவன் தான்
காதல் செய்வான்,
இரண்டுக்கும் வக்குள்ளவன் பல
பெண்கள் மீது மையல் கொள்வான்,
இரண்டுக்கும் வக்கில்லாதவன்
ஒரு பெண்ணையாவது
காதலிக்க வைத்து விட வேண்டும்
என்ற முயற்சியை தொடர்ந்து
செய்து கொண்டே இருப்பான்,
விஷயம் என்பது இவ்வளோ தான்
ஆனா நம்ம மனசு தான் அடிச்சுக்குது..!!
#BoredomScribbles ❤️
-----
இரவில் ஓசை சத்தம் ஏதுமின்றி
அமைதி காக்கிறது மரக்கிளை,
கொஞ்சம் கூர்ந்து கவனித்தால்
இலையும் இலையும் ஒன்றோடு ஒன்று
முத்தமிட்டுக்கொள்ளும் பேரன்புடைய
ஒலியானது நம் செவிகளுக்கு
சுகம் தருகிறது,
முடிந்த வரை இரவுகளை ரசியுங்கள்
இரவுகள் ரசனை தன்மை மிக்கவை,
#இரவும்ஒலியும் : ) ❤️
-------------------
கற்பனைகள் நிறைய காண்பது
காட்சியாக எவையேனும் மாறும்
என்ற அதீத நம்பிக்கையில் தான்..!!
: ' ) ❤️
-----------------------
மற்றவர் கண்களுக்கு
நல்லவனாய் தெரிந்து
அவர்களுக்காக ஓர் வாழ்க்கை
வாழ்ந்து இறுதியில் என்ன பயன்..?
கஷ்டமோ நஷ்டமோ
இன்பமோ துன்பமோ
முதலில் நீ நீயாக இருந்தால் தானே
உன்னை நீயே இங்கு விரும்புவாய்..!!
: ' ) ❤️
-------------------
அன்று ஒரு நாள்
நான் சிந்திய கண்ணீர்
இன்று எழுத்துக்களின் மூலம்
என்னால் எழுதப்படும் போது
என் இறந்தகாலம் மோட்சம் அடைகிறது..!!
: ' ) ❤️
---------------------
Know Your Worth !!
இது தெரிஞ்சுக்காம பல பேரு தங்கள
வேணாம்ன்னு நினைக்குறவங்க கிட்ட
இன்னும் தங்கள தாமே தாழ்த்திட்டு
போய்கிட்டு இருக்காங்க,
உங்க Worth என்னன்னு தெரிஞ்சுக்கோங்க
உங்கள தேடி ஆயிரம் பேரு தினம் வருவாங்க,
: ' ) ❤️
----------------------
துயர் நிறைந்த வலிகளையும்
தேங்கி நிற்கும் கண்ணீரையும்
பிறரிடம் வெளிப்படுத்தாமல்
தனக்குள் மறைக்க சில நேரம்
முகமூடி அணிந்த உருவம் இங்கு
ஒவ்வொருவருக்கும் தேவைப்படுகிறது..!!
: ' ) ❤️
-----------------------
நேசிப்பது எல்லாம் சரியான நேரத்தில்
கிடைத்துவிட்டால் ஏமாற்றத்திற்கு
நம்மிடம் மதிப்பு இல்லாமல் போய்விடும்..!!
: ' ) ❤️
------------------------
அன்று Inland லெட்டரில்
ஆரம்பித்த அவர்களின் காதல்
இன்று வாட்ஸாப் எமோஜிக்களில்
உரையாடலின் இடையே
அழகாக கொஞ்சி கொள்கிறது,
காலம் எவ்வளோ வேகமா
தன்னோட மாற்றத்தை
மனிதர்கள் பார்வையிலிருந்து
பார்க்குது பார்த்திங்களா..?
இருவரும் கடிதம் எழுதினார்கள்
வாட்ஸாப் உரையாடல் செய்தார்கள்
காலத்துடன் சேர்ந்து அவர்களின் காதலும்
தன்னைத்தானே Upgrade செய்து கொண்டது
அவர்கள் இருவருடன் கூட்டு சேர்ந்து..!!
----------------------------------
பிரிவுக்கு பின்னும் நினைவலைகளில்
பிரிந்தவர் உடனான என் பயணங்கள்
தினமும் தொடர்கிறது அவருடன் இருந்த
பாதையின் தடமும் வழியும் பிரிவினால்
சுவடின்றி அழிந்த பிறகும் கூட,
இதைத்தான் நா.முத்துக்குமார் அவர்கள்,
பாதை முடிந்த பிறகும்
இந்த உலகில் பயணம் முடிவதில்லையே
என அன்றே தன் பேனாவில் எழுதினார் போல்..!!
------------------------------
நான் பார்த்த இச்சமூகத்தில்
முறுக்கு மீசை கொண்ட
அப்பாக்கள் அனைவரும்
வெகுளித்தனம் கொண்ட
பச்சிளம் குழந்தைகள் என
நான் அறிந்து கொண்டேன்..!!
-------------------------------
கட்டுப்படுத்த முடியாத
கட்டுக்கடங்காகோபம் கூட
சாந்த நிலை அடைகிறது
கண்ணீர் விட்டு அழும் போது..!!
--------------------------------
ஒருவர் மீதான அதீத அன்பு
தொலைக்கப்பட்ட நாட்களின்
தேடலில் தான் முற்று பெறுகிறது..!! 😊💙
-------------------------------
தேடல் கொண்ட மனிதனும்
தேடலை விரும்பும் மனிதனும்
பயணத்தை அதிகமாக நேசிக்கின்றனர்..!! 😊💙
-------------------------------
நினைவுகளை மறக்க நினைத்தாலும்
சில நேரம் ஏதோ ஒரு வடிவத்தில்
நம்மிடம் மீண்டும் மீளா வட்டமாக
வந்து சுற்றிக்கொள்கிறது..!! 😊💙
------------------------------
இனிப்பு பலகார கடையின்
முகப்பு வாசல் கோலத்தின் மீது
எறும்புகள் ஊர்ந்து வந்து
சாரம் சாரமாய் தங்களின் அன்றாட
தினசரி வருகையை பதிவிடுகின்றன,
: ' ) ❤️
----------------------------------
நீயோ
நானோ
காடுகளோ
காலைப்பனியோ
தாகமோ
தனிமையோ
மலைகளோ
மீள் நினைவுகளோ
காலம் கடந்து வந்து விட்டேன்
கட்டவிழ்த்த ஓர் தேசாந்திரியாய்,
----------------------------
நான் சிரிக்கிறேன்
என் பெருஞ்சாபத்தை நினைத்து
என் அறியாமை நிலை நினைத்து
என் வாழ்க்கை பாதையை நினைத்து
என்னையே சில நேரங்களில் நினைத்து,
ஆசைப்பட்ட ஒன்று கிடைக்காத நேரத்தில்
உண்டாகும் வலி எல்லாருக்கும் தெரியுமே
ஆனால் எனக்கு உங்களை விட ஒரு படி
கொஞ்சம் அதிகமாகவே தெரியும்,
மனிதனுக்கு "லக்" என்பது
ஒரு சொடக்கு போடும் நேரம் தான்
அந்த சொடக்கு போடும் நேரத்தில்
ஒன்று கிடைக்கும் இல்லாமல்
கிடைக்காமல் தட்டிக்கொண்டே போகும்,
நான் "லக்" என்னும் வார்த்தைக்கு
பக்கத்தில் கூட செல்ல முடியாமல்
வேடிக்கை பார்க்கக்கூட தகுதி
அற்று தனித்தே நிற்க கூடியவன்,
நீ இவ்வளவு தான் இந்த வகை தான்
இவ்வளவு தான் நீ ஆசை பட வேண்டும்
உனக்கென வகுக்கப்பட்டது இது மட்டுமே
என என் ஆசைகளுக்கு கோட்பாடு வைத்தனர்,
ஒரு தாயிடம் நீ இவ்வளவு தான்
உன் பிள்ளைக்கு தாய்ப்பால் ஊட்ட
வேண்டும் என அத்தாயின் பாசத்துக்கு
முரணாக அவளுக்கு ஆணையிட்டால்,
பெரிதாக விரிந்து கடக்கும் உலகில்
என் ஆசைகளை முடக்கியது யார் குற்றம்,
சரி நான் மட்டும் தான் இப்படி என
என் மீது எனக்கே கருணை ஏற்பட்டபோது
என் மக்களை சற்று உற்று நோக்கினேன்,
பள்ளிக்கூடத்திலே தமிழில் பேசினால்
அபராதம் என்று வாழும் தமிழ் மண்ணிலே
சட்டம் பிறப்பித்தது மேலதிகார வர்க்கம்,
இப்பொழுது என்னவென்றால்
சமஸ்கிருதத்தையும் ஹிந்தியையும்
படித்தாக வேண்டும் என ஏன் தமிழ் நாட்டில்
தேவையில்லாத ஒரு மொழி மக்களிடையே
துணிக்கப்படுகிறது அதற்குத்தானே பொது
மொழி ஆங்கிலம் என்பது இருக்கிறதே நம்
நாட்டுமக்களின் நடைமுறை பழக்கத்தில்,
மாசம் முந்நூறு ருபாய் கரண்ட் பில்
கட்டியவன் ஆயிரத்து ஐநூறு ருபாய்
கட்டும் அளவு வசதி வாய்ப்பு அதிகம்
பெற்றவன் ஆனான் அரசாங்கத்தின் பிடியில்,
இன்று கை தட்டி சிரித்து பேசியவன்
நாளை மருத்துவமனையில் நாடு விட்டு
நாடு பரவி வந்த கொடிய வைரஸ்
நோயினால் அனுமதிக்கப்படுகிறான்
நாளானக்கி ஒன்னு பிழைக்கிறான்
இல்லை பிணவறைக்கு கொண்டு
செல்லப்படுகிறான்,
நாட்டில் பல பிரச்சனைகள் இப்படி
இருக்கும்போது என்னிடமும் சில
கேள்விகள் கேட்கப்படுகின்றன,
போகுற உசுரு எப்போனாலும் போகும்
இதுல நீ அந்த தண்ணி குடிக்குறவன்
நீங்க அந்த தொழில் செய்றவங்க
உங்க ஆளுங்களுக்கான மயானம் அது
இப்படி பல பல கேள்விகளை தினமும்
நானே என் எதிரில் உள்ள ஆட்களிடம்
சந்தித்து கொண்டு தான் இருக்கிறேன்,
இந்த சாதி,மதம்,இனம்,மொழி
இதுக்கெல்லாம் அப்பாற்பட்டவன் நான்
நான் வாழ்ந்துட்டு இருக்க உலகம் வேற
இது ரொம்ப இருட்டான கொடிய உலகம்,
இங்க நண்பர்கள் வட்டம் ரொம்ப கம்மி
அதனால இன்னோருத்தங்க மீதான
கருணை அதிகமா இருக்கும் எனக்கு
கிடைக்காத கருணையின் பலனா,
உடன் இருந்தே உண்டகம் செய்த
கூட்டத்தின் துரோகத்தையும்
நித்தம் சமாளித்து வந்தவன் நான்,
ஏமாற்றங்களும் அவமானங்களும்
என்னை மட்டுமே தேடி ஓடி வரும்
அளவிற்கு பெரும் பாக்கியசாலி நான்,
என் இரண்டு கால்களை சுற்றியும்
பாம்புகள் இங்கு படையெடுத்து நிற்கும்,
ஊர் சுற்றும் கழுகு கொத்தித்திங்கும்
ஜட பிணமாக பூமியில் கிடக்கிறேன்,
இதுவே நான் இப்படியாக நான்
மனம் முழுதும் தீரா ரணம் இருந்தும்,
நான் சிரிக்கிறேன் : ' ) ❤️
----------------------------------------------
மக்களின் மனநிலையை,
அழுகையை,சிரிப்பை,
கவலையை,சந்தோஷத்தை
ஒருவனால் எழுத்துக்களில்
கொண்டு வர முடியுமானால்
அதுவே தேவை அதுவே தர்மம்,
----------------------------------
என்னால முடியவே முடியாதுன்னு
உலகம் ஒரு விஷயத்த என்கிட்ட
இருந்து ஒதுக்கிவைக்குறப்போ
அது எனக்கு கிடைக்க நான் முயற்சி
செஞ்சுட்டே தான் இருப்பேன் கடைசி
வரைக்கும் என்ன ஆனாலும்,
அவளோ ஈஸியா எதும் கிடைச்சுடாதுல
அப்படி கிடைச்சுட்டா அதோட மதிப்பு
நமக்கு எப்பவும் தெரியாமையே போயிடும்,
So, I Won't Give up Sir !!
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும்
முயற்சியானது ஒருவனது செல்வத்தை
வளர்க்கும்,முயற்சி செய்யாமல் இருத்தல்
ஒருவனை வறுமையில் சேர்த்துவிடும்,
தோற்றாலும் முயற்சி செய்தே தோற்பேன்
ஒரு வேலை சிறு வெற்றி என்பது
எனக்கு அரிதாக நித்தம் கிடைக்குமாயின்..?
ஆனாலும் முயற்சி தொடரும்..!!
: ' ) ❤️
----------------------------------------
அணைகின்ற விளக்கு தான்
பிரகாசமாக நின்று எரியுமாம்,
பிரிவுக்கு முன் சொல்லப்படும்
மிஸ் யூக்கள் தான் உலகில் அதிகமாம்,
இரண்டையும் ஒப்பிட்டு பார்த்தால்
அதிகம் பாதிப்படைந்தோர்
பெரும்பாலும் ஆண்கள் வர்க்கமே,
அன்று ஜோடியாய் இருந்த இடத்தில்
இன்று கையில் காஃபி கப்புடன்
அவன் மட்டும் அமர்ந்திருந்தான் தனியே,
~ மிஸ் யூக்கள் அவனைச்சூழ !! : ' ) ❤️
---------------------
*_*
விட்டு சென்றவர்கள்
நம்மிடம் விட்டு சென்ற
மிச்சத்தை நினைக்கும் போது தான்
மனதில் வைராக்கியம் அதிகமாக
சுரக்கிறது கொஞ்சம் சூடு சுரணையுடன்,
: ' )
-----------------------------
*_*
மூக்குக்கண்ணாடி அணிந்தவர்கள்
எல்லாம் உயர் தர படிப்பாளிகள் என்று
நம்பிய வயதில் வாழ்ந்து கெட்டவன் நான்,
அதன் விளைவு,
தலை வலிக்கு நானும் மூன்று வருட
காலம் கண்ணாடி அணிந்திருந்தேன்,
: ' ) ❤️
-------------------------------------
*_*
பாக்கெட் கவரில் தொங்கும்
செக்க சிவந்த தேன் மிட்டாய்கள்
பெட்டிக்கடையின் முகப்பை
மேலும் வர்ணஜாலப்படுத்தியது,
: ' ) ❤️
--------------------------------------
வார இதழ்களில் கிடைக்கும்
சன்மானத்திற்காக எழுதுபவன் அல்ல,
என் வலியை எழுத்துக்கள் மூலம்
பிறரிடம் பிரதிபலித்து காட்டுபவன் நான்,
: ) ' ❤️
-------------------------
நம் அமைதி முகமூடிக்குள்
ஒளிந்திருக்கும் பல பேரின்
சுயரூபத்தை வெளிக்கொண்டு வருகிறது,
: ) ' ❤️
----------------------------------
ரொம்ப வருடங்களாக
படிக்காமல் கிடப்பில் கிடந்த புத்தகம்
என்னை உன் கையில் ஏந்திக்கொள்
என் பேரழகு தூசி படிந்து சிதைந்து
கொண்டிருக்கிறது என என்னிடம்
தீரா யாசகம் செய்து வருகின்றது,
: ) ' ❤️
-----------------------------------------
பள்ளிக்கூட மர பெஞ்சில் நண்பர்களின்
பெயரை காம்பஸில் கிறுக்கி வைத்தேன்,
அந்த நான்கு பேர் தான் என் இறப்பில்
நான்கு முனையில் நிற்க போகிறார்கள்
என நினைத்து வந்தேன்,
பள்ளிக்கூடம் கல்லூரி ஆனது
கல்லூரி முடிந்து வேலைக்கு சென்றாயிற்று,
அன்று நான் கிறுக்கி வைத்த
நண்பர்களின் பெயர்கள் எல்லாம்
காலப்போக்கில் சாக்பீஸ் துகள்களாக
காற்றில் கலந்து மறைந்து போயின
அந்நண்பர்களுடன் சேர்த்து,
காலத்தின் சுழற்சி தான்
எத்தனை நினைவுகளை நமக்கு
தினந்தோறும் நினைவு படுத்தி வருகிறது,
தனிமையை ரசிக்க தெரிந்தவனுக்கு
நினைவுகள் என்றும் தீஞ்சுவையே,
போதி மரம் போன்ற வாழ்க்கையில்
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போதனை
இன்று பள்ளிக்கூடத்தின் வருகைப்பதிவு,
மீண்டும் பள்ளி நினைவுக்கு
திரும்ப செல்கிறேன் இன்று
வருகை பதிவின் "S" வரிசையில்
என்னுடைய பெயரில் மட்டுமே மூன்று
நண்பர்கள் வேறு வேறு இனிஷியலில்,
கணக்கு வாத்தியார் நடத்தும்
எனக்கு பிடித்த அல்ஜீப்ரா சேப்டரின்
சூத்திரம் கருப்பு பலகையில் இன்றைய
மாணவர்களுக்கு எழுதப்பட்டு இருந்தது,
அந்த காலத்துல நாங்கல்லாம் - ன்னு
பெருசுங்க சொல்லுறதுல இருக்க
சுகம் என்பது இன்று மனதளவில்
பெரிய தாக்கத்தை தருகிறது எனக்கு,
பள்ளிக்கூட வளாகம் முழுவதும்
என் கால் தடங்களின் அச்சுக்களை
விட்டுவிட்டு தான் வந்திருக்கிறேன்,
நினைவுகளை நெஞ்சில் சுமக்கும்
சாதாரண மாண்புமிகு மாணவனாக
இன்று விஜயம் செய்கிறேன்,
: ) ❤️
--------------------------------------
முகத்தை மறைக்கும் அளவு
வளர்ந்திருக்கும் தாடிக்குள்
கண்ணாம்பூச்சி ஆடுகிறது
நினைவலைகளின் மறக்க
நினைக்கும் கோரத்தாண்டவங்கள்,
*... : ) 💚
---------------------------------------------
குளிர்காற்று இரவுகளில்
இதமாக வீசும் போது காதல்
கார்குழல் கடவையாக பிரதிபலிக்கிறது,
... : ) ❤️
-----------------------
நேற்றைய சங்கதி நேற்றோடு முடிந்தது
இன்று கிளறினால் புதியது பிறக்காமலே
போய் விடும்,
... : ) ❤️
--------------------------------------------
இக்கால காதலர்களின்
உரையாடல்களில் மெய்நிகர்
முத்தங்களுக்கு தான் மவுசு அதிகம்,
... : ) ❤️
------------------------------------
அழகான காதல் கதையை
நிலவின் ஒளியில் எழுதிக்கொண்டிருப்பதால்
இரவுக்கு நான் செல்ல பிள்ளை,
... : ) ❤️
-----------------------------------------
இது தான் இக்கதையின் முடிவு
என உறுதி செய்யப்பட்ட பின்னரே
அக்கதையினை எழுத தொடங்க வேண்டும்,
... : ) ❤️
---------------------------------------
வேண்டாம் என
ஒதுங்கி செல்பவர்களிடம்
நீயாக போய் பேசினால்
உன் சுய மரியாதையை
ஒரு நாள் இழக்க நேரிடும்,
... : ) ❤️
----------------------------------------
போகும் தூரம் சற்று
தொலைவாக இருந்தால்
ராஜாவின் சங்கீத ராகத்தை
ஒலிக்க விட்டு செல்லுங்கள்
மனதிலும் மகிழுந்திலும் சேர்த்து,
-
டாக்ஸி டிரைவர் ... : ) ❤️
-----------------------------------
மனிதர்களோட குணமும்
நிறம் மாறுவது தான்
பின்ன பச்சோந்திய மட்டும்
திட்டி என்ன பலன்..?
... : ) ❤️
---------------------------------------
பிறர் கஷ்டம் புரிந்து
அவரின் துன்பம் துடைத்து
அவருடனான நீண்ட பயணத்தில்
தாங்கள் வந்த தேடலுக்கான காரணத்தை
அவருக்கு சரியாக உணர்த்துபவன் தான்
ஓர் சிறந்த கம்யூனிசம் பேசும் தேசாந்திரி,
... : ) ❤️
-----------------------------------------
கண்ணீர் பெருங்கடலாக
கண்களில் நிற்கும் போது
உதடுகள் மட்டும் சிரித்தால்
அங்கு அவன் பக்குவப்பட்டுவிட்டான்,
... : ) ❤️
---------------------------------
கொத்து கொத்தாக
பல வண்ண ரோஜாப்பூக்கள்
கொடுக்கலாம் என மனம் தேடும் போது
நான் தேடும் மயிலாஞ்சி என் பூக்கடைக்கு
அழையா வாடிக்கை(யாழினி)
-
பூக்கடை காதலன்... : ) ❤️
-------------------------------------------------------
கடிதம் எழுதினேன்
காதல் மடல் வரைந்தேன்
உன் விலாசத்திற்கு அனுப்பினேன்
கொஞ்சம் பிரித்து பார்த்து சொல்
பிள்ளையார் சுழி போட்டு
தொடங்கி இருக்கிறேனா இல்லையா என..?
... : ) ❤️
--------------------------
மரப்பாச்சி பொம்மையிடம்
மணிக்கணக்கில் பேசுபவன் நான்,
என் பேச்சுக்கள் அதன் செவிகளுக்கு
சுகம் சேர்க்காது என நன்று தெரிந்தே,
இருந்தும் நான் ஏன் பேசுகிறேன்..?
என் பேச்சை கேட்க அது மட்டுமே
தயாராக இருக்கிறது என
நான் அதனிடம் உணர்ந்ததினால்,
-
தனிமை காதலனின்
டைரி பக்கத்தில் இருந்து,
... : ) ❤️
----------------------------------
பசிக்கான உணவுக்கு ஒருவன்
இறுதியாக வேறு வழியேயின்றி
கையேந்தியும் கிடைக்கவில்லை எனில்
அதை விட உச்சக்கட்ட வன்முறை
வேறு என்ன இருந்து விட முடியும்..?
... : ) 💔
----------------------------------
வாய் விட்டு சிரித்தால் தானே
நோய் விட்டு போகும்..?
நான் உதடுகளே விரியா
வண்ணம் தானே சிரிக்கின்றேன்,
நோய் உடலுக்குள் ஊடுருவி
குடில் போட்டு என்னிடமே தங்கி கொள்ளும்,
... : ) ❤️
-----------------------------------
நான் விதைத்த பேரன்பில்
துளிராக பிறந்த செடியான நீ
இன்று மரமாக மாறிய பின்
எனை இக்கணம் மறந்ததேனோ..?..!!
... : ) ❤️
------------------------------------
சைவ முத்தத்தில்
சுவை காண்பவன்
முதல் காதலன் என
வரலாற்றில் இன்றே எழுதுங்கள்,
... : ) ❤️
------------------------------
அன்று பிரிந்த இருவர்
இன்று வேறு வேறு திசையில்
இன்று இணைந்த இருவர்
அன்று வேறு வேறு கருவில்,
... : ) ❤️
--------------------------------
யாரும் நம்பாத பல காதல் கதைகளை
கடற்கரை காற்றின் ஈரப்பதத்தில் அமர்ந்து
நீயும் நானும் பேசி பொழுதை கழித்தோம்,
... : ) ❤️
--------------------------------
மலம் கழிக்கும் கழிப்பறையில்
எப்படி கவிதை பிறக்கும் என்றான்..?
வைகை புயல் சொல்வது போல்
பல சிந்தனைகள் பிறக்குமிடம்
அங்கு தான் என நான் கூறினேன்,
... : ) ❤️
------------------------------------------
குடலை புடுங்கும் நாற்றம்
அவசரத்திற்கு நான் மட்டுமே
வழிப்போக்கன் என்னிடம்
வந்து சென்ற வண்ணம் இருக்கிறான்
நானோ அவன் கழிவை சுமக்கிறேன்,
இப்படிக்கு
பேருந்து நிலைய கழிப்பறை,
... : ) ❤️
---------------------------------------
நான் சென்று திரும்பும்
தெருக்கள் முழுவதும் பூ வாசம்,
இப்படிக்கு
பூ விற்கும் பெண்,
... : ) ❤️
------------------------------------
போகின்ற வழியில்
எனக்கு பின் செல்லும்
மரங்கள் அத்தனையும்
என்னை பார்த்து கதைக்கின்றது
முன்னோக்கி நகர்ந்து செல் என்று,
... : ) ❤️
-------------------------------------
ஒவ்வொருத்தரும்
தன்னோட மனசாட்சி கிட்ட
தனக்கு தானே சொல்லிக்கிறது
இதுவாகத்தான் இருக்கும் நிச்சயமா ,
~ " Being Myself is Not Easy "
... : ) ❤️
-------------------------------------
தேடலின் சுகம் கண்டேன்
இதுவும் எனக்கு பிடித்து போனது,
தனிமையை உணர்ந்தேன்
மேலும் பல இரவுகள் என் வசம் ஆனது,
... : ) ❤️
------------------------------------
தோட்டத்து செடி மீது அமர்ந்து
சாரல் மழையில் நனைந்த வண்ணம்
முத்தம் கொடுத்துக்கொண்டன
இரண்டு பைங்கிளிகள்,
அடுத்து வரப்போகும் பெருமழையில்
மேலும் அவைகள் நனையாதிருக்க
குடை பிடித்தேன் காதல் ஜோடிகளுக்கு
என் சார்பில் நான் காட்டும் பேரன்பாக,
... : ) ❤️
------------------------------------
தினமும் நான் சந்தித்து பேசும்
எளிய மாமனிதர்கள் தான்
என் கதைகளின் எழுத்துக்களுக்கு
உயிர் கொடுத்து நிறைந்து கிடக்கிறார்கள்,
... : ) ❤️
-------------------------------------------
பத்து விதமான கையெழுத்துக்களில்
வேறு வேறு கோணங்களில் எழுதியும்
எழுத்தாளனுக்கு எழுத்தின் மீதுள்ள
சிந்தனை போதை துளியும் குறையவில்லை,
... : ) ❤️
-----------------------------------------
பலரால் பல வழிகளில்
நிராகரிக்கப்பட்ட ஒருவன்
நாளை அடையப்போகும்
முன்னேற்றத்தில் தன் கொள்கையின்
பிடியில் இருந்து சற்று உயர்ந்தே நிற்பான்,
... : ) ❤️
--------------------------------------------
பலருக்கு எளிதாக கிடைக்கின்ற
ஒரு பொக்கிஷம் ஒருவனுக்கு
எவ்வளவு போராடியும் கிடைக்காத
பட்சத்தில் அவன் வேறு எதற்கும்
ஆசைப்படாத ஜடம் போல் ஆகிறான்,
... : ) 😷❤️
-----------------------------------------
ஒரு சொம்புல தண்ணி
மோந்து கொடுப்பா என்பது தான்
கடைசி காலத்துல பாட்டி/தாத்தா - க்கள்
பேரன்/பேத்தி - களிடம் எதிர்பார்க்கும்
அதீத பேரன்புடைய சின்னஞ்சிறு ஆசை,
.... : ) ❤️
----------------------------------------------------
பலர் இது ஒரு நல்ல படம்
என்று சொல்லிய அப்படத்தை
பார்ப்பதற்காக இரண்டு மணி நேரம்
ஒதுக்குவது என்பது காதலி தன்னிடம்
சொல்ல வரும் காதலை வேறொருவர்
மூலமாக முன்கூட்டியே தெரிந்து
அவள் சொல்லப்போகும் ஐ லவ் யூ
விற்காக காத்திருப்பது போன்றது,
... : ) 💚
----------------------------------------
இரு இளம் காதலர்கள்
முத்தமிட்டு கொண்டிருக்கின்றனர்
ஒலி எழுப்ப வேண்டாம் அவர்களுக்கு
இடையூறாக இருக்கும் என சைக்கிள்
பெல்லினை அடிக்காமல் சென்றேன்,
~ இரு காதலர்களாக " Love Birds " : ) ❤️
------------------------------------------
ஓ, சரியான நேரத்துக்கு வந்துட்டியா..?
இப்பவும் நான் தான் தாமதம் போல,
உன்கிட்ட இன்று நான் பேசும்
மனநிலையில் இல்லை நீயும் கூட,
ஆக, கண்களின் வழியே நம் கடைசி
சந்திப்பை அரங்கேற்றிக்கொள்வோம்,
மௌனம் மட்டுமே ஆட்கொள்கிறது
நம் கண்களில் மழை பொழியவில்லை,
இருவரின் உதடுகளும் சிரிக்கிறது
ஆனால் சிரிப்பில் புன்னகை இல்லை,
பேசும் நம் சொற்கள் கூட தீர்ந்து
உரையாடல்களும் வெறுமை அடைகிறது,
இந்த தினத்தில் முடியும் என்று
தெரியாமலே காதலித்து விட்டோம் போல்,
புரியாமலே காதல் செய்தது அதிகம்
இப்போது புரிந்துகொண்டு பிரிவோம்,
இவ்வுறவுக்கும் ஓர் முற்றுப்புள்ளி
அவ்ளோதான்ல இந்த காதல் ஹ்ம்ம்,
உன் முகம் பார்த்து பேசமுடியாமல் கண் வரையத் தெரியாத ஓவியன் போல நான்,
காதலை விட அதன் மீதான
ஞாபகங்களுக்கு உயிர்ப்பு அதிகம் தான்ல,
நினைவுகளில் மட்டுமே இனி
கை கோர்த்து நடக்க பழகிக்கொள்கிறேன்,
சொல்லமுடியாத பேரிடர் தாக்கங்களும்
பல பெருந்துயரங்களும் நிறைந்தவை
நம் நேர்காணலின் இக்கடைசி சந்திப்பு,
கிளம்புறேன் (.....)
கண்ணெல்லாம் ஒரு மாதிரி..? : ) ❤️
-------------------------------
அழியப்போகும் உலகத்தில்
கடைசியாக நீயும் நானும் முத்தமிட்டு
பூமியில் புதிதாய் மீண்டும் பிறப்போம்
என உரையாடலில் கதைத்து
கொண்டிருக்கிறார்கள் அக்காதலர்கள்,
: ) ❤️
---------------------------------
சிலை திருடப்பட்டது தெரியாமல்
உச்சி கால பூஜை நேரத்தில்
பூட்டப்பட்ட கோவிலின் முன்
பக்தன் ஒருவன் கடவுளை வழிபட்டான்,
சிலை ஒரு திருடனால்
திருடப்பட்டு விட்டது என்ற
உண்மை பக்தனுக்கு தெரிந்தால்
மனம் உருகி வழிபாடு செய்த
அவனின் பிரார்த்தனையை
எங்கு சென்று யாரிடம் முறையிடுவான்..?
: ) ❤️
---------------------------------
ஏதோ மனக்குழப்பத்தினால்
சாலையில் திடீரென்று நீங்கள்
மயக்கமிட நேரும் தருவாயில்
யாரென்றே தெரியாத ஒருவர்
வழிப்போக்கனாக உங்களுக்கு
முன் வந்து உதவி செய்யும் போது
அவர் குணாதிசயங்கள் மூலம்
மனிதம் இன்னும் மனிதனிடம்
கொட்டிக்கிடக்கிறதென்று
நம்மால் புரிந்து கொள்ள முடியும்,
: ) ❤️
---------------------------------
முன் ஜென்மம் என்ற ஒன்று
என் வாழ்வில் இருந்தால்
அதை சோதித்து பார்க்க ஆசை
வாழ்ந்து பார்க்க போவதில்லை,
: ) ❤️
------------------------------
இன்னொருவரின் கண்ணீருக்கு
நீ ஆறுதலாக இருந்தால்
நாளை உன் கண்ணீரை துடைக்க
பெயர் தெரியாத ஒருவன்
உன் வாழ்வில் விஜயம் செய்வான்,
: ) ❤️
--------------------------
உனக்கு புரிந்து கொள்ளும்
பக்குவம் இல்லை என்றார்கள்,
என் எழுத்துக்களில்
இன்னொருவரின் தேடலை
யூகித்து எழுதும் அளவிற்கு
என் பக்குவத்தை நான்
வளர்த்துக்கொண்டேன்,
ஆனால் அவர்கள்
இன்றும் எனக்கு
பக்குவம் வரவில்லை
என்றே நினைக்கின்றனர்,
நினைப்பவர் நினைக்கட்டும்
நான் இப்படித்தான் என்று
சுதந்திரமாக வாழ தொடங்கிவிட்டேன்,
: ) ❤️
--------------------------------------
நாட்கள் நகர நகர இளமை பருவம்
காணாமல் போனது ஆனால்
நான் நானாகவே இருக்கிறேன்
மனதிலும் சரி குணத்திலும் சரி,
: ) ❤️
----------------------------------------------
கடவுள் துணையாக இருப்பார்
என மனம் உருகி இறைவனை
வழி பட்டவன் தான் நினைத்த
காரியத்தில் ஏமாறும் போது
தான் வழிபட்ட இறைவனேயே
அசிங்க அசிங்கமாய் சாடுவான்,
: ) ❤️
----------------------------------------
துரோகம் விதைத்தவன்
தினமும் பழக்கப்பட்டவன்
அதுவே வன்மம் கொண்ட
நெஞ்சம் உடையவன்
ஏழரை நாட்டு சனி போன்றவன்,
: ) ❤️
--------------------------------------
காதல் செய்பவன் தான்
முத்த சேகரிப்பு வங்கியில்
தலைமை பொறுப்பில் இருப்பான்,
காதல் செய்யாதவன்
வங்கியின் வாசல் கதவில்
உட்கார்ந்து உள்ளே அவன்
சேகரித்த முத்தங்களை
வேடிக்கை பார்த்து வேதனை அடைவான்,
: ) ❤️
-------------------------------------
ஐந்தறிவு ஜீவனின்
அதீத அன்பை கூட
பிஸ்கட் துண்டு போட்டால் தான்
பெற முடியும் என்று இருக்கும் போது
ஆறறிவு ஜீவனிடம் காணிக்கை
ஏதுமின்றி கிடைக்காத அன்பை
எதிர்பார்த்து என்ன பலன்..?
: ) ❤️
-----------------------------------
வயிற்று பசிக்கு அன்னதானம்
போடும் அனைத்து கரங்களும்
பிச்சை பாத்திரம் ஏந்திய
கைகளுக்கு நித்தம் பொற்கரமே,
: ) ❤️
--------------------------------------
நான் எழுதும் எழுத்துக்கள்
பிறருக்கு வாசிப்பின் போது
சந்தோஷத்தை தருமானால்
என் வாழ்நாள் முழுவதும்
அவர்களுக்கு கடமைப்பட்டுள்ளேன்,
-----------------------------------
வன்முறை வன்மமா
எப்போ மாறுதுன்னு தெரியுமா..?
தவறான ஒரு விஷயம்
சண்டையா இரு தரப்பினருக்கு
நடக்கும்போது இடையில் எரியும்
தீயில் எண்ணெய் ஊற்றிய
கதை போல் மேலும் சிலரால்
கொழுந்து விட்டு எரிய செய்வது,
நீரை ஊற்றி அணைக்காவிட்டாலும்
சரி, எண்ணெய் ஊற்றி மேலும்
காட்டுத்தீ போல் எரிய வைக்காதீர்கள்,
: ) ❤️
---------------------------------
வட்டார வழக்கில்
பயன்படுத்தப்படும் சொற்களின்
அழகை ரசிப்பவன் நிச்சயம் ஒரு
நாடோடியாய் தான் இருப்பான்,
: ) ❤️
-----------------------------
நான் தேடி செல்லும் பயணத்தில்
எனக்கான தேடலின் பொருள் நீ
ஆனால் எங்கு தேடியும் நீ என்
கண்களில் மட்டும் அகப்படவில்லை,
: ) ❤️
----------------------------
✨️❤️
புதிரான கேள்விக்கு
எளிதான விடை நீ,
நானோ கேள்வியே
புரியாமல் இருந்துவிட்டேன்
ஆரம்பத்தில் இருந்தே,
-----------------------------------------
இரவுகளில் மட்டும் தான்
எழுதுவீர்களா என்று ஒருவர் கேட்டார்,
இரவுகள் மட்டும் தான் எனக்கு
துணை நிற்கிறது என சொன்னேன்,
: ) ❤️
-----------------------------
என்னை மட்டும்
நனைக்கும் மழை என
ஒருவன் கவிதை எழுதியிருந்தான்,
கற்பனைக்கு கூட மழை ஏன்
ஓர வஞ்சனை பார்க்கிறது
என என்னை நானே
கேள்வி கேட்டுக்கொண்டேன்,
: ) ❤️
-----------------------------
பூக்காரரின் கூடையில் இருந்த
ரோஜாப்பூ எனை பார்த்து சிரிக்கிறது
நீ தான் எனை காசு கொடுத்து
வாங்காத காதலன் என்ற பெருமிதத்தில்,
: ) ❤️
-----------------------------------
வானமே எல்லை
ஆசையே மாயை
நிறைவேறாத ஆசைகளுக்காக
அண்ணாந்து வானத்தை பார்த்து
கதைத்து கொண்டிருக்கிறேன்,
: ) ❤️
----------------------
கண்ணாடி இதயத்தில்
கல் வீசிவிட்டு திரும்பி
பார்க்காமல் ஓடியவர்களை
நினைத்து தினம் தினம் இரவு
கண்ணீரில் தலையணையை
நனைப்பவர்கள் தான்
அதே நிலையில் இருக்கும்
இன்னொருவருக்கு ஆறுதலாக
துணை நிற்கின்றனர் அன்பை விதைத்து,
: ) ❤️
-------------------------------------
உரையாடல் தீர்ந்தால் என்ன
வா முத்தங்களில் பேசுவோம்
என்றவள் கண் திறந்து பார்த்தால்
இன்று கனவாகி கலைந்து போனாள்,
: ) ❤️
--------------------------------
நாளைய தினத்தில்
என் கையில் தவழ்ந்து விளையாடும்
எதிர்ப்பாரா ஆலங்கட்டி பெருமழை நீ,
: ) ❤️
---------------------------------
எந்நேரமும் உண்மையை
மட்டுமே ஒருவன் பேசினால்
அவன் அரிச்சந்திரன் இல்லை,
உண்மை பேசுவது போல்
நிறைய கற்பனைகளை
கட்டு கதையாக சாமர்த்தியத்துடன்
எதிரிலிருக்கும் மற்றவர்கள் நம்பும்
படி சொல்கிறான் என்பதே சரியானது
: ) ❤️
-------------------------------
தீர்ந்து போகாத காமத்தில்
நீயும் நானும் குளிர் காய்ந்தால்
நம்மை தாங்கும் பூமியெங்கும் மழை,
#BoredomScribbles ❤️
--------------------------------
சொல்லப்படாத காதல்கள்
அனைத்தும் கவிதையிலேயே
தங்களை மெருகேற்றி
அழகு பார்த்துக்கொள்கின்றன,
#BoredomScribbles ❤️
-----------------------------
நாளை காலை
அவளை சந்திக்க போகும்
ஐந்து நிமிட சந்திப்புக்காக
ஐநூறு நட்சத்திரங்களுக்கும் மேல்
தேடி தேடி முந்தைய நாள் இரவில்
அவள் நினைவினால் தூங்காமல்
எண்ணிக்கொண்டிருக்கிறான்,
ஆண்களுக்கே உண்டான
ஒரு எக்ஸைட்மெண்ட் அது
அது தரும் சந்தோஷத்திற்கு
இங்கு அளவுகோல் இல்லை,
காதலின் சுகம் காண
ஆசை படுபவர்கள் ஆண்கள்,
நிறைய ஆண்கள் காதலில்
சபிக்கப்பட்டவர்கள் தான்
ஆனால் நல்ல காதலர்கள்
அழகாக காதலிக்கவும் தெரிந்தவர்கள்,
பெண்மையை ரசிக்க தெரிந்த
ஒரு ஆண் தான் அவன் காதலையும்
மிகவும் ரசனையுடன் கையாளுவான்,
காதல் இல்லையேல்
பூமியில் உயிர்கள் இல்லை,
#BoredomScribbles ❤️
-------------------------------------
போ என்னும் வார்த்தைக்குள்
போகாதே என்ற ஆயிரம் ஆயிரம்
அர்த்தங்கள் அடங்கியுள்ளதாம்,
இதை புரிந்து கொண்டவன்
காதலிக்க தகுதியானவனாம்,
புரிந்து கொள்ளாதவன்
கடைசி வரை ஒற்றன் தானாம்,
*
பெண்களின் உரையாடல்
படலத்தில் இருந்து எடுக்கப்பட்ட
ஓர் பெண்ணிய விமர்சனம்,
#BoredomScribbles ❤️
--------------------------------
வாடிப்போன அவளின் முகம்
"ஐ மிஸ் யூ" என்ற அவனின்
ஒற்றை குறுஞ்செய்தியை
பார்த்தவுடன் அனிச்சம் பூ பூத்த படி
செழுமையான மகிழ்ச்சி அடைகிறது,
#BoredomScribbles ❤️
------------------------------------------
கதைக்க ஆயிரம் கதைகள்
நம்மிடம் இருக்கும்போது
அதை பொறுமையாய் அமர்ந்து
கேட்க மனிதர்களின் செவிகளுக்கு
காலப்போக்கில் நேரமில்லை,
#BoredomScribbles ❤️
-------------------------------
நாம் ஆசைப்படுகின்ற
அத்தனை ஆசைகளும்
இன்னொருத்தரின்
பார்வை கண்ணோட்டத்தில்
ஆகச்சிறந்த பேராசைகளே,
#BoredomScribbles ❤️
--------------------------
ஒருத்தனோட நிம்மதியான
பெரு மூச்சுன்றது மன அழுத்தம்
இல்லாம இந்த நாள கடந்துட்டா
போதும் - ன்ற சின்ன எதிர்பார்ப்பு தான்,
#BoredomScribbles ❤️
----------------------------------
நான் பார்த்து பார்த்து
பழகிய நிறைய மனுஷங்க
இன்னக்கி எனக்கு ஜஸ்ட்
ஒரு பாஸிங் கிளவுட்ஸ் தான்..!!
#BoredomScribbles | #DarkNight
-----------------------------
மற்றவர்களிடம் எனை நீ
பொய்யாக சித்தரிக்கிறாய்,
அவர்களுக்கு நான் யாரென்று
தெரியும் என் குணநலம் உட்பட,
நீ சித்தரிக்கும் என் பொய்யான
உருவத்தின் மாற்று உருவமே நான்,
: ' ) 💚
-----------------------------------
நீ ஆசைப்படும் அத்தனைக்கும்
தகுதி அறிந்து கோட்பாட்டுடன்
ஆசைப்படு,ஏமாற்றங்களை
இக்கணம் பொய் ஆக்கலாம்!
------------------------------------------
போனது போனதாகவே இருக்கட்டும்
அடுத்த அத்தியாயத்திற்கான
புதிய பிறப்பில் புரட்சி செய்ய பழகு!
-----------------------------------------
நம் சரியான அணுகுமுறைகளை
தவறாக புரிந்து கொண்டு அதற்கு
நாம் சரியான விளக்கம் அளித்தும்
அதையும் ஏற்றுக்கொள்ளாமல்
மீண்டும் மீண்டும் தன் தவறான
புரிதலை முன் வைக்கும் நபர்களிடம்
இருந்து சற்று விலகி இருப்பது நமக்கு நன்று!
-------------------------------------------------------------
புண்பட்ட மனதை
புகழ் அடைந்து ஆற்று !
: ' ) ❤️
----------------------------------------------------------
உண்மையை காட்டிலும் அதிகமான
பொய் வாக்குறுதிகளுக்கே
நீதிமன்றம் பகவத் கீதையின் மீது
சத்திய பிரமாணம் செய்ய சொல்கிறது!
------------------------------------------------------------------
எந்த ஒரு கடவுளையும்
இழிவுப்படுத்தாமல் தான்
ஒரு நாத்திகன் என்பதில்
மட்டும் சரியாக இருக்கும் ஒருவன்,
எந்த ஒரு நாத்திகனின்
உணர்வையும் தவறாக
சித்தரிக்காமல் தான் ஒரு
ஆத்திகன் என்பதில் மட்டும்
சரியாக இருக்கும் இன்னொருவன்,
எந்த ஒரு தனிப்பட்ட முரண்பாடும்
இல்லாமல் இவ்வாறாக மனிதன்
இருந்துவிடுதல் என்பதே இன்றைய
நடைமுறை சாத்தியத்திற்கு தேவை,
சின்ன சிந்தனையில தான்
இங்க எல்லாமே மாறுபடுது!!!
-----------------------------------------------
✨️❤️
தொலை தூர உறவில்
காதல் வயப்பட்டவர்கள்
இப்பிரபஞ்சத்தின் சபிக்கப்பட்ட ஜீவ ராசிகள்..!!!
----------------------------------
~
வறண்ட நிலம் என
தூக்கிவீசப்பட்ட நான்
யாரோ ஒருவரின் மனதில்
வானம் பார்த்த பூமியாய்
இருந்து விட்டு போகிறேன்.
-------------------------------------------
❤️
அமைதியின் போர்வைக்குள்
இரவுகள் இருப்பதால் இங்கு
நிறைய பேர் இரவுகளை தங்களது
Comfort Zone ஆக பார்க்கிறார்கள்..!!!
')
----------->
❤️
காதலாக இருக்கும் வரை நல்லது
அது எப்போது ஆகப்பெருங்காதல்
ஆகிறதோ அங்கு தான் வலியும்
வேதனையும் அதிகமாக மாறுகிறது,
விளைவு..?..!!!
அவள் காதல் செய்தாள்,
நான் ஆகப்பெருங்காதல் செய்தேன்!
-------------->
❤️
எதற்காக இத்தனை எழுத்துக்கள்..?
சிலர் நான் சொல்லுவதை கேட்டால்
சிரிப்பார்கள்,சிலர் நான் சொல்லுவதை
கேட்டால் கேளிக்கை செய்வார்கள்,
இன்னும் சிலர் நான் சொல்லுவதை
கேட்டு என் மீது கருணைப்படுவார்கள்,
எதற்காக இத்தனை பேரிடம் சென்று
நான் இவற்றையெல்லாம் சொல்ல
வேண்டும் என்று எடுக்கப்பட்ட முடிவு
தான் என் எழுத்துக்கள்,
மகிழ்ச்சியோ துன்பமோ அது
என்னுடனும் என் எழுத்துக்களுடன்
மட்டுமே இருந்துவிட்டு போகட்டும்,
"நான்" என்பதே கடல் அலைகளை
போன்ற ஒரு சுழற்சி முறை தானே.
')
---------->
ஒருத்தர் கிட்ட நீங்க Comfort ஆ இருக்க
முடியுதுன்னா உங்க லைஃப்போட
"Go to Person" நிச்சயமா அவங்க தான்,
Because அந்த Comfort எல்லார்கிட்டையும்
நமக்கு வந்துறாதுல,இதத்தான் "Beauty of Relationship" ன்னு சொல்லுறாங்க.
----------->
💙
இந்த பாட்டு உனக்கு பிடிக்கும்ல,
இந்த படம் உனக்கு பிடிக்கும்ல,
Just இப்போ தான் எதற்சையா
டிவில பார்த்தேன் உன் ஞாபகம் வந்தது
அதான் உன்கிட்ட சொல்லலாம்ன்னு
உடனே உனக்கு மெசேஜ் பண்ணேன்,
எத்தனை பேரு இப்படி ஒரு உறவ
இங்க சம்பாதிச்சுருப்பிங்கன்னு
தெரியாது,ஆனா அப்படி ஒருத்தங்க
இருந்தா "You are Really Blessed One",
Simple,நீங்க Really Blessed One ஆ
இல்லாட்டி கூட உங்களுக்கு
பிடிச்சவங்களுக்கு நீங்க அது
மாதிரி இருக்க முயற்சி செய்யுங்க,
May Be Later,உங்களுக்கும்
அது Reflect ஆக High Chances இருக்கு,
- எல்லாம் ஒரு Hope தான் ')
Comments
Post a Comment