Skip to main content

கிறுக்கல்களின் தொகுப்புகள்

வெள்ளிக்காப்பை சுழற்றினேன்
சூடான காஃபியை அருந்தினேன்
தலை முடியினை கோதி விட்டேன்
ஆழ்ந்த சிந்தனையில் இருந்தேன்
ஆழ்மனதும் அனாதையாக இருந்தது
எண்ணங்களின் ஓட்டமும் சீராக இல்லை
யூடியுப் பக்கம் சென்றேன்
அன்றைய தினத்தின் Trending காணொளிகள்
ட்விட்டர் பக்கம் சென்றேன்
நடிகர்களின் ரசிகர்களுக்கிடையே தள்ளு முள்ளு
இன்ஸ்டாகிராம் பக்கம் சென்றேன்
Bae Calls Me Chocobar என்றாள் கிளியோபாட்ரா
ஹைக் பக்கம் சென்றேன்
நட்டாஸா உரையாடலுக்கு எதிர்வாதம் செய்தாள்
சரி, இது தான் இன்றைய தலைவிதி என்று
முகப்புத்தகம் வந்து இதை பதிவு செய்தேன்..?
- A Poem Without a Topic ❤

----------------------------------------------------------

வாழ்க்கை இப்படியே போயிடுமா சார் என்பதில் தொடங்கி வாழ்க்கை ஒரு வட்டம் என்பதில் பயணித்து இவ்வளோ தான் சார் வாழ்க்கை என்பதில் முடிகிறது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த நம்பகத்தன்மை நிறைந்த வாழ்க்கை..?

--------------------------------------------------------

இந்த காஃபி ஷாப் சுவர்களின் இடையூறுகள்
நம் நாவிதழ்கள் இடைபாடுகளிலும்..?..!!

- வா ரயில் விட போலாம் வா 🖤

----------------------------------------------------------

நான்கு சுவர் நமக்கு உணர்த்தும்
தனிமையில் இருந்து மீண்டு வர உதவுகிறது
மேஜை மீது இருக்கும் நான்கைந்து புத்தகங்கள்..!!

#வாசிப்பின்அவசியம் 🖤📖 


---------------------------------------------------------------

அவள் வசம்
அவள் இடம்
அவள் உடன்
அவள் கூட்டு
என்னை தஞ்சம் புகுத்த நினைக்கிறாள்..? 🖤

-------------------------------------------------------------------

தேகம் சிலிர்த்து
தீஞ்சுவை தீண்டி
நாணம் உடைத்து
நீ என்னுள் பாதியாக
நான் உன்னுள் நாமாக

போற்றுவேன் போற்றுவேன்
மீசை அரும்பும் வயதிலும்
நரை உதிர்க்கும் போதிலும்
தலையில் சுமக்கும் தலைக்கணம் போல்

மறக்காதே கண்மணியே
மனமெங்கும் உன் சந்நிதியே
மறந்தாலும் உன் தேடலுடனே
மடி மீது சாய்கிறேன் உன்னிடமே

நெற்றியின் உச்சி முகர்தலும்
செவ்விதழின் செழிப்பான பள்ளங்களும்
தேம்பாவணியான அவளிடத்தில்
மனம் போற்றும் என் மீனலோட்சனியே..?

- அவளும் அழகு சார்ந்த ரசனைகளும் 🖤

--------------------------------------------------------------------------------

விழி வழியே உன் தேடல்கள்
வெற்றிட மேனியில் தடம் பதித்த
ஒற்றை கருநரம்பின் உயிரோட்டத்தில்..?

#அவளும்அந்தாதியும் 🖤

----------------------------------------------------------------------------------

பனியும் படர்ந்தது
சுடரும் ஒளிர்ந்தது
உன் பின்னங்கழுத்தின்
காரிகை மொழி பேசும் மோட்சத்தில்..?

#காண்பதெல்லாம்காதலே 🖤

---------------------------------------------------------------------------------

நேற்றைய இரவின் பிடியில்
இருள் சூழ்ந்த அவ்வேளையில்
நீ விஜயம் தந்த காதல் கனாவில்
நாம் ஊடல் கொண்ட காலங்கள் யாவும்
சுவர் கண்ணாடியில் பிம்பமாய் எதிர் நோக்கின..?

- மனம் போன போக்கில் உன் வசம்🖤


------------------------------------------------------------------------------------------------

காதல் வாழ்வுக்கு வழிவிடும்
காதல் மௌனம் கொல்லும்
காதல் ஏக்கமடையச் செய்யும்
காதல் கவிதைகள் கிறுக்கும்
காதல் முத்தத்தை பருகும்
காதல் ஓருடலில் சங்கமிக்கும்
காதல் தேடல்களை தொடரும்..?

காணத் தவம் கிடைக்குமா என்று
நான் காத்திருந்தது உனக்கான
இந்த கவிதைக்கிறுக்கல்களை
இப்போது இயற்றுவதற்காக..?

ஜன்னல் கம்பிகளின் இடையே
நீ பார்க்கும் திசையில் வருவது யாரோ..?
ஏன்..? எதற்காக இந்த ஏக்கம்..?
மையிட்ட உன் கண்களில்
உதட்டுச்சாயம் பூசப்பட்ட உன் இதழ்களில்
உச்சி வகுடெடுத்த உன் நெற்றியில்
தூரிகை போல் முன்னெடுத்த உன் கூந்தல்களில்
ஆங்காங்கே "Pimples" படிந்த
உன் கன்னம் எனும் மழலையின் வாழ்விடத்தில்
கோபங்களை உள்ளடக்கிய
உன் மெருகேறும் மூக்கின் நுணியில்..?

இளஞ்சிவப்பு நிறத்தில்
நீ அணிந்த புடவை பட்டு ஜரிகை சூழ
உன் அழகிற்கு ஒரு படி மெருகேற்றி
கொடுத்திருக்கிறது பொக்கிஷமாய்..?

காண்போர் மயங்கும் தாரகையே
விழி வைத்து காத்திரு இக்கணம்
வருவான் உனக்கான கள்வன்
உன்னை அள்ளி அணைத்துக்கொள்ள..?

குல்முகர் மலர்களால் ஒரு சேர நெய்யப்பட்ட
மாலையை உன் கழுத்தில் சூடுவான்
மலர் தூவி உன் கரம் தொட்டு வரவேற்பான்
தூய ஒளி சுடர் வீசும் மல்லிகைப்பூவை
உன் உச்சந்தலை முதல் மேகலை அணியும்
இடை வரை சூட்டி விடுவான்
குங்குமத்தின் குளிர்ச்சியை உன் உச்சி வகுடில்
தன் கட்டை விரல் அழுத்தத்தினால் சேர்ப்பான்
இதழ் பரிமாற்றத்தில் அவனுக்கு நிகர்
எவர் என்று கர்வம் கொள்வான்
பெண்மை போற்றும் உன் வெட்கத்தின் வழியே

அழகோவியத்தின் முன்னோடியே
அசந்து போனேன் உன் வசம்
இது நான் கிறுக்கும் உனக்கான முதல் தீண்டல்..?

- கிறுக்கல்கள் சூழ் 🖤


--------------------------------------------------------------------------------------------


வியர்வைத்துளிகள் வெள்ளி நிறத்தில் படர்ந்த
எனக்கான மேனியில் தவழ்ந்தாடும்
மல்லிகைப்பூவிலும் அவள் வாசம் வீசக் கண்டேன்

உன் வாசத்தை நுகருகிறேன் நான்
உன்னை இக்கணம் தேடுகின்றேன் நான்
உன்னுள் முழுதாய் என்னை தந்துவிட்டேன் நான்
உனக்காக என்னை அர்பணித்து விட்டேன் நான்
உன் வருகைக்காக காத்திருக்கிறேன் நான்
உன் முத்தங்கள் வேண்டி உலாவுகின்றேன் நான்
உன் விரல் பிடிக்க இரவு முழுதும் ஆளற்ற சாலையில் தனியே நடக்கிறேன் நான்
உன் குறுஞ்செய்திகளுக்காக ஒவ்வொரு நொடியும்
பச்சை நிறம் எரியும் Messenger சிக்னலை
நோக்கியே என் தேடல்களை
தொடர்ந்து கொண்டு இருக்கிறேன் நான்..?

- அவளும் மல்லிகை சார்ந்த மணமும் 🖤

------------------------------------------------------------------------------------------------------------

சூடிய குங்குமத்தில் உச்சி குளிர்ந்தவளின்
முக பாவனை அழகை எதிரேயிருக்கும்
முகம் பார்க்கும் கண்ணாடியானது
அழகியலின் பிம்பமாய் எதிரொளித்தது..?

என் நீண்ட கால ஆயுள் வேண்டி
அவள் சுமக்கும் தாரக மந்திரமாய்
இந்நெற்றிக் குங்குமமானது
அவள் உச்சந் தலையின் குளிர்ந்த வகுடில்
செக்கச் சிவந்து நீலகண்டனின்
உச்சியை குளிரச் செய்த
கங்கை போல் பிரதிபலித்தது அவளிடத்தில்..?

- அவளும் அழகியலும்🖤


----------------------------------------------------------------------------------------------

அவள் அங்கங்கள் யாவும்
ஒரு படி உஷ்ணம் அதிகமாக தென்பட்டால்
எழுதி வையுங்கள் அழகியல் பெட்டகத்தில்
அது அவள் "அதிகாலை வனப்பு" என்று..?

- அவளும் அதிகாலையும் 🖤

--------------------------------------------------------------------------------------------------------
பணம் பொருள் செல்வம் என்று
எதை கொட்டிக்கொடுத்தாலும்

அன்பு காதல் ஊடல் என்று
எதை வாரி வழங்கினாலும்

எனக்கான இடத்தில் வருபவர் யாராயினும்
எனக்கான இடத்தை ஈடு செய்ய
எத்தனை யுகம் கடந்தாலும்
அவ்விடத்தை நெருங்கி விட முடியாது

ஏன்..? அதன் காரணம்..?
என் காதல் என்ன தெய்வீகக் காதலோ..?

நான் தவறு செய்தவன் தான்
என் காதலில் எந்த ஓர் பிழையும்
உன்னால் காண முடியாது எந்த ஒரு நாளிலும்

என் மடி மீது உன்னை தாங்கியிருக்கிறேன்
தாய்மை கொண்டு உன்னை போற்றியிருக்கிறேன்
உச்சி வகுடில் முத்தத்தினால் முகர்ந்திருக்கிறேன்
அடிப்பாதங்கள் இரண்டையும்
என் உள்ளங்கையில் தாங்கியிருக்கிறேன்
யாவும் நீயே யாதும் நீயே
என்ற மனநிலையில் வாழ்கிறேன்..?

இனி வரும் காலங்களில்
உச்சந்தலையில் யாரோ ஒருவர்
உன்னை வைத்து தாங்கினாலும்
உனக்கு அது காதலை கொடுத்தாலும்
ஈருடல் ஓர் உயிராக இருந்தாலும்
என் தாய்மை கலந்த காதலுக்கு நிகர் ஆக முடியாது

சோகங்கள் மனம் முழுதும் நிறைந்து இருந்தாலும்
என் சோகம் என்னுள் வைத்து
சிரிப்புக்களை விதைக்கிறேன்
நிலையில்லாத இவ்வுலகில்,

உன் சிரிப்புக்களை இழந்திருக்கிறேன்
காதோரம் நீ ஒதுக்கும் ஒற்றை முடியினை
பார்த்து ரசித்த காலங்களை இழந்திருக்கிறேன்
ஈரம் பதிந்த உன் பின்னங்கழுத்தின்
வியர்வை துளியை ரசிக்கும் நேரத்தை
இங்கு நான் இழந்திருக்கிறேன்
வேறு திசையில் நாம் மாறி சென்றாலும்
பிரிந்த வேதனை சுமந்திருந்தேன்,

பல்லாயிரக் கணக்கான எழுத்துக்களில்
இங்கு நான் உன் புகழ் பாடினாலும்
என் காதலை உணர்த்தினாலும்
உன் காதல் ஒரு படி உயர்ந்தே நிற்கும்
ஆனால் இன்று ஏனோ தெரியவில்லை
என் தவிப்புகள் உன்னிடம் சேர மறுக்கிறது
உனக்கான சூழல் வேறு ஒருவருடன் இருப்பதால்..?

நான் எழுத்துக்கள் மூலம் கொட்டித் தீர்க்கிறேன்
நீ ஆழ்மனதிற்குள் ஆழமாய் வைத்திருக்கிறாய்
வித்தியாசம் என்பதோ இந்த ரகம் தான்
ஆனால் உன் குறுஞ்செய்திகளை எதிர்ப்பார்த்தும்
உன் காதலை எதிர்ப்பார்த்தும்
ஆசைக்கு ஏங்கும் மழலை போல் இங்கு நான்..?

உன் சூழ்நிலையும் புரிகிறது இறுதியாக
மறந்து விடாதே மறுத்து விடாதே
எந்த நிலை சென்றாலும் என் தேடல்கள்
உன்னை தொடரும் என்ற நம்பிக்கையுடன்

இதோ உனக்காக..?

உயிரும் நீயே
உலகமும் நீயே
உணர்வும் நீயே
உண்மையும் நீயே
உத்வேகமும் நீயே
உமையாளும் நீயே
உள்ளமெங்கும் நீயே

- தேடல்களுடன் அவன்..?

#கிறுக்கல்கள்சூழ் 🖤


----------------------------------------------------------------------------------------------------

நான் இங்கே
நீயும் அங்கே
தனிமையின் சூழல்களும்
தவிக்கின்ற தவிப்புகளும்,

மெழுகுவார்த்தியின் சுடர் வெளிச்சத்தில்
ஒர் இரவு நேர விவாதத்தில் நாம் இருவரும்
இதழும் இமையும் ஒன்றிணைந்த புள்ளியில்
உன் ஊடல் சார்ந்த அழைப்புகள் என் வசம்,
கூந்தல் காட்டிற்குள் செல்லும் வழித்தடம் தேடி
உலகின் சமப்பரப்பில் அமையாத
மேடு பள்ளங்களில் இதழ் தடம் பதித்து நான்..?

என் இரவா தேசத்தின் தேம்பாவணி நீ
வா..! என் கருவறைக்குள் சங்கமித்துக் கொள்
நான் சுமக்கிறேன் உன்னை மனம் உருகி..?

- அவள் சார்ந்த தேடல்களின் உச்சம் 🖤

--------------------------------------------------------------------------------------------

என் தமிழ் எழுத்துக்களின்
வளைவுகளில் அகப்பட்ட
சிறு துணுக்கு அவள்,

அ-வும் அவள்
ஃ-வும் அவள்
உயிரும் அவள்
மெய்யும் அவள்
உயிர் மெய்யும் அவள்
ஆயுதமும் அவள்
என் மொழிக்கு அழகு சேர்க்கும்
'ழ'கர ஒலிப்பும் அவள்,

தூயவள் அவள்
துணையெங்கும் அவள்
தூணிலும் அவள்
துரும்பிலும் அவள்,

திசையெங்கும் அவள்
திங்களும் அவள்
தியானமும் அவள்
தித்திக்கும் தமிழும் அவள்..?


-----------------------------------------------------------------------------------------------------------

அவளுக்கென ஒரு வாழ்க்கை
அவ்வாழ்க்கையில் ஒரு நாள்
அவள் உதிரத்தின் கசிவில்
உண்டாகும் ஓர் உயிருக்கு
நான் மாறுகிறேன்
ஒரு ஜீவனை சுமக்கும்
வலிமை மிக்க கர்ப்பிணித்தாயாய்..? 🖤

--------------------------------------------------------------------------------------------------

பெண்ணாதிக்கத்தின் அகம்
அவனின் நெஞ்சாங்கூட்டில்
ஆணியடித்த வண்ணம்
திரைக்கடலின் கரையோரத்தில்..?

அவளின் ஆசைகள்
அவளின் கனவுகள்
அவளின் தன்மைகள்
அவளின் அங்கங்கள்
என ஒவ்வொன்றிற்கும்
சேமிப்பு என்னும் வங்கியாய்
அவனின் இதயக்கூடு,
பறவைகளின் இறகு போல்
வலிமை தாங்கும் சக்தி இல்லாத
மென்மை ரகத்தில் சேர்ந்தவை..?

போதும் திமிரழகியே
திமில் இல்லா காளையை
கட்டுக்குள் கொண்டு வர நினைக்காதே,
இது கர்வம் கொண்ட ஆண் வர்க்கம்
துகில் உறிக்கும் போட்டியில்
வெல்பவர் யார் என்பது
உலகம் அறிந்த நியதியே..?

மணல் திட்டுக்களில் பதிந்த பாதங்கள்
மணவாளனின் இருதய சத்தத்தை கேட்டவுடன்
ஆகச்சிறந்த பெண்மைக்குரிய வெட்கத்தை
கரையினில் விட்டுச் செல்லுமாயின்
அவ்வெட்கத்தை ஆகச் சிறந்த ஆண்மைக்குரிய
சீற்றம் கொண்ட அலைகள்
அதை தன்னுடன் இறுக அணைத்து
தன் வசப்படுத்திக்கொள்ளும்
நிகரில்லா நிலையானது..?

உன் ஆதிக்கமும்
என் கர்வமும் ஒரு சேர
இச்சங்கமத்தில் இணையுமாயின்
அது தான் இவ்வுலகம் போற்றும்
காதல் என்னும் அழகியிலின் பிம்பங்களோ..? 🖤

-------------------------------------------------------------------------------------------------

ரீங்கார சத்தத்தின் ஒலியில்
ஜன்னல் கம்பிகளின் இடையே
கதிரவனின் காலை பிம்பத்தில்
தாகம் தீரா மோகம் அடங்கி
விடிந்தது அத்தலையணை இரவுகள்,

முன்னோக்கி நகர்ந்தால்
காதல் அளவற்று நிற்கிறது
ஊடல் சார்ந்த போதை
தலைக்கேறி திக்குமுக்காட வைத்தது,

சுவாசிக்கும் மூச்சும்
துடிக்கும் இதயமும்
நடுங்கும் கைகளும்
பதறும் கால்களும்
ஒரு ஆண் மகனின் அன்றாடம்
அவன் அன்றாடத்தை
ஒற்றை முத்தத்தில்
அவளுள் அடங்க வைத்து ரசித்தாள்

உச்சியின் குங்குமமும்
உள்ளங்காலின் மெட்டியும்
என்ன தவம் செய்தனவோ
அவனின் காதலை பெறுவதற்கு..?

பள்ளத்தின் இடைப்பாடுகளில்
அவன் ரசித்த உலகை
பின்னாளில் அவள்
இரு மேடுகளாய் பிரித்து
தாய்மை கொண்டு
அவன் அளித்த ஜீவனுக்கு
பசி போக்கினாள்,

காதல் அளவற்று கிடக்கிறது
ஊடல் ஒரு சேர நிகழ்கிறது
பெண்மை போற்றும்
ரசனை தான் பஞ்சமோ,
அதை ஆண் ரசிக்கும்
அழகியல் தான் பிம்பமோ..? 🖤

---------------------------------------------------------------------------------

"ழ"கரம் தீட்டி
அழகு சேர்ப்பேன்
உலகை உடைக்கும்
உன் சமப்பரப்பில்..? 

#அழகியல்🖤

------------------------------------------------------------------------------------------

பெட்ரோல் நிரப்பிய 
பைக்கின் கர்ப்பிணி வயிற்றை 
மூடியவாறு தன் பைக்கினை 
முதல் இரண்டு என்ற வரிசையில் 
ஐந்தாவது கியரில் செலுத்தினான்..? 

விரைந்து சென்ற வண்டி
ஒரு அக்ரஹார தெருவின்
முச்சந்தியில் நின்றது
தேவி அவள் வருகை வேண்டி..?

அவளுக்காக காத்திருந்த இடைவேளியில்
என்னுடைய செலவு என்பது
இரண்டு ரூபாய் கொண்ட
Boomer Bubble Gum இரண்டு மட்டுமே
நான் ஒரு TeeTotaller என்பதால்..?

அக்ரஹார தெருவிலிருந்து
அவள் வருவதால் "OC" என்று
நினைத்து விட வேண்டாம்,
அவள் அவள் தான்
ஆராயும் யுக்திகள் இங்கு கையாளப்படவில்லை..?

சிறையில் அடைக்கப்படாமல்
விடுதலை அளித்த கூந்தலை
காதோரம் ஒதுக்கியவாறு
தூரத்தில் சிறு புன்னகை
இதழசைவில் பிரதிபலித்த வண்ணம்
அவன் முன் வந்து நின்றாள்..?

காதலே நீ என்னோடு வா
ஓர் காலை உலவு என்றவாறு
பைக்கில் தன் அங்கங்கள் சரி செய்து
அவன் பின் அமர்ந்தாள்..?

மென் சிறகு போன்ற கைகளை
அவனுள் அரவணைத்த வண்ணம்
அவன் தோள் சாய்ந்தாள் கோதை அவள்..?

காதுகளில்
Head Phone Insert செய்திருந்த அவள்
இமைகள் மூடி
இன்னிசை உதவியுடன்
பேதை அவள் பின் இருக்கையில்
How Lucky Iam என்ற
மனநிலையுடன் அவன்..?

தேவதை சூழ் நகரமிது போல்..!
அந்த சாலையை
அவர்கள் இருவரும் கடக்கும் வண்ணம்
ஓர் மகளிர் கல்லூரி..?

சாலை முழுவதும்
"தெருவெல்லாம் தேவதைகள்"
என்பன போல் கன்னியர்கள் கூட்டம்..?

ஆண் மனசு அலைபாயும் அல்லவா..?
ரசிப்பது ரசனை
அனுபவித்தல் என்னும் எண்ணமே
ஒரு ஆணுக்கு வினை என்பது
காலம் கற்றுத்தந்த கூற்று..?
இதை உணர்ந்தவன் பகுத்தறிவாளன்
உணராதவன் உடுக்கை இழந்தவன்..?

பைக்கின் பின்னால் இருக்கும்
அவளை மறந்து
அக்கன்னியர் கூட்டத்தின் இடையே
சாலையோர மரத்தடியில்
சினிமா பாணியில்
வெள்ளைப்பூக்கள் உதிர
பாவை (அவளின்) வருகை..?

அவனை மறந்து
அவனுள் வியந்து
அவன் மனம் சிறகடித்து
(அவளை) ரசிக்கும் தருவாயில்
பின்னங்கழுத்தில்
ஒரு செல்ல அடி அவளிடம் இருந்து..!

கவனமாக கேள்!
உன் கூடலும் ஊடலும்
இனிதே - இவ்விடத்தே..!
நாலும் பொருளும் எனுடனே
ரசிக்கும் ரசனையும் என் மனத்துடனே
காமமும் தேடலும் இக்கணமே
தேடலின் பொருளும் நம்முடனே..?

பெண்ணாதிக்க சமூகமே
நீர் வாழ்க உம் புகழ் வாழ்க
என்று நீள் பறை சாற்றி
அங்கிருந்து அவளும் அவனும் கிளம்பினார்கள்..?

அவளும் அவனும்
தமிழும் சுவையும்
கவியும் கலமும்..?

#கிறுக்கல்கள்சூழ் 🖤

--------------------------------------------------------------------------------------------------------


நேற்றின் பிடியில்
பால் நிலவு நோக்கி
திண்ணையில் திகைப்புடன்
சூடிய சுடராய் விடுதலை அளித்தேன்
முடிந்து வைத்த என் கருநிற அருவிக்கு..? 

இருள் வானில் வருவான் என்றே
வழி மேல் விழி வைத்து
மலர் சூடா மங்கை நான்
மன்னவனின் வருகை வேண்டி
மனம் நாடும் ஓர் பொழுது..?

பனி விழும் பௌர்ணமி இரவின்
ஊர் அடங்கிய சாம வேளை..?
கோடங்கி உடுக்கின் கூச்சலிடையில்
ஒத்தையடி பாதையில்
அவன் பற்றிய தேடல்களுடன்
ரத்தம் ஒரைய குளிரும் இறுக்க..?

ஆண் கர்வம் அதிகமெனினும்
கனிவாய் நெகிழ்வான் கள்வன்
ஒத்த போர்வையில்
மங்கை என் மலர் மணம் வீச..?

நுகரும் முன்னே
மணம் மாறிவிட்டாய் போல்
மகரந்தம் பொய்த்து
மங்கை என் கனாவில்..?

வா அருகில்..?
ஆகாச தூரம் கொட்டிக்கிடக்குது
தொலைதூர வெளிச்சத்தில்
ஆசை பொழிவோம்
ஆழியின் அரவணைப்பில்..?

மலர் சூடி
பாவை நான் அழகு பதுமையாக
தெருக்களில் பயணிக்க
உன் வருகை வேண்டி
நான் கிறுக்கிய பெண் வழி கீற்றுக்கள்..?

#கிறுக்கல்கள்சூழ் 🖤

--------------------------------------------------------------------------------------------------------------------

இலையுதிர் காலத்தில்
அவன் ஒத்தையிலே
உலகம் மறந்து
நிராயுத பாணியாய்
ஆளற்ற சாலையில் 
திக்கு விஜயம் செய்து வந்தான்
கற்பனை உலகத்தின் அரசனாய்

"இது என்னவனுக்காக
நான் கவி இயற்றும்
ஒரு பெண் வழி தேடல்..?.."

ஆதி முதல் அந்தம் வரை
உச்சி குளிர பறை சாற்றும்
பகுத்தறிவாளன் அவன்..?

நெஞ்சு குழியில்
கவுளி கத்தும் இசையை
என்னுள் உணர வைத்த
உன்னதமானவன் அவன்..?

என் கொட்டம் அடங்க
இதழ் முத்தம் கொடுத்து
சொர்கப்புறம் கூட்டி சென்ற
கொடுங்கோள் அரசன் அவன்..?

சொற்களிலே வித்தகியாய்
சொல்லில் அடங்கா பேரழகியாய்
தமிழ் சொற்களின் பரம்பொருளாய்
என்னை உருவகம் செய்த
ஊர் மெச்சும் கவிஞன் அவன்..?

என் மனதை புனைந்து
ஊடல் பொழுதில்
என்னிடம் இரவல் புரியும்
புகழ்வேந்தன் அவன்..?

அடை காக்கும் கோழியின்
கருவறை தவிப்பு போல்
நான் தவித்த வண்ணம்
சீம்பாலின் வாசம் போன்ற
கண்ணன் அவனின் சிரிப்பலைகளில்
ராதை என் மனம்
துள்ள செய்தவன் அவன்..?

அவன் பற்றிய தேடல்களில்
நாழிகை கடந்து
நாற்பொழுது கடந்து
நான் எண்ணும் வேளையில்
என் நினைவுகளுடன்
அவன் ஒத்தையிலே தனியாய்
ஆளற்ற சாலையில்
முடிசூடா அரசனாய்..?

#கிறுக்கல்கள்சூழ் 🖤

---------------------------------------------------------------------------------------------------


வெகு தொலைவில் உள்ள ஒரு கற்பனை தேசத்து நாடு, நாடெங்கும் கனவு சூழ் மனிதர்கள் நிறைந்த கூட்டம்..?
வான் மேகங்கள் வானவில் நிறமான ஏழ் வண்ணத்தினால் ஆன VIBGYOR நிறத்தில் களவு கொண்டு பிண்ணி பிணைந்து இருந்தது,
சிற்றுயிர்கள் ஆங்காங்கே ரீங்காரம் எழுப்பிய வண்ணம் இசை மீட்டிக்கொண்டிருந்தது

இக்கனவு தேசமான இங்கு தான் அவளின் அவன் வாழ்ந்து கொண்டு இருக்கிறான்
தனிமைக்கான தேடலை விரும்பும் அவன் இருள் வாழ்க்கையில் இரவு நேரங்களில் ஓர் பௌர்ணமி நிலவின் வெளிச்சம் தென்படும், அதுவே அவனின் மனம் அமைதியடைய செய்யும் ஒரே ஆறுதலுக்கான இரசாயனம் இல்லா மாற்று மருந்து,

தண்ணீர் கமலம் வாடும் வேளையில் அவன் அவள் அருகினில் இல்லை என்பது தான் அவர்கள் கண்ட பிரிவு என்னும் பிரிவுடைமை,
அவன் பயணிக்கும் கடைசி எல்லையின் முற்று வரை வெண்பனி அவளின் தீரா இதய துடிப்புகள்,
இடையில் சோர்ந்து போகும் தருவாயில்
சிறு புன்னகை பொழிந்து இதழோரம் கதை பேசும் அவளின் இதழ்கள் பற்றிய எண்ண ஓட்டங்கள்
நிலை குலைந்த தொடரி போல் தொடரும்,
அவனின் ஆகச்சிறந்த போதையானது காற்றில் மிதந்து வரும் அவள் மீதான அவளின் வேர்வை துளியின் வாசனையோடு இணைந்த வாசனை திரவியங்கள்,

கற்பனை தேசத்தின் கற்பனை இல்லா களஞ்சியமே
பனி இரவிலும்
முழு மதியிலும்
ஒத்தை அடி பாதையிலும்
ஒரு கொடி நடை அவளோடு அவன் செல்ல வேண்டும்
அவள் பாதங்கள் மண் மீது நடக்க துயர் ஏற்பட்டால்
கற்பனை தேசத்தின் குளிரூட்டப்பட்ட மகிழுந்தில் கூட்டி செல்வான் எப்பாடு பட்டாலும் எந்நிலை சென்றாலும் எவ்வினை நிகழ்ந்தாலும்..?

பயணங்கள் தொடரும்..? 🖤

------------------------------------------------------------------------------------------------

அன்று ஒரு மாலை வேளை
பொதுவாகவே நிலா முற்றம் தெருவோர விளக்கு போல் முத்தமிடும் அவள் வீட்டின் வாயிலில்
ஆம், அவள் பெயர் "சந்திரவதனா"
பெயருக்கு ஏற்றார் போல் மனதிலும் தெளிவான முழுமதி

நிலா முற்றம் முத்தமிடும் வாயிலில் சந்திரவதனா தினமும் மாலை குழந்தைகளுக்கு க்ளாசிக் வகையறையில் நிமிர்ந்த வீணை கொண்டு பாடல் வகுப்பை துவங்குவாள்

அன்றைய வகுப்பு "கண்ணன் - ராதை" இருவருக்கும் உண்டான காதல் மற்றும் பிரிவினை நாட்களை பற்றி எடுத்துரைக்கும் "யமுனை ஆற்றிலே" பாடல்,

அவள் விரல்கள் வீணையை மீட்ட
கண்களில் கண்ணன் வருவான் என்ற தேடல்களுடன்
இதழ்களில் மழலைகளை நோக்கி ஓர் பொய்யா சிரிப்புடன் பாடலை தொடங்கினாள்,

அவள் :
யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே கண்ணனோடு தான் ஆட
பார்வை பூத்திட பாதை பாத்திட பாவை ராதையோ வாட

மழலைகள் :
யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே கண்ணனோடு தான் ஆட
பார்வை பூத்திட பாதை பாத்திட பாவை ராதையோ வாட

அவள் :
இரவும் போனது பகலும் போனது மன்னன் இல்லையே கூட
இளைய கன்னியின் இமைத்திடாத கண் இங்கும் அங்குமே தேட

மழலைகள் :
இரவும் போனது பகலும் போனது மன்னன் இல்லயே கூட
இளைய கன்னியின் இமைத்திடாத கண் இங்கும் அங்குமே தேட

அவள் :
ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ
ஆசை வைப்பதே அன்பு தொல்லையோ
ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ
ஆசை வைப்பதே அன்பு தொல்லையோ
பாவம் ராதா

மழலைகள் :
யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே கண்ணனோடுதான் ஆட

அவள் :
பார்வை பூத்திட பாதை பாத்திட பாவை ராதையோ வாட

அன்றைய பகுதியான பாடல் வகுப்பு முடிந்து மழலைகள் தங்கள் வீடு திரும்பினர்
சந்திரவதனா ஒரு விதமான ஜென் நிலையிலிருந்து இன்னும் வெளிவந்த வண்ணம் இல்லை
இரவுகள் தங்கள் இருளை சூழ
தவளை போன்ற சிறு உயிரினங்கள் தங்கள் ரீங்கார இசைகளை எழுப்ப
தன் அறைக்கு சென்று தாழிட்டாள்

ஆம் !!
அவளும் மனதளவில் ஒரு ராதை தான்
அவளும் ஒரு கண்ணனை ஆயர்பாடியில் தான் தொலைத்த நாட்களை எண்ணி இன்னும் அவன் வருவான் என்ற நம்பிக்கையில் தேடி கொண்டு தான் இருக்கிறாள்
உறக்கம் கண்களில் துளி அளவும் வரவில்லை
தலையணை ஒன்றே அவளின் தற்காலிக ஆறுதல்

ராதை கண்களில் நீர் கசிந்தன
ஆயர்பாடியின் சாலைகள் வெள்ளத்தில் மிதந்தன
இரவும் கடந்தது
பகலும் கடந்தது
பல நாட்களாக..?
என்றோ ஒரு நாள் தனக்கான தனக்கு மட்டுமான கண்ணன் வருவான் என்ற நம்பிக்கையில் இளையக்கன்னியான சந்திரவதனா(ராதை) யமுனை ஆற்றின் படித்துறையில் தன் வீணையுடன் மன்னனுக்காக காத்திருக்கிறாள் விழி எங்கும் தீரா தேடல்களுடன்..?

பயணங்கள் தொடரும்..? 🖤

------------------------------------------------------------------------------------------------------



இரு கரம் கோர்த்து உலா வந்தனர் சிவப்புக்கம்பலம் விரித்த உலகம் என்னும் இம்மேடையில்
அவர்களின் உரையாடல்கள் உள்ளம் கனிந்து ஒரு சேர இணைந்தது
அதன் வெளிப்பாடு இருவரும் தங்கள் கருத்துகளை கண்ணோடு கண் நோக்கும் படி பரிமாறிக்கொண்டனர்

ஒரு விலை உயர்ந்த குழம்பிக்கடையின் உள்ளே இருவரும் நுழைகின்றனர் அவன் திறந்துவிட்ட கதவின் வாயிலாக..? (தன் காதலியை அந்த ஆண் 
'என் பாதுகாப்பில் நீ' என்று வரவேற்கும் படலம் இங்கே)

இருக்கையில் இருவரும் அமர்ந்து இரு குழம்பிகளை வாங்கி அருந்துகின்றனர் கண்கள் நான்கில் மௌன மொழி புரிதல் என்னும் கூற்றிற்கு ஏற்றார் போல் (அவள் கண் பார்த்து பேசும் ஒரு ஆணின் பேராண்மை இங்கே)

கூந்தல் நெளிவை ஆயிரம் தடவை சரி செய்து அவள் இடது புற காதின் இடைப்பாட்டுக்குள் தஞ்சம் புகுத்தி வைப்பாள்
ஆனால் என்ன பலன்..? அவள் பேச்சை ஒரு போதும் அவளின் நீண்ட முடிகளானது கேட்காமல் கோபம் கொண்டு சிவக்கும் மூஞ்சூர் எலி போன்ற வடிவமைப்பிலான மூக்கின் முன் தடம் புரண்டு விழுகின்றது (அவனின் அவளை அவன் ரசிக்கும் தருவாய் இங்கே)

பின்னொரு காலத்தில் என் மடி மேல் சாய்ந்து இளைப்பாறி கொண்டாள் அவளின் காதல் என்னும் ஆகச்சிறந்த போதையில்
அவளை மடி மீது தாங்கி அவன் கை என்னும் விசிறியை கொண்டு தலை கோதினான் (அவள் தேடிய அன்பு அவனின் விசிறி வாயிலாக உணரப்பட்ட தருணம் இங்கே)

இதெல்லாம் அவன் கனா கண்ட அவளுடனான ஏழேழு ஜென்மம் போற்றும் கானகம் போற்றும் காதல் நாடகங்கள்,
"மணவாளனின் கனவுகள்" என்னும் அவன் எழுதிய புத்தகத்தில் அடங்கிய ஒரு புனைக்கதை இது

கதை முற்று பெரும் தருவாய் யாதெனில்..?
இருவரும் வேறு வேறு திசை நோக்கி சென்றனர்
காலத்தின் கட்டாயத்தில் பிரிக்கப்பட்ட இருவரின் மன நிலைப்பாடும் ஒரே நேர்கோட்டில் அமையப்பெற்றவை போல்

"பூங்காற்றே நீ வீசாதே
நான்தானிங்கே விசிறி" என்று காற்றிற்கு கூட சொந்தம் கொண்டாட முடியாத படி அவளை தன் அரவணைப்பின்(விசிறி) மூலம் மூச்சுக்காற்றில் கலந்த வண்ணம் தினம் தினம் கனாவில் கண் இமைக்காமல் நொடி பொழுதும் காத்துக்கொண்டிருந்தான் அவளின் அவன்

பயணங்கள் தொடரும்..? | விசிறி

-----------------------------------------------------------------------------------------------------

என் அன்பே
இந்த நிலத்தின் மீது தான் நம் சிநேஹம் உருவகம் கண்டது
இந்த நிலத்தின் மீது தான் நம் முதல் சந்திப்பு
அரங்கேறியது
இந்த நிலத்தின் மீது தான் நம் முதல் காதல் அன்போடு மலர்ந்தது
இந்த நிலத்தின் மீது தான் நம் முத்தங்கள் முக்தி நிலை பெற்றது
இந்த நிலத்தின் மீது தான் நம் பிரிவு விழியோரத்தில் கடலாக அலை பாய்ந்தது

நான் செல்கிறேன் எனக்கான தேடலை தேடி
வழி நெடுவிலும் தெருவோர கடைகள்
உன் பெயர் சுமந்த விளம்பர பலகையுடன்
நிழலாடும் உன் ஞாபகங்கள் என் நெஞ்சில்
சிரித்துக்கொண்டேன் என்னுளே என் மனப்போக்கில்
போ என்னும் சொல்லிலும் வா என்ற புரிதலை உண்டு செய்தவள் நீ
ஆதலால் தான் என்னவோ நாம் பிரிந்து விட்ட போதிலும் வருவாய் என்ற தீரா நம்பிக்கையுடன் நான்

("வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து
நாரண நம்பி நடக்கின்றான் என்றெதிர்" -
இது ஆண்டாள் கண்ட கனவு )

ஆயிரம் முத்தங்கள்
ஆயிரம் வாத்தியங்கள்
இதற்க்கிடையே ரீங்கார ஒலிகளின் ஓசையும்
உன்னை சூழ்ந்து வரும்
என் எதிர் நீ வரும் வேளையில்

தூய்மை பெற்ற ஆண்டாள் கனவின் மறு உருவம் இந்த நிலத்தில் நாம் உதிர்த்த எண்ணில் அடங்கா லோகம் போற்றும் நம் காதல்

வான் மேகங்கள் வெட்கப்படும்
வருணன் நாம் சங்கமித்த இந்நிலத்தை முத்தமிடுவான்
உயிர்கள் மண் வாசனை நுகருவார்கள்
மழலைகள் கூத்தாட்டம் போட்டு மகிழ்வர்

இந்த அற்புதங்கள் அனைத்தும் நிகழ்ந்தே தீரும்
என்றோ ஒரு பிறவியில் நாம் இணையும் அந்நாளில்
மறக்காதே கண்மணி
மாநிலம் போற்றும் படி வாழ்ந்தோம் ஒரு நொடி
இன்னல்கள் விலகும்
இன்பங்கள் உன்னை வந்து சேரும்
இக்கலியுலகின் அத்தியாயத்தின் படி

அரசியே நல்வாழ்வு நினைக்கும் என் மனம்
உடல் உயிர் உன் மனம்

(பயணங்கள் தொடரும்..?)

----------------------------------------------------------------------------------------------

இரு உடல்கள் இணையும் போது
உயிர் செல்களில் சுரக்கும்
ஹார்மோன் என்னும் ஜீவ பிரபந்தமே
இரு உதடுகள் சங்கமித்து கொள்ளும்
இதழ்கள் பரிமாறி தித்திப்பில் தவழும்,

என் உயிர் நதியே
வா அருகில் வா
விரல்களில் அழுத்தம் கொடு
இது காலம் கடந்து நீயும் நானும்
நாமாக மாறும் இரண்டு எழுத்து முத்தம்..!! <3


-------------------


°நான் காத்திருக்கிறேன்
அறையின் மின்னொளியில் நீயாக..!! <3



_____________


சிரிச்சுக்கிட்டே கடந்து போறதுக்கு
பின்னால் இருக்கும் வலியானது
அந்த வலியை கொடுத்தவருக்கே
அந்த வலியை விட மிக பெரிய வலியாய்
அவரிடம் விதைக்காமல் அவர் போல்
இருக்கும் மற்றவர்களிடம்
அவ்வலியை அவர் இன்னொருவருக்கு
தராமல் இருக்குமாறு நாம் அவருடன்
அன்பு செய்தாலே இங்கு ஆழ்மனதின்
வன்மம் போன்ற பழிதீர்த்தல் வகையான எண்ணத்தில் இருந்து ஒருவரை ஒருவர் விடுவித்துக்கொள்ளலாம்,

காலில் சுடுதண்ணீரை ஊற்றிக்கொண்டு பரபரப்புடன் திரியும்
இந்த நாளில் இந்த சின்ன விஷயம்
கொஞ்சம் குழப்பமாக இருக்கும்
நிதானமாக படித்தால் புரியும்
அன்பு செய்வோம் எல்லோரிடமும்
இங்க அன்பு தானே எல்லாம்..!! <3

----------------------


நான்கு சுவர்கள் உணர்த்தும்
தனிமை என்னும் பாடத்தில்
கொஞ்சம் அழகும் இருக்கிறது
மிகுந்த ஆழமும் இருக்கிறது..!! 💛



___________________


இந்த பூமி பரந்து விரிந்து இருக்கிறது
இங்கு எல்லை என்பது உனக்கில்லை
இது உனக்கான சர்வ மயமான தேசம்
உன் தேடலை நோக்கி சென்று கொண்டே இரு..!!

*Fight For What You Love
*What If Life Gives a Second Chance

#DearComrade | #VD 💛

--------------------------


உரையாடலுக்கு இடையே
நீ சொல்லும் "மிஸ் யூ" - வினால்
என் உதடுகளில் குல்மொஹர் மலர்
பூத்துக் குலுங்குகிறது..!! 💚



---------------------------


மழை தூவானத்தில் இருந்து
பொழிகிறது அளவற்று கிடக்கும்
அன்பு நிறைந்த பூக்கள் பூக்கும்
செம்பூமியில்,

கைகோர்த்து கொள்வோம்
மனிதனுக்கு மனிதன் தான்
உறுதுணை இங்கே,

நீ என்பதும் நான் என்பதும்
ஒரே மழையில் நனைந்து
பூத்துக்குலுங்கும் ரோஜா பூக்களே,

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்
வா ஒரே மழையில் நனைந்து
இந்த உலகை ஒருவருக்கொருவர்
ரசித்து தான் பார்த்து விடுவோமே..!! ❤️


-------------------------


நித்தம் என்னுள் நீ
வா இந்த கடற்கரை அலை போல்
நாமும் ஆர்ப்பரித்து கொண்டாடுவோம்..!!

--------------------------------


ஒரு தலை காதல்களுக்கும்
சொல்லப்படாத காதல்களும் இடையில்
நீரோட்டமாய் நழுவி செல்வதே
கற்பனை காதல்களும்
அதற்கேற்ற சூழலும்
சூழலுக்கேற்ற மனிதர்களும்..!! 💚


----------------------------



அவ நெத்தி வகுடுல தொடங்குற
அந்த அதிகாலை வனப்பு
இந்நிலா வெளிச்சத்துக்குள்ள
குடில் கட்டி இருள் படர்ந்த
இந்த இரவின் பிடியிலிருந்து
பிறக்க தொடங்குகிறது பூமியின் ஓர வஞ்சனையுடன்..!! 💚


---------------------

காதலும் கற்று மற
தேவனையும் கைக்கூப்பி மற
இதோ உனக்கான வழித்தடம்
வா வாழ்ந்து தான் பார்த்து விடுவோமே..!! <3


-------------------------


இது தான் நான் என்று
என்னை மீட்க செல்லும்
இந்த பயணத்தில் கூட
இடையூறுகள் என்னை வந்து
முத்தமிட்டு செல்கின்றன..!!

#MyAspects <3




-------------

தினமும் எழுதிடும்
கவிதை கிறுக்கலில்
பிழையில்லா தமிழ் நீ
இந்த இருள் படர்ந்த இரவுகளை
ஏன் உன் வசம் ஆட்கொள்கிறாய்..?..!! 💛



--------------------------



~ காதல் அளவற்றது
காதல் தித்திப்பானது
காதல் இன்பம் பயப்பது
காதல் வலி தந்து சுகம் காண்பது

இருந்தாலும் என் பெருங்காதலை
அடை காத்து பொத்தி வைப்பேன்
உன் பாதங்களின் விரல் இடுக்கில்

மலர் போன்ற என் பெருங்காதலை
சுமந்து செல் நீ செல்லும் சாலைகளில்
இது ஒரு பாரமில்லாத இன்பமான சுமை..!!

---------------------


இந்த நீள் இரவு
இன்னும் கொஞ்சம் நீளாதோ
நாம் என்ற இரண்டெழுத்தில்
நமக்கான உடல் அணுக்கள்
எல்லை கொஞ்சம் மீறாதோ..?..!! 💛



-------------------


சில சந்தேக பார்வையில்
இடம் பொருள் ஏவல் அறியாமல்
ஒரு நிமிடம் வெக்கையடைந்தேன்
எதிரில் அவள் குறுஞ்சிரிப்புகளுடன்
என்னை பார்த்து நகைத்துக்கொண்டிருந்தாள்..!!

#DQ | #KaliForLife | #MyAspects 💛





*
----------------------


அழகான தோட்டத்துல பூத்த
குட்டி ரோஜாப்பூ நீ,
எப்பவும் பன்னீர் துகள்கள் பட்டு
காலை வனப்புடன் மெருகேறி
மொட்டுக்களாய் பிறந்து வா..!! 💛




-------------------------- 



...
...

அவன் காதல் கை கூடல
ஆனா அவன் வாழ்க்கையிலும்
அவன் ஒரு போதும் தோற்கவில்லை
அவன் அவனை உணர்ந்து வாழ்ந்தான்
அவன் கால்கள் அவனை
கால் போன போக்கிலும்
மனம் போன போக்கிலும்
அழைத்து சென்றது அவனுக்கான தடத்தில்
சில கை கூடாத காதல் உணர்த்தும்
தனிமை தான் எவ்வளவு அழகானது..?..!! ❤️




---------------------



*❤️

என் மௌனத்தை மட்டும் தான்
நீ ரசிக்கிறாய் என தெரிந்திருந்தால்
என் காதலை சொல்லாமலேயே
என் நாட்களை கடத்தி இருப்பேன்
சொல்லி இழந்து போவதற்கு பதில் ..!! : ) "


----------------


*❤️

ரயில் பயணத்தில் புத்தகம் படிக்கும்
ஒருவரின் கையில் ஆசான் சுஜாதா
எழுதிய "ஸ்ரீரங்கத்து தேவதைகள்"
நேர்மாறாய் என் எதிரிலும் கூட..!! : ) 



--------

*❤️

கண்ணே கலைமானே என்று
உன்னை மடியில் வைத்து
தாங்குவதற்குள் பிறை நிலவாக
கரைந்து போனாயே..!! : ) "


----------

*❤️

இந்த பெருமழை தான்
எத்தனை பேரின் இழந்த காதலுக்காக மனமுருகி கண்ணீர் வடிக்கின்றது..!! : ) "


----------------
*❤️

வெள்ளிக்கிழமை கோவில்களுக்கு
மட்டும் சிறந்த நாளில்லை
மஞ்சள் பூசும் உன் முகத்திற்கும் கூட..!! : ) "

----------------

*❤️

காற்றுள்ள போதே தூற்றி இருந்தால்
என் காடெங்கிலும் அடை மழை
பெய்திருக்கும்..!! : ) "

------------

*❤️

பிறரால் ஒதுக்கப்பட்டு
தனிமை படுத்திய ஒருவனின்
துறவு வாழ்க்கை என்பது
மிகக்கொடிய ஓர் மனித வன்முறை..!! : ) "

---------------

*❤️

நான் எழுதிய கவிதையின்
கடைசி முற்றுப்புள்ளியை
காற்புள்ளியாய் மாற்றியது
அன்று நீ கொடுத்த எதிர்பாரா முத்தமே..!! : ) "

--------------------

*❤️

நான் படித்த காதல் புத்தகம் நீ
ஏனோ தெரியவில்லை
ஆரம்பம் முதலே
தலைகீழாக படித்துவிட்டேன்
புத்தகத்துடன் சேர்த்து உன்னையும்
உன் மீதான காதலையும்..!! : ) "


--------------
*❤️

பிள்ளை நிலா
இரண்டும் வெள்ளை நிலா - என்று
S.ஜானகி அம்மா குரலில் அப்பாடலை
தெருவில் உள்ள கடையின் ரேடியோ
பெட்டியிலோ அல்லது நம் வீட்டின்
தொலைக்காட்சியிலோ கேட்கும்
போதெல்லாம் எனை ஈன்றவள்
இன்னும் கொஞ்ச நாள் இந்த பூமியில்
வாழ்ந்துவிட்டு தன் துணை (அப்பா)- யை
தேடி போயிருக்கலாமோ என்றே
தோன்றுகிறது..!! : ) "

-----------------------
*❤️

ஊரடங்கு பிறப்பித்திருந்தாலும்
மழலைகள் வீட்டு வாசலில்
விடுமுறையென கருதி விளையாடும்
போது நாமும் அப்பருவத்திற்கு செல்ல
ஒரு டைம் ட்ராவெல் இயந்திரம்
இல்லையே என்ற வருத்தம் தான்
அதை வேடிக்கை பார்க்கும்
நமக்கு மேலோங்கி நிற்கிறது..!! : ) "


------------------------

*❤️

மொட்டை மாடி காற்று கூட
உன்னை ஞாபகப்படுத்தினால்
நான் செய்வதறியாது தவிப்பேனோ..? : ) "

------------------

*❤️

வாசல் கதவின் பிடியில்
உன் கை ரேகையின் அச்சு
அங்கு தொங்கிய தோரணத்தில்
தென்பட்டது,

உன் பாதச்சுவடுகளின் தடம்
என் வீடெங்கும் உனது வருகையை
பதிவு செய்தது,

என் வீட்டு கேஸ் ஸ்டவ்வில்
அந்த காய்ச்சிய பால் மேல்
நீ தூவிய காஃபி பொடியின்
கமகமக்கும் மணத்தை நுகர்ந்தவாரு
ஒரு கப் காஃபியுடன் அதன் சுவையை
அந்த நெஸ்கஃபே சன்ரைஸ் பொடி
என் நுனி நாக்கில் ஒட்டிக்கொண்டது,

என் வீட்டு துளசி மடத்தை
நீ சுற்றி வந்ததாலோ என்னவோ
நித்தம் உன் வாசனையில்
தன் தெய்வீக வாசனை நிலையை
மறந்து அதுவும் கனா காண்கிறது,

நாளை எதிர்பார்த்து
இன்று நீ விஜயம் செய்த
என் அறையின் திறக்கப்படாத
ஜன்னலின் அருகாமையிலிருந்து
நீ வரும் திசை நோக்கி
வழி மேல் விழி வைக்காமல்
உனை தேடும் என் விழித்தடங்களையே
வழித்தடங்களாய் மாற்றி
காத்துக்கொண்டிருக்கிறேன்,

விழியும் விழியும் சேரும் போது
விண்ணை தாண்டி வருவாயா அன்பே
அந்த மூக்குத்தி ஜொலிக்கும் வனப்புடன்..!! : ) "

=-------------------------

*❤️

மழையில் நனைந்தேன்
நான் மட்டும் தனியே
பனியில் உறைந்தேன்
நீ இன்றி இணையே
வானம் இடியுடன் முழக்கமிட்டது
அதன் பெருஞ்சோகத்தை என் வசம்..!! : ) "

--------------------

*❤️

பொன் ஊஞ்சல் ஆடிடும் தாரகை அவள்
அர்ச்சனை பூக்களை தன் பாதங்களில்
நித்தம் சூழ தரிசனம் கண்டாள்..!! : ) "

-------------------

*❤️

கணிதத்தின் சூத்திரம்
எனக்கு பிடித்தாலும்
Trignometry - யாக நீ இருந்தால்
அன்று நான் தான் வகுப்பறையில்
பாடமெடுக்கும் Volunteer ஸ்டூடெண்ட்..!! : ) "

-------------------

*❤️

புத்தகத்தின் பக்கங்களில்
உன் முகம் தென்பட்டால்
வாசிப்பின் துல்லியத்தில்
என் கவனம் நிச்சயம் சிதறும்..!! : ) "


--------------------

*❤️

முத்தத்தை ரசிப்பவன் காதலன்
அதன் சுவையால் அல்ல
மோகத்திரையின் ஈர்ப்பினால்..!! : ) "


*-------------------

*❤️

ஊரே மார்கழி மாதத்தை
கோலாகலமாக கொண்டாடினாலும்
அவனுக்கு மட்டும் ஆடி மாதமே..!! : ) "

---------------------
*❤️

காலத்தின் பிடியில்
அடுத்தது என்னவென்று
நான் யோசித்து முடிப்பதற்குள்
அவள் இலையுதிர் காலத்தின்
மரமாக என் முன் காட்சியளித்தாள்..!! : ) "

-----------------

*❤️

என் வீட்டு தோட்டத்தில்
அன்று நீ விதைத்த செடியில்
இன்று பூத்த வெள்ளைப்பூவின்
மஞ்சள் நிற மகரந்த துகள்களுக்குள்
நீயின்றி உன் வாசம் வீச கண்டேன்..!! : ) "


------------------

*❤️

மரத்தின் கிளையில்
கட்டப்பட்ட குருவிக்கூடு நான்
குருவி இனம் அழிந்த பின்
சேதமடைந்த கூடாக இன்று தனியே
உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறேன்.. !! : ) "



------------------------

*❤️

நிலவின் தூய ஒளி
பூமிக்கு தினமும் வந்து செல்வதால்
அதன் மீது மனிதர்களிடத்தில் பரவும்
வைரஸ் போன்ற கொடிய நஞ்சு
நிலவொளியுடன் கலந்து விடக்கூடாது
என்பதே இருள் வானின் இப்போதைய
அவசிய தேவையாக இருக்கும்..!! : ) "


-------------------

*❤️

ஒரு செயலை வெற்றிகரமாக
முடித்தவுடன் "இவ்வளோதானா"
என்று கூறுவதில் அடங்குகிறது
அடுத்த செயலுக்கான தயார் நிலை..!! : ) "

-------------------

*❤️

நெருப்பை மூட்டி குளிர் காய்கையில்
என் உடல் மேலே தழுவி செல்லும்
பனி உணர்த்துகிறது என்னுடைய
நிகழ்காலத்தின் இத்தனிமையை..!! : ) "

------------------
*❤️

உரையாடலின் முடிவில்
"இன்னும் ஒரு அஞ்சு நிமிஷம் பேசலாமே"
என்ற மெஸேஜிற்குள் ஒழிந்திருக்கிறது
ஆயிரக்கணக்கான " மிஸ் யூ" - க்கள்..!! : ) "


----------

*❤️

எட்டாத கனி இருக்கும் உயரத்தை
எட்டி பிடிப்பதே ஒரு நடுத்தர
சாமானியனின் டுடே டாஸ்க் என
உலகம் தினம் தினம் பின்னங்கால்
பிடரி தெறிக்க அவனை ஒரே
வட்டத்திற்குள் ஓட வைக்கிறது..!! : ) "


-----------

*❤️

கண்களில் கண்ணீருடன்
உறக்கமின்றி தவித்தவனுக்கு
இந்த இரவின் ஒரே ஆறுதல்
நான்கு மூலைக்கும் சமமாக
வெளிச்சம் கொடுக்கும் அந்த
மஞ்சள் நிற குட்டி பல்பு மட்டுமே..!! : ) "

---------------

*❤️

கண்ணீரில் முடிந்த காதல்கள்
சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படாதவை..!! : ) "

-------------------

*❤️

ஒவ்வொரு பேனா முனையும்
சுமக்கும் வலிகளை எழுதுவதற்கு
உலகில் பாஷை இல்லை என்பதால்
வழக்கு முடிந்த பிறகு அந்த பேனாவின்
ஆயுட்காலம் முறிவடைந்து விடுகிறது..!!

-----------------------

*❤️

இந்த இரவை கடந்து செல்ல
எத்தனை விதமான முத்தங்கள்
வேண்டுமென கனவுகளில்
கதைத்துக்கொண்டிருக்கிறாள்..!! : ) "


---------------


*❤️

ஒரு ரசனை வாசிப்பாளன்
ஆயிரம் புத்தகங்கள் வாசித்தாலும்
பக்கங்கள் மீதான வாசனைக்கு
என்றுமே அவனிடத்தில் தனி மவுசு தான்,

அந்த வாசனை அவனை
மேலும் மேலும் பல புத்தகங்களை
வாங்க உத்வேகம் செய்யும்
வாசித்தல் எனும் பழக்கத்திலும் கூட,

வாசித்தல் அதிகமாக அதிகமாக
நாளடைவில் அவன் கிறுக்கல்களும்
அதிகமாகும் அழகிய நடையுடன்,

காலத்தின் போக்கில்
அவன் பார்க்கும் விஷயங்கள்
அவன் சந்தித்த மனிதர்கள்
அவன் வாழ்க்கை முறை
அவன் சந்தித்த வலி
அவனுடைய முதல் காதல் என
எல்லாவற்றையும் எழுத்தில் கொண்டு
வந்து ஒரு புள்ளியில் நிலை நாட்டுவான்,

எழுத்துக்கள் செழுமையடையும்
தமிழ் உயிர்களிடத்தில் பெருகும்
அவன் நிலையும் சற்று உயரும்,

எழுதுவோம் நம் தாய்மொழியில்
ஒன்றிணைவோம் எழுத்துகளினால்..!! : ) "

=------------------

*❤️

இரவு நேரங்களில் தெருக்களில்
குறைக்கும் நாய்களின் சத்தம்
ஒருவருக்கு மட்டும்
அதீத பேரன்பை காட்டுகிறது,

பத்து ரூபாய் பிஸ்கட் பாக்கெட்
இரண்டினை பிரித்து அவற்றிற்கு
உணவளித்து விட்டு தன் கடமையை
மீண்டும் தொடங்கினார் அந்த கூர்க்கா..!!

: ) "


--------------------

*❤️

காதல் :

வரையறுக்க முடியாத
ஹார்மோன்களின்
உணர்ச்சி வெளிப்பாடு

காமம் :

வரையறுக்க முடிந்த
பருவ உணர்ச்சி மாற்றங்களின்
உடல் ரீதியான கூட்டு வெளிப்பாடு,

: ) "

---------------------

*❤️

டேபிள் ரோஸ் செடியை விரும்பும்
பெண்கள் மத்தியில்
துளசி மாடத்தை ரசிக்கும்
பூந்தோட்ட காவல்காரி அவள்..!!

: ) "

------------------------

*❤️

நீண்ட நாள் மௌனம்
ஒருவரின் வைராக்கியத்தை குறிக்கும்
திமிரு என மற்றவர் நினைத்தால்
அது நினைப்பவரின் ஆகச்சிறந்த தவறு..!!

: ) "

------------------------------

*❤️

ஊரடங்கு நாட்டிற்கு மட்டுமே
முத்தத்திற்கு இல்லை என்றவள்
உதடுகளை பற்றிக்கொண்டாள்..!!

 : ) "

-----------------
*❤️

நூறு பேருடைய சோகங்களை
மறக்கச்செய்து அவர்கள் நெஞ்சில்
சிரிப்பை விதைப்பவன் கடவுள் என்றால்
நானும் ஒரு உருவ வகையில்
தீபாராதனை காட்டாத மனித கடவுளே..!

: ) "

--------------------
: - )

தேடினாலும் கிடைக்காதென தெரிந்தும்
தன் தேடலை தொடர்ந்து கொண்டே
இருப்பவன் பைத்தியக்காரன் அல்ல
தனக்கான தேடலின் சாலையில்
தினமும் பத்து புதிய நபர்களோடு
தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு
தன் நட்பு வட்டாரத்தை மேலும் மேலும்
பெரிது படுத்திக்கொள்பவன் அவன்..!!

" ❤️ "

----------------------

" ❤️

மழிக்க மறந்தேன்
என் சிகை அலங்காரத்தை

சரி உருப்படியாக புகைப்படமாவது
எடுப்போமே என கேமரா முன் நின்றால்

அதுவும் வேடிக்கையாய் அமைகிறது
அது சரி வாய்த்தது தானே விதிவிலக்கு..!!

: ) "
.-----------------------

*❤️

கற்கண்டு துகள்களாய்
பெய்யும் இப்பெருமழை
என் தீராக்காதலுக்காக
இருந்துவிட்டு போகட்டுமே,

நாளை பிரிவின் போது
மழையில் நின்று நான் அழுதாலும்
கண்ணீருக்கும் மழைத்துளிக்கும்
உள்ள வித்தியாசமென்பது
யாருக்கு தெரிந்துவிட போகிறது..!!

: ) "

-----------------
மாதுளை பழத்தை உரித்து
தயிர் சாதம் மேல் தூவினால்
ஒரு வெள்ளை சிகப்பு காம்பினேஷனில்
பார்ப்பதற்கே கண்களுக்கு
ஒரு விருந்தாக அமையும்
அது போலத்தான் நாம்
ஒரு சிறுகதையோ அல்லது
புனைக்கதையோ அழகான தமிழில்
எழுதும் போது இடையில் வாசிப்போரின்
புரிதலுக்காக ஆங்காங்கே கொஞ்சம்
ஆங்கிலம் பயன்படுத்திக்கொள்ளலாம்,

ஒரு எடுத்துக்காட்டுக்கு சொல்லணும்னா,

"

ஹே, அங்க பாரு
உன்னோட பைக் அங்க நிக்குது
போய் சீக்கிரமா ஸ்டார்ட் பண்ணு,

"

வாசிப்போரின் புரிதலுக்காகவும்
உரையாடல்களை எளிமையாக பேச்சு
வழக்கில் எழுதவும் இது பயனளிக்கும்,

*
எழுதுவோரின் கவனத்திற்கு..!! ❤️

------------------
ஏமாற்றம் என்னும் பெருங்குழியில்
ஒருவன் தள்ளப்படும் போது
அவன் அதிலிருந்து மீண்டு வர
எத்தனை துயரங்களை கடந்து
மேலே ஏறி வரப்போகிறான்
என்பதை கொண்டு தான் அவனுடைய எதிர்காலம் முடிவு செய்யப்படுகிறது..!!
---------------------

ஒருவனின் கோபத்தை
எண்ணெய் ஊற்றி திரி வைத்து
அகல் விளக்காய் ஏற்றுவதிலிருந்து
தண்ணீர் ஊற்றி கடும் நெருப்பின்
உஷ்ணத்தை கட்டுப்படுத்தும் வரையில்
அவனை சார்ந்த சுற்றுச்சூழல்
இங்கு பெரும் பங்கு வகிக்கிறது..!!

---------------------

இரவுகள் தீர்ந்துவிட்டால்
கண்ணீருக்கு வேலையில்லை
இதை புரிந்துகொண்டவன்
காதலிக்க தெரிந்த கற்பனையாளன்..!!


------------------
நம்மை வேண்டாம் என்று
சொல்லி விலகியவர்களிடம்
தேடி தேடி சென்று பேச முயற்சி செய்தால்
அவமானத்தையும் சுயமரியாதையையும்
நம்மிடமிருந்து இழக்க நேரிடும்,

உங்கள் பெற்றோரை தவிர
உங்கள் சுயமரியாதையை
யாரிடமும் எப்போதும்
இழக்காமல் இருத்தலே நன்று,

சாக்கடை - னா நாறத்தான் செய்யும்
அதுக்காக அது மேலயே நடந்தா எப்படி
கொஞ்சம் இடைவெளி விட்டு செல்வோம்..!!

--------------------

ஆங்காங்கே சிலர் மட்டுமே
அமர்ந்திருந்த ஒரு காஸ்ட்லி - யான
நைஸ் செட் அப் ரெஸ்டாரண்ட் அது,

இருவரும் தாங்கள் ஆர்டர் செய்த 
Foods - ஐ சாப்பிட்டுக்கொண்டிருந்தோம்,

சில நேரங்களில் அவள்
எனக்கு ஸ்பூனில் ஊட்டி விட்டு
என் மம்மியாக மாறிய
படலம் கூட அமைந்தது,

நாழிகை பொழுதை மறந்து
கடிகாரத்தின் முட்களை மறந்து
உலகின் வெப்பநிலையை மறந்து
இருவரின் காதல் உரையாடலும்
தமிழ் வழி கலந்த ஆங்கிலத்தில்
இலக்கணமும் கிராமரும் கைகோர்த்து
உரையாடலை மேலும் அழகூட்டியது,

சில மீம்ஸ்களை பார்த்து
சின்னஞ்சிறு நகைச்சுவையிலும்
ரசனையான பெருங்களிப்பிலும்
அவள் விரல்கள் என்னை சில
நேரங்களில் அடிக்கும்
வண்ணம் தீண்டிச்சென்றது,

பத்து விரல்களும் பின்னலுடன்
நாங்கள் கை கோர்த்த வேளையில்
அவள் குடித்த Aquafina தண்ணீர்
ஒரு சொட்டு கீழே விழுந்து
அவள் விரல்களில் அணிந்திருந்த
மோதிரம் மேலே விழுந்து ஜொலிக்கும்
முத்து போல் ரம்மியமாக காட்சியளித்தது,

நானும் அவ்வப்போது ஆண்களுக்கே
உரித்தான தலையை கோதிக்கொண்டு
அவளிடம் பேசிக்கொண்டிருந்தேன்,

திடீரென ஒரு சத்தம்
நேரம் இரவு இரண்டு மணி
PM - ற்கு பதில் AM - என
வைத்துவிட்டேன் போல
மொபைலின் அலாரம் வழியே
இளையராஜா "Gumm Summ Gumm"
பாடலின் கரோக்கியை இசை மீட்டினார், 

தூக்கம் ஒரு பக்கம் கலைந்தது
அவள் இல்லாத இந்த இரவும்
இந்த இரவில் அவளுடன் இருந்த
அழகான நினைவுகளும்
காலப்போக்கில் கனவாக
என் முகத்தின் மேலே மயில் தோகை
கொண்டு தீண்டி என் தனிமையின்
நிலையை உணர்த்தியது,

*
தனிமை ஒரு போதை
இரவிலும் கனவிலும்..!! ❤️


----------------------

இரவு நேர மொட்டை மாடி
காற்று தரும் சுகம் என்பது
இயற்கையின் வர்ணிக்க
முடியாத ஓர் வரப்பிரசாதம்
அதை உணர்ந்தவன் சொல்வான்..!!

----------------
மனம் தவிக்கும் தவிப்பிற்கு
இறப்பு தான் முடிவு என்றால்
நாம் அனைவரும் என்றோ இறந்து
எத்தனையோ மறு பிறவிகளெடுத்து
தான் மீண்டு வந்திருக்கிறோம் இங்கு..!!

=--------=------------

இசை தான் வலிக்கு
சிறந்த மருந்து எனில்
இசையமைப்பாளன் தீரா நோய்
வந்து ஏன் சாகப்போகிறான்..?..!!

----------------------
மூன்று மனைவிகளுடன்
நித்தம் ஒற்றுமையாய்
உலகை வேகமாக சுற்றி வரும்
கில்லாடி வித்தை தெரிந்தவன்
காற்றாடி எனும் கள்வன்..!!

----------------------

✨️❤️

சாலையோர மரங்கள் அனைத்தும்
போதி மரங்களாக இருந்தால்
இளைப்பாறல் வேண்டி எத்தனை
புத்தர்கள் நமக்கு கிடைத்திருப்பார்கள்..?



-------------------------

முட்கள் என்றால் குத்தும்
குத்தினால் ரத்தமும் வரும்
பிறகு ஏன் முட்கள் நிறைந்த
சாலையில் பயணம் செய்து
வீணாக காயப்பட்டு கொள்கிறீர்கள்,

இங்கு முட்கள் என்பது நிராகரித்தோர்
அவர்களிடம் வழிய சென்று பேச
நினைத்தால் புறக்கணிப்பு நிச்சயம்
புறக்கணிப்பு நிச்சயம் என தெரிந்த பின்
வீணாக அவர்களிடம் சென்று பேசி
ஏன் நீங்கள் ஏமாற்றம் அடைகிறீர்கள்..?..!!

------------------------
அன்புக்காக ஏங்கித்தவிக்கும்
மனசு இரவு நேரத்தில் மட்டும்
ஆக்ட்டிவ் செய்யப்படுவது ஏன்..? ❤️

--------------
காற்றில் காதல் பரவினால்
உலகம் முழுக்க கோடிக்கணக்கான
ரோமியோ ஜூலியட் - கள்
மண்ணில் அவதரிக்கப்பட்டிருப்பார்கள்..!! ❤️

-------------------

ஒருவரை பார்த்து
அவர் மேல் காதல் வயப்பட்டு
அவரின் குறும்புத்தனங்களை ரசித்து
அவர் மீது இறுதியாக வைக்கப்படும்
அதீத அன்பின் வெளிப்பாடினால் 
அன்பு வைத்தவரே கடைசியில் ஏங்கித்தவிக்கும் தவிப்பின் பெயர் தான்
இரண்டு மனசு சம்பந்தப்பட்ட
"காதல்" எனும் ஓர் மாய உலகம்,

*
ஆதலால் காதல் செய்வீராக..?..!! ❤️

-------------------

அவ்வளோ சீக்கிரம் நம்ம கூட கிளோஸ
இருந்தவங்கள மறந்திட முடியுமா சார்..?

அது கஷ்டம் தான் கார்த்திக் சில பேரு
அவங்கள மறக்கணும்ன்னு மதுவுக்கு
தன்னை அடிமைப்படுத்திக்கொண்டு
தன் உடலையும் சேர்த்து
கெடுத்துக்கொண்டு அவங்கள
மறக்கவும் முடியாம ஒரு மீள் நிலையில
மதுவுடனேயே தொடர்ந்து பயணம்
செய்வாங்க என்ன மாறின்னு
கூட வச்சுக்கோயேன்,

நான் பார்த்த ஒருத்தர் இருக்காரு
மதுவும் இல்ல மாதுவும் இல்ல,
ஆனா, அவர் சொல்லுவார் அவங்கள
மறக்கமுடியாது தான் ஆனா என்ன நான்
ஒருநிலையா வச்சுக்க என் கூட இருக்க
எல்லோரையும் சந்தோஷமாக
வச்சுப்பேன் நிறைய மோட்டிவேஷன்
செஞ்சுன்னு,

இப்போ உன்னயே எடுத்துக்கோயேன்
நீ என்ன செய்வ கார்த்திக் அவங்கள
மறக்கணும் னா..?

ஹா ஹா அப்படி ஒருத்தங்க
இருந்தா தானே மறப்பதற்கு,

இதான் கார்த்திக் நீ,
அந்த வலி - ய உனக்குள்ள வச்சுக்குற
அவங்களோட உருவம் உன் மனசுக்குள்ள
இருந்தும் வெளியுலகத்துக்கு அப்படி ஒரு
நபர் உன் வாழ்க்கையில இல்லன்னு
சொல்லி அந்த வலிய பிறர் கிட்ட
பகிர்ந்துக்காம உனக்குள்ள வச்சுக்கிட்டு
வெளிய சிரிச்சு சிரிச்சு பேசிகிட்டு
இருக்க,

இப்படித்தான் ரொம்ப
அன்பு வச்சுருவோம்
கடைசியில மறக்க முடியாதுன்னு
தெரிஞ்சப்பறம் இவ்வளவும் செய்வோம்
அப்போ மறந்துட்டோமான்னு கேட்டா
அதுக்கான விடை கடைசி வர நமக்கு
கிடைக்காது,

இப்படி இந்த உலகம் நிறைய
மனுஷங்கள பார்த்துட்டு தான் இருக்கு
தினமும், அதுல நம்மளும் ஒன்னு,

ஒருத்தங்க நம்மளவிட்டு போனதுக்காக
நாம நம்மல சுத்தி இருக்க மத்தவங்கள
இழக்காம ஒவ்வொரு நாளைக்கும்
புதுசு புதுசா மனுஷங்க கூட நம்மல
ஈடுபடுத்திக்கொண்டு அடுத்த
நாளுக்கான தேடல் என்னன்னு
புரிஞ்சுகிட்டு அதை நோக்கி பயணம்
செஞ்சுட்டு போவோம்,

என்னடா கார்த்திக் சிரிக்குற..?

அனுபவம் நிறைய இருக்கு போல
உங்களுக்கு அதான் நினைச்சேன்,

சிரிக்க சொல்லல சிந்திச்சு பாரு
உனக்கு இன்னும் வயசு இருக்கு
இன்னும் பத்து வருஷம் கழிச்சு
நீ திரும்பி பார்குறப்போ
நான் சொன்ன இந்த வார்த்தைகள்
தான் கார்த்திக் கல்வெட்டுல பதிச்ச
பொன்மொழியா வந்தா கூட
ஆச்சரியப்படுவதற்கு இல்ல,

*
வாழ்க்கை என்பது வாழ்த்தான
வாழ்ந்துட்டு போவோம் கார்த்திக்..!! ❤️

--------------------
தனிமை ஒரு போதை
அந்த போதைக்குள் நம்மை நாம்
இணைத்துக்கொண்டால் அது தரும்
சுகம் என்பது மதுவில் கூட இன்று வரை
கிடைத்து விடாது என்றே நினைக்கிறன்,

ஒரு பத்து நிமிஷம்
தனியா உட்கார்ந்து பாருங்க
ஒரு தனி அறையில அது சொல்லி
கொடுக்கும் பள்ளிக்கூடத்துல
ஆசிரியர் கூட சொல்லிக்கொடுக்காத
பாடத்தை எல்லாம்,

தனிமையை தேடுங்கள்
அது உங்களை சுற்றியே இருக்கிறது
தனிமையை உணருங்கள்
அது உங்களுக்கு சொந்தமான ஒன்று
தனிமையை ரசியுங்கள்
அது உங்கள் சிந்தனையை வளர்க்கும்
தனிமையை கொண்டாடுங்கள்
அது உங்கள் இரவுகளில் ஆயிரம் கதை சொல்லும்,


---------------------------

பிரிஞ்சு போன ஒருத்தங்க
நம்ம கூடயே நம்மல சுத்தியே
இருக்காங்கன்ற ஒரு மெண்டல் ஸ்டேட்
உணர்வ நமக்கு நாமே கொடுக்குறதுக்கு
இன்னொரு உயிர் மேல அவங்க மேல
இருக்க அன்ப அரவணைப்பா காமிங்க,

*
ஒருத்தனோட அரவணைப்பு சொல்லும்
அன்பின் ஆழத்தையும் அழகையும்..!! ❤️

-----------------------

கனவுகளை விற்பனை செய்ய
வாய்ப்பிருந்தால் அரசாங்கத்தின்
கடனையே தீர்க்கும் வல்லமையுடைய
கோடீஸ்வர முதலாளியாவேன் நான்..!!

#DreamsForLife | #DreamsForNight ❤️

-----------------------------
பருவங்கள் மாறினாலும்
இளநரை தோன்றினாலும்
நான் என்பது நான் தானே
நீ எனை ரசிக்கும் போதினிலே,

காலங்கள் கடந்தாலும்
காட்சிகள் மாறினாலும்
நான் என்பது நான் தானே
நீ எனை ஆட்கொள்ளும் வேளையிலே..!!

----------------


தனியே நடந்து வந்தேன்
மின்னல் வெட்டியது வானில்
கருமேகம் விண்ணை சூழ்ந்தது
மண் வாசனை வீச தொடங்கியது,

காற்றின் வேகம் சற்று அதிகமானது
விண் மீது தலை உயர்த்தினேன்
முதல் மழைத்துளி என் மேல் விழுந்தது
இலையுதிர் மாலை சற்று அழகானது,

மழையில் முழுதும் நனைந்தேன்
ஆளற்ற சாலையில் தனியே நடக்கிறேன்
மேகம் தன் கண்ணீரை என்னிடம் பகிர்ந்தது
நான் மழைக்கு ஆறுதலாக அமைந்தேன்,

மழையை ரசிப்பவன் நான்
மழையை வேண்டுபவன் நான்
மழையில் துள்ளி விளையாடும் நான்
இன்று ஏனோ மழலை பருவம் செல்லவில்லை,

எனக்கு பிடித்தமான தனிமை
எனக்கு பிடித்தமான மாலை
எனக்கு பிடித்தமான மழை
எனக்கு பிடித்தமான மண் வாசனை
எல்லாமே பிடித்ததாய் அமைந்தது
பிடித்தவை மட்டுமா அமைந்தது,

பெருமழை நின்றது
மாலை இரவானது
தவளைகள் சத்தமிட்டது
நான் கனவுகளில் மிதந்தேன்,

#BoredomScribbles ❤️

-----------
கவிதை எழுத முயற்சிக்கிறேன்
காதல் செய்ய கற்றுக்கொள்கிறேன்
கண்களில் மட்டுமே நாம் பேசலாம்,

சிற்சில சண்டைகளிடலாம்
சிநேகிதம் பல நாம் காணலாம்
உரையாடியே பொழுதையும் தீர்க்கலாம்,

#BoredomScribbles 💚

-------

காதலிக்க வக்கில்லாதவன் தான்
கவிதை எழுதுவான், 

கவிதை எழுத வக்கில்லாதவன் தான்
காதல் செய்வான்,

இரண்டுக்கும் வக்குள்ளவன் பல
பெண்கள் மீது மையல் கொள்வான்,

இரண்டுக்கும் வக்கில்லாதவன்
ஒரு பெண்ணையாவது
காதலிக்க வைத்து விட வேண்டும்
என்ற முயற்சியை தொடர்ந்து
செய்து கொண்டே இருப்பான்,

விஷயம் என்பது இவ்வளோ தான்
ஆனா நம்ம மனசு தான் அடிச்சுக்குது..!!

#BoredomScribbles ❤️

-----

இரவில் ஓசை சத்தம் ஏதுமின்றி
அமைதி காக்கிறது மரக்கிளை,

கொஞ்சம் கூர்ந்து கவனித்தால்
இலையும் இலையும் ஒன்றோடு ஒன்று
முத்தமிட்டுக்கொள்ளும் பேரன்புடைய
ஒலியானது நம் செவிகளுக்கு
சுகம் தருகிறது,

முடிந்த வரை இரவுகளை ரசியுங்கள்
இரவுகள் ரசனை தன்மை மிக்கவை,

#இரவும்ஒலியும் : ) ❤️

-------------------

கற்பனைகள் நிறைய காண்பது
காட்சியாக எவையேனும் மாறும்
என்ற அதீத நம்பிக்கையில் தான்..!!

: ' ) ❤️

-----------------------

மற்றவர் கண்களுக்கு
நல்லவனாய் தெரிந்து
அவர்களுக்காக ஓர் வாழ்க்கை
வாழ்ந்து இறுதியில் என்ன பயன்..?

கஷ்டமோ நஷ்டமோ
இன்பமோ துன்பமோ
முதலில் நீ நீயாக இருந்தால் தானே
உன்னை நீயே இங்கு விரும்புவாய்..!!

: ' ) ❤️

-------------------

அன்று ஒரு நாள்
நான் சிந்திய கண்ணீர்
இன்று எழுத்துக்களின் மூலம்
என்னால் எழுதப்படும் போது
என் இறந்தகாலம் மோட்சம் அடைகிறது..!!

: ' ) ❤️

---------------------
Know Your Worth !!

இது தெரிஞ்சுக்காம பல பேரு தங்கள
வேணாம்ன்னு நினைக்குறவங்க கிட்ட
இன்னும் தங்கள தாமே தாழ்த்திட்டு
போய்கிட்டு இருக்காங்க,

உங்க Worth என்னன்னு தெரிஞ்சுக்கோங்க
உங்கள தேடி ஆயிரம் பேரு தினம் வருவாங்க,

: ' ) ❤️

----------------------

துயர் நிறைந்த வலிகளையும்
தேங்கி நிற்கும் கண்ணீரையும்
பிறரிடம் வெளிப்படுத்தாமல்
தனக்குள் மறைக்க சில நேரம்
முகமூடி அணிந்த உருவம் இங்கு
ஒவ்வொருவருக்கும் தேவைப்படுகிறது..!!

: ' ) ❤️

-----------------------
நேசிப்பது எல்லாம் சரியான நேரத்தில்
கிடைத்துவிட்டால் ஏமாற்றத்திற்கு
நம்மிடம் மதிப்பு இல்லாமல் போய்விடும்..!!

: ' ) ❤️
------------------------

அன்று Inland லெட்டரில்
ஆரம்பித்த அவர்களின் காதல்
இன்று வாட்ஸாப் எமோஜிக்களில்
உரையாடலின் இடையே
அழகாக கொஞ்சி கொள்கிறது,

காலம் எவ்வளோ வேகமா
தன்னோட மாற்றத்தை
மனிதர்கள் பார்வையிலிருந்து
பார்க்குது பார்த்திங்களா..?

இருவரும் கடிதம் எழுதினார்கள்
வாட்ஸாப் உரையாடல் செய்தார்கள்
காலத்துடன் சேர்ந்து அவர்களின் காதலும்
தன்னைத்தானே Upgrade செய்து கொண்டது
அவர்கள் இருவருடன் கூட்டு சேர்ந்து..!!

----------------------------------
பிரிவுக்கு பின்னும் நினைவலைகளில்
பிரிந்தவர் உடனான என் பயணங்கள்
தினமும் தொடர்கிறது அவருடன் இருந்த
பாதையின் தடமும் வழியும் பிரிவினால்
சுவடின்றி அழிந்த பிறகும் கூட,

இதைத்தான் நா.முத்துக்குமார் அவர்கள்,

பாதை முடிந்த பிறகும்
இந்த உலகில் பயணம் முடிவதில்லையே

என அன்றே தன் பேனாவில் எழுதினார் போல்..!!

------------------------------

நான் பார்த்த இச்சமூகத்தில்
முறுக்கு மீசை கொண்ட
அப்பாக்கள் அனைவரும்
வெகுளித்தனம் கொண்ட
பச்சிளம் குழந்தைகள் என
நான் அறிந்து கொண்டேன்..!!

-------------------------------
கட்டுப்படுத்த முடியாத
கட்டுக்கடங்காகோபம் கூட
சாந்த நிலை அடைகிறது
கண்ணீர் விட்டு அழும் போது..!!

--------------------------------

ஒருவர் மீதான அதீத அன்பு
தொலைக்கப்பட்ட நாட்களின்
தேடலில் தான் முற்று பெறுகிறது..!! 😊💙

-------------------------------
தேடல் கொண்ட மனிதனும்
தேடலை விரும்பும் மனிதனும்
பயணத்தை அதிகமாக நேசிக்கின்றனர்..!! 😊💙

-------------------------------
நினைவுகளை மறக்க நினைத்தாலும்
சில நேரம் ஏதோ ஒரு வடிவத்தில்
நம்மிடம் மீண்டும் மீளா வட்டமாக
வந்து சுற்றிக்கொள்கிறது..!! 😊💙

------------------------------

இனிப்பு பலகார கடையின்
முகப்பு வாசல் கோலத்தின் மீது
எறும்புகள் ஊர்ந்து வந்து
சாரம் சாரமாய் தங்களின் அன்றாட
தினசரி வருகையை பதிவிடுகின்றன,

: ' ) ❤️

----------------------------------

நீயோ
நானோ

காடுகளோ
காலைப்பனியோ

தாகமோ
தனிமையோ

மலைகளோ
மீள் நினைவுகளோ

காலம் கடந்து வந்து விட்டேன்
கட்டவிழ்த்த ஓர் தேசாந்திரியாய்,

----------------------------

நான் சிரிக்கிறேன்

என் பெருஞ்சாபத்தை நினைத்து
என் அறியாமை நிலை நினைத்து
என் வாழ்க்கை பாதையை நினைத்து
என்னையே சில நேரங்களில் நினைத்து,

ஆசைப்பட்ட ஒன்று கிடைக்காத நேரத்தில்
உண்டாகும் வலி எல்லாருக்கும் தெரியுமே
ஆனால் எனக்கு உங்களை விட ஒரு படி
கொஞ்சம் அதிகமாகவே தெரியும்,

மனிதனுக்கு "லக்" என்பது
ஒரு சொடக்கு போடும் நேரம் தான்
அந்த சொடக்கு போடும் நேரத்தில்
ஒன்று கிடைக்கும் இல்லாமல்
கிடைக்காமல் தட்டிக்கொண்டே போகும்,

நான் "லக்" என்னும் வார்த்தைக்கு
பக்கத்தில் கூட செல்ல முடியாமல்
வேடிக்கை பார்க்கக்கூட தகுதி
அற்று தனித்தே நிற்க கூடியவன்,

நீ இவ்வளவு தான் இந்த வகை தான்
இவ்வளவு தான் நீ ஆசை பட வேண்டும்
உனக்கென வகுக்கப்பட்டது இது மட்டுமே
என என் ஆசைகளுக்கு கோட்பாடு வைத்தனர்,

ஒரு தாயிடம் நீ இவ்வளவு தான்
உன் பிள்ளைக்கு தாய்ப்பால் ஊட்ட
வேண்டும் என அத்தாயின் பாசத்துக்கு
முரணாக அவளுக்கு ஆணையிட்டால்,

பெரிதாக விரிந்து கடக்கும் உலகில்
என் ஆசைகளை முடக்கியது யார் குற்றம்,

சரி நான் மட்டும் தான் இப்படி என
என் மீது எனக்கே கருணை ஏற்பட்டபோது
என் மக்களை சற்று உற்று நோக்கினேன்,

பள்ளிக்கூடத்திலே தமிழில் பேசினால்
அபராதம் என்று வாழும் தமிழ் மண்ணிலே
சட்டம் பிறப்பித்தது மேலதிகார வர்க்கம்,

இப்பொழுது என்னவென்றால்
சமஸ்கிருதத்தையும் ஹிந்தியையும்
படித்தாக வேண்டும் என ஏன் தமிழ் நாட்டில்
தேவையில்லாத ஒரு மொழி மக்களிடையே
துணிக்கப்படுகிறது அதற்குத்தானே பொது
மொழி ஆங்கிலம் என்பது இருக்கிறதே நம்
நாட்டுமக்களின் நடைமுறை பழக்கத்தில்,

மாசம் முந்நூறு ருபாய் கரண்ட் பில்
கட்டியவன் ஆயிரத்து ஐநூறு ருபாய்
கட்டும் அளவு வசதி வாய்ப்பு அதிகம்
பெற்றவன் ஆனான் அரசாங்கத்தின் பிடியில்,

இன்று கை தட்டி சிரித்து பேசியவன் 
நாளை மருத்துவமனையில் நாடு விட்டு
நாடு பரவி வந்த கொடிய வைரஸ்
நோயினால் அனுமதிக்கப்படுகிறான்
நாளானக்கி ஒன்னு பிழைக்கிறான்
இல்லை பிணவறைக்கு கொண்டு
செல்லப்படுகிறான்,

நாட்டில் பல பிரச்சனைகள் இப்படி
இருக்கும்போது என்னிடமும் சில
கேள்விகள் கேட்கப்படுகின்றன,

போகுற உசுரு எப்போனாலும் போகும்
இதுல நீ அந்த தண்ணி குடிக்குறவன்
நீங்க அந்த தொழில் செய்றவங்க
உங்க ஆளுங்களுக்கான மயானம் அது
இப்படி பல பல கேள்விகளை தினமும்
நானே என் எதிரில் உள்ள ஆட்களிடம்
சந்தித்து கொண்டு தான் இருக்கிறேன்,

இந்த சாதி,மதம்,இனம்,மொழி
இதுக்கெல்லாம் அப்பாற்பட்டவன் நான்
நான் வாழ்ந்துட்டு இருக்க உலகம் வேற
இது ரொம்ப இருட்டான கொடிய உலகம்,

இங்க நண்பர்கள் வட்டம் ரொம்ப கம்மி
அதனால இன்னோருத்தங்க மீதான
கருணை அதிகமா இருக்கும் எனக்கு
கிடைக்காத கருணையின் பலனா,

உடன் இருந்தே உண்டகம் செய்த
கூட்டத்தின் துரோகத்தையும்
நித்தம் சமாளித்து வந்தவன் நான்,

ஏமாற்றங்களும் அவமானங்களும்
என்னை மட்டுமே தேடி ஓடி வரும்
அளவிற்கு பெரும் பாக்கியசாலி நான்,

என் இரண்டு கால்களை சுற்றியும்
பாம்புகள் இங்கு படையெடுத்து நிற்கும்,

ஊர் சுற்றும் கழுகு கொத்தித்திங்கும்
ஜட பிணமாக பூமியில் கிடக்கிறேன்,

இதுவே நான் இப்படியாக நான்
மனம் முழுதும் தீரா ரணம் இருந்தும்,

நான் சிரிக்கிறேன் : ' ) ❤️

----------------------------------------------

மக்களின் மனநிலையை,
அழுகையை,சிரிப்பை,
கவலையை,சந்தோஷத்தை
ஒருவனால் எழுத்துக்களில்
கொண்டு வர முடியுமானால்
அதுவே தேவை அதுவே தர்மம்,

----------------------------------

என்னால முடியவே முடியாதுன்னு
உலகம் ஒரு விஷயத்த என்கிட்ட
இருந்து ஒதுக்கிவைக்குறப்போ
அது எனக்கு கிடைக்க நான் முயற்சி
செஞ்சுட்டே தான் இருப்பேன் கடைசி
வரைக்கும் என்ன ஆனாலும்,

அவளோ ஈஸியா எதும் கிடைச்சுடாதுல
அப்படி கிடைச்சுட்டா அதோட மதிப்பு
நமக்கு எப்பவும் தெரியாமையே போயிடும்,

So, I Won't Give up Sir !!

முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும்

முயற்சியானது ஒருவனது செல்வத்தை
வளர்க்கும்,முயற்சி செய்யாமல் இருத்தல்
ஒருவனை வறுமையில் சேர்த்துவிடும்,

தோற்றாலும் முயற்சி செய்தே தோற்பேன்
ஒரு வேலை சிறு வெற்றி என்பது
எனக்கு அரிதாக நித்தம் கிடைக்குமாயின்..?

ஆனாலும் முயற்சி தொடரும்..!!

: ' ) ❤️

----------------------------------------

அணைகின்ற விளக்கு தான்
பிரகாசமாக நின்று எரியுமாம்,

பிரிவுக்கு முன் சொல்லப்படும்
மிஸ் யூக்கள் தான் உலகில் அதிகமாம்,

இரண்டையும் ஒப்பிட்டு பார்த்தால்
அதிகம் பாதிப்படைந்தோர்
பெரும்பாலும் ஆண்கள் வர்க்கமே,

அன்று ஜோடியாய் இருந்த இடத்தில்
இன்று கையில் காஃபி கப்புடன்
அவன் மட்டும் அமர்ந்திருந்தான் தனியே,

~ மிஸ் யூக்கள் அவனைச்சூழ !! : ' ) ❤️

---------------------
*_*

விட்டு சென்றவர்கள்
நம்மிடம் விட்டு சென்ற
மிச்சத்தை நினைக்கும் போது தான்
மனதில் வைராக்கியம் அதிகமாக
சுரக்கிறது கொஞ்சம் சூடு சுரணையுடன்,

: ' ) 
-----------------------------

*_*

மூக்குக்கண்ணாடி அணிந்தவர்கள்
எல்லாம் உயர் தர படிப்பாளிகள் என்று
நம்பிய வயதில் வாழ்ந்து கெட்டவன் நான்,

அதன் விளைவு,
தலை வலிக்கு நானும் மூன்று வருட
காலம் கண்ணாடி அணிந்திருந்தேன்,

: ' ) ❤️

-------------------------------------

*_*

பாக்கெட் கவரில் தொங்கும்
செக்க சிவந்த தேன் மிட்டாய்கள்
பெட்டிக்கடையின் முகப்பை
மேலும் வர்ணஜாலப்படுத்தியது,

: ' ) ❤️

--------------------------------------

வார இதழ்களில் கிடைக்கும்
சன்மானத்திற்காக எழுதுபவன் அல்ல,

என் வலியை எழுத்துக்கள் மூலம்
பிறரிடம் பிரதிபலித்து காட்டுபவன் நான்,

: ) ' ❤️

-------------------------

நம் அமைதி முகமூடிக்குள்
ஒளிந்திருக்கும் பல பேரின்
சுயரூபத்தை வெளிக்கொண்டு வருகிறது,

: ) ' ❤️

----------------------------------

ரொம்ப வருடங்களாக
படிக்காமல் கிடப்பில் கிடந்த புத்தகம்
என்னை உன் கையில் ஏந்திக்கொள்
என் பேரழகு தூசி படிந்து சிதைந்து
கொண்டிருக்கிறது என என்னிடம்
தீரா யாசகம் செய்து வருகின்றது,

: ) ' ❤️

-----------------------------------------

பள்ளிக்கூட மர பெஞ்சில் நண்பர்களின்
பெயரை காம்பஸில் கிறுக்கி வைத்தேன்,

அந்த நான்கு பேர் தான் என் இறப்பில்
நான்கு முனையில் நிற்க போகிறார்கள்
என நினைத்து வந்தேன்,

பள்ளிக்கூடம் கல்லூரி ஆனது
கல்லூரி முடிந்து வேலைக்கு சென்றாயிற்று,

அன்று நான் கிறுக்கி வைத்த
நண்பர்களின் பெயர்கள் எல்லாம்
காலப்போக்கில் சாக்பீஸ் துகள்களாக
காற்றில் கலந்து மறைந்து போயின
அந்நண்பர்களுடன் சேர்த்து,

காலத்தின் சுழற்சி தான்
எத்தனை நினைவுகளை நமக்கு
தினந்தோறும் நினைவு படுத்தி வருகிறது,

தனிமையை ரசிக்க தெரிந்தவனுக்கு
நினைவுகள் என்றும் தீஞ்சுவையே,

போதி மரம் போன்ற வாழ்க்கையில்
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போதனை
இன்று பள்ளிக்கூடத்தின் வருகைப்பதிவு,

மீண்டும் பள்ளி நினைவுக்கு
திரும்ப செல்கிறேன் இன்று
வருகை பதிவின் "S" வரிசையில்
என்னுடைய பெயரில் மட்டுமே மூன்று
நண்பர்கள் வேறு வேறு இனிஷியலில்,

கணக்கு வாத்தியார் நடத்தும்
எனக்கு பிடித்த அல்ஜீப்ரா சேப்டரின்
சூத்திரம் கருப்பு பலகையில் இன்றைய
மாணவர்களுக்கு எழுதப்பட்டு இருந்தது,

அந்த காலத்துல நாங்கல்லாம் - ன்னு
பெருசுங்க சொல்லுறதுல இருக்க
சுகம் என்பது இன்று மனதளவில்
பெரிய தாக்கத்தை தருகிறது எனக்கு,

பள்ளிக்கூட வளாகம் முழுவதும்
என் கால் தடங்களின் அச்சுக்களை
விட்டுவிட்டு தான் வந்திருக்கிறேன்,

நினைவுகளை நெஞ்சில் சுமக்கும்
சாதாரண மாண்புமிகு மாணவனாக
இன்று விஜயம் செய்கிறேன்,

: ) ❤️

--------------------------------------

முகத்தை மறைக்கும் அளவு
வளர்ந்திருக்கும் தாடிக்குள்
கண்ணாம்பூச்சி ஆடுகிறது
நினைவலைகளின் மறக்க
நினைக்கும் கோரத்தாண்டவங்கள்,

*... : ) 💚

---------------------------------------------

குளிர்காற்று இரவுகளில்
இதமாக வீசும் போது காதல்
கார்குழல் கடவையாக பிரதிபலிக்கிறது,

... : ) ❤️

-----------------------
நேற்றைய சங்கதி நேற்றோடு முடிந்தது
இன்று கிளறினால் புதியது பிறக்காமலே
போய் விடும்,

... : ) ❤️

--------------------------------------------
இக்கால காதலர்களின்
உரையாடல்களில் மெய்நிகர்
முத்தங்களுக்கு தான் மவுசு அதிகம்,

... : ) ❤️

------------------------------------

அழகான காதல் கதையை
நிலவின் ஒளியில் எழுதிக்கொண்டிருப்பதால்
இரவுக்கு நான் செல்ல பிள்ளை,

... : ) ❤️
-----------------------------------------

இது தான் இக்கதையின் முடிவு
என உறுதி செய்யப்பட்ட பின்னரே
அக்கதையினை எழுத தொடங்க வேண்டும்,

... : ) ❤️

---------------------------------------

வேண்டாம் என
ஒதுங்கி செல்பவர்களிடம்
நீயாக போய் பேசினால்
உன் சுய மரியாதையை
ஒரு நாள் இழக்க நேரிடும்,

... : ) ❤️

----------------------------------------

போகும் தூரம் சற்று
தொலைவாக இருந்தால்
ராஜாவின் சங்கீத ராகத்தை
ஒலிக்க விட்டு செல்லுங்கள்
மனதிலும் மகிழுந்திலும் சேர்த்து,


டாக்ஸி டிரைவர் ... : ) ❤️

-----------------------------------

மனிதர்களோட குணமும்
நிறம் மாறுவது தான்
பின்ன பச்சோந்திய மட்டும்
திட்டி என்ன பலன்..?

... : ) ❤️

---------------------------------------

பிறர் கஷ்டம் புரிந்து
அவரின் துன்பம் துடைத்து
அவருடனான நீண்ட பயணத்தில்
தாங்கள் வந்த தேடலுக்கான காரணத்தை
அவருக்கு சரியாக உணர்த்துபவன் தான்
ஓர் சிறந்த கம்யூனிசம் பேசும் தேசாந்திரி,

... : ) ❤️

-----------------------------------------

கண்ணீர் பெருங்கடலாக
கண்களில் நிற்கும் போது
உதடுகள் மட்டும் சிரித்தால்
அங்கு அவன் பக்குவப்பட்டுவிட்டான்,

... : ) ❤️

---------------------------------

கொத்து கொத்தாக
பல வண்ண ரோஜாப்பூக்கள்
கொடுக்கலாம் என மனம் தேடும் போது
நான் தேடும் மயிலாஞ்சி என் பூக்கடைக்கு
அழையா வாடிக்கை(யாழினி)

-

பூக்கடை காதலன்... : ) ❤️

-------------------------------------------------------

கடிதம் எழுதினேன்
காதல் மடல் வரைந்தேன்
உன் விலாசத்திற்கு அனுப்பினேன்
கொஞ்சம் பிரித்து பார்த்து சொல்
பிள்ளையார் சுழி போட்டு
தொடங்கி இருக்கிறேனா இல்லையா என..? 

... : ) ❤️

--------------------------

மரப்பாச்சி பொம்மையிடம்
மணிக்கணக்கில் பேசுபவன் நான்,

என் பேச்சுக்கள் அதன் செவிகளுக்கு
சுகம் சேர்க்காது என நன்று தெரிந்தே,

இருந்தும் நான் ஏன் பேசுகிறேன்..?
என் பேச்சை கேட்க அது மட்டுமே
தயாராக இருக்கிறது என
நான் அதனிடம் உணர்ந்ததினால்,

-

தனிமை காதலனின்
டைரி பக்கத்தில் இருந்து,

... : ) ❤️

----------------------------------

பசிக்கான உணவுக்கு ஒருவன்
இறுதியாக வேறு வழியேயின்றி
கையேந்தியும் கிடைக்கவில்லை எனில்
அதை விட உச்சக்கட்ட வன்முறை
வேறு என்ன இருந்து விட முடியும்..?

... : ) 💔

----------------------------------

வாய் விட்டு சிரித்தால் தானே
நோய் விட்டு போகும்..?

நான் உதடுகளே விரியா
வண்ணம் தானே சிரிக்கின்றேன்,

நோய் உடலுக்குள் ஊடுருவி
குடில் போட்டு என்னிடமே தங்கி கொள்ளும்,

... : ) ❤️

-----------------------------------

நான் விதைத்த பேரன்பில்
துளிராக பிறந்த செடியான நீ
இன்று மரமாக மாறிய பின்
எனை இக்கணம் மறந்ததேனோ..?..!!

... : ) ❤️

------------------------------------

சைவ முத்தத்தில்
சுவை காண்பவன்
முதல் காதலன் என
வரலாற்றில் இன்றே எழுதுங்கள்,

... : ) ❤️

------------------------------

அன்று பிரிந்த இருவர்
இன்று வேறு வேறு திசையில்

இன்று இணைந்த இருவர்
அன்று வேறு வேறு கருவில்,

... : ) ❤️

--------------------------------

யாரும் நம்பாத பல காதல் கதைகளை
கடற்கரை காற்றின் ஈரப்பதத்தில் அமர்ந்து
நீயும் நானும் பேசி பொழுதை கழித்தோம்,

... : ) ❤️

--------------------------------

மலம் கழிக்கும் கழிப்பறையில்
எப்படி கவிதை பிறக்கும் என்றான்..?

வைகை புயல் சொல்வது போல்
பல சிந்தனைகள் பிறக்குமிடம்
அங்கு தான் என நான் கூறினேன்,

... : ) ❤️

------------------------------------------

குடலை புடுங்கும் நாற்றம்
அவசரத்திற்கு நான் மட்டுமே
வழிப்போக்கன் என்னிடம்
வந்து சென்ற வண்ணம் இருக்கிறான்
நானோ அவன் கழிவை சுமக்கிறேன்,

இப்படிக்கு
பேருந்து நிலைய கழிப்பறை,

... : ) ❤️
---------------------------------------

நான் சென்று திரும்பும்
தெருக்கள் முழுவதும் பூ வாசம்,

இப்படிக்கு
பூ விற்கும் பெண்,

... : ) ❤️

------------------------------------

போகின்ற வழியில்
எனக்கு பின் செல்லும்
மரங்கள் அத்தனையும்
என்னை பார்த்து கதைக்கின்றது
முன்னோக்கி நகர்ந்து செல் என்று,

... : ) ❤️

-------------------------------------

ஒவ்வொருத்தரும்
தன்னோட மனசாட்சி கிட்ட
தனக்கு தானே சொல்லிக்கிறது
இதுவாகத்தான் இருக்கும் நிச்சயமா ,

~ " Being Myself is Not Easy "

... : ) ❤️

-------------------------------------

தேடலின் சுகம் கண்டேன்
இதுவும் எனக்கு பிடித்து போனது,

தனிமையை உணர்ந்தேன்
மேலும் பல இரவுகள் என் வசம் ஆனது,

... : ) ❤️

------------------------------------

தோட்டத்து செடி மீது அமர்ந்து
சாரல் மழையில் நனைந்த வண்ணம்
முத்தம் கொடுத்துக்கொண்டன
இரண்டு பைங்கிளிகள்,

அடுத்து வரப்போகும் பெருமழையில்
மேலும் அவைகள் நனையாதிருக்க
குடை பிடித்தேன் காதல் ஜோடிகளுக்கு
என் சார்பில் நான் காட்டும் பேரன்பாக,

... : ) ❤️

------------------------------------
தினமும் நான் சந்தித்து பேசும்
எளிய மாமனிதர்கள் தான்
என் கதைகளின் எழுத்துக்களுக்கு
உயிர் கொடுத்து நிறைந்து கிடக்கிறார்கள்,

... : ) ❤️

-------------------------------------------

பத்து விதமான கையெழுத்துக்களில்
வேறு வேறு கோணங்களில் எழுதியும்
எழுத்தாளனுக்கு எழுத்தின் மீதுள்ள
சிந்தனை போதை துளியும் குறையவில்லை,

... : ) ❤️

-----------------------------------------

பலரால் பல வழிகளில்
நிராகரிக்கப்பட்ட ஒருவன்
நாளை அடையப்போகும்
முன்னேற்றத்தில் தன் கொள்கையின்
பிடியில் இருந்து சற்று உயர்ந்தே நிற்பான்,

... : ) ❤️

--------------------------------------------

பலருக்கு எளிதாக கிடைக்கின்ற
ஒரு பொக்கிஷம் ஒருவனுக்கு
எவ்வளவு போராடியும் கிடைக்காத
பட்சத்தில் அவன் வேறு எதற்கும்
ஆசைப்படாத ஜடம் போல் ஆகிறான்,

... : ) 😷❤️

-----------------------------------------

ஒரு சொம்புல தண்ணி
மோந்து கொடுப்பா என்பது தான்
கடைசி காலத்துல பாட்டி/தாத்தா - க்கள்
பேரன்/பேத்தி - களிடம் எதிர்பார்க்கும்
அதீத பேரன்புடைய சின்னஞ்சிறு ஆசை,

.... : ) ❤️

----------------------------------------------------

பலர் இது ஒரு நல்ல படம்
என்று சொல்லிய அப்படத்தை
பார்ப்பதற்காக இரண்டு மணி நேரம்
ஒதுக்குவது என்பது காதலி தன்னிடம்
சொல்ல வரும் காதலை வேறொருவர்
மூலமாக முன்கூட்டியே தெரிந்து
அவள் சொல்லப்போகும் ஐ லவ் யூ
விற்காக காத்திருப்பது போன்றது,

... : ) 💚

----------------------------------------
இரு இளம் காதலர்கள்
முத்தமிட்டு கொண்டிருக்கின்றனர்
ஒலி எழுப்ப வேண்டாம் அவர்களுக்கு
இடையூறாக இருக்கும் என சைக்கிள்
பெல்லினை அடிக்காமல் சென்றேன்,

~ இரு காதலர்களாக " Love Birds " : ) ❤️
------------------------------------------

ஓ, சரியான நேரத்துக்கு வந்துட்டியா..?
இப்பவும் நான் தான் தாமதம் போல,

உன்கிட்ட இன்று நான் பேசும்
மனநிலையில் இல்லை நீயும் கூட,

ஆக, கண்களின் வழியே நம் கடைசி
சந்திப்பை அரங்கேற்றிக்கொள்வோம்,

மௌனம் மட்டுமே ஆட்கொள்கிறது
நம் கண்களில் மழை பொழியவில்லை,

இருவரின் உதடுகளும் சிரிக்கிறது
ஆனால் சிரிப்பில் புன்னகை இல்லை,

பேசும் நம் சொற்கள் கூட தீர்ந்து
உரையாடல்களும் வெறுமை அடைகிறது,

இந்த தினத்தில் முடியும் என்று
தெரியாமலே காதலித்து விட்டோம் போல்,

புரியாமலே காதல் செய்தது அதிகம்
இப்போது புரிந்துகொண்டு பிரிவோம்,

இவ்வுறவுக்கும் ஓர் முற்றுப்புள்ளி
அவ்ளோதான்ல இந்த காதல் ஹ்ம்ம்,

உன் முகம் பார்த்து பேசமுடியாமல் கண் வரையத் தெரியாத ஓவியன் போல நான்,

காதலை விட அதன் மீதான
ஞாபகங்களுக்கு உயிர்ப்பு அதிகம் தான்ல,

நினைவுகளில் மட்டுமே இனி
கை கோர்த்து நடக்க பழகிக்கொள்கிறேன்,

சொல்லமுடியாத பேரிடர் தாக்கங்களும்
பல பெருந்துயரங்களும் நிறைந்தவை
நம் நேர்காணலின் இக்கடைசி சந்திப்பு,

கிளம்புறேன் (.....)
கண்ணெல்லாம் ஒரு மாதிரி..? : ) ❤️

-------------------------------

அழியப்போகும் உலகத்தில்
கடைசியாக நீயும் நானும் முத்தமிட்டு
பூமியில் புதிதாய் மீண்டும் பிறப்போம்
என உரையாடலில் கதைத்து
கொண்டிருக்கிறார்கள் அக்காதலர்கள்,

: ) ❤️

---------------------------------

சிலை திருடப்பட்டது தெரியாமல்
உச்சி கால பூஜை நேரத்தில்
பூட்டப்பட்ட கோவிலின் முன்
பக்தன் ஒருவன் கடவுளை வழிபட்டான்,

சிலை ஒரு திருடனால்
திருடப்பட்டு விட்டது என்ற
உண்மை பக்தனுக்கு தெரிந்தால்
மனம் உருகி வழிபாடு செய்த
அவனின் பிரார்த்தனையை
எங்கு சென்று யாரிடம் முறையிடுவான்..?

: ) ❤️

---------------------------------

ஏதோ மனக்குழப்பத்தினால்
சாலையில் திடீரென்று நீங்கள்
மயக்கமிட நேரும் தருவாயில்
யாரென்றே தெரியாத ஒருவர்
வழிப்போக்கனாக உங்களுக்கு
முன் வந்து உதவி செய்யும் போது
அவர் குணாதிசயங்கள் மூலம் 
மனிதம் இன்னும் மனிதனிடம்
கொட்டிக்கிடக்கிறதென்று
நம்மால் புரிந்து கொள்ள முடியும்,

: ) ❤️

---------------------------------

முன் ஜென்மம் என்ற ஒன்று
என் வாழ்வில் இருந்தால்
அதை சோதித்து பார்க்க ஆசை
வாழ்ந்து பார்க்க போவதில்லை,

: ) ❤️

------------------------------
இன்னொருவரின் கண்ணீருக்கு
நீ ஆறுதலாக இருந்தால்
நாளை உன் கண்ணீரை துடைக்க 
பெயர் தெரியாத ஒருவன்
உன் வாழ்வில் விஜயம் செய்வான்,

: ) ❤️

--------------------------

உனக்கு புரிந்து கொள்ளும்
பக்குவம் இல்லை என்றார்கள்,

என் எழுத்துக்களில்
இன்னொருவரின் தேடலை
யூகித்து எழுதும் அளவிற்கு
என் பக்குவத்தை நான்
வளர்த்துக்கொண்டேன்,

ஆனால் அவர்கள்
இன்றும் எனக்கு
பக்குவம் வரவில்லை
என்றே நினைக்கின்றனர்,

நினைப்பவர் நினைக்கட்டும்
நான் இப்படித்தான் என்று
சுதந்திரமாக வாழ தொடங்கிவிட்டேன்,

: ) ❤️

--------------------------------------
நாட்கள் நகர நகர இளமை பருவம்
காணாமல் போனது ஆனால்
நான் நானாகவே இருக்கிறேன்
மனதிலும் சரி குணத்திலும் சரி,

: ) ❤️

----------------------------------------------

கடவுள் துணையாக இருப்பார்
என மனம் உருகி இறைவனை
வழி பட்டவன் தான் நினைத்த
காரியத்தில் ஏமாறும் போது
தான் வழிபட்ட இறைவனேயே
அசிங்க அசிங்கமாய் சாடுவான்,

: ) ❤️

----------------------------------------

துரோகம் விதைத்தவன்
தினமும் பழக்கப்பட்டவன்
அதுவே வன்மம் கொண்ட
நெஞ்சம் உடையவன்
ஏழரை நாட்டு சனி போன்றவன்,

: ) ❤️

--------------------------------------

காதல் செய்பவன் தான்
முத்த சேகரிப்பு வங்கியில்
தலைமை பொறுப்பில் இருப்பான்,

காதல் செய்யாதவன்
வங்கியின் வாசல் கதவில்
உட்கார்ந்து உள்ளே அவன்
சேகரித்த முத்தங்களை
வேடிக்கை பார்த்து வேதனை அடைவான்,

: ) ❤️

-------------------------------------

ஐந்தறிவு ஜீவனின்
அதீத அன்பை கூட
பிஸ்கட் துண்டு போட்டால் தான்
பெற முடியும் என்று இருக்கும் போது
ஆறறிவு ஜீவனிடம் காணிக்கை
ஏதுமின்றி கிடைக்காத அன்பை
எதிர்பார்த்து என்ன பலன்..?

: ) ❤️

-----------------------------------

வயிற்று பசிக்கு அன்னதானம்
போடும் அனைத்து கரங்களும்
பிச்சை பாத்திரம் ஏந்திய
கைகளுக்கு நித்தம் பொற்கரமே,

: ) ❤️

--------------------------------------

நான் எழுதும் எழுத்துக்கள்
பிறருக்கு வாசிப்பின் போது
சந்தோஷத்தை தருமானால்
என் வாழ்நாள் முழுவதும்
அவர்களுக்கு கடமைப்பட்டுள்ளேன்,

-----------------------------------

வன்முறை வன்மமா
எப்போ மாறுதுன்னு தெரியுமா..?

தவறான ஒரு விஷயம்
சண்டையா இரு தரப்பினருக்கு
நடக்கும்போது இடையில் எரியும்
தீயில் எண்ணெய் ஊற்றிய
கதை போல் மேலும் சிலரால்
கொழுந்து விட்டு எரிய செய்வது,

நீரை ஊற்றி அணைக்காவிட்டாலும்
சரி, எண்ணெய் ஊற்றி மேலும்
காட்டுத்தீ போல் எரிய வைக்காதீர்கள்,

: ) ❤️

---------------------------------

வட்டார வழக்கில்
பயன்படுத்தப்படும் சொற்களின்
அழகை ரசிப்பவன் நிச்சயம் ஒரு
நாடோடியாய் தான் இருப்பான்,

: ) ❤️

-----------------------------

நான் தேடி செல்லும் பயணத்தில்
எனக்கான தேடலின் பொருள் நீ
ஆனால் எங்கு தேடியும் நீ என்
கண்களில் மட்டும் அகப்படவில்லை,

: ) ❤️

----------------------------

✨️❤️

புதிரான கேள்விக்கு
எளிதான விடை நீ,

நானோ கேள்வியே
புரியாமல் இருந்துவிட்டேன்
ஆரம்பத்தில் இருந்தே,


-----------------------------------------

இரவுகளில் மட்டும் தான்
எழுதுவீர்களா என்று ஒருவர் கேட்டார்,

இரவுகள் மட்டும் தான் எனக்கு
துணை நிற்கிறது என சொன்னேன்,

: ) ❤️

-----------------------------

என்னை மட்டும்
நனைக்கும் மழை என
ஒருவன் கவிதை எழுதியிருந்தான்,

கற்பனைக்கு கூட மழை ஏன்
ஓர வஞ்சனை பார்க்கிறது
என என்னை நானே
கேள்வி கேட்டுக்கொண்டேன்,

: ) ❤️

-----------------------------

பூக்காரரின் கூடையில் இருந்த
ரோஜாப்பூ எனை பார்த்து சிரிக்கிறது
நீ தான் எனை காசு கொடுத்து
வாங்காத காதலன் என்ற பெருமிதத்தில்,

: ) ❤️

-----------------------------------

வானமே எல்லை
ஆசையே மாயை

நிறைவேறாத ஆசைகளுக்காக
அண்ணாந்து வானத்தை பார்த்து
கதைத்து கொண்டிருக்கிறேன்,

: ) ❤️

----------------------

கண்ணாடி இதயத்தில்
கல் வீசிவிட்டு திரும்பி
பார்க்காமல் ஓடியவர்களை
நினைத்து தினம் தினம் இரவு
கண்ணீரில் தலையணையை
நனைப்பவர்கள் தான்
அதே நிலையில் இருக்கும்
இன்னொருவருக்கு ஆறுதலாக
துணை நிற்கின்றனர் அன்பை விதைத்து,

: ) ❤️

-------------------------------------

உரையாடல் தீர்ந்தால் என்ன
வா முத்தங்களில் பேசுவோம்
என்றவள் கண் திறந்து பார்த்தால்
இன்று கனவாகி கலைந்து போனாள்,

: ) ❤️

--------------------------------

நாளைய தினத்தில்
என் கையில் தவழ்ந்து விளையாடும்
எதிர்ப்பாரா ஆலங்கட்டி பெருமழை நீ,

: ) ❤️

---------------------------------

எந்நேரமும் உண்மையை
மட்டுமே ஒருவன் பேசினால்
அவன் அரிச்சந்திரன் இல்லை,

உண்மை பேசுவது போல்
நிறைய கற்பனைகளை
கட்டு கதையாக சாமர்த்தியத்துடன்
எதிரிலிருக்கும் மற்றவர்கள் நம்பும்
படி சொல்கிறான் என்பதே சரியானது

: ) ❤️

-------------------------------

தீர்ந்து போகாத காமத்தில்
நீயும் நானும் குளிர் காய்ந்தால்
நம்மை தாங்கும் பூமியெங்கும் மழை,

#BoredomScribbles ❤️

--------------------------------

சொல்லப்படாத காதல்கள்
அனைத்தும் கவிதையிலேயே
தங்களை மெருகேற்றி
அழகு பார்த்துக்கொள்கின்றன,

#BoredomScribbles ❤️

-----------------------------

நாளை காலை
அவளை சந்திக்க போகும்
ஐந்து நிமிட சந்திப்புக்காக
ஐநூறு நட்சத்திரங்களுக்கும் மேல்
தேடி தேடி முந்தைய நாள் இரவில்
அவள் நினைவினால் தூங்காமல்
எண்ணிக்கொண்டிருக்கிறான்,

ஆண்களுக்கே உண்டான
ஒரு எக்ஸைட்மெண்ட் அது
அது தரும் சந்தோஷத்திற்கு
இங்கு அளவுகோல் இல்லை,

காதலின் சுகம் காண
ஆசை படுபவர்கள் ஆண்கள்,

நிறைய ஆண்கள் காதலில்
சபிக்கப்பட்டவர்கள் தான்
ஆனால் நல்ல காதலர்கள்
அழகாக காதலிக்கவும் தெரிந்தவர்கள்,

பெண்மையை ரசிக்க தெரிந்த
ஒரு ஆண் தான் அவன் காதலையும்
மிகவும் ரசனையுடன் கையாளுவான்,

காதல் இல்லையேல்
பூமியில் உயிர்கள் இல்லை,

#BoredomScribbles ❤️

-------------------------------------

போ என்னும் வார்த்தைக்குள்
போகாதே என்ற ஆயிரம் ஆயிரம்
அர்த்தங்கள் அடங்கியுள்ளதாம்,

இதை புரிந்து கொண்டவன்
காதலிக்க தகுதியானவனாம்,

புரிந்து கொள்ளாதவன்
கடைசி வரை ஒற்றன் தானாம்,

*
பெண்களின் உரையாடல்
படலத்தில் இருந்து எடுக்கப்பட்ட
ஓர் பெண்ணிய விமர்சனம்,

#BoredomScribbles ❤️

--------------------------------

வாடிப்போன அவளின் முகம்
"ஐ மிஸ் யூ" என்ற அவனின்
ஒற்றை குறுஞ்செய்தியை
பார்த்தவுடன் அனிச்சம் பூ பூத்த படி
செழுமையான மகிழ்ச்சி அடைகிறது,

#BoredomScribbles ❤️

------------------------------------------


கதைக்க ஆயிரம் கதைகள்
நம்மிடம் இருக்கும்போது
அதை பொறுமையாய் அமர்ந்து
கேட்க மனிதர்களின் செவிகளுக்கு
காலப்போக்கில் நேரமில்லை,

#BoredomScribbles ❤️


-------------------------------

நாம் ஆசைப்படுகின்ற
அத்தனை ஆசைகளும்
இன்னொருத்தரின்
பார்வை கண்ணோட்டத்தில்
ஆகச்சிறந்த பேராசைகளே,

#BoredomScribbles ❤️

--------------------------


ஒருத்தனோட நிம்மதியான
பெரு மூச்சுன்றது மன அழுத்தம்
இல்லாம இந்த நாள கடந்துட்டா
போதும் - ன்ற சின்ன எதிர்பார்ப்பு தான்,

#BoredomScribbles ❤️

----------------------------------

நான் பார்த்து பார்த்து
பழகிய நிறைய மனுஷங்க
இன்னக்கி எனக்கு ஜஸ்ட்
ஒரு பாஸிங் கிளவுட்ஸ் தான்..!!

#BoredomScribbles | #DarkNight 

-----------------------------
மற்றவர்களிடம் எனை நீ
பொய்யாக சித்தரிக்கிறாய்,

அவர்களுக்கு நான் யாரென்று
தெரியும் என் குணநலம் உட்பட,

நீ சித்தரிக்கும் என் பொய்யான
உருவத்தின் மாற்று உருவமே நான்,

: ' ) 💚

-----------------------------------

நீ ஆசைப்படும் அத்தனைக்கும்
தகுதி அறிந்து கோட்பாட்டுடன்
ஆசைப்படு,ஏமாற்றங்களை
இக்கணம் பொய் ஆக்கலாம்!

------------------------------------------

போனது போனதாகவே இருக்கட்டும்
அடுத்த அத்தியாயத்திற்கான
புதிய பிறப்பில் புரட்சி செய்ய பழகு!

-----------------------------------------

நம் சரியான அணுகுமுறைகளை
தவறாக புரிந்து கொண்டு அதற்கு
நாம் சரியான விளக்கம் அளித்தும்
அதையும் ஏற்றுக்கொள்ளாமல்
மீண்டும் மீண்டும் தன் தவறான
புரிதலை முன் வைக்கும் நபர்களிடம்
இருந்து சற்று விலகி இருப்பது நமக்கு நன்று!

-------------------------------------------------------------

புண்பட்ட மனதை
புகழ் அடைந்து ஆற்று !

: ' ) ❤️

----------------------------------------------------------
உண்மையை காட்டிலும் அதிகமான
பொய் வாக்குறுதிகளுக்கே
நீதிமன்றம் பகவத் கீதையின் மீது
சத்திய பிரமாணம் செய்ய சொல்கிறது!

------------------------------------------------------------------

எந்த ஒரு கடவுளையும்
இழிவுப்படுத்தாமல் தான்
ஒரு நாத்திகன் என்பதில்
மட்டும் சரியாக இருக்கும் ஒருவன்,

எந்த ஒரு நாத்திகனின்
உணர்வையும் தவறாக
சித்தரிக்காமல் தான் ஒரு
ஆத்திகன் என்பதில் மட்டும்
சரியாக இருக்கும் இன்னொருவன்,

எந்த ஒரு தனிப்பட்ட முரண்பாடும்
இல்லாமல் இவ்வாறாக மனிதன்
இருந்துவிடுதல் என்பதே இன்றைய
நடைமுறை சாத்தியத்திற்கு தேவை,

சின்ன சிந்தனையில தான்
இங்க எல்லாமே மாறுபடுது!!!

-----------------------------------------------

✨️❤️

தொலை தூர உறவில்
காதல் வயப்பட்டவர்கள்
இப்பிரபஞ்சத்தின் சபிக்கப்பட்ட ஜீவ ராசிகள்..!!!
















Comments

Popular posts from this blog

The Journey of Solo - Title Poem

ஓம் நமச்சிவாய என்னும் மூலமந்திரத்தின் கருவாய் நீர்,காற்று,நெருப்பு,நிலம்  என்னும் நாற்பகுதிகளை இறைவன் சிவனை வைத்து மையப்படுத்தி இருக்கும் கதைக்களத்தின் ஒரு கவிதை நடை பயணம் இங்கு, " The Journey of Solo - Title Poem |  Bejoy Nambiar  " 1) நீர் - ( World of Shekhar )  அன்பே ஆயிரம் மழைத்துளிகள் என்னை நனைப்பது போல நீ என்னை நனைத்துக்கொள் நதியின் ஆழங்களில் நான் மூச்சு திணறுவது போல நீ என்னை தழுவிக்கொள் கடலின் பேரலைகள் கரையை தீண்டுவது போல நீ என்னை எடுத்துக்கொள் என்னை உன் கரங்களால் அணைத்துக்கொள்ளாதே உன் மனதால் இறுக அணைத்துக்கொள் அன்பின் தனிமையில் உனக்கு மரணம் இல்லை 2) காற்று - ( World of Trilok ) யுகாந்திரங்களின் கோபம் யுகாந்திரங்களின் இறுக்கம் யுகாந்திரங்களின் பொறுமை யுகாந்திரங்களின் தனிமை வந்துவிட்டது எல்லாவற்றின் மீதும் பெரும் புயல் ஒன்று இந்த காற்றை எதிர்த்து நடப்பவர்கள் யார்..? காலத்தின் புயலில் உதிரும் ஆயிரம் ஆயிரம் மலர்களில் ஒரு மலரல்லவா நீ..? அழிவின் தனிமையில் காத்திருக்க உனக்கு நேரமில்லை 3) நெருப்பு - ( World of Shiva ) வன்மத்தின் வனங்கள் பற்றி எரிகின்றன குருதியின

குடைக்குள் மழை

✨️💚 ரீனா : ஹே ஆர் யூ தேர்..? விக்ரம் : இருக்கேன் ரீனா, என்ன திடீர்னு மெசேஜ், முக்கியமா எதுவும் சொல்லணுமா..? ரீனா : ஹே, அதெல்லாம் இல்ல, ஏன் ஒர்க்ல இருக்கியா..? விக்ரம் : இல்ல, வீட்டுக்கு வந்துட்டேன், Earlier Appointments So, முடிஞ்சு பா! ரீனா : ஒகே, கொஞ்சம் மனசு சரி இல்ல அதான் உன்கிட்ட பேசலாமேன்னு கால் பண்ணேன்..? விக்ரம் : என்ன ஆச்சு..? ஆர் யூ ஓகே..? சொல்லு ரீனா Any Issue..? ரீனா : ஹே,Just Mood Swing ஒன்லி! நீ ஃபிரீன்னா சொல்லு Let's Walk Together in Beach! உனக்கு தெரியும்ல எனக்கு பீச் வாக்ன்னா ரொம்ப பிடிக்கும், So நீ ஃபிரீன்னா வர முடியுமா விக்ரம்..? விக்ரம் : சரி, ஈவினிங் 6 மணிக்கு பீச்ல நம்ம வழக்கமா மீட் பண்ணுற அந்த பட்டர் பன் கடைக்கு வந்துரு ரீனா, நானும் வந்துடுறேன், ரீனா : தேங்க்ஸ் விக்ரம்! விக்ரம் : தேங்க்ஸா..? No More Formalities! உன்னோட தேங்க்ஸ்ல நான் பூரிச்சு போய்ட்டேன்,சிரிப்பு காட்டாம வா ரீனா! ரீனா : ஹ்ம்ம் டா! * இடம் : கடற்கரை * நேரம் : மாலை 6 மணி விக்ரம் : ஹே! என்ன ஆச்சு ரீனா திடீர்னு..? ரீனா : அதெல்லாம் ஒன்னும் இல்லடா, Please Give Sometime நானே சொல்லுறேன் போ