நாம் காலை, மதியம், இரவு என்று மூன்று நேரமும் சாப்பிட சாப்பாடு இருக்கிறது இளவெயில் மாலையில் சுவைப்பதற்கு நொறுக்குத்தீனியாக டீ, பிஸ்கேட் போன்றவைகளும் கிடைக்கிறது,
சராசரியாக ஒரு மாதத்தில் நம்மிடம்
விரல் விட்டு கூட்டி பார்த்தால் நான்கு
அல்லது ஐந்து பேர் நம்மிடம் தர்மம்
கேட்டிருப்பார்கள்,சிலருக்கு நாம் தர்மம்
அளிப்போம் ஒரு ருபாய் இரண்டு ருபாய்
சிலர் பத்து ருபாய் கூட தானம்
செய்வார்கள், சில பேருக்கு சில்லறை
இல்லை என்று சொல்லி அனுப்பி
விடுவோம்
திருநங்கை, கை கால் ஊனமுற்றோர்
என்ன நிறைய மனிதர்களை நாம்
சாலையோர தெருக்களில் காணலாம்,
அதிலும் சில கன்னம் சுருங்கி முதுமை
அடைந்த முதியவர்கள் நம்மிடம் காசு
கேட்டால் அவர்கள் பிச்சை கேட்கிறார்கள்
என்று நினைக்க வேண்டாம்,
அவர்களுக்கு குறைந்தபட்சம் ஒரு பத்து
ரூபாய் கொடுங்கள், இன்றைய
விலைவாசிக்கு ஒரு ருபாய் ரெண்டு
ருபாய் எல்லாம் நம் அரசியல்
சட்டதிட்டத்தில் செல்லுபடி ஆகாது,
நான் மூணு நேரமும் சாப்பிட்டேன் நான்
சந்தோஷமா இருக்கேன் கடவுள் என்ன
நல்லா வச்சுருக்காருன்னு சுயநலமா
நம்ம சாமி கும்பிட்டா அது அசிங்கம்
நம்ம தட்டுல மட்டும் சாப்பாடு இருந்தா
போதாது, நம்மை சுற்றி உள்ள
ஜீவராசிகளுக்கும் உயிர்களுக்கும்
சாப்பாடு சமத்துவமா கிடைக்கணும்,இந்த உலகில் கிடைக்கும்
எல்லாமும் எல்லோருக்கும் கிடைக்கணும்
°இதுவே மனிதம்
மனிதம் எதுவோ அன்பும் அதுவே..!!
#தர்மம்செய்வோம் <3
Comments
Post a Comment