*💚
" உழைப்புக்கேற்ற ஊதியம் "
பள்ளிக்கூடம் செல்ல வேண்டிய வயதில்
எத்தனையோ இளம்பிஞ்சுகள்
தன் எடைக்கு அதிகமான பொருட்களை
தூக்கிக்கொண்டும்,என்ன தான் அரசு
குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு
அனுமதிக்கக்கூடாது என்று சட்டம்
போட்டிருந்தாலும் நிறைய காய்கறி,
பழ கமிஷன் மண்டிகளிலும்,
உணவிடங்களில் இலை
எடுப்பதற்கும்,எச்சி டேபிள்
துடைப்பதற்கும் இங்கு நிறைய
சிறுவர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள்,
சில பிஞ்சுகள் ஐந்தாம் வகுப்பு
படிக்கும்போதே பகுதி நேர வேலை
பார்த்து அம்மா அப்பாவின் உதவியை
எதிர்பார்க்காமல் தனது படிப்புக்கு
தேவையான நோட்டு புத்தகங்களையும்
பேனா பென்சில்களையும் தாங்களே
வாங்கிக்கொள்கின்றனர்,
உழைப்பு தான் இங்க
ஒவ்வொருத்தருக்கும் சோறு
போடுது,உட்கார்ந்து வேலை வாங்கும்
முதலாளித்துவத்தில் இருப்பவனும் ஒரு
காலத்தில் அடிமட்ட தொழிலாளி தான்,
ஐந்தில் வளையாதது
ஐம்பதில் வளையுமா என்ன..?
அப்படி தான் இந்த சிறுவனும்,
தனக்கான தேவைகளை பூர்த்தி செய்ய
ஐந்து வயதில் இருந்தே
தன் உழைப்புக்கான முதலீட்டை
தொடங்கிவிட்டான்,
ஆக
ஐந்தில் இவன் வளைந்து விட்டான்,
ஐம்பதில் இவன் பேரும் புகழும் பெற்று
நிம்மதியான வாழ்க்கையை வாழ்வான்
அவன் அணிந்திருக்கும் டீ - ஷர்ட்டே
அவனின் தன்னம்பிக்கைக்கு
ஒரு முன்னோடி,
தலைவன் எவ்வழியோ
தொண்டன் அவ்வழியே..!!
புகைப்படம் உதவி : Franklin Kumar
எழுத்தும் சிந்தனையும் : Shiva Chelliah
: ) "
Comments
Post a Comment