Skip to main content

தாரக மங்கைகள்

நீங்க என்ன சாதி..?
நீங்க என்ன மதம்..?
நீங்க என்ன மொழி பேசுறவங்க..?

இந்த கேள்விகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவர்கள் செவிலியர்கள்,

யார் இந்த செவிலியர்கள்..?

ஒரு நோயாளிக்கு மருத்துவரின் பரிந்துரையின்படியும் அறிவியல் ரீதியாகவும் அவனுக்கு சிகிச்சை அளித்து அவர்களின் உடல்நலம் சம்பந்தப்பட்ட தேவைகளை கவனிக்கும் கடவுள், கையில் ஊசி எனும் ஆயுதம் எப்போதும் இருக்கும்,

இது ஒரு சேவை மனப்பான்மை சார்ந்த தொழில், சேவை மனப்பான்மை ஆண்களை விட பெண்களுக்கு எப்போதுமே கருணை ரீதியில் கொஞ்சம் அதிகம், அதனாலோ என்னவோ இந்த சேவை துறையில் பெண்களே அதிகம் தங்களை அர்ப்பணித்து சேவை செய்கின்றனர்,

கை கால் தூக்க முடியாமலும் உடம்பில் வலு இல்லாமலும் ஒரு நோயாளி மருத்துவமனைக்கு வரமுடியவில்லை என்றாலும் அவர்களின் இல்லத்திற்கே சென்று அவர்களுக்கு தகுந்த மருத்துவ ஆலோசனை கொடுத்து சரியான சிகிச்சை கொடுப்பவர்கள்,

அறுவை சிகிச்சையின் போது மருத்துவர்களுக்கு உதவி செய்வதில் இருந்து நோயாளிகள் மீது காட்டும் அக்கறை வரை, ஒரு கடும் நோய் ஊருக்குள் பரவினாலும் தூக்கம், குடும்பம்,தனது உயிர் என்று எதை பற்றியும் கவலை கொள்ளாமல் பிற உயிர்களுக்காக தங்கள் உயிரை பிணைய கைதியாய் அந்த நோயிடம் ஒப்படைத்து விட்டு தங்களிடம் வரும் ஒவ்வொரு நோயாளியிடமும் அன்பாகவும் சிரித்த முகத்துடனும் பணிவாக கவனிக்கும் தூய்மை நெஞ்சம் கொண்டவர்கள்,

சாதாரண காய்ச்சலில் இருந்து
எச்.ஐ.வி எய்ட்ஸ் முதல் ஒரு நோயாளி
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாலும்
அவனுக்கு பணிவிடை செய்வதில் இருந்து பத்திய உணவு கொடுக்கும் வரை செயல்படும் அன்னை தெரசாக்கள் அவர்கள்,

செவிலியர்கள் தினம் என்பது எப்படி வந்தது..?

செவிலியர் பணியில் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்து அதில் சிறந்து விளங்கியவர் தான் நைட்டிங்கேல் அம்மையார்,

அவர்கள் பிறந்த மே 12 - அன்று தான் உலக செவிலியர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது உலகம் முழுவதும்,

இந்த 2020 - ஆம் ஆண்டு நைட்டிங்கேல் அம்மையாரின் 200 - ஆவது ஆண்டு, இவர் இத்தாலி நாட்டில் பிறந்தவர்,

கிறிஸ்தவர் என்ற முறையில் தனக்கு இறைவனால் விதிக்கப்பட்ட பணியாக தாதியர் சேவையை அவர் உணர்ந்தார்,

இந்த அழகான தினத்தில் நைட்டிங்கேல் அம்மையாருக்கு ஒரு நான்கு வரிகள் எழுதவில்லை என்றால் எப்படி ஹ்ம்ம்,

||

மனதில் மிகவும் உறுதி கொண்டீர்கள்
செவிலியராய் பணியை தொடர்ந்தீர்கள்
அடுத்து பிறக்கப்போகும் பல்லாயிரம் தலைமுறைக்கு அறிவியல் சார்ந்த
ஒரு துறையை ஏற்படுத்தி கொடுத்தீர்கள்
நித்தம் உங்கள் சேவை ஒவ்வொரு செவிலியர் மூலமும் உலகத்தில் நினைவு படுத்திக்கொண்டு தான் இருக்கிறது,

||

மருத்துவம் விலை போனாலும்
சில மருத்துவர்கள் பணம் பார்த்தாலும்
செவிலியர்கள் மட்டும் என்றும் மக்களுடன் நேரடி தொடர்பில் இருக்கும் தேவன் அனுப்பிய செஞ்சிலுவை தாரகைகள்,

உலக செவிலியர் தினத்தை நைட்டிங்கேல் அம்மையார் பற்றி தெரிந்து கொண்டு நாமும் அவர்களின் பணி சிறக்க இன்று வாழ்த்துவோம்,

கடவுள் இருக்காரா..?
இதோ செவிலியர் ரூபத்தில்
மனிதம் தான் சார் கடவுள்..!!










Comments

Popular posts from this blog

The Journey of Solo - Title Poem

ஓம் நமச்சிவாய என்னும் மூலமந்திரத்தின் கருவாய் நீர்,காற்று,நெருப்பு,நிலம்  என்னும் நாற்பகுதிகளை இறைவன் சிவனை வைத்து மையப்படுத்தி இருக்கும் கதைக்களத்தின் ஒரு கவிதை நடை பயணம் இங்கு, " The Journey of Solo - Title Poem |  Bejoy Nambiar  " 1) நீர் - ( World of Shekhar )  அன்பே ஆயிரம் மழைத்துளிகள் என்னை நனைப்பது போல நீ என்னை நனைத்துக்கொள் நதியின் ஆழங்களில் நான் மூச்சு திணறுவது போல நீ என்னை தழுவிக்கொள் கடலின் பேரலைகள் கரையை தீண்டுவது போல நீ என்னை எடுத்துக்கொள் என்னை உன் கரங்களால் அணைத்துக்கொள்ளாதே உன் மனதால் இறுக அணைத்துக்கொள் அன்பின் தனிமையில் உனக்கு மரணம் இல்லை 2) காற்று - ( World of Trilok ) யுகாந்திரங்களின் கோபம் யுகாந்திரங்களின் இறுக்கம் யுகாந்திரங்களின் பொறுமை யுகாந்திரங்களின் தனிமை வந்துவிட்டது எல்லாவற்றின் மீதும் பெரும் புயல் ஒன்று இந்த காற்றை எதிர்த்து நடப்பவர்கள் யார்..? காலத்தின் புயலில் உதிரும் ஆயிரம் ஆயிரம் மலர்களில் ஒரு மலரல்லவா நீ..? அழிவின் தனிமையில் காத்திருக்க உனக்கு நேரமில்லை 3) நெருப்பு - ( World of Shiva ) வன்மத்தின் வனங்கள் பற்றி எரிகின்றன ...

The One - அந்த ஒருவன் 💚

💚 நிராகரிக்கப்பட்ட ஒருவன் புறக்கணிக்கப்பட்ட ஒருவன் ஒதுக்கி வைக்கப்பட்ட ஒருவன் அவமானப்படுத்தப்பட்ட ஒருவன், "வர சொல்லு அந்த ஒருத்தன..?" பல போர் படை இருக்கலாம் எதிர்பார்த்தது இவனத்தான் அந்தொருவன் வந்திருக்கான்டே..!!! "Temba" என்றால் "Hope" என்று பொருள், ஒட்டு மொத்த ஆஃப்ரிக்க மக்களின் நம்பிக்கை ஒளியாகவும் அவர்களின் ஏக்கத்திற்கு விடையாகவும் இந்த "டெம்பா" ஒரு வாழ்வியலை இங்கே புதுப்பித்து இருக்கிறான், எத்தனை அவமானங்கள் தான் 'இந்த ஒருவனுக்கு' நிகழ்ந்திருக்கிறது, உயரம் ரீதியாகவும்,நிற ரீதியாகவும் என இவன் கண்ட அவமானங்கள் அனைத்தையும் தாண்டி இன்று ஒரு இன மக்களையே இன்று இவன் தலை நிமிர செய்திருக்கிறான், எங்க கேங்க்ல ஒரு ரெண்டு பேர் மொரட்டு தனமான தென்னாப்பிரிக்கா ஃபேன்,நானும் என்னோட இன்னொரு முகநூல் நண்பரும் (Anjali Raga Jammy), எப்படி "கொம்பன்" யானைய பார்த்து காடே ஆடி போகுமோ அது மாதிரி நாங்க ரெண்டு பேரும் எங்க தலைவன் டெம்பா பாவுமா - வ "டெம்பன்" ன்னு செல்லமா தான் கூப்பிடுவோம், இந்த டெம்பனின் கைகள் ஒரு ந...

நிகரில்லாதவள்

அன்று ஊரெங்கும் நல்ல மழை வெளுத்து வாங்கிகொண்டிருந்தது, பெரு மழைக்கு ஒதுங்குவதற்காக அவள் அங்கே சாலையோரம் இருந்த மரத்தின் அடியில் சென்று நின்று கொண்டாள், அவளுக்கு அருகே பள்ளி முடிந்து வீடு திரும்பும் குழந்தைகள் சூழ அவள் ஒரு பள்ளிக்கூடத்து ஆசிரியை போல் அக்குழந்தைகளுக்கு நடுவில் நின்று அவர்கள் மழையில் செய்யும் சேட்டையை பார்த்து ரசித்துக்கொண்டிருந்தாள், இந்த மழை நிற்பதற்குள் இவள் யார்,இவள் பெயர் என்ன, இவள் சார்ந்து இருப்பவைகள் என சின்ன கதையுடன் ஒரு முன்னோட்டம் பார்ப்போம், இவளுக்கான அறிமுகம் இல்லாததால் இவளுக்கு இவளாகவே சூடிக்கொண்ட பெயர் இது, ஆம் இவளுக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து ஆசிரமத்தில் தான் வளர்ந்து வருகிறாள்,அங்கிருப்பவர்கள் "குட்டி" என்று கூப்பிடுவார்கள் அதுவே இவளது பெயராகவும் மாறியது, பின் பள்ளி முடிந்து யாரோ பெயர் தெரியாத ஸ்பான்ஸர்ஷிப் மூலம் கல்லூரி படிப்பை முடித்து நல்ல ஒரு இடத்தில் வேலைக்கு சேர்ந்த பின் தான் இவளுக்கு ஒன்று புரிந்தது, நம்மை அடையாளப்படுத்திக்கொள்ள சரியான பெயர் கூட நமக்கு இல்லை என்று, எதிர்நீச்சல் படத்தில் வருவது போல் தன் அடையாளத்தை இச்சமூகத்தில் பதிக்...