Skip to main content

Uraiyaadal & Stuff : 4

💙

: மழை பிடிக்கும்லடா உனக்கு..?

எப்பவும்ன்னு சொல்லமுடியாது, Sometimes..!!! 

: So,Depends On Your Mind வச்சு தான்
அந்த மழைய கூட ரசிப்பயா என்ன..?

Not Like that,
ஆனா Mind நல்லா இருந்தா மனசும்
நல்லா இருக்கும்,அப்போ மழைல
நனஞ்சா நம்மளும் ஹாப்பியா
இருப்போம்ல அது போல தான்,

: ஹ்ம்,என்ன பொறுத்தவர அது என்ன
மாதிரியான மனநிலையா இருந்தாலும்
சரி மழைல நனையணும்,அது ஒரு தனி
ஃபீல் கொடுக்கும் லைக் நம்மளே புதுசா
Reborn ஆன மாதிரின்னு சொல்லலாம்,

இப்படி மழை எல்லாரோட
லைஃப்லையும் ஒரு Impact செய்யுதுல..?

: நிச்சயமா,எப்பவுமே நம்ம Down ஆ
இருந்தாலும் சரி, ரொம்ப Pressurized ஆ
ஃபீல் பண்ணாலும் சரி இயற்கையால
மட்டும் தான் நம்மள அந்த Situation ல
இருந்து மீட்டெடுக்க முடியும்,Nature Can
Heal Anything ன்ற Statement அ எப்பவுமே
முழுசா நம்புற ஒரு கேரக்டர் நான்,

உனக்கு Nature அவளோ பிடிக்குமா..?

: உன்ன எந்த அளவு பிடிக்குமோ அந்த
அளவுன்னு சொல்லலாம்,ஆனா Cringe
ஆ ஃபீல் ஆயிடுமோன்னு தோணுது,

உனக்கு பிடிச்சிருக்கா..?
அத டைரக்ட்டா  Express பண்ணு,
சுத்தி இருக்கவங்க சொல்லுறதுக்காக
உன்னோட Opinion Change பண்ணிகாத,

: எல்லாருமே உன்ன மாதிரி இருந்துட்டா
நல்லா இருக்கும்ன்னு கூட தோணுது,

எல்லாருமே என்ன மாதிரி இருந்துட்டா
நீ எல்லா பசங்களையும் காதலிக்கணும்
Sometimes பொண்ணுங்களுக்கு கூட
"லவ் யூ " சொல்லணும் பார்த்துக்கோ,

: நீ இத சொன்னோன
எனக்கு வைரமுத்து லிரிக்ஸ்
தான் ஞாபகத்துக்கு வருதுடா,

ஹா ஹா!! அதான் நீ "I Know",
நீ அதான் நினைச்சு இருப்பன்னு,

---------->

நீ போகும் தெருவில்
ஆண்களை விட மாட்டேன்
சில பெண்களை விட மாட்டேன்
நீ சிந்தும் சிரிப்பை
காற்றில் விட மாட்டேன்
அதை கவர்வேன் தர மாட்டேன்

---------->

: போதும் வைரமுத்து சார்,
விட்டா இவன் ஹரிஹரன்
போல பாடிட்டே இருப்பான்,

காதலே ஒரு பாடல் தான
அதில் உள்ள வரிகள் தானே நீ
வரிகளான உன்னை சரணத்தில்
பாடும் பாடகன் தானே நான்னு
கூட எனக்கு சொல்ல தெரியும்,

: எங்கும் காதல் எதிலும் காதல்.?

That's the Symbolic of Love தங்கமே..!!!! 

#UraiyaadalandStuff ')

Comments

Popular posts from this blog

The One - அந்த ஒருவன் 💚

💚 நிராகரிக்கப்பட்ட ஒருவன் புறக்கணிக்கப்பட்ட ஒருவன் ஒதுக்கி வைக்கப்பட்ட ஒருவன் அவமானப்படுத்தப்பட்ட ஒருவன், "வர சொல்லு அந்த ஒருத்தன..?" பல போர் படை இருக்கலாம் எதிர்பார்த்தது இவனத்தான் அந்தொருவன் வந்திருக்கான்டே..!!! "Temba" என்றால் "Hope" என்று பொருள், ஒட்டு மொத்த ஆஃப்ரிக்க மக்களின் நம்பிக்கை ஒளியாகவும் அவர்களின் ஏக்கத்திற்கு விடையாகவும் இந்த "டெம்பா" ஒரு வாழ்வியலை இங்கே புதுப்பித்து இருக்கிறான், எத்தனை அவமானங்கள் தான் 'இந்த ஒருவனுக்கு' நிகழ்ந்திருக்கிறது, உயரம் ரீதியாகவும்,நிற ரீதியாகவும் என இவன் கண்ட அவமானங்கள் அனைத்தையும் தாண்டி இன்று ஒரு இன மக்களையே இன்று இவன் தலை நிமிர செய்திருக்கிறான், எங்க கேங்க்ல ஒரு ரெண்டு பேர் மொரட்டு தனமான தென்னாப்பிரிக்கா ஃபேன்,நானும் என்னோட இன்னொரு முகநூல் நண்பரும் (Anjali Raga Jammy), எப்படி "கொம்பன்" யானைய பார்த்து காடே ஆடி போகுமோ அது மாதிரி நாங்க ரெண்டு பேரும் எங்க தலைவன் டெம்பா பாவுமா - வ "டெம்பன்" ன்னு செல்லமா தான் கூப்பிடுவோம், இந்த டெம்பனின் கைகள் ஒரு ந...

குடைக்குள் மழை

✨️💚 ரீனா : ஹே ஆர் யூ தேர்..? விக்ரம் : இருக்கேன் ரீனா, என்ன திடீர்னு மெசேஜ், முக்கியமா எதுவும் சொல்லணுமா..? ரீனா : ஹே, அதெல்லாம் இல்ல, ஏன் ஒர்க்ல இருக்கியா..? விக்ரம் : இல்ல, வீட்டுக்கு வந்துட்டேன், Earlier Appointments So, முடிஞ்சு பா! ரீனா : ஒகே, கொஞ்சம் மனசு சரி இல்ல அதான் உன்கிட்ட பேசலாமேன்னு கால் பண்ணேன்..? விக்ரம் : என்ன ஆச்சு..? ஆர் யூ ஓகே..? சொல்லு ரீனா Any Issue..? ரீனா : ஹே,Just Mood Swing ஒன்லி! நீ ஃபிரீன்னா சொல்லு Let's Walk Together in Beach! உனக்கு தெரியும்ல எனக்கு பீச் வாக்ன்னா ரொம்ப பிடிக்கும், So நீ ஃபிரீன்னா வர முடியுமா விக்ரம்..? விக்ரம் : சரி, ஈவினிங் 6 மணிக்கு பீச்ல நம்ம வழக்கமா மீட் பண்ணுற அந்த பட்டர் பன் கடைக்கு வந்துரு ரீனா, நானும் வந்துடுறேன், ரீனா : தேங்க்ஸ் விக்ரம்! விக்ரம் : தேங்க்ஸா..? No More Formalities! உன்னோட தேங்க்ஸ்ல நான் பூரிச்சு போய்ட்டேன்,சிரிப்பு காட்டாம வா ரீனா! ரீனா : ஹ்ம்ம் டா! * இடம் : கடற்கரை * நேரம் : மாலை 6 மணி விக்ரம் : ஹே! என்ன ஆச்சு ரீனா திடீர்னு..? ரீனா : அதெல்லாம் ஒன்னும் இல்லடா, Please Give Sometime நானே சொல்லுறேன் போ...

நிகரில்லாதவள்

அன்று ஊரெங்கும் நல்ல மழை வெளுத்து வாங்கிகொண்டிருந்தது, பெரு மழைக்கு ஒதுங்குவதற்காக அவள் அங்கே சாலையோரம் இருந்த மரத்தின் அடியில் சென்று நின்று கொண்டாள், அவளுக்கு அருகே பள்ளி முடிந்து வீடு திரும்பும் குழந்தைகள் சூழ அவள் ஒரு பள்ளிக்கூடத்து ஆசிரியை போல் அக்குழந்தைகளுக்கு நடுவில் நின்று அவர்கள் மழையில் செய்யும் சேட்டையை பார்த்து ரசித்துக்கொண்டிருந்தாள், இந்த மழை நிற்பதற்குள் இவள் யார்,இவள் பெயர் என்ன, இவள் சார்ந்து இருப்பவைகள் என சின்ன கதையுடன் ஒரு முன்னோட்டம் பார்ப்போம், இவளுக்கான அறிமுகம் இல்லாததால் இவளுக்கு இவளாகவே சூடிக்கொண்ட பெயர் இது, ஆம் இவளுக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து ஆசிரமத்தில் தான் வளர்ந்து வருகிறாள்,அங்கிருப்பவர்கள் "குட்டி" என்று கூப்பிடுவார்கள் அதுவே இவளது பெயராகவும் மாறியது, பின் பள்ளி முடிந்து யாரோ பெயர் தெரியாத ஸ்பான்ஸர்ஷிப் மூலம் கல்லூரி படிப்பை முடித்து நல்ல ஒரு இடத்தில் வேலைக்கு சேர்ந்த பின் தான் இவளுக்கு ஒன்று புரிந்தது, நம்மை அடையாளப்படுத்திக்கொள்ள சரியான பெயர் கூட நமக்கு இல்லை என்று, எதிர்நீச்சல் படத்தில் வருவது போல் தன் அடையாளத்தை இச்சமூகத்தில் பதிக்...