💙
: அப்பறம்..? சார்,
என்ன பாட்டு கேட்டுட்டு இருக்கிங்க..?
அதுவா!
இது Underrated ஆன ஒரு பாட்டு,
இப்போ இருக்க ஜெனெரேஷன்க்கு
இப்படி ஒரு பாட்டு இருக்கும்ன்னு
கூட தெரியுமான்னு தெரியல,
மலையாளம்ல நிவின் பாலி நடிச்ச
"தட்டத்தின் மறையது" படத்தோட
தமிழ் ரீமேக் "மீண்டும் ஒரு காதல் கதை"
ன்ற பேருல வந்துச்சு,அதுல வர
ஒரு பாட்டு தான் இப்போ கேக்குறேன்,
: ஓ! சரி பாட்டு எழுதினது யாரு..?
அப்படி வா!
அதான் விஷயமே,
இந்த பாட்டோட பேரு "மோகினி"
இசை மற்றும் குரல் ரெண்டும் நம்ம ஜி.வி.
பிரகாஷ்குமார் மற்றும் சத்யபிரகாஷ் தான்,
பாட்டோட வரிகள எழுதினது
கவிஞர் தாமரை அவர்கள் தான்,
: ஓ! வாவ்.. தாமரை அவங்களா..?
அப்போ பாட்டோட வரிகள் எல்லாம்
மழைக்காலத்துல வீட்டு ஜன்னல்ல
சிறப்பு விருந்தினரா வருகை தர
மழைத்துளிகள் போல Crystal Clear ஆ
ரொம்ப அழகான தமிழ்ல இருக்குமே..?
Obviously,அவங்க பேனால இருந்து
வந்த வரிகளுக்கு உயிர் இருக்குன்னு
நான் நம்புறேன்,ஏன்னா அந்த வரிகளோட
நம்ம காதல்,வாழ்க்கை,எதிர்பார்ப்பு,
ரசனைன்னு இப்படி பல பரிமானங்கள்ல
அவங்க வரிகள் கூட நம்ம பயணம்
செய்யுறோம்,அந்த பயணத்தின்
சவுகரியம் நமக்கு அம்மா கிட்ட இருந்து
கிடைக்குற ஒரு தாலாட்டு போன்ற
உணர்வ கொடுக்குறதனால தாமரை
அவர்களின் வரிகளை சார்ந்து இருக்கது
கூட லைஃப்ல ஒரு தனி அழகு தான்,
: நான் சொல்லணும்ன்னு நினைச்சத
நீ சொல்லிட்ட,எனக்கும் அவங்க எழுதுன
"கண்கள் நீயே" பாடல் ரொம்ப பிடிக்கும்,
ஆமா இந்த பாட்டுல ஸ்பெஷல் லிரிக்ஸ்
எதுவும் இருக்கா..? உனக்கு பிடிச்ச மாதிரி
ரொம்ப பெர்சனலா..?
பின்ன! இருக்காதா என்ன..?..!!!
---------->
வரணும் வரணும் எனக்காகவே நீ
இதயம் இதயம் முழுதும்
எரியும் எரியும் அணையாத தீ தீ
என் தேவதூதம் நீ
---------->
என்னோட இதயம் முழுதும்
எனக்காக நீ வரணும்,அதே போல
ஒரு அணையாத தீயா நீ என்னோட
Divine அதாவது தெய்வீகமான ஒரு
தேவதூதம் லைக் கடவுளால் படைக்கப்பட்ட
ஒரு தேவதை போன்றவள் நீ என்று அவன்
காதலியை வர்ணிப்பது போன்ற வரிகள
தாமரை அவர்கள் இங்க எழுதியிருப்பாங்க,
அந்த "தேவதூதம்" ன்ற வார்த்தைல
இந்த பாட்டு ரிலீஸ் ஆனப்போ கேட்டு
மிரண்டு போன உணர்வுல இருந்து
இப்போ வர மீள முடியல,ஒரு வார்த்தைல
ஒரு பாட்டே ரொம்ப Blessed ஆ
தெரியும்ன்னா அது இந்த பாட்டு தான்,
அப்போ அந்த வார்த்தைய எழுதுன
தாமரை அவர்கள் நம்ம எல்லாரோட
கொண்டாட்டத்துக்கும் தகுதியான
ஒருத்தவங்க தான,
: ச்ச,என்னமா ஃபீல் பண்ணி அவங்க
வரிகள கேட்ருக்க நீ,ஆமா உனக்கு ஏன்
பாடலோட வரிகள் மீது இவ்வளவு ஈர்ப்பு..?
ஈர்ப்பு ன்றத தாண்டி,
Simple "I Love Writings"
So நான் எதாவது ஒன்ன எழுதிட்டே
இருப்பேன்,என்ன மாதிரி எழுதிட்டே
இருக்கவங்கள பிடிக்கும்,அப்படி
எழுதுறவங்களோட எழுத்த வாசிச்சு
வாசிச்சு அதோட சுகம் தலைல ஏறிடுச்சு,
அப்பறம் பாட்டு கேக்கும் போது அந்த
வரிகள கேட்க ஆரம்பிச்சேன்,சில
பாடல்கள் கொண்டாட்டம்ன்னு மட்டுமே
கடந்து போற மாதிரி இருக்கும்,ஆனா
சில பாடல்கள் நம்மளோட ஒட்டு மொத்த
வாழ்க்கையோட பிரதிபலிப்பா இருக்கும்,
அப்படி பிரதிபலிப்பா இருக்க வரிகள
கவனிக்க ஆரம்பிச்சேன்,இன்னக்கி
அந்த பாடல் வரிகளும் அதை எழுதிய
கவிஞர்களும் என்ன உச்சி குளிர வச்சுட்டு
இருக்காங்க,தட்ஸ் இட் இதான் விஷயம்,
: ஜஸ்ட் ஒரு பாட்டு தான்,
ஆனா அதே பாட்டு எல்லாருக்குமான
பாடலா உணர்வுகளின் பேரில்
கனெக்ட் ஆகுறப்போ நடக்குற
மல்டி மேஜிக் தான இதெல்லாம்,
Exactly,அழகா சொல்லிட்ட நீ,
: உன்னோட "தாமரை வரிகள் " போல..!!!
#UraiyaadalandStuff ')
Comments
Post a Comment