💙
யுவா :
ஹே!!!
சஞ்சனா எங்க இருக்க..?
நான் வந்து "More than Half an Hour"
ஆகுது,நீ வர தான..?
இல்ல என்ன வச்சு
எதும் ப்ராங்க் பண்ணுறியா..?
சஞ்சனா :
நான் ஏன் ப்ராங்க் பண்ணணும்..?
பிராங்க் பண்ணுறவ தான் ரெண்டு
மாசம் முன்னாடியே மீட் பண்ண பிளான்
பண்ணி உன்ன ட்ரெயின் டிக்கெட் புக்
பண்ண சொல்லி இப்போ இங்க
உன்ன வர சொல்லப்போறேன் பாரு..?
யுவா :
சரி சரி,நீ வா பொறுமையா,
அதுவர என் மனசு கெடந்து அடிச்சுக்கும்,
அதுக்கு ஆறுதல் சொல்லிட்டு இருக்கேன்,
சஞ்சனா :
இன்னும் கொஞ்ச நேரம் தான்
அடிச்சுகிட்ட இருக்க மனசுல உள்ள
Excitement ஆ பொத்தி வச்சுக்கோ
என்ன First டைம் பார்க்க போறேல..?
யுவா :
என்னோட Excitement ஏ நீ தான்னு
சொன்னா கிரிஞ்சா இருக்குமோ..?
சஞ்சனா :
கிரிஞ்ச் தனமோ கிறுக்குத்தனமோ
உன்னோட மனசு கூட பேசிகிட்டு இரு,
Iam on My Way to See You டா யுவராஜே,
யுவா :
(சிரித்துக்கொண்டே கட் செய்தான்)
யுவாவின் சீலேவின் குரல் :
(அவனது மனசாட்சியின் பெயர் - சீலே )
ஆமா,
சஞ்சனாவ First டைம் பார்க்க போறேன்,
நாங்க முதல பேசி பழகிகிட்டது இந்த
ஃபேஸ்புக்ல தான்,ஒரு பண்ணிரண்டு
வருஷத்துக்கு முன்னாடின்னு
சொல்லாம்,கேக்கவே ரொம்ப ஷாக்கிங்கா
இருக்குல்ல,பண்ணிரண்டு வருஷம் பேசி
பழகி இப்போ தான் First டைம் நாங்க மீட்
பண்ண போறோம்ன்னு சொல்லுறதே,
நம்பலேன்னாலும் அதான் நிஜம்,
ஆனா இந்த பண்ணிரண்டு வருஷத்துல
ரெண்டு வருஷம் தான் நல்லா பேசி
பழகிருப்போம்,மிச்ச இருக்க பத்து
வருஷத்துல விழுந்த பெரிய கேப்ல
இந்த பத்து வருஷத்துக்கும் சேர்த்தும்
ஒரு பத்து மெசேஜ் இருக்கும்,ஃபோன்
பண்ணி பேசினது கூட இல்ல,
இதெல்லாம் நம்புற மாதிரியா
இருக்குன்னு நினைக்கலாம்,
இது நிஜமா இருக்கனால தான் இதை
என்னால சொல்ல முடியுது,அப்பறம் ஒரு
நைட் நான் Random ஆ வச்ச ஸ்டேட்டஸ
சஞ்சனா பார்த்து அதுக்கு பதில் ரிப்ளை
பண்ண அங்க ஒரு Convo ஸ்டார்ட் ஆச்சு,
இரண்டு வருஷ பேரன்பும்
பத்து வருஷ இடைவெளியும் இணைந்து
பண்ணிரெண்டாவது வருஷத்தில் மீண்டும்
இருவரும் பேச தொடங்குகிறோம்,
அவள் பேசிய நாள் அன்று நல்ல ஒரு
பெருமழை பெய்து கொண்டிருந்தது,
இரவு முழுவதும் மழை தொடர்ந்தது,
இருவருக்கும் உள்ளான உரையாடலும் தொடர்ந்தது என சொன்னால் கூட அது மிகை ஆகாது,
Annual Day Holidays எப்போடா விடுவாங்க,
எப்போ டா பாட்டி தாத்தா வீட்டுக்கு
ஊருக்கு போலாம்ன்னு இருக்க
பத்து வயசு பையனோட மனநிலை தான்
எனக்கும்,அதுக்கு அப்பறம் வந்து போன
நாள் எல்லாம் அவ மெசேஜ்காகவும்
அவ கால் காகவும் நான் காத்திருப்பதும்,
என்னை போலவே அவளும் ன்னு
சொல்லுற மாதிரி நாங்க பேசாத இந்த பத்து வருஷத்துல விட்டு போன
எல்லாத்தையும் பேசி தீர்க்கணும்ன்னு
முடிவு செஞ்ச மாதிரி அத்தனை கதைகள்,
அத்தனை இரவுகள்,அத்தனை Blue Heart
Symbol - கள் என ஒவ்வொரு இரவும்
திருநாளாகவே இருவருக்கும் சென்றது,
அப்பறம் ஒரு மீட்அப் பிளான் செய்து
இதோ இந்த ஆளற்ற ரயில்வே ஸ்டேஷன்
எதிரே உள்ள பஸ் ஸ்டாண்டில் அவளை
காண மனம் முழுவதும் பரிதவிப்புடனும்
ஆவலோடும் சுகமான வலியுடன் நின்று
கொண்டிருக்கிறேன்,
அவள் வந்த பேருந்து நின்றது
என் மனம் என் பேச்சை கேட்காமல்
லப்டப் லப்டப் என்று துடிக்கிறது,
நான் பெரு மூச்சு விட முயற்சி செய்தும்
மனம் அதை ஏற்க மறுத்ததால் அந்த
முயற்சியில் தோல்வியை சந்தித்தவனாக
அவளை எதிர்கொள்ள போகிறேன்
அவளிடம் சரணாகதி அடைய போகும்
அவளின் ஆசை........ காதலனா நண்பனா..
மொத்தத்தில் எனக்கு நானே
ஒரு புரியாத புதிராக இங்கு நிற்கிறேன்,
நல்ல மழை வேற
ஒரு மிகப்பெரிய மின்னல்
மின்னல் ஒளியை மறைக்க
என் முகத்தை மறைத்தேன்,
"மின்னலின் Flash"
கையை விலக்கி பார்த்தேன்,
என் முன் இதோ "சஞ்சனா"
மீண்டும் ஒரு "Flash"
இப்போது அதே மின்னல் என் மனதில்,
கையில குடை வச்சிருந்தா
அந்த குடைய பார்த்தீங்கன்னா
90'ஸ் கிட்ஸ்க்கு தெரியும்,நம்ம சின்ன
வயசுல நம்ம தலைல Fit செய்யுற மாதிரி
ஒரு குடை இருக்கும்,லைக் அந்த மாதிரி
குட்டிஸ்கள் யூஸ் செய்யுற குடை அது,
என்ன அவளோட தலைல Fit தான்
பண்ணமுடியாது,ஏன்னா இவ
கொஞ்சம் அரும்பு மொட்டில் இருந்து
அல்லிப்பூவாக வளர்ந்த குழந்தை,
பஸ்ல வரப்போ ஜன்னல் கம்பில நிக்குற
மழைத்துளி கூட விளையாடிட்டே அதே
கையோட அவளோட லூஸ் ஹேர
அட்ஜஸ்ட் செஞ்சுருப்பா போல அவளோட
காதுகிட்ட,சற்று ஈரம் படிந்த அவளது அந்த
கூந்தல் தான் என் கண்களுக்கு எங்கள்
முதல் சந்திப்பில் அவளிடம் தென்பட்டது,
Sudden ஆ "ஹே யுவா"
"யுவா" இருக்கியா..?
மீண்டும் "Flash" ----->
சட்டென முழிப்பு வந்தது,
ஓ!!! கனவா..?..!!!
என் நினைவலைகளில்
ஒரு யுவாவும் ஒரு சஞ்சனாவும்
தங்களின் முதல் சந்திப்பை நல்ல ஒரு
மழை நாள் அன்று பேருந்து நிறுத்தத்தில்
வைத்து தொடங்க இருக்கின்றனர்,
இதோ,அந்த யுவாவிற்கும்
சஞ்சனாவிற்குமான என்னுடைய
அண்ணா சாலை பேருந்து நிறுத்தத்தின்
கிறுக்கல்கள் "யுவாவின் சீலேவாக"..!!!
Comments
Post a Comment