Skip to main content

இரவுகள் இரக்கமுடையது

❤️

இரவுக்கு மேல்
அப்படி என்ன ஒரு நெருக்கம்..?
அப்படி என்ன ஒரு பெருங்காதல்..?

இரவு பத்தி சொல்லணும்ன்னா
ஓராயிரம் இல்ல ஒரு லட்சம்
அதுக்கும் மேல இன்னும் கணக்கில்
அடங்காத பதிவுகள் போட்டு இரவு
பத்தி எழுதிக்கிட்டே இருக்கலாம்,அந்த
அளவு இரவு என்பது ஒரு நிலையானது,
நிலையான ஒன்ன தான் மனசு கூட
தேடி போகும்,இரவு பற்றிய என்னுடைய
புரிதல் இது,சிலருக்கு இதில் மாற்று
கருத்து கூட இருக்கலாம்,ஆனால்
இரவு எல்லோருக்குமான ஒன்று.

பொதுவா இரவானது ரொம்ப
தனிமை உணர்வ கொடுக்கும்,
உலகமே இரவுல அமைதியா
இருக்கப்போ மனுஷங்களுக்குள்ள உரையாடல் பெருசா இருக்காது,
உரையாடல் குறைந்தவுடன் கிடைக்கும் அமைதி இரவை ஆட்கொள்கிறது,

அந்த டைம்ல தான் மனுஷன் தூங்க
போறான்,காலைல இருந்து ஆஃபீஸ்ல
மேனேஜர்,சக ஊழியர், இன்னும் பல
தொழிலில் பலர் என காலை முதல்
மாலை வரை பேசுவது தான் நமது
மூலதனம்ன்னு சொல்லலாம்,ஆனா
இரவு நேரத்துல யாருக்கும் பதில்
சொல்ல வேண்டியது இருக்காது,
உங்க மனச அமைதி படுத்தலாம்,

அந்த ஒரு எட்டு மணி நேரம் உங்கள
நீங்க ஒரு நிலை படுத்தலாம் லைக்
மனசுல கவலையே இருந்தாலும்
தூக்கமே வராம சிரமப்பட்டாலும்
கண்ண மூடிப்படுத்துடணும்,
தூக்கம் வருது வரல ஆனா அந்த
அறைக்குள்ள கிடைக்குற அமைதி
உங்க மனச சமநிலை படுத்துவது
மட்டும் இல்லாமல் உங்க ஹார்ட்பீட்ட
கூட சரியா இயக்கும்,யாருக்கும்
ரியாக்ட் பண்ணாம முழுக்க முழுக்க
இரவுல நம்ம நம்மளா இருப்போம்,

ஒரு அறைக்குள்ள தனிமையும்
அமைதியும் சேர்ந்து கிடைக்கும் போது
ஒருத்தனுக்கு அவனோட ஆழ் மனசுல
இருந்து ஒரு நிதானம் கிடைக்குது,
அந்த நிதானம் அந்த இரவு கூட
அவன பயணிக்க வைக்குது,அவன்
அந்த இரவ காதலிக்க ஆரம்பிக்கிறான்,

அவனுக்கும் இரவுக்கும் ஒரு பந்தம்
என்பது உண்டாகி அவன் இரவின்
தத்துப்பிள்ளை போல் அதனிடம்
தன்னை முற்றும் துறக்கிறான்,

- இரவுகள் இரக்கமுடையது..!!!

Comments

Popular posts from this blog

The One - அந்த ஒருவன் 💚

💚 நிராகரிக்கப்பட்ட ஒருவன் புறக்கணிக்கப்பட்ட ஒருவன் ஒதுக்கி வைக்கப்பட்ட ஒருவன் அவமானப்படுத்தப்பட்ட ஒருவன், "வர சொல்லு அந்த ஒருத்தன..?" பல போர் படை இருக்கலாம் எதிர்பார்த்தது இவனத்தான் அந்தொருவன் வந்திருக்கான்டே..!!! "Temba" என்றால் "Hope" என்று பொருள், ஒட்டு மொத்த ஆஃப்ரிக்க மக்களின் நம்பிக்கை ஒளியாகவும் அவர்களின் ஏக்கத்திற்கு விடையாகவும் இந்த "டெம்பா" ஒரு வாழ்வியலை இங்கே புதுப்பித்து இருக்கிறான், எத்தனை அவமானங்கள் தான் 'இந்த ஒருவனுக்கு' நிகழ்ந்திருக்கிறது, உயரம் ரீதியாகவும்,நிற ரீதியாகவும் என இவன் கண்ட அவமானங்கள் அனைத்தையும் தாண்டி இன்று ஒரு இன மக்களையே இன்று இவன் தலை நிமிர செய்திருக்கிறான், எங்க கேங்க்ல ஒரு ரெண்டு பேர் மொரட்டு தனமான தென்னாப்பிரிக்கா ஃபேன்,நானும் என்னோட இன்னொரு முகநூல் நண்பரும் (Anjali Raga Jammy), எப்படி "கொம்பன்" யானைய பார்த்து காடே ஆடி போகுமோ அது மாதிரி நாங்க ரெண்டு பேரும் எங்க தலைவன் டெம்பா பாவுமா - வ "டெம்பன்" ன்னு செல்லமா தான் கூப்பிடுவோம், இந்த டெம்பனின் கைகள் ஒரு ந...

குடைக்குள் மழை

✨️💚 ரீனா : ஹே ஆர் யூ தேர்..? விக்ரம் : இருக்கேன் ரீனா, என்ன திடீர்னு மெசேஜ், முக்கியமா எதுவும் சொல்லணுமா..? ரீனா : ஹே, அதெல்லாம் இல்ல, ஏன் ஒர்க்ல இருக்கியா..? விக்ரம் : இல்ல, வீட்டுக்கு வந்துட்டேன், Earlier Appointments So, முடிஞ்சு பா! ரீனா : ஒகே, கொஞ்சம் மனசு சரி இல்ல அதான் உன்கிட்ட பேசலாமேன்னு கால் பண்ணேன்..? விக்ரம் : என்ன ஆச்சு..? ஆர் யூ ஓகே..? சொல்லு ரீனா Any Issue..? ரீனா : ஹே,Just Mood Swing ஒன்லி! நீ ஃபிரீன்னா சொல்லு Let's Walk Together in Beach! உனக்கு தெரியும்ல எனக்கு பீச் வாக்ன்னா ரொம்ப பிடிக்கும், So நீ ஃபிரீன்னா வர முடியுமா விக்ரம்..? விக்ரம் : சரி, ஈவினிங் 6 மணிக்கு பீச்ல நம்ம வழக்கமா மீட் பண்ணுற அந்த பட்டர் பன் கடைக்கு வந்துரு ரீனா, நானும் வந்துடுறேன், ரீனா : தேங்க்ஸ் விக்ரம்! விக்ரம் : தேங்க்ஸா..? No More Formalities! உன்னோட தேங்க்ஸ்ல நான் பூரிச்சு போய்ட்டேன்,சிரிப்பு காட்டாம வா ரீனா! ரீனா : ஹ்ம்ம் டா! * இடம் : கடற்கரை * நேரம் : மாலை 6 மணி விக்ரம் : ஹே! என்ன ஆச்சு ரீனா திடீர்னு..? ரீனா : அதெல்லாம் ஒன்னும் இல்லடா, Please Give Sometime நானே சொல்லுறேன் போ...

நிகரில்லாதவள்

அன்று ஊரெங்கும் நல்ல மழை வெளுத்து வாங்கிகொண்டிருந்தது, பெரு மழைக்கு ஒதுங்குவதற்காக அவள் அங்கே சாலையோரம் இருந்த மரத்தின் அடியில் சென்று நின்று கொண்டாள், அவளுக்கு அருகே பள்ளி முடிந்து வீடு திரும்பும் குழந்தைகள் சூழ அவள் ஒரு பள்ளிக்கூடத்து ஆசிரியை போல் அக்குழந்தைகளுக்கு நடுவில் நின்று அவர்கள் மழையில் செய்யும் சேட்டையை பார்த்து ரசித்துக்கொண்டிருந்தாள், இந்த மழை நிற்பதற்குள் இவள் யார்,இவள் பெயர் என்ன, இவள் சார்ந்து இருப்பவைகள் என சின்ன கதையுடன் ஒரு முன்னோட்டம் பார்ப்போம், இவளுக்கான அறிமுகம் இல்லாததால் இவளுக்கு இவளாகவே சூடிக்கொண்ட பெயர் இது, ஆம் இவளுக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து ஆசிரமத்தில் தான் வளர்ந்து வருகிறாள்,அங்கிருப்பவர்கள் "குட்டி" என்று கூப்பிடுவார்கள் அதுவே இவளது பெயராகவும் மாறியது, பின் பள்ளி முடிந்து யாரோ பெயர் தெரியாத ஸ்பான்ஸர்ஷிப் மூலம் கல்லூரி படிப்பை முடித்து நல்ல ஒரு இடத்தில் வேலைக்கு சேர்ந்த பின் தான் இவளுக்கு ஒன்று புரிந்தது, நம்மை அடையாளப்படுத்திக்கொள்ள சரியான பெயர் கூட நமக்கு இல்லை என்று, எதிர்நீச்சல் படத்தில் வருவது போல் தன் அடையாளத்தை இச்சமூகத்தில் பதிக்...