❤️
இரவுக்கு மேல்
அப்படி என்ன ஒரு நெருக்கம்..?
அப்படி என்ன ஒரு பெருங்காதல்..?
இரவு பத்தி சொல்லணும்ன்னா
ஓராயிரம் இல்ல ஒரு லட்சம்
அதுக்கும் மேல இன்னும் கணக்கில்
அடங்காத பதிவுகள் போட்டு இரவு
பத்தி எழுதிக்கிட்டே இருக்கலாம்,அந்த
அளவு இரவு என்பது ஒரு நிலையானது,
நிலையான ஒன்ன தான் மனசு கூட
தேடி போகும்,இரவு பற்றிய என்னுடைய
புரிதல் இது,சிலருக்கு இதில் மாற்று
கருத்து கூட இருக்கலாம்,ஆனால்
இரவு எல்லோருக்குமான ஒன்று.
பொதுவா இரவானது ரொம்ப
தனிமை உணர்வ கொடுக்கும்,
உலகமே இரவுல அமைதியா
இருக்கப்போ மனுஷங்களுக்குள்ள உரையாடல் பெருசா இருக்காது,
உரையாடல் குறைந்தவுடன் கிடைக்கும் அமைதி இரவை ஆட்கொள்கிறது,
அந்த டைம்ல தான் மனுஷன் தூங்க
போறான்,காலைல இருந்து ஆஃபீஸ்ல
மேனேஜர்,சக ஊழியர், இன்னும் பல
தொழிலில் பலர் என காலை முதல்
மாலை வரை பேசுவது தான் நமது
மூலதனம்ன்னு சொல்லலாம்,ஆனா
இரவு நேரத்துல யாருக்கும் பதில்
சொல்ல வேண்டியது இருக்காது,
உங்க மனச அமைதி படுத்தலாம்,
அந்த ஒரு எட்டு மணி நேரம் உங்கள
நீங்க ஒரு நிலை படுத்தலாம் லைக்
மனசுல கவலையே இருந்தாலும்
தூக்கமே வராம சிரமப்பட்டாலும்
கண்ண மூடிப்படுத்துடணும்,
தூக்கம் வருது வரல ஆனா அந்த
அறைக்குள்ள கிடைக்குற அமைதி
உங்க மனச சமநிலை படுத்துவது
மட்டும் இல்லாமல் உங்க ஹார்ட்பீட்ட
கூட சரியா இயக்கும்,யாருக்கும்
ரியாக்ட் பண்ணாம முழுக்க முழுக்க
இரவுல நம்ம நம்மளா இருப்போம்,
ஒரு அறைக்குள்ள தனிமையும்
அமைதியும் சேர்ந்து கிடைக்கும் போது
ஒருத்தனுக்கு அவனோட ஆழ் மனசுல
இருந்து ஒரு நிதானம் கிடைக்குது,
அந்த நிதானம் அந்த இரவு கூட
அவன பயணிக்க வைக்குது,அவன்
அந்த இரவ காதலிக்க ஆரம்பிக்கிறான்,
அவனுக்கும் இரவுக்கும் ஒரு பந்தம்
என்பது உண்டாகி அவன் இரவின்
தத்துப்பிள்ளை போல் அதனிடம்
தன்னை முற்றும் துறக்கிறான்,
Comments
Post a Comment