Skip to main content

எழுத்துக்களின் அவசியம்

~ 💛 ~

சில பேருக்கு இசை மேல பைத்தியம்
சில பேருக்கு ஓவியம் மேல பைத்தியம்
சில பேருக்கு புத்தகம் மேல பைத்தியம்
சில பேருக்கு காதல் மேல பைத்தியம்
சில பேருக்கு குழந்தைகள் மேல பைத்தியம்

இப்படி நம்மலோட பைத்தியமா
ஒரு சில விஷயங்கள் நம்மை சார்ந்து இருக்கும்
அது நமக்கு ஒரு வித தனிமையை கொடுக்கும்
அந்த தனிமை கொடியதாக இருக்காது

மிகவும் ஆழமான
மிகவும் அழகான
மிகவும் மென்மையான
மிகவும் நம்பகத்தன்மையுள்ள
ஒரு தனிமையாக அத்தனிமை இருக்கும்,

அத்தனிமையை நீங்கள் உணரும்போது
லேசான ஈரப்பதத்துடன் கூடிய
கடற்கரை மணல் போல்
நம் மனசு சாந்தமான நிலையில்
இயந்திரம் போல் சுழலாமல்
ஒரு நிலையில் பக்குவமாய் இருக்கும்,

குல்முகர் மலர் பூத்துக்குலுங்கும்
பூக்களில் வண்டுகள் மகரந்தம் தேடும்
குயில்கள் ரீங்கார இசையினை மீட்டும்
அந்தி நேர தென்றல் காற்று வீசும்
இலையுதிர் காலம் நாழிகையை அழகாக்கும்

இவ்வுலகம் பரந்து விரிந்து கிடக்கிறது
இது நமக்கான தன்னை அறிதல்
இது உங்களை உங்களுக்குள் தேடும் முயற்சி
உங்களின் நாட்டத்தை வெளிக்கொண்டுவாருங்கள்
முடிந்தவரை உங்கள் வாழ்வில் நடந்த நிகழ்வுகளை
எழுத்துக்களாக மாற்றுங்கள் நம் தமிழ் மொழியில்

எழுத்துப்பிழை ஆயிரக்கணக்கில் வரும்
வார்த்தை கோர்வைகள் முரண்பாடாக இருக்கும்
செய்யுளும் இலக்கணமும் தேவையில்லை
பேச்சு வழக்கில் வார்த்தைகளை பயன்படுத்துங்கள்

நான் மேலே சொன்னது போல்
எல்லோருக்கும் ஒரு விஷயம் மேல பைத்தியம் இருக்கும்
அப்படி என்னோட பைத்தியம்னு சொல்லணும்னா,

'நிறைய எழுதணும் சார்'

எழுத்துக்கள் தான் ஒருவனின் நிலையை மாற்றும்
எழுத்துக்கள் தான் சுய மீட்டுதல் இன்பம் தரும்
எழுத்துக்கள் தான் வலிகளில் இருந்து மீட்டெடுக்கும்
எழுத்துக்கள் தான் ஒருவனை வெளிக்கொண்டு வரும்

லெட்டர் எழுது
Daily ஒன்னு எழுது
Nothing Like a Nice Letter
பத்து வருஷம் கழிச்சு படிக்க நல்லாருக்கும்

- எழுதுவோம் தமிழில்







Comments

  1. "நிறைய எழுதுங்கள்"
    நீங்க எப்பொழுதும் சொல்றது❣️

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பா கௌதம்! நீங்களும் :))

      Delete
  2. Replies
    1. நன்றி !! உங்கள் பெயர்..?

      Delete

Post a Comment

Popular posts from this blog

The One - அந்த ஒருவன் 💚

💚 நிராகரிக்கப்பட்ட ஒருவன் புறக்கணிக்கப்பட்ட ஒருவன் ஒதுக்கி வைக்கப்பட்ட ஒருவன் அவமானப்படுத்தப்பட்ட ஒருவன், "வர சொல்லு அந்த ஒருத்தன..?" பல போர் படை இருக்கலாம் எதிர்பார்த்தது இவனத்தான் அந்தொருவன் வந்திருக்கான்டே..!!! "Temba" என்றால் "Hope" என்று பொருள், ஒட்டு மொத்த ஆஃப்ரிக்க மக்களின் நம்பிக்கை ஒளியாகவும் அவர்களின் ஏக்கத்திற்கு விடையாகவும் இந்த "டெம்பா" ஒரு வாழ்வியலை இங்கே புதுப்பித்து இருக்கிறான், எத்தனை அவமானங்கள் தான் 'இந்த ஒருவனுக்கு' நிகழ்ந்திருக்கிறது, உயரம் ரீதியாகவும்,நிற ரீதியாகவும் என இவன் கண்ட அவமானங்கள் அனைத்தையும் தாண்டி இன்று ஒரு இன மக்களையே இன்று இவன் தலை நிமிர செய்திருக்கிறான், எங்க கேங்க்ல ஒரு ரெண்டு பேர் மொரட்டு தனமான தென்னாப்பிரிக்கா ஃபேன்,நானும் என்னோட இன்னொரு முகநூல் நண்பரும் (Anjali Raga Jammy), எப்படி "கொம்பன்" யானைய பார்த்து காடே ஆடி போகுமோ அது மாதிரி நாங்க ரெண்டு பேரும் எங்க தலைவன் டெம்பா பாவுமா - வ "டெம்பன்" ன்னு செல்லமா தான் கூப்பிடுவோம், இந்த டெம்பனின் கைகள் ஒரு ந...

நிகரில்லாதவள்

அன்று ஊரெங்கும் நல்ல மழை வெளுத்து வாங்கிகொண்டிருந்தது, பெரு மழைக்கு ஒதுங்குவதற்காக அவள் அங்கே சாலையோரம் இருந்த மரத்தின் அடியில் சென்று நின்று கொண்டாள், அவளுக்கு அருகே பள்ளி முடிந்து வீடு திரும்பும் குழந்தைகள் சூழ அவள் ஒரு பள்ளிக்கூடத்து ஆசிரியை போல் அக்குழந்தைகளுக்கு நடுவில் நின்று அவர்கள் மழையில் செய்யும் சேட்டையை பார்த்து ரசித்துக்கொண்டிருந்தாள், இந்த மழை நிற்பதற்குள் இவள் யார்,இவள் பெயர் என்ன, இவள் சார்ந்து இருப்பவைகள் என சின்ன கதையுடன் ஒரு முன்னோட்டம் பார்ப்போம், இவளுக்கான அறிமுகம் இல்லாததால் இவளுக்கு இவளாகவே சூடிக்கொண்ட பெயர் இது, ஆம் இவளுக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து ஆசிரமத்தில் தான் வளர்ந்து வருகிறாள்,அங்கிருப்பவர்கள் "குட்டி" என்று கூப்பிடுவார்கள் அதுவே இவளது பெயராகவும் மாறியது, பின் பள்ளி முடிந்து யாரோ பெயர் தெரியாத ஸ்பான்ஸர்ஷிப் மூலம் கல்லூரி படிப்பை முடித்து நல்ல ஒரு இடத்தில் வேலைக்கு சேர்ந்த பின் தான் இவளுக்கு ஒன்று புரிந்தது, நம்மை அடையாளப்படுத்திக்கொள்ள சரியான பெயர் கூட நமக்கு இல்லை என்று, எதிர்நீச்சல் படத்தில் வருவது போல் தன் அடையாளத்தை இச்சமூகத்தில் பதிக்...

குடைக்குள் மழை

✨️💚 ரீனா : ஹே ஆர் யூ தேர்..? விக்ரம் : இருக்கேன் ரீனா, என்ன திடீர்னு மெசேஜ், முக்கியமா எதுவும் சொல்லணுமா..? ரீனா : ஹே, அதெல்லாம் இல்ல, ஏன் ஒர்க்ல இருக்கியா..? விக்ரம் : இல்ல, வீட்டுக்கு வந்துட்டேன், Earlier Appointments So, முடிஞ்சு பா! ரீனா : ஒகே, கொஞ்சம் மனசு சரி இல்ல அதான் உன்கிட்ட பேசலாமேன்னு கால் பண்ணேன்..? விக்ரம் : என்ன ஆச்சு..? ஆர் யூ ஓகே..? சொல்லு ரீனா Any Issue..? ரீனா : ஹே,Just Mood Swing ஒன்லி! நீ ஃபிரீன்னா சொல்லு Let's Walk Together in Beach! உனக்கு தெரியும்ல எனக்கு பீச் வாக்ன்னா ரொம்ப பிடிக்கும், So நீ ஃபிரீன்னா வர முடியுமா விக்ரம்..? விக்ரம் : சரி, ஈவினிங் 6 மணிக்கு பீச்ல நம்ம வழக்கமா மீட் பண்ணுற அந்த பட்டர் பன் கடைக்கு வந்துரு ரீனா, நானும் வந்துடுறேன், ரீனா : தேங்க்ஸ் விக்ரம்! விக்ரம் : தேங்க்ஸா..? No More Formalities! உன்னோட தேங்க்ஸ்ல நான் பூரிச்சு போய்ட்டேன்,சிரிப்பு காட்டாம வா ரீனா! ரீனா : ஹ்ம்ம் டா! * இடம் : கடற்கரை * நேரம் : மாலை 6 மணி விக்ரம் : ஹே! என்ன ஆச்சு ரீனா திடீர்னு..? ரீனா : அதெல்லாம் ஒன்னும் இல்லடா, Please Give Sometime நானே சொல்லுறேன் போ...